டிவிட்டருக்கு எழுத்தாளரின் பாராட்டு!

டிவிட்டருக்கு இனியும் அறிமுகம் தேவையில்லை.இமெயில் போல எஸ் எம் எஸ் போல, பேஸ்புக் போல பெயர் சொன்னாலே எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு டிவிட்டர் பரவலாகவும்,பிரபலமாகவும் ஆகிவிட்டது.

டிவிட்டருக்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் நற்சான்றிதழ்கள் தான்.

காரனம் டிவிட்டர் பிரபலமான அளவிற்கு அதன் தேவையும் பயன்பாடும் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதக தெரியவில்லை.

மேலும் டிவிட்டர் ஒரு வேண்டாத கவனச்சிதறலாக,நேரத்தை வீணடிக்கும் முயற்சி என்ற கருத்தும் பலருக்கு இருக்கிறது.140 எழுத்துக்கள் என்னும் அதன் வரம்பும்,அதனால் தேவைப்படும் நவீன சுருக்கெழுத்து முறைகளும் மொழி அறிவை பதம் பார்ப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.

டிவிட்டர் குறும்பதிவுகள் இலக்கணத்திற்கு எதிரானவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

எனவே தான் டிவிட்டருக்கு அதன் சிறப்புகளுக்கு சான்று தேவைப்படுகிறது.

எழுத்தாளரான மார்கரெட் அட்வுட் இத்தகைய சான்றிதழை அளித்துள்ளார்.

கனடாவில் நடைபெற்ற நெக்ஸ்ட் மீடியா என்னும் தொழில்நுடப் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அட்வுட் ,டிவிட்டரின் பகழ் பாடியதோடு இதுவரை டிவிட்டர் பற்றி பரவலாக கவனிக்கப்படாத ஒரு விஷயத்தையும் சுட்டிக்காட்டனார்.

டிவிட்டர் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகள் வாசிக்கும் பழக்கத்தையும் ,எழுதும் பழக்கத்தையும் அதிகரித்திருப்பதாக அட்வுட் கூறியுள்ளார்.

தந்தியை போல,அதற்கு முன்னர் புகை மூலம் செய்கை செய்வதை போல,சுவரெழுத்துக்கள் போல்,மரத்தில் பெயர் எழுதுவது போலவே டிவிட்டரும் என்று குறிபிட்ட அட்வுட் இந்த சிறிய வெளியீட்டு வடிவை புதுமைஆயன் முறையில் பலரும் பயனப்டுத்தி வருவதாகவும் ஸ்லாகித்துள்ளார்.

டிவிடரில் சிறுகதை எழுதுபவர்களையும் கவனித்துள்ளதாக குறிப்பிடும் அவர் ஹைகூ கவிதையும் உரைநடையும் இணைந்த கலவை என்று டிவிட்டரை வர்ணித்துள்ளார்.

இண்டெர்நெட் மற்றும் சமூக மீடியாவின் வளர்ச்சியின் பயனாக வாசிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ள அட்வுட் ,எஸ் எம் எஸ் மற்றும் போன்றவை தொலைபேசி உரையாடலை குறைத்திருப்பதே இதற்கு காராணம் என்றும் கூறியுள்ளார்.

இண்டெர்நெட்ட்டை பய்னப்டுத்த வேண்டும் என்றாலே எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷ்யம் என்பது அட்வுட்டின் கருத்து.சிறார்கள் மத்தியில் இண்டெர்நெட் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதும் அவரது நம்பிக்கை.

அட்வுட் சுட்டிகாட்டும் மற்றொரு விஷயமும் கவனிக்கத்தக்கது.படிப்பது என்பது பாட்டு கேட்பது போல அல்ல.அது ஒரு செயல்.அதற்கு ஒரு ஈடுபாடு தேவை.ஆனால் பாட்டு கேட்பது என்பது ஒரு நிகழ்வு மட்டுமே ஆகும் என்கிறார் அட்வுட்.

ஆகே தான் டிவிட்டர் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துகிறது என்கிறார்.டிவிட்டர் குறும்பதிவுகள் மாபெரும் இலக்கியங்களாக இல்லாமல் போகலாம்.ஆனால் அடிப்படையில் அவை படிக்க வைக்கினறன.குரும்பதிவுகளில் சுட்டிக்காட்டப்படும் இனைப்புகள் மேலும் படிக்க வைகின்றன.எனவே டிவிட்ட்டருக்கு ஜே என்கிறார் அட்வுட்.

பொதுவாக் டிவிட்டர் மொழியையும் குறிப்பாக இலக்கணத்தையும் பாழடிப்பதாக பரவலாக கருதப்படும் நிலையில் வார்த்தைகளின் மூலம் தன்னை வெளிப்படுத்தி கொள்பவரான அட்வுட் டிவிட்டருக்கு இந்த நற்சான்றிதழ் வழங்கியிருப்பது டிவிட்டர் பிரியர்களை மகிழ வைக்கும்.மற்ர்வர்களுக்கு டிவிட்டரை புரிய வைக்கும்.

(முந்தைய பதிவில் டிவிட்டரில் வாசிப்பு குழுவை துவக்கியுள்ள பென்குவின் பதிப்பக முயற்சியை எழுத்தாளர் மார்கரெட் அட்வுட் வரவேற்பார் என்று குறிப்பிட்டிருந்தேன்.இந்த வாசிப்பு குழு புத்தக வாசிப்பை மேலும் ஊக்குவிக்கும் வாய்ப்பு உள்ளது.டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகள் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதாக அட்வுட் கருதுவதால் இந்த முயற்சி அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் தானே.)

டிவிட்டருக்கு இனியும் அறிமுகம் தேவையில்லை.இமெயில் போல எஸ் எம் எஸ் போல, பேஸ்புக் போல பெயர் சொன்னாலே எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு டிவிட்டர் பரவலாகவும்,பிரபலமாகவும் ஆகிவிட்டது.

டிவிட்டருக்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் நற்சான்றிதழ்கள் தான்.

காரனம் டிவிட்டர் பிரபலமான அளவிற்கு அதன் தேவையும் பயன்பாடும் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதக தெரியவில்லை.

மேலும் டிவிட்டர் ஒரு வேண்டாத கவனச்சிதறலாக,நேரத்தை வீணடிக்கும் முயற்சி என்ற கருத்தும் பலருக்கு இருக்கிறது.140 எழுத்துக்கள் என்னும் அதன் வரம்பும்,அதனால் தேவைப்படும் நவீன சுருக்கெழுத்து முறைகளும் மொழி அறிவை பதம் பார்ப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.

டிவிட்டர் குறும்பதிவுகள் இலக்கணத்திற்கு எதிரானவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

எனவே தான் டிவிட்டருக்கு அதன் சிறப்புகளுக்கு சான்று தேவைப்படுகிறது.

எழுத்தாளரான மார்கரெட் அட்வுட் இத்தகைய சான்றிதழை அளித்துள்ளார்.

கனடாவில் நடைபெற்ற நெக்ஸ்ட் மீடியா என்னும் தொழில்நுடப் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அட்வுட் ,டிவிட்டரின் பகழ் பாடியதோடு இதுவரை டிவிட்டர் பற்றி பரவலாக கவனிக்கப்படாத ஒரு விஷயத்தையும் சுட்டிக்காட்டனார்.

டிவிட்டர் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகள் வாசிக்கும் பழக்கத்தையும் ,எழுதும் பழக்கத்தையும் அதிகரித்திருப்பதாக அட்வுட் கூறியுள்ளார்.

தந்தியை போல,அதற்கு முன்னர் புகை மூலம் செய்கை செய்வதை போல,சுவரெழுத்துக்கள் போல்,மரத்தில் பெயர் எழுதுவது போலவே டிவிட்டரும் என்று குறிபிட்ட அட்வுட் இந்த சிறிய வெளியீட்டு வடிவை புதுமைஆயன் முறையில் பலரும் பயனப்டுத்தி வருவதாகவும் ஸ்லாகித்துள்ளார்.

டிவிடரில் சிறுகதை எழுதுபவர்களையும் கவனித்துள்ளதாக குறிப்பிடும் அவர் ஹைகூ கவிதையும் உரைநடையும் இணைந்த கலவை என்று டிவிட்டரை வர்ணித்துள்ளார்.

இண்டெர்நெட் மற்றும் சமூக மீடியாவின் வளர்ச்சியின் பயனாக வாசிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ள அட்வுட் ,எஸ் எம் எஸ் மற்றும் போன்றவை தொலைபேசி உரையாடலை குறைத்திருப்பதே இதற்கு காராணம் என்றும் கூறியுள்ளார்.

இண்டெர்நெட்ட்டை பய்னப்டுத்த வேண்டும் என்றாலே எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷ்யம் என்பது அட்வுட்டின் கருத்து.சிறார்கள் மத்தியில் இண்டெர்நெட் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதும் அவரது நம்பிக்கை.

அட்வுட் சுட்டிகாட்டும் மற்றொரு விஷயமும் கவனிக்கத்தக்கது.படிப்பது என்பது பாட்டு கேட்பது போல அல்ல.அது ஒரு செயல்.அதற்கு ஒரு ஈடுபாடு தேவை.ஆனால் பாட்டு கேட்பது என்பது ஒரு நிகழ்வு மட்டுமே ஆகும் என்கிறார் அட்வுட்.

ஆகே தான் டிவிட்டர் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துகிறது என்கிறார்.டிவிட்டர் குறும்பதிவுகள் மாபெரும் இலக்கியங்களாக இல்லாமல் போகலாம்.ஆனால் அடிப்படையில் அவை படிக்க வைக்கினறன.குரும்பதிவுகளில் சுட்டிக்காட்டப்படும் இனைப்புகள் மேலும் படிக்க வைகின்றன.எனவே டிவிட்ட்டருக்கு ஜே என்கிறார் அட்வுட்.

பொதுவாக் டிவிட்டர் மொழியையும் குறிப்பாக இலக்கணத்தையும் பாழடிப்பதாக பரவலாக கருதப்படும் நிலையில் வார்த்தைகளின் மூலம் தன்னை வெளிப்படுத்தி கொள்பவரான அட்வுட் டிவிட்டருக்கு இந்த நற்சான்றிதழ் வழங்கியிருப்பது டிவிட்டர் பிரியர்களை மகிழ வைக்கும்.மற்ர்வர்களுக்கு டிவிட்டரை புரிய வைக்கும்.

(முந்தைய பதிவில் டிவிட்டரில் வாசிப்பு குழுவை துவக்கியுள்ள பென்குவின் பதிப்பக முயற்சியை எழுத்தாளர் மார்கரெட் அட்வுட் வரவேற்பார் என்று குறிப்பிட்டிருந்தேன்.இந்த வாசிப்பு குழு புத்தக வாசிப்பை மேலும் ஊக்குவிக்கும் வாய்ப்பு உள்ளது.டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகள் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதாக அட்வுட் கருதுவதால் இந்த முயற்சி அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் தானே.)

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டிவிட்டருக்கு எழுத்தாளரின் பாராட்டு!

  1. priya

    what is tivitaril?

    Reply

Leave a Comment

Your email address will not be published.