பரிவு மிக்க இணையம் வேண்டும்; மோனிகா லெவின்ஸ்கி உருக்கம்.

மோனிகா லெவின்ஸ்கி மீண்டும் இணையத்தின் முன் வந்திருக்கிறார். இணையத்தின் வீச்சால் தாங்க முடியாத அவமானத்திற்கு இலக்கானவர் தன்னைப்போன்ற பாதிப்புகுள்ளாகிறவர்கள் சார்பில் பரிவு மிக்க இணையம் வேண்டும் என உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

மோனிகா லெவின்ஸ்கி என்றதும் அவர் வெள்ளை மாளிகை பணிப்பெண்ணாக இருந்ததும் முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனுடனான தொடர்பு விவகாரத்தில் சிக்கி தலைப்பு செய்திகளாகி நின்றதும் தான் நினைவுக்கு வரும். ஆனால் லெவின்ஸ்கி பற்றிய அறிமுகத்தில் இது ஒரு பாதி தான். இந்த விவகாரத்தால் அவர் எந்த அளவுக்கு வேதனைக்கும் மன உளைச்சலுக்கும் இலக்கானார் என்பதை பலரும் அறியவில்லை. அது மட்டும் அல்ல, இணையத்தின் வீச்சால் மாபெரும் அவமானத்திற்கு இலக்கான முதல் நபராகவும் அவர் வலியை அனுபவித்ததையும் பெரும்பாலானோர் அறியவில்லை. பல ஆண்டு மவுனத்தை களைத்து கடந்த ஆண்டு போர்ப்ஸ் மாநாட்டில் உருக்கமாக தனது கதையை எடுத்துரைத்த போது தான் இணையம் மூலம் அவமானத்திற்கு ஆளாகும் வேதவையின் தீவிரத்தை உலகம் உணர்ந்தது.

லெவின்ஸ்கி -கிளிண்டன் விவகாரம் இணையத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்து அதன் பிறகு உலகை உலுக்கியது என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். இணையத்தின் மூளை முடுக்கெல்லாம் இது பேசப்பட்டு அவர் தலைகுணிந்து நின்றார்.

இந்நிலையில் மோனிகா லெவின்ஸ்கி, டெட் அமைப்பின் சார்பிலான மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். பார்வையாளர்களை எழுந்து நின்று கைத்தட்டி ஆங்கிகரிக்க வைத்த இந்த உரையில் அவர் இணைய கலாச்சாரம் மற்றும் போக்கு தொடர்பாக கவலை தரும் பல விஷ்யங்களை சுட்டிக்காட்டி பரிவு மிக்க இணையத்தின் அவசியம் பற்றி உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
இப்போது இணையச்சீண்டல் என அறியப்படும் பிரச்சனையின் முதல் உதாரணம் தான் என்று கூறியவர், 22 வயதில் எனது மேலதிகாரியுடன் நான் காதலில் விழுந்தேன். 24 வயதில் அதன் மோசமான பாதிப்பை அனுபவித்தேன்” என்று குறிப்பிட்டார்

தன்னுடைய தனிப்பட்ட அவமானத்தை இணையம் பன்மடங்கு மோசமாக்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் டிஜிட்டல் புரட்சியால் ஊதிப்பெரிதாக்கப்பட்டதாக குறிப்பிட்டவர் ,தனிப்பட்ட நபராக இருந்த நிலை மாதிரி உலகம் முழுவதும் அவமானத்திற்கு இலக்காக்கப்பட்டவர் , இணையம் முழுவது கல்வீச்சுக்கு ஆளானதாகவும் தெரிவித்தார்.

மோசமான பெண்ணாக முத்திரை குத்தப்பட்டு , மதிப்பை இழந்து, கவுரவத்தை இழந்து கிட்டத்தட்ட வாழ்க்கையையும் இழந்துவிட்டதாக அவர் உருக்கமாக குறிப்பிட்டார்.
அவமானத்தின் உணர்வை தொழில்நுட்பம் பன்மடங்காக்கி இருப்பதாக வேதனை தெரிவித்தவர், முன்பு நண்பர்கள் வட்டம் , குடும்பத்தினரோடு முடிந்த விஷயம் இப்போது முழு இணைய சமூகத்திற்கும் பரவி இருப்பதாக தெரிவித்தார்.

இணையம் மற்றவர்களின் வலி மற்றும் தவிப்பு குறித்து உணர்ச்சியற்று போகச்செய்திருப்பதாக கூறியவர் , அவமானப்படுத்தும் கலாச்சாரத்தில் இருந்து விலகி பரிவு மற்றும் அக்கறை கொண்ட இணையம் உருவாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பரிவான பின்னூட்டம் எதிர்மறையான கருத்துக்களை வெல்ல உதவும் என்று கூறியவர் பரிவு எல்லோருக்கும் நலன் பயக்கும் என்றார். மற்றவர்கள் தலைப்புச்செய்தியில் ஒரு மைல் தூரம் பயணித்து பாருங்கள் என்றும் கூறியவர், இணையம் மூலம் அவமானத்திற்கு ஆளாகும் எவரும் இதை தாக்கு பிடித்து எழுந்து நிற்பது சாத்தியம் என உணர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மோனிகா லெவின்ஸ்கியின் டெட் உரை: http://blog.ted.com/imagine-walking-a-mile-in-someone-elses-headline-monica-lewinsky-speaks-at-ted2015/

——

மோனிகா லெவின்ஸ்கி மீண்டும் இணையத்தின் முன் வந்திருக்கிறார். இணையத்தின் வீச்சால் தாங்க முடியாத அவமானத்திற்கு இலக்கானவர் தன்னைப்போன்ற பாதிப்புகுள்ளாகிறவர்கள் சார்பில் பரிவு மிக்க இணையம் வேண்டும் என உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

மோனிகா லெவின்ஸ்கி என்றதும் அவர் வெள்ளை மாளிகை பணிப்பெண்ணாக இருந்ததும் முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனுடனான தொடர்பு விவகாரத்தில் சிக்கி தலைப்பு செய்திகளாகி நின்றதும் தான் நினைவுக்கு வரும். ஆனால் லெவின்ஸ்கி பற்றிய அறிமுகத்தில் இது ஒரு பாதி தான். இந்த விவகாரத்தால் அவர் எந்த அளவுக்கு வேதனைக்கும் மன உளைச்சலுக்கும் இலக்கானார் என்பதை பலரும் அறியவில்லை. அது மட்டும் அல்ல, இணையத்தின் வீச்சால் மாபெரும் அவமானத்திற்கு இலக்கான முதல் நபராகவும் அவர் வலியை அனுபவித்ததையும் பெரும்பாலானோர் அறியவில்லை. பல ஆண்டு மவுனத்தை களைத்து கடந்த ஆண்டு போர்ப்ஸ் மாநாட்டில் உருக்கமாக தனது கதையை எடுத்துரைத்த போது தான் இணையம் மூலம் அவமானத்திற்கு ஆளாகும் வேதவையின் தீவிரத்தை உலகம் உணர்ந்தது.

லெவின்ஸ்கி -கிளிண்டன் விவகாரம் இணையத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்து அதன் பிறகு உலகை உலுக்கியது என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். இணையத்தின் மூளை முடுக்கெல்லாம் இது பேசப்பட்டு அவர் தலைகுணிந்து நின்றார்.

இந்நிலையில் மோனிகா லெவின்ஸ்கி, டெட் அமைப்பின் சார்பிலான மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். பார்வையாளர்களை எழுந்து நின்று கைத்தட்டி ஆங்கிகரிக்க வைத்த இந்த உரையில் அவர் இணைய கலாச்சாரம் மற்றும் போக்கு தொடர்பாக கவலை தரும் பல விஷ்யங்களை சுட்டிக்காட்டி பரிவு மிக்க இணையத்தின் அவசியம் பற்றி உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
இப்போது இணையச்சீண்டல் என அறியப்படும் பிரச்சனையின் முதல் உதாரணம் தான் என்று கூறியவர், 22 வயதில் எனது மேலதிகாரியுடன் நான் காதலில் விழுந்தேன். 24 வயதில் அதன் மோசமான பாதிப்பை அனுபவித்தேன்” என்று குறிப்பிட்டார்

தன்னுடைய தனிப்பட்ட அவமானத்தை இணையம் பன்மடங்கு மோசமாக்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் டிஜிட்டல் புரட்சியால் ஊதிப்பெரிதாக்கப்பட்டதாக குறிப்பிட்டவர் ,தனிப்பட்ட நபராக இருந்த நிலை மாதிரி உலகம் முழுவதும் அவமானத்திற்கு இலக்காக்கப்பட்டவர் , இணையம் முழுவது கல்வீச்சுக்கு ஆளானதாகவும் தெரிவித்தார்.

மோசமான பெண்ணாக முத்திரை குத்தப்பட்டு , மதிப்பை இழந்து, கவுரவத்தை இழந்து கிட்டத்தட்ட வாழ்க்கையையும் இழந்துவிட்டதாக அவர் உருக்கமாக குறிப்பிட்டார்.
அவமானத்தின் உணர்வை தொழில்நுட்பம் பன்மடங்காக்கி இருப்பதாக வேதனை தெரிவித்தவர், முன்பு நண்பர்கள் வட்டம் , குடும்பத்தினரோடு முடிந்த விஷயம் இப்போது முழு இணைய சமூகத்திற்கும் பரவி இருப்பதாக தெரிவித்தார்.

இணையம் மற்றவர்களின் வலி மற்றும் தவிப்பு குறித்து உணர்ச்சியற்று போகச்செய்திருப்பதாக கூறியவர் , அவமானப்படுத்தும் கலாச்சாரத்தில் இருந்து விலகி பரிவு மற்றும் அக்கறை கொண்ட இணையம் உருவாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பரிவான பின்னூட்டம் எதிர்மறையான கருத்துக்களை வெல்ல உதவும் என்று கூறியவர் பரிவு எல்லோருக்கும் நலன் பயக்கும் என்றார். மற்றவர்கள் தலைப்புச்செய்தியில் ஒரு மைல் தூரம் பயணித்து பாருங்கள் என்றும் கூறியவர், இணையம் மூலம் அவமானத்திற்கு ஆளாகும் எவரும் இதை தாக்கு பிடித்து எழுந்து நிற்பது சாத்தியம் என உணர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மோனிகா லெவின்ஸ்கியின் டெட் உரை: http://blog.ted.com/imagine-walking-a-mile-in-someone-elses-headline-monica-lewinsky-speaks-at-ted2015/

——

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.