கூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை!

இணையத்தை மேலும் எளிதாக பயன்படுத்தும் வகையில் கூகிள் இணையவாசிகளுக்கான புதிய பரிசோதனை முறையை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் , இணையவாசிகள் தாங்கள் மனிதர்கள் தான் என்பது முன்போல எரிச்சலூட்டும் அனுபவமாக இருக்காது என கூகிள் கருதுகிறது.

கூகிள் அறிமுகம் செய்துள்ள இந்த பரிசோதனையின் பெயர் ரி-கேப்ட்சா. ( No-CAPTCHA ) . இந்த சோதனையின் முந்தைய வடிவமான கேப்ட்சாவை நீங்கள் பலமுறை எதிர்கொண்டிருக்கலாம். புதிய இணைய சேவைக்காக பதிவு செய்யப்படும் போது அல்லது இணைய ஷாப்பிங் போன்றவற்றில் ஈடுபடும் போது ஏதாவது ஒரு நிலையில் சின்ன கட்டத்தில் , ஜாங்கிரி போன்ற எழுத்துக்கள் தோன்றும். அந்த எழுத்துக்களை நீங்கள் சரியாக கண்டுபிடித்து டைப் செய்தால் உள்ளே நுழையும் அனுமதியை பெறலாம்.

இந்த சோதனை தான் கேப்ட்சா என்று சொல்லப்படுகிறது. இந்த சோதனையின் நோக்கம் இணையத்தை பயன்படுத்த முயற்சிப்பவர்கள் மனிதர்கள் தான் என்பதை உறுதி செய்வது தான் . அதாவது இந்த சோதனையை முன்வைக்கும் ஒவ்வொரு இணையதளமும் நீங்கள் மனிதர் தானா? என்ற கேள்வியை முன்வைத்து அதை உறுதி செய்து கொள்கின்றன.
இது அபத்தமாக தோன்றலாம்.
ஆனால், இந்த சோதனையை இணையவாசிகள் எதிர்கொள்ள நேர்ந்தாலும் உண்மையில் இது அவர்களுக்கான அல்ல; இணையத்தில் உலாவும் அல்லது உலாவவிடப்படும் பாட் என்பபடும் சாப்ட்வேர் படைப்புகள் அல்லது எந்திரங்களை தடுப்பதற்காக தான்.

ஸ்பேம் மெயில் அனுப்ப, பாஸ்வேர்டு திருட என்று பலவிதமான பாட்கள் உருவாக்கப்பட்டு உலாவ விடப்பட்டுள்ளன. இவற்றை தடுக்கும் பொருட்டே, இணையவாசிகளுக்கு கேப்ட்சா சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
கிளிக் செய்து உள்ளே உழைய மட்டுமே தயார் செய்யப்பட்ட ஸ்பேம் பாட்களால் , இந்த சோதனையில் வெற்றிபெற முடியாது என்பதால் அவை திருதிருவென்று முழித்து நிற்கும். அவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்படும்.

இப்படி தான் கேப்ட்சா முறை இணையசேக்கான பூட்டு சாவியாக செயல்படுகிறது. அமெரிக்காவின் கார்னகி மெலான் பல்கலை ஆய்வாளர்கள் உருவாக்கிய முறை இது.
ஆனால், இந்த சோதனையை எதிர்கொள்வது எரிச்சலாக இருக்கும். சில நேரங்களில் மீண்டும் மீண்டும் எழுத்துக்களை டைப் செய்ய வேண்டியிருக்கும் போது எரிச்சல் பலமடங்கு அதிகமாகும்.
அதோடு, இப்போதெல்லாம் இந்த கேப்ட்சா சோதனைக்காக பதிலை அளிக்ககூடிய புத்திசாலித்தனமான பாட்களை உருவாக்கத்துவங்கிவிட்டனர். விளைவு பாட்கள் கேப்ட்சா சோதனையை கூடு உடைத்து உள்ளே நுழைந்துவிடுகின்றன.

இதற்கு மாற்று மருந்தாக தேடியந்திர நிறுவனமாக கூகிள் ,ரி-கேப்ட்சா எனும் புதிய முறையை முன்வைத்துள்ளது. இணைய பாட்களுக்கு கடுமையாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய முறை இணையவாசிகளுக்கு மிகவும் எளிதாக இருக்கும் என கூகிள் சொல்கிறது. இணையவாசிகள் , நான் ரோபோ இல்லை எனும் கட்டத்தை கிளிக் செய்தால் மட்டும் போதுமானது. இந்த கிளிக்கை வைத்தே ரி-கேப்ட்சா சேவையை பயன்படுத்த இருப்பது இணையவாசியா அல்லது ரோபாவா என தீர்மானித்துவிடும்.
ரோபோக்களுக்கு சிக்கலானது, மனிதர்களுக்கு எளிதானது எனும் வர்ணணையோடு கூகிள் இந்த சேவையை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவையை மற்ற இணையதளங்களுக்கும் கூகிள் வழங்க இருக்கிறது. ஏற்கனவே வலைப்பதிவு சேவையான வேர்டுபிரஸ் போன்றவை இதை பயம்படுத்த முன்வந்துள்ளன,.
இந்த சேவை எளிதாக தோன்றினாலும் இதன் பின் பெரிய அளவிலான ஆய்வு மற்றும் சிக்கலான செயல்முறைகள் இருக்கின்றன என்று கூகிள் சொல்கிறது.

கடந்த காலங்களில் இணையவாசிகள் கேப்ட்சா சோதனையை எதிர்கொள்ளும் விதம் மற்றும் பாட்கள் அணுகும் வித்த்தை ஆழமாக கவனித்து அதன் அடிப்படையில் புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. அட்வான்ஸ்ட் ரிஸ் அனாலசிஸ் என்று கூகிள் இதை சொல்கிறது.

ரி-கேப்ட்சா சோதனையின் போது, அதற்கு முன்னர் மற்றும் பின்னர் இணையவாசியின் செயல்பாட்டை கவனித்து செயல்படும் ஆற்றல் இந்த முறையில் இருப்பதாக கூகிள் குழு சொல்கிறது. சில நேரங்களில், புகைப்படம் போன்றவை காண்பிக்கப்பட்டு அடையாளம் காட்ட கேட்கப்படலாம். இந்த சோதனை மனிதர்களுக்கு எளிதாக இருக்கும் என்பதோடு , புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்கும் வசதி, வரைபட சேவை மேம்பாடு ஆகியவற்றுக்கும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் சரி கேப்ட்சா என்றால் என்ன என்று குழப்பமாக இருந்தால் , அதற்கான விரிவாக்கம் :Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart. கம்ப்யூட்டர் மற்றும் ரோப்போக்களை வேறுபடுத்துவத்ற்கான தானியங்கி டியுரிங் டெஸ்ட் என்று பொருள்.
கம்ப்யூட்டர் மேதையான ஆலன் டியூரிங் செயற்கை அறிவிற்காக முன்வைத்த சோதனை டியூரிங் டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

———-
ரிகேப்ட்சா பற்றி கூகிள் விளக்கம்: https://www.google.com/recaptcha/intro/index.html

—–

நெட்சத்திரங்கள் அப்டேட்;
மஹிர் காக்ரியை தெரியுமா என நேற்று கேட்டிருந்தேன். காக்ரி துருக்கி நாட்டவர். இணைய நட்சத்திரம். சொல்லப்போனால் இணையத்தின் முதல் நட்சத்திரம். யூடியூப் காலத்திற்கு வெகு முன்னரே, இமெயில் மூலம் இணைய வெளி முழுவதும் பிரபலமானவர். ஒரு சாமான்யர் பற்றி எல்லோரையும் பேச வைக்க முடியுமா என புத்தாயிரமாண்டில் வியக்க வைத்தவர்.
காக்ரி என்ன செய்தார் ? எப்படி பிரபலமானா? அதன் பிற்கு என்ன ஆனார் ? என்பது பற்றி எல்லாம் , நெட்சத்திரங்கள் புத்தக்த்தில் விரிவாக எழுதியிருக்கிறேன்.
மேலும் நெட்சத்திரங்கள் பற்றிய சுவாரஸ்ய்மான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன் சிம்மன்



புத்தகம் பற்றிய விவரங்களுக்கு ;

புத்தகத்தின் விலை ரூ. 130 ( 176பக்கங்கள்).

விவரங்களுக்கு ; Vivek Enterprises,
No.2/3, 4th Street,
Gopalapuram,
Chennai – 600 086.
Ph: 044-28111506

அன்புடன் சிம்மன்.

இணையத்தை மேலும் எளிதாக பயன்படுத்தும் வகையில் கூகிள் இணையவாசிகளுக்கான புதிய பரிசோதனை முறையை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் , இணையவாசிகள் தாங்கள் மனிதர்கள் தான் என்பது முன்போல எரிச்சலூட்டும் அனுபவமாக இருக்காது என கூகிள் கருதுகிறது.

கூகிள் அறிமுகம் செய்துள்ள இந்த பரிசோதனையின் பெயர் ரி-கேப்ட்சா. ( No-CAPTCHA ) . இந்த சோதனையின் முந்தைய வடிவமான கேப்ட்சாவை நீங்கள் பலமுறை எதிர்கொண்டிருக்கலாம். புதிய இணைய சேவைக்காக பதிவு செய்யப்படும் போது அல்லது இணைய ஷாப்பிங் போன்றவற்றில் ஈடுபடும் போது ஏதாவது ஒரு நிலையில் சின்ன கட்டத்தில் , ஜாங்கிரி போன்ற எழுத்துக்கள் தோன்றும். அந்த எழுத்துக்களை நீங்கள் சரியாக கண்டுபிடித்து டைப் செய்தால் உள்ளே நுழையும் அனுமதியை பெறலாம்.

இந்த சோதனை தான் கேப்ட்சா என்று சொல்லப்படுகிறது. இந்த சோதனையின் நோக்கம் இணையத்தை பயன்படுத்த முயற்சிப்பவர்கள் மனிதர்கள் தான் என்பதை உறுதி செய்வது தான் . அதாவது இந்த சோதனையை முன்வைக்கும் ஒவ்வொரு இணையதளமும் நீங்கள் மனிதர் தானா? என்ற கேள்வியை முன்வைத்து அதை உறுதி செய்து கொள்கின்றன.
இது அபத்தமாக தோன்றலாம்.
ஆனால், இந்த சோதனையை இணையவாசிகள் எதிர்கொள்ள நேர்ந்தாலும் உண்மையில் இது அவர்களுக்கான அல்ல; இணையத்தில் உலாவும் அல்லது உலாவவிடப்படும் பாட் என்பபடும் சாப்ட்வேர் படைப்புகள் அல்லது எந்திரங்களை தடுப்பதற்காக தான்.

ஸ்பேம் மெயில் அனுப்ப, பாஸ்வேர்டு திருட என்று பலவிதமான பாட்கள் உருவாக்கப்பட்டு உலாவ விடப்பட்டுள்ளன. இவற்றை தடுக்கும் பொருட்டே, இணையவாசிகளுக்கு கேப்ட்சா சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
கிளிக் செய்து உள்ளே உழைய மட்டுமே தயார் செய்யப்பட்ட ஸ்பேம் பாட்களால் , இந்த சோதனையில் வெற்றிபெற முடியாது என்பதால் அவை திருதிருவென்று முழித்து நிற்கும். அவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்படும்.

இப்படி தான் கேப்ட்சா முறை இணையசேக்கான பூட்டு சாவியாக செயல்படுகிறது. அமெரிக்காவின் கார்னகி மெலான் பல்கலை ஆய்வாளர்கள் உருவாக்கிய முறை இது.
ஆனால், இந்த சோதனையை எதிர்கொள்வது எரிச்சலாக இருக்கும். சில நேரங்களில் மீண்டும் மீண்டும் எழுத்துக்களை டைப் செய்ய வேண்டியிருக்கும் போது எரிச்சல் பலமடங்கு அதிகமாகும்.
அதோடு, இப்போதெல்லாம் இந்த கேப்ட்சா சோதனைக்காக பதிலை அளிக்ககூடிய புத்திசாலித்தனமான பாட்களை உருவாக்கத்துவங்கிவிட்டனர். விளைவு பாட்கள் கேப்ட்சா சோதனையை கூடு உடைத்து உள்ளே நுழைந்துவிடுகின்றன.

இதற்கு மாற்று மருந்தாக தேடியந்திர நிறுவனமாக கூகிள் ,ரி-கேப்ட்சா எனும் புதிய முறையை முன்வைத்துள்ளது. இணைய பாட்களுக்கு கடுமையாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய முறை இணையவாசிகளுக்கு மிகவும் எளிதாக இருக்கும் என கூகிள் சொல்கிறது. இணையவாசிகள் , நான் ரோபோ இல்லை எனும் கட்டத்தை கிளிக் செய்தால் மட்டும் போதுமானது. இந்த கிளிக்கை வைத்தே ரி-கேப்ட்சா சேவையை பயன்படுத்த இருப்பது இணையவாசியா அல்லது ரோபாவா என தீர்மானித்துவிடும்.
ரோபோக்களுக்கு சிக்கலானது, மனிதர்களுக்கு எளிதானது எனும் வர்ணணையோடு கூகிள் இந்த சேவையை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவையை மற்ற இணையதளங்களுக்கும் கூகிள் வழங்க இருக்கிறது. ஏற்கனவே வலைப்பதிவு சேவையான வேர்டுபிரஸ் போன்றவை இதை பயம்படுத்த முன்வந்துள்ளன,.
இந்த சேவை எளிதாக தோன்றினாலும் இதன் பின் பெரிய அளவிலான ஆய்வு மற்றும் சிக்கலான செயல்முறைகள் இருக்கின்றன என்று கூகிள் சொல்கிறது.

கடந்த காலங்களில் இணையவாசிகள் கேப்ட்சா சோதனையை எதிர்கொள்ளும் விதம் மற்றும் பாட்கள் அணுகும் வித்த்தை ஆழமாக கவனித்து அதன் அடிப்படையில் புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. அட்வான்ஸ்ட் ரிஸ் அனாலசிஸ் என்று கூகிள் இதை சொல்கிறது.

ரி-கேப்ட்சா சோதனையின் போது, அதற்கு முன்னர் மற்றும் பின்னர் இணையவாசியின் செயல்பாட்டை கவனித்து செயல்படும் ஆற்றல் இந்த முறையில் இருப்பதாக கூகிள் குழு சொல்கிறது. சில நேரங்களில், புகைப்படம் போன்றவை காண்பிக்கப்பட்டு அடையாளம் காட்ட கேட்கப்படலாம். இந்த சோதனை மனிதர்களுக்கு எளிதாக இருக்கும் என்பதோடு , புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்கும் வசதி, வரைபட சேவை மேம்பாடு ஆகியவற்றுக்கும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் சரி கேப்ட்சா என்றால் என்ன என்று குழப்பமாக இருந்தால் , அதற்கான விரிவாக்கம் :Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart. கம்ப்யூட்டர் மற்றும் ரோப்போக்களை வேறுபடுத்துவத்ற்கான தானியங்கி டியுரிங் டெஸ்ட் என்று பொருள்.
கம்ப்யூட்டர் மேதையான ஆலன் டியூரிங் செயற்கை அறிவிற்காக முன்வைத்த சோதனை டியூரிங் டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

———-
ரிகேப்ட்சா பற்றி கூகிள் விளக்கம்: https://www.google.com/recaptcha/intro/index.html

—–

நெட்சத்திரங்கள் அப்டேட்;
மஹிர் காக்ரியை தெரியுமா என நேற்று கேட்டிருந்தேன். காக்ரி துருக்கி நாட்டவர். இணைய நட்சத்திரம். சொல்லப்போனால் இணையத்தின் முதல் நட்சத்திரம். யூடியூப் காலத்திற்கு வெகு முன்னரே, இமெயில் மூலம் இணைய வெளி முழுவதும் பிரபலமானவர். ஒரு சாமான்யர் பற்றி எல்லோரையும் பேச வைக்க முடியுமா என புத்தாயிரமாண்டில் வியக்க வைத்தவர்.
காக்ரி என்ன செய்தார் ? எப்படி பிரபலமானா? அதன் பிற்கு என்ன ஆனார் ? என்பது பற்றி எல்லாம் , நெட்சத்திரங்கள் புத்தக்த்தில் விரிவாக எழுதியிருக்கிறேன்.
மேலும் நெட்சத்திரங்கள் பற்றிய சுவாரஸ்ய்மான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன் சிம்மன்



புத்தகம் பற்றிய விவரங்களுக்கு ;

புத்தகத்தின் விலை ரூ. 130 ( 176பக்கங்கள்).

விவரங்களுக்கு ; Vivek Enterprises,
No.2/3, 4th Street,
Gopalapuram,
Chennai – 600 086.
Ph: 044-28111506

அன்புடன் சிம்மன்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.