என் வாழ்வின் மோசமான கொடுங்கணவு; டிவிட்டரில் ஏர் ஆசியா சி.இ.ஓ

162 பயணிகளுடன் ஏர் ஆசியா விமானம் மாயமான சம்பவம் தன் வாழ்வின் கொடுங்கணவு என்று நிறுவன சி.இ.ஓ டோனி பெர்னாண்டஸ் டிவிட்டர் குறும்பதிவு மூலம் வேதனை தெரிவித்துள்ளார்.
காணாமல் போன விமானத்தை தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்தும் அவர் டிவிட்டர் மூலம் அதிகாரபூர்வ தகவல்களை பகிர்ந்து கொண்டு,பாதிக்கப்பட்ட பயணிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்து வருகிறார்.
இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் ஞாயிற்றுகிழமை காணாமல் போனது. அதிகாலை புறப்பட்ட இந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்து மாயமானது. விமானத்தில் 162 பயணிகள் இருந்தனர். விமானம் மாயமான சம்பவம் பெரும அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மாயமான விமானத்தை மீட்பதற்கான முயற்சி மோசமான வானிலைக்கு நடுவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே ஏர் ஆசியா விமான சேவை நிறுவனத்தின் சி.இ.ஓ தனது டிவிட்டர் பக்கம் மூலம் மாயமான விமானத்தின் நிலை, அதை கண்டறிவதற்கான முயற்சி பற்றிய அதிகாரபூர்வ தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். பாதிக்கப்பட்ட பயணிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் குறும்பதிவுகளையும் வெளியிட்டு தொடர்பில் இருந்து வருகிறார்.
இந்த விபத்து , ’என் வாழ்வின் மோசமான கொடுங்கணவு’ என்று அவர் சம்பவத்திற்கு பிறகு வெளியிட்ட குறும்பதிவில் அவர் குறிப்பிடிருந்தார். ”இப்போது என் சிந்தனை முழுவதும் பயணிகள் மற்றும் விமான சேவை குழுவினருடன் தான் இருக்கிறது. தேடல் முயற்சியில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். இந்தோனேசியா மற்றும் மலோசிய அரசுகளுக்கு நன்றி” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது தவிர பத்துக்கும் மேற்பட்ட குறும்பதிவுகளை வெளியிட்டிருந்தார். இந்த குறும்பதிவுகள் மூலம் மாயமான விமானத்தின் நிலை பற்றிய விவரங்களை அவர் பகிர்ந்து கொண்டிருந்தார்.
விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் குடும்பத்தினர் மற்றும் வினான ஊழியரின் குடும்பத்தினருக்கு கள நிலவரத்தை தெரிவிக்கும் முயற்சியாக அவரது குறும்பதிவுகள் அமைந்திருந்தன.
’ குழுமத்தின் சி.இ.ஓ என்ற முறையில் நெருக்கடியான நேரத்தில் நான் உடன் இருப்பேன். நாம் இணைந்தே இந்த சோதனையான நிலையை எதிர்கொள்வோம்.உங்களில் பலரை காணமுடியும் என நம்புகிறேன்” என மற்றொரு குறும்பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
” எங்களது முன்னுரிமை எனது ஊழியர்கள் மற்றும் பயணிகளின் நெருரிங்கிய உறவினர்களை கவனித்துக்கொள்வது தான். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வோம்’ என்றும் அவர் இன்னொரு குறும்பதிவில் தெரிவித்திருந்தார்.
தேடல் நடவடிக்கை குறித்தி நேரில் அறிவதற்காக இந்தோனேசியாவின் சுரபயா பகுதிக்கு செல்வது பற்றியும் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
விமானம் மாயமான செய்தி வெளியானதுமே அவர் டிவிட்டரில் அந்த செய்தியை உறுதிபடுத்தியதுடன் , விரைவில் இது பற்றி அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார். அதே போல அறிக்கை வெளியானது.
விமானம் மாயமானது அதில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில் கள நிலவரம் பற்றி விமான சேவை சி.இ.ஒ நேரடியாக தகவல்களை அளித்து வருவது ஓரளவு ஆறுதல் அளிக்கும் செயலாக அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலேசிய விமானம் மாயமான போது, விபத்து பற்றிய தகவல்களை நிறுவனம் முறையாக தெரிவிக்காமல் இருந்ததாக பயணிகளின் உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.
ஆனால் ஏர் ஆசியா சி.இ.ஓ டிவிட்டர் மூலம் தன்னால் இயன்ற தகவல்களை பகிர்ந்து கொண்டு நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்க முயன்று வருகிறார்.
விபத்து போன்ற நெருக்கடியான நேரங்களில் முறையான தகவல்களை தெரியாமல் இருப்பதால் ஏற்படும் இரட்டிப்பு சோகத்தை தவிர்க்கும் வகையில் அவரது முயற்சி அமைந்துள்ளது. அவர் வெளியிடும் குறும்பதிவுகள் நூற்றுக்கணகான முறை ரிடிவீட் செய்யப்ப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
இதனிடையே டோனி பெர்னாண்டஸ் தனது டிவிட்டர் பக்கத்தின் லோகோ நிறத்தை கிரே வண்ணத்திற்கு மாற்றி தனது மற்றும் நிறுவன உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
தேடல் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் பயணிகள் மற்றும் ஊழியர்களின் உறவினர்கள் கவலையுடன் காத்திருக்க #PrayForQZ8501 ஹாஷ்டேக் மூலம் டிவிட்டர் பயனாளிகள் தங்கள் பிராத்தனைகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஏர் ஆசியா சி.இ.ஓவின் டிவிட்டர் பக்கம்: https://twitter.com/tonyfernandes

 

——

( தகவல் தொடர்பு தான் டிவிட்டரின் ஆதார பலன்களில் ஒன்று என்றால் அதற்கு சரியான உதாரணம் இது. காலத்தினால் பகிரும் தகவல்கள் மிகவும் முக்கியம். நெருக்கடியான நேரங்களில் பொறுப்பிலும் பதவியிலும் இருப்பவர்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுவது தகவல் பகிர்வும் கேள்விகளுக்கான பதில்களும். அதை ஏர் ஆசியா சி.இ.ஓ நிறைவேற்ற முயன்றது பற்றிய இந்த பதிவு விகட்ன்.காமில் எழுதியது.

162 பயணிகளுடன் ஏர் ஆசியா விமானம் மாயமான சம்பவம் தன் வாழ்வின் கொடுங்கணவு என்று நிறுவன சி.இ.ஓ டோனி பெர்னாண்டஸ் டிவிட்டர் குறும்பதிவு மூலம் வேதனை தெரிவித்துள்ளார்.
காணாமல் போன விமானத்தை தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்தும் அவர் டிவிட்டர் மூலம் அதிகாரபூர்வ தகவல்களை பகிர்ந்து கொண்டு,பாதிக்கப்பட்ட பயணிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்து வருகிறார்.
இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் ஞாயிற்றுகிழமை காணாமல் போனது. அதிகாலை புறப்பட்ட இந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்து மாயமானது. விமானத்தில் 162 பயணிகள் இருந்தனர். விமானம் மாயமான சம்பவம் பெரும அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மாயமான விமானத்தை மீட்பதற்கான முயற்சி மோசமான வானிலைக்கு நடுவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே ஏர் ஆசியா விமான சேவை நிறுவனத்தின் சி.இ.ஓ தனது டிவிட்டர் பக்கம் மூலம் மாயமான விமானத்தின் நிலை, அதை கண்டறிவதற்கான முயற்சி பற்றிய அதிகாரபூர்வ தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். பாதிக்கப்பட்ட பயணிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் குறும்பதிவுகளையும் வெளியிட்டு தொடர்பில் இருந்து வருகிறார்.
இந்த விபத்து , ’என் வாழ்வின் மோசமான கொடுங்கணவு’ என்று அவர் சம்பவத்திற்கு பிறகு வெளியிட்ட குறும்பதிவில் அவர் குறிப்பிடிருந்தார். ”இப்போது என் சிந்தனை முழுவதும் பயணிகள் மற்றும் விமான சேவை குழுவினருடன் தான் இருக்கிறது. தேடல் முயற்சியில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். இந்தோனேசியா மற்றும் மலோசிய அரசுகளுக்கு நன்றி” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது தவிர பத்துக்கும் மேற்பட்ட குறும்பதிவுகளை வெளியிட்டிருந்தார். இந்த குறும்பதிவுகள் மூலம் மாயமான விமானத்தின் நிலை பற்றிய விவரங்களை அவர் பகிர்ந்து கொண்டிருந்தார்.
விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் குடும்பத்தினர் மற்றும் வினான ஊழியரின் குடும்பத்தினருக்கு கள நிலவரத்தை தெரிவிக்கும் முயற்சியாக அவரது குறும்பதிவுகள் அமைந்திருந்தன.
’ குழுமத்தின் சி.இ.ஓ என்ற முறையில் நெருக்கடியான நேரத்தில் நான் உடன் இருப்பேன். நாம் இணைந்தே இந்த சோதனையான நிலையை எதிர்கொள்வோம்.உங்களில் பலரை காணமுடியும் என நம்புகிறேன்” என மற்றொரு குறும்பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
” எங்களது முன்னுரிமை எனது ஊழியர்கள் மற்றும் பயணிகளின் நெருரிங்கிய உறவினர்களை கவனித்துக்கொள்வது தான். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வோம்’ என்றும் அவர் இன்னொரு குறும்பதிவில் தெரிவித்திருந்தார்.
தேடல் நடவடிக்கை குறித்தி நேரில் அறிவதற்காக இந்தோனேசியாவின் சுரபயா பகுதிக்கு செல்வது பற்றியும் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
விமானம் மாயமான செய்தி வெளியானதுமே அவர் டிவிட்டரில் அந்த செய்தியை உறுதிபடுத்தியதுடன் , விரைவில் இது பற்றி அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார். அதே போல அறிக்கை வெளியானது.
விமானம் மாயமானது அதில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில் கள நிலவரம் பற்றி விமான சேவை சி.இ.ஒ நேரடியாக தகவல்களை அளித்து வருவது ஓரளவு ஆறுதல் அளிக்கும் செயலாக அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலேசிய விமானம் மாயமான போது, விபத்து பற்றிய தகவல்களை நிறுவனம் முறையாக தெரிவிக்காமல் இருந்ததாக பயணிகளின் உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.
ஆனால் ஏர் ஆசியா சி.இ.ஓ டிவிட்டர் மூலம் தன்னால் இயன்ற தகவல்களை பகிர்ந்து கொண்டு நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்க முயன்று வருகிறார்.
விபத்து போன்ற நெருக்கடியான நேரங்களில் முறையான தகவல்களை தெரியாமல் இருப்பதால் ஏற்படும் இரட்டிப்பு சோகத்தை தவிர்க்கும் வகையில் அவரது முயற்சி அமைந்துள்ளது. அவர் வெளியிடும் குறும்பதிவுகள் நூற்றுக்கணகான முறை ரிடிவீட் செய்யப்ப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
இதனிடையே டோனி பெர்னாண்டஸ் தனது டிவிட்டர் பக்கத்தின் லோகோ நிறத்தை கிரே வண்ணத்திற்கு மாற்றி தனது மற்றும் நிறுவன உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
தேடல் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் பயணிகள் மற்றும் ஊழியர்களின் உறவினர்கள் கவலையுடன் காத்திருக்க #PrayForQZ8501 ஹாஷ்டேக் மூலம் டிவிட்டர் பயனாளிகள் தங்கள் பிராத்தனைகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஏர் ஆசியா சி.இ.ஓவின் டிவிட்டர் பக்கம்: https://twitter.com/tonyfernandes

 

——

( தகவல் தொடர்பு தான் டிவிட்டரின் ஆதார பலன்களில் ஒன்று என்றால் அதற்கு சரியான உதாரணம் இது. காலத்தினால் பகிரும் தகவல்கள் மிகவும் முக்கியம். நெருக்கடியான நேரங்களில் பொறுப்பிலும் பதவியிலும் இருப்பவர்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுவது தகவல் பகிர்வும் கேள்விகளுக்கான பதில்களும். அதை ஏர் ஆசியா சி.இ.ஓ நிறைவேற்ற முயன்றது பற்றிய இந்த பதிவு விகட்ன்.காமில் எழுதியது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.