இணைய கால புகைப்படம் இது!

4439-hjvedj-1000x510இணையவெளியில் ஒரு புகைப்படம் வைரல் அந்தஸ்து பெறுவது புதிய விஷயமல்ல.புகைப்படத்தில் உள்ள ஏதேனும் ஒரு அம்சன் கவனத்தை ஈர்க்க கூடியதாக இருந்து, அது சமூக வலைதளத்தில் பகிரப்படும் நிலை ஏற்பட்டால் போதும்- அது இணைய பரப்பு முழுவதும் உலா வரத்துவங்கிவிடும்.
அன்மையில் இப்படி வைரலாக பரவி விவாதத்தை ஏற்படுத்திய புகைப்படம் நம் காலத்து புகைப்படம் எனும் அந்தஸ்த்தை பெற்றுள்ளது.

அந்த புகைப்படம் மனசாட்சியை உலக்க கூடிய வகையை சேர்ந்ததில்லை என்றாலும் கூட இக்கால தலைமுறையை யோசிக்க வைக்க கூடிய படமாக இருப்பது தான் விஷேசம்.

ஹாலிவுட் புதிய படம் ஒன்று தொடர்பான நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது.ஹாலிவுட் நாயகன் ஜானி டெப் உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்றதால் அவர்களை பார்க்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் கூடிய நிலையை படம் பிடித்துக்காட்டும் அந்த காட்சியை முதலில் பார்த்தால் சாதாரணமாக தோன்றும்.நட்சத்திரங்களை பார்க்க திரண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் கையில் ஸ்மார்ட்போனை வெவ்வேறு கோணங்களில் நீட்டியபடி அந்த தருணத்தை படம் பிடிக்க முயன்று கொண்டிருப்பதை தான் அந்த படம் உணர்த்துகிறது.

ஸ்மார்ட்போன் யுகத்தில் எல்லா இடங்களிலும் எதிர்கொள்ளகூடிய வெகு இயல்பான காட்சி தான் இது இல்லையா?
ஆனால் அந்த படத்தில் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் பலதரப்பட்ட ரசிகர்கள் நடுவே வயதான பெண்மணி ஒருவர் தனித்திருப்பதை பார்க்கலாம். அந்த மூதாட்டியில் கையில் ஸ்மார்ட்போன் இல்லை என்பது மட்டும் அல்ல அவர் தன்னைச்சுற்றிய பரபரப்பு பற்றி கூட கவலைப்படாமல் ஒரு உண்மையான ரசிகையின் ஆர்வத்துடன் நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டிருப்பதை உணரலாம்.
ஆம், அந்த வயதான பெண்மணி நம் காலத்தில் மிகவும் அரிதாக ஆகிவிட்ட ஒரு விஷயத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதாவது
அரிய தருணங்களை ஸ்மார்ட்போனில் படமெடுத்து ,சமூக ஊடகங்களில் பகிரும் வேட்கையில் அந்த தருணத்தை அனுபவிக்க தவறுவதற்கு பதிலாக அந்த பெண்மணி நட்சத்திரங்களை நேரில் பார்க்க கிடைத்த தருணத்தில் லயித்திருக்கிறார்.

தற்செயலாக அமைந்த அந்த காட்சி பல விஷயங்களை சொல்லாமல் சொல்லி விடுகிறது.
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, சுற்றுலா பயணங்களாக இருந்தாலும் சரி அப்போதைய கணங்களை அனுபவிப்பதை விட அந்த காட்சிகளை ஸ்மார்ட்போனில் படமெடுப்பதிலோ அல்லது சுயபடம் எடுப்பதிலோ தான் பெரும்பாலானோர் கவனம் செலுத்துகின்றனர். பிள்ளைகளின் பள்ளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது கூட அவர்களின் திறமை வெளிப்படும் வித்ததை பார்த்து ரசிப்பதற்கு பதில் அந்த காட்சியை காமிரா கண் கொண்டு பார்க்க முற்படுகின்றனர்.

இந்த பழக்கம், நாம் வாழும் தருணங்களை தவறவிடுவதற்கு சமம் என்று சமூகவியல் வல்லுனர்கள் கவலையோடு சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த முரணை, ஸ்மார்ட்போன் கூட்டத்தினர் நடுவே தனித்து நிற்கும் வயதான பெண்மணி மூலம் கச்சிதமாக உணர்த்தும் இந்த புகைப்படம் முதலில் அமெரிக்க நாளிதழான போஸ்டன் குளோபில் வெளியானது.
அந்த படத்தை பார்த்து ரசித்த வைனே டால்பர்க் எனும் டிவிட்டர் பயனாளி தனது டிவிட்டர் பக்கத்தில் (@waynedahlberg) அதை பகிர்ந்து கொண்டார்.எக்காலத்திலும் என்னை மிகவும் கவர்ந்த புகைப்படம் எனும் வாசகத்துடன் அவர் பகிர்ந்து கொண்ட அந்த படம் உடனே டிவிட்டரில் பலரால் ரிடீவிட் செய்து பாராட்டப்பட்டது.புகைப்படம் நூற்றுக்கணக்கான முறை பகிரப்பட்த்துவங்கிய நிலையில் அதை வெளியிட்ட டால்பர்க், அந்த படத்தை எடுத்த புகைப்பட கலைஞர் ஜான் பிளாண்டிங் பெயரையும் டேக் செய்திருந்தார்.
இணைய வல்லுனரான டிம் ரெய்லி,அந்த படத்தை சுட்டிக்காட்டி அந்த தருணத்தில் பெண்மணி லயித்திருக்கிறார் என பாராட்டியிருந்தார். பிரெண்ட் ஜென்சன் என்பவர் ,நிகழ் காலத்தில் இருந்து ,தன்னைச்சுற்றிய தருணத்தை ரசிக்க தெரிந்த ஒருவர் என பாராட்டியிருந்தார்.

இன்னொருவரோ, இன்றைய காலத்தில் நாம் வாழும் கணத்தை அனுபவித்து ரசிக்க மறந்து கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டிருந்தார். இணைய யுகத்தின் கவலை தரும் யதார்த்தாம் இது!.

——

4ee222d7-9ce1-4dce-a4c8-65be880a46a6தளம் புதிது; கணித நண்பன்

எழுத்தாளர்கள் தட்டச்சு செய்வதற்கு என்றே பிரத்யேக எழுதிகள் இருக்கின்றன.வழக்கமான தட்டச்சு மென்பொருளான வேர்டு பிராசஸரை விட இவை மேம்பட்டவை.அதைவிட முக்கியமாக கவனச்சிதறல் இல்லாமல் எழுதுவதில் மட்டும் ஈடுபட உதவுபவை.இதற்கு உதாரணம் வேண்டும் என்றால் ஆகிய எழுதிகளை சொல்லலாம்.
இதேபோல விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுனர்களுக்காக என்றும் தனியே எழுதி இருக்கிறது தெரியுமா? கேல்கா (http://calca.io/) அந்த எழுதியை பயன்படுத்தும் போது நடுவே கணக்கு போட்டுப்பார்க்கலாம். கணிதவியல் சமன்பாடுகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இயற்பியல் அல்லது வேதியல் போன்ற பிரிவுகளில் தட்டச்சு செய்யும் போது சமன்பாடுகளை பயன்படுத்த வேண்டியிருந்தால் அவற்றை தட்டச்சு செய்யும் போதே பின்னணியில் அதற்கான கணக்கு போடப்பட்டு விடை தானாக திரையில் தோன்றும். நிதி மற்றும் பொருளாதார விஷயங்களை டைப் செய்யும் போது வட்டி,கூட்டு வட்டி போன்றவற்றை குறிப்பிட்டாலும் இந்த எழுதியே கணக்கு போட்டு விடை அளிக்கும். கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யும் போது,எளிய கூட்டல் கணக்கை இடம்பெற வைக்க வேண்டும் என்றால் கூட, வெளியே வந்து தனியே கால்குலேட்டரை பயன்படுத்தும் நிலையில் இருந்து கால்கா அளிக்கும் வசதி எத்தனை மேம்பட்டது என்று அதை பயன்படுத்திப்பார்த்தால் தான் புரியும்.
ஆனால் கால்காவை உங்கள் வீட்டு மளிகை கணக்கு போட்டு பார்க்க எல்லாம் பயன்படுத்த முடியாது. ஏனெனில் அது கட்டண சேவை. விண்டோசில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த 10 டாலர் செலுத்த வேண்டும்.
ஆனால் கவலைப்பட வேண்டாம், கால்குலேட்டர் உதவி இல்லாமலே எளிய கணக்குகளை போட்டு பார்க்க விரும்பினால் நோட்பேட் கால்குலேட்டர் இருக்கவே இருக்கிறது. டையில் இருந்து கிழிக்கப்பட்ட காகிதம் போல இருக்கும் இதன் முகப்பு பக்கத்தில் குறிப்பெழுதுவது போல எழுத துவங்க வேண்டியது தான். இப்படி தட்டச்சு செய்யும் போது கூட்டல் ,கழித்தல்களை பயன்படுத்தினால் அந்த சமன்பாட்டுக்கான விடை அருகே வந்து நிற்கிறது. ஸ்டீவ் ரைடவுட் எனும் மென்பொருள் வல்லுனர் உருவாக்கியுள்ள இந்த எளிய நோட்பேடை பயன்படுத்திப்பாருங்கள், லேசாக அசந்து போவீர்கள்;
இணையதளம்:http://notepadcalculator.com

———-

செயலி புதிது; நான் பிஸியாக இருக்கிறேன்!

ட்ரு டயலர் செயலி இனி உங்கள் தனிப்பட்ட உதவியாளர் போலவும் செயல்பட உள்ளது.ட்ரு டயலரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதியை இந்த செயலியின் பின்னே உள்ள ட்ரு காலர் இப்படி குறிப்பிடுகிறது.முக்கிய வேலை அல்லது ஆலோசனை கூட்டம் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் போது அந்த தகவலை பயனாளிகள் மற்றவர்களுக்கு தெரிவிக்க எளிதாக தெரிவிக்க முடியும். இதற்காக நான் பிஸியாக இருக்கிறேன் எனும் வாய்ப்பை தேர்வு செய்து அமைத்துக்கொண்டால் போதும் மற்றவர்கள் அழைக்கும் போது,சிவப்பு புள்ளி மூலம் அவர் அழைப்பை ஏற்க முடியாத நிலையில் இருப்பது உணர்த்தப்படும். மாறாக அழைப்பை ஏற்கும் நிலையில் இருந்தால் பச்சை புள்ளி வரவேற்கும்.ஆக, ஒருவரை அழைப்பதற்கு முன்னரே அவர் பிஸியாக இருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்ளலாம்.இந்த வசதியை பயனாளிகள் காலண்டருடன் இணைத்துக்கொள்ளவும் செய்யலாம். ஆண்ட்ராய்டு போன்களில் இது அறிமுகமாகியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு: https://www.truecaller.com/blog/truedialer-availability-feature

————
gmail-blocked-senders
ஜிமெயிலில் புதிய வசதி

ஜிமெயிலில் சின்னதாக பல வசதிகள் உண்டு.இவற்றில் பலவற்றை நீங்கள் கவனிக்காமல் கூட இருக்கலாம்.இப்போது இந்த பட்டியலில் புதிதாக ஒரு அம்சம் அறிமுகமாகி இருக்கிறது.அது இமெயில்களை பிளாக் செய்யும் வசதி. ஏதேனும் ஒரு காரணத்திற்காக குறிப்பிட்ட ஒருவரது இமெயில் நீங்கள் பெற விரும்பாவிட்டால், அவர்கள் மெயிலை வரும் முன் தடுத்துவிடலாம்.இதற்காக மெயிலின் வலப்பக்கத்தில் பதில் அளிக்கும் வசதி அருகே உள்ள கீழ்நோக்கிய அம்புகுறியை கிளிக் செய்தால் வரிசையாக பல அம்சங்களின் பட்டியல் வரும்.அதில் உள்ள,பிளாக் செய்யவும் வசதியை தேர்வு செய்தால் இனி அந்த நபரின் இமெயில் உங்கள் இன்பாகிசிற்கு வராது. அதற்கு முன்னடே தடுக்கப்பட்டு ஸ்பேம் போல்டருக்குள் அனுப்பி வைக்கப்படும். விளம்பர மெயில் போன்ற தொல்லைகளில் இருந்து தப்பிக்க இந்த வசதி கைகொடுக்கும்.இதற்கு முன்னரும் கூட ஜிமெயிலில் உள்ள வடிகட்டல் வசதியை பயன்படுத்தி வேண்டாத மெயில்களை தடுக்கலாம். ஆனால் இதை மிக எளிதாக செய்யக்கூடிய வகையில் புதிய அம்சம் அமைந்துள்ளது.
ஆனால் பழைய மெயில்களுக்கு இது பொருந்தாது.புதிதாக வரும் மெயில்களில் இந்த வசதியை தேர்வு செய்து இயக்கினால் மட்டுமே பிளாக் செய்வது சாத்தியம்.இதே போல ஆண்ட்ராய்டுக்கான ஜிமெயில் செயலியில் இமெயில் சந்தாக்களில் இருந்து விலகி கொள்ளும் அம்சமும் அறிமுகமாகி இருக்கிறது.

-0—

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது.

4439-hjvedj-1000x510இணையவெளியில் ஒரு புகைப்படம் வைரல் அந்தஸ்து பெறுவது புதிய விஷயமல்ல.புகைப்படத்தில் உள்ள ஏதேனும் ஒரு அம்சன் கவனத்தை ஈர்க்க கூடியதாக இருந்து, அது சமூக வலைதளத்தில் பகிரப்படும் நிலை ஏற்பட்டால் போதும்- அது இணைய பரப்பு முழுவதும் உலா வரத்துவங்கிவிடும்.
அன்மையில் இப்படி வைரலாக பரவி விவாதத்தை ஏற்படுத்திய புகைப்படம் நம் காலத்து புகைப்படம் எனும் அந்தஸ்த்தை பெற்றுள்ளது.

அந்த புகைப்படம் மனசாட்சியை உலக்க கூடிய வகையை சேர்ந்ததில்லை என்றாலும் கூட இக்கால தலைமுறையை யோசிக்க வைக்க கூடிய படமாக இருப்பது தான் விஷேசம்.

ஹாலிவுட் புதிய படம் ஒன்று தொடர்பான நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது.ஹாலிவுட் நாயகன் ஜானி டெப் உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்றதால் அவர்களை பார்க்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் கூடிய நிலையை படம் பிடித்துக்காட்டும் அந்த காட்சியை முதலில் பார்த்தால் சாதாரணமாக தோன்றும்.நட்சத்திரங்களை பார்க்க திரண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் கையில் ஸ்மார்ட்போனை வெவ்வேறு கோணங்களில் நீட்டியபடி அந்த தருணத்தை படம் பிடிக்க முயன்று கொண்டிருப்பதை தான் அந்த படம் உணர்த்துகிறது.

ஸ்மார்ட்போன் யுகத்தில் எல்லா இடங்களிலும் எதிர்கொள்ளகூடிய வெகு இயல்பான காட்சி தான் இது இல்லையா?
ஆனால் அந்த படத்தில் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் பலதரப்பட்ட ரசிகர்கள் நடுவே வயதான பெண்மணி ஒருவர் தனித்திருப்பதை பார்க்கலாம். அந்த மூதாட்டியில் கையில் ஸ்மார்ட்போன் இல்லை என்பது மட்டும் அல்ல அவர் தன்னைச்சுற்றிய பரபரப்பு பற்றி கூட கவலைப்படாமல் ஒரு உண்மையான ரசிகையின் ஆர்வத்துடன் நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டிருப்பதை உணரலாம்.
ஆம், அந்த வயதான பெண்மணி நம் காலத்தில் மிகவும் அரிதாக ஆகிவிட்ட ஒரு விஷயத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதாவது
அரிய தருணங்களை ஸ்மார்ட்போனில் படமெடுத்து ,சமூக ஊடகங்களில் பகிரும் வேட்கையில் அந்த தருணத்தை அனுபவிக்க தவறுவதற்கு பதிலாக அந்த பெண்மணி நட்சத்திரங்களை நேரில் பார்க்க கிடைத்த தருணத்தில் லயித்திருக்கிறார்.

தற்செயலாக அமைந்த அந்த காட்சி பல விஷயங்களை சொல்லாமல் சொல்லி விடுகிறது.
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, சுற்றுலா பயணங்களாக இருந்தாலும் சரி அப்போதைய கணங்களை அனுபவிப்பதை விட அந்த காட்சிகளை ஸ்மார்ட்போனில் படமெடுப்பதிலோ அல்லது சுயபடம் எடுப்பதிலோ தான் பெரும்பாலானோர் கவனம் செலுத்துகின்றனர். பிள்ளைகளின் பள்ளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது கூட அவர்களின் திறமை வெளிப்படும் வித்ததை பார்த்து ரசிப்பதற்கு பதில் அந்த காட்சியை காமிரா கண் கொண்டு பார்க்க முற்படுகின்றனர்.

இந்த பழக்கம், நாம் வாழும் தருணங்களை தவறவிடுவதற்கு சமம் என்று சமூகவியல் வல்லுனர்கள் கவலையோடு சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த முரணை, ஸ்மார்ட்போன் கூட்டத்தினர் நடுவே தனித்து நிற்கும் வயதான பெண்மணி மூலம் கச்சிதமாக உணர்த்தும் இந்த புகைப்படம் முதலில் அமெரிக்க நாளிதழான போஸ்டன் குளோபில் வெளியானது.
அந்த படத்தை பார்த்து ரசித்த வைனே டால்பர்க் எனும் டிவிட்டர் பயனாளி தனது டிவிட்டர் பக்கத்தில் (@waynedahlberg) அதை பகிர்ந்து கொண்டார்.எக்காலத்திலும் என்னை மிகவும் கவர்ந்த புகைப்படம் எனும் வாசகத்துடன் அவர் பகிர்ந்து கொண்ட அந்த படம் உடனே டிவிட்டரில் பலரால் ரிடீவிட் செய்து பாராட்டப்பட்டது.புகைப்படம் நூற்றுக்கணக்கான முறை பகிரப்பட்த்துவங்கிய நிலையில் அதை வெளியிட்ட டால்பர்க், அந்த படத்தை எடுத்த புகைப்பட கலைஞர் ஜான் பிளாண்டிங் பெயரையும் டேக் செய்திருந்தார்.
இணைய வல்லுனரான டிம் ரெய்லி,அந்த படத்தை சுட்டிக்காட்டி அந்த தருணத்தில் பெண்மணி லயித்திருக்கிறார் என பாராட்டியிருந்தார். பிரெண்ட் ஜென்சன் என்பவர் ,நிகழ் காலத்தில் இருந்து ,தன்னைச்சுற்றிய தருணத்தை ரசிக்க தெரிந்த ஒருவர் என பாராட்டியிருந்தார்.

இன்னொருவரோ, இன்றைய காலத்தில் நாம் வாழும் கணத்தை அனுபவித்து ரசிக்க மறந்து கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டிருந்தார். இணைய யுகத்தின் கவலை தரும் யதார்த்தாம் இது!.

——

4ee222d7-9ce1-4dce-a4c8-65be880a46a6தளம் புதிது; கணித நண்பன்

எழுத்தாளர்கள் தட்டச்சு செய்வதற்கு என்றே பிரத்யேக எழுதிகள் இருக்கின்றன.வழக்கமான தட்டச்சு மென்பொருளான வேர்டு பிராசஸரை விட இவை மேம்பட்டவை.அதைவிட முக்கியமாக கவனச்சிதறல் இல்லாமல் எழுதுவதில் மட்டும் ஈடுபட உதவுபவை.இதற்கு உதாரணம் வேண்டும் என்றால் ஆகிய எழுதிகளை சொல்லலாம்.
இதேபோல விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுனர்களுக்காக என்றும் தனியே எழுதி இருக்கிறது தெரியுமா? கேல்கா (http://calca.io/) அந்த எழுதியை பயன்படுத்தும் போது நடுவே கணக்கு போட்டுப்பார்க்கலாம். கணிதவியல் சமன்பாடுகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இயற்பியல் அல்லது வேதியல் போன்ற பிரிவுகளில் தட்டச்சு செய்யும் போது சமன்பாடுகளை பயன்படுத்த வேண்டியிருந்தால் அவற்றை தட்டச்சு செய்யும் போதே பின்னணியில் அதற்கான கணக்கு போடப்பட்டு விடை தானாக திரையில் தோன்றும். நிதி மற்றும் பொருளாதார விஷயங்களை டைப் செய்யும் போது வட்டி,கூட்டு வட்டி போன்றவற்றை குறிப்பிட்டாலும் இந்த எழுதியே கணக்கு போட்டு விடை அளிக்கும். கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யும் போது,எளிய கூட்டல் கணக்கை இடம்பெற வைக்க வேண்டும் என்றால் கூட, வெளியே வந்து தனியே கால்குலேட்டரை பயன்படுத்தும் நிலையில் இருந்து கால்கா அளிக்கும் வசதி எத்தனை மேம்பட்டது என்று அதை பயன்படுத்திப்பார்த்தால் தான் புரியும்.
ஆனால் கால்காவை உங்கள் வீட்டு மளிகை கணக்கு போட்டு பார்க்க எல்லாம் பயன்படுத்த முடியாது. ஏனெனில் அது கட்டண சேவை. விண்டோசில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த 10 டாலர் செலுத்த வேண்டும்.
ஆனால் கவலைப்பட வேண்டாம், கால்குலேட்டர் உதவி இல்லாமலே எளிய கணக்குகளை போட்டு பார்க்க விரும்பினால் நோட்பேட் கால்குலேட்டர் இருக்கவே இருக்கிறது. டையில் இருந்து கிழிக்கப்பட்ட காகிதம் போல இருக்கும் இதன் முகப்பு பக்கத்தில் குறிப்பெழுதுவது போல எழுத துவங்க வேண்டியது தான். இப்படி தட்டச்சு செய்யும் போது கூட்டல் ,கழித்தல்களை பயன்படுத்தினால் அந்த சமன்பாட்டுக்கான விடை அருகே வந்து நிற்கிறது. ஸ்டீவ் ரைடவுட் எனும் மென்பொருள் வல்லுனர் உருவாக்கியுள்ள இந்த எளிய நோட்பேடை பயன்படுத்திப்பாருங்கள், லேசாக அசந்து போவீர்கள்;
இணையதளம்:http://notepadcalculator.com

———-

செயலி புதிது; நான் பிஸியாக இருக்கிறேன்!

ட்ரு டயலர் செயலி இனி உங்கள் தனிப்பட்ட உதவியாளர் போலவும் செயல்பட உள்ளது.ட்ரு டயலரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதியை இந்த செயலியின் பின்னே உள்ள ட்ரு காலர் இப்படி குறிப்பிடுகிறது.முக்கிய வேலை அல்லது ஆலோசனை கூட்டம் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் போது அந்த தகவலை பயனாளிகள் மற்றவர்களுக்கு தெரிவிக்க எளிதாக தெரிவிக்க முடியும். இதற்காக நான் பிஸியாக இருக்கிறேன் எனும் வாய்ப்பை தேர்வு செய்து அமைத்துக்கொண்டால் போதும் மற்றவர்கள் அழைக்கும் போது,சிவப்பு புள்ளி மூலம் அவர் அழைப்பை ஏற்க முடியாத நிலையில் இருப்பது உணர்த்தப்படும். மாறாக அழைப்பை ஏற்கும் நிலையில் இருந்தால் பச்சை புள்ளி வரவேற்கும்.ஆக, ஒருவரை அழைப்பதற்கு முன்னரே அவர் பிஸியாக இருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்ளலாம்.இந்த வசதியை பயனாளிகள் காலண்டருடன் இணைத்துக்கொள்ளவும் செய்யலாம். ஆண்ட்ராய்டு போன்களில் இது அறிமுகமாகியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு: https://www.truecaller.com/blog/truedialer-availability-feature

————
gmail-blocked-senders
ஜிமெயிலில் புதிய வசதி

ஜிமெயிலில் சின்னதாக பல வசதிகள் உண்டு.இவற்றில் பலவற்றை நீங்கள் கவனிக்காமல் கூட இருக்கலாம்.இப்போது இந்த பட்டியலில் புதிதாக ஒரு அம்சம் அறிமுகமாகி இருக்கிறது.அது இமெயில்களை பிளாக் செய்யும் வசதி. ஏதேனும் ஒரு காரணத்திற்காக குறிப்பிட்ட ஒருவரது இமெயில் நீங்கள் பெற விரும்பாவிட்டால், அவர்கள் மெயிலை வரும் முன் தடுத்துவிடலாம்.இதற்காக மெயிலின் வலப்பக்கத்தில் பதில் அளிக்கும் வசதி அருகே உள்ள கீழ்நோக்கிய அம்புகுறியை கிளிக் செய்தால் வரிசையாக பல அம்சங்களின் பட்டியல் வரும்.அதில் உள்ள,பிளாக் செய்யவும் வசதியை தேர்வு செய்தால் இனி அந்த நபரின் இமெயில் உங்கள் இன்பாகிசிற்கு வராது. அதற்கு முன்னடே தடுக்கப்பட்டு ஸ்பேம் போல்டருக்குள் அனுப்பி வைக்கப்படும். விளம்பர மெயில் போன்ற தொல்லைகளில் இருந்து தப்பிக்க இந்த வசதி கைகொடுக்கும்.இதற்கு முன்னரும் கூட ஜிமெயிலில் உள்ள வடிகட்டல் வசதியை பயன்படுத்தி வேண்டாத மெயில்களை தடுக்கலாம். ஆனால் இதை மிக எளிதாக செய்யக்கூடிய வகையில் புதிய அம்சம் அமைந்துள்ளது.
ஆனால் பழைய மெயில்களுக்கு இது பொருந்தாது.புதிதாக வரும் மெயில்களில் இந்த வசதியை தேர்வு செய்து இயக்கினால் மட்டுமே பிளாக் செய்வது சாத்தியம்.இதே போல ஆண்ட்ராய்டுக்கான ஜிமெயில் செயலியில் இமெயில் சந்தாக்களில் இருந்து விலகி கொள்ளும் அம்சமும் அறிமுகமாகி இருக்கிறது.

-0—

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.