கேட்ஜெட் உலக செய்திகள்

ஸ்மார்ட்போன் சந்தையில் எப்படியோ, இப்போதைக்கு ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் சாம்சங் முதலிடத்தை பிடித்திருக்கிறது. புள்ளிவிவரங்களுக்காக அறியப்படும் இணையதளமான ஸ்டாஸ்டா இந்த தகவலை தெரிவித்துள்ளது.
2014 ம் ஆண்டியில் சாம்சங் 12 லட்சம் ஸ்மார்ட்வாட்ச்களை விற்பனைஉ செய்துள்ளதாக ஸ்டாடிஸ்டா தெரிவிக்கிறது. இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் நிறுவனம் கிக்ஸ்டாட்ர்ட்டர் செல்லப்பிள்ளையான பெப்பில். ஏழு லட்சம் வாட்ச்களை பெப்பில் விற்பனை செய்துள்ளது. ஃபிட்பிட் நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது. சோனி, லெனோனோ, எல்ஜி. போன்றவை வரிசையாக அடுத்த இடங்களில் உள்ளன்.
மொத்தமாக கடந்த ஆண்டு 68 லட்சம் ஸ்மார்ட்வாட்கள் விற்பனையாகி இருக்கின்றன. ஸ்மார்ட்வாட்சின் சராசரி விலை 189 டாலர் ( ரூ.11,800) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இறுதியில் ஆப்பிளின் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் ஆகும் போது இந்த நிலை மாறக்கூடும். இதனிடையே சீன சந்தையில் இப்போதே ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் போன்ற தோற்றம் கொண்ட போலி ஸ்மார்ட்வாட்ச்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. வடிவமைப்பில் ஆப்பில் வாட்ச் போலவே தோற்றம் கொண்ட இவை ஆண்ட்ராய்டில் இயங்குகின்றன. 35 டாலரில் இருந்து கிடைக்கும் இந்த போலி வாட்ச்கள் மின்வணிக தளங்களும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளன.
சீன சந்தையில் தயாரிப்புகள் நகலெடுக்கப்படும் வேகம் மிரள வைப்ப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிள் வாட்ச் ஏப்ரல் 24 முதல் விற்பனைக்கு வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. ஆனால் இந்தியாவில் உள்ள ஆப்பிள் வாட்ச் ஆர்வலர்கள் கவலைப்பட வேண்டாம் ஜூன் மாத வாக்கிலேயே இந்தியாவிலும் ஆப்பிள் வாட்சி அறிமுகமாகலாம் என்பது லேட்டஸ்ட்டாக கசிந்திருக்கும் தகவல்.

சார்ஜர் மட்டும் அல்ல!

சின்ன பெட்டி போல இருக்கும் வொண்டர்கியூப் (WonderCube ) சாதனம் பற்றி அநேகமாக எல்லா முக்கிய தொழில்நுட்ப இணையதளங்களிலும் செய்தி வெளியாகியிருக்கிறது. என்கேட்ஜட் தளம் இதை சூப்பர் கியூப் என குறிப்பிட்டுள்ளது. அப்படி என்ன செய்கிறது இந்த வொண்டர்கியூப் ? உண்மையில் , ஒன்றல்ல பலவித பயன்பாடுகளை கொண்டிருக்கிறது இது. இந்த கன சதுர சாதனத்தை எந்தப்பக்கம் பிரித்தாலும் ஒரு பயன்பாடு இருக்கிறது. ஒரு பக்கத்தில் கேபிள் இணைப்பு வசதி கொண்டிருப்பதால், லேப்டாப் போன்ற மற்ற சாதனங்களுடன் இணைக்க பயன்படுத்திக்கொள்ளலாம். கோப்புகளை பேக் அப் எடுக்கவும் இது பயன்படும். இதே முறையில் போனை சார்ஜ் செய்யவும் பயன்படுத்தலாம். ஸ்மார்டிபோனில் வீடியோ அல்லது புகைப்படம் பார்க்க விரும்பினால், இதை போன் பின்னே வைத்து ஸ்டாண்டாக பயன்படுத்தலாம். யு.எஸ்பி சாதனமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். மெமரி கார்டையும் இதில் பொருத்திக்கொள்ளலாம். இருளில் டார்ச்சாகவும் ஒளி பாய்ச்சும்.
எல்லாவற்றுக்கும் மேல் ஸ்மார்ட்போனில் சார்ஜ் தீர்ந்து போய்விட்டால் ஒரு 9 வோல்ட் பேட்டரியை இணைத்து அவசரகால சார்ஜராகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். எட்டுவிதமான மொபைல் பயன்பாடுகள் ஒரே சாதனத்தில் இருப்பதாக வொண்டர்கியூப் பெருமைப்பட்டுக்கொள்கிறது.
அழகாக சாவிக்கொத்தில் கோர்த்துக்கொண்டு எங்கும் எடுத்துச்செல்லலாம். இதுவே அழகான சாவிக்கொத்தாகவும் இருக்கும்.
இணைய நிதி திரட்டும் மேடையான இண்டிகோகோவில் அறிமுகமாகி இருக்கிறது இந்த வொண்டர்கியூப். முயற்சியை ஆதரிக்க விரும்புகிறவர்கள் முன்பதிவு செய்து கொண்டால் 40 டாலருக்கு இந்த சாதனம் அனுப்பி வைக்கப்படுமாம்!.
மேலும் தகவல்களுக்கு: https://www.indiegogo.com/projects/wondercube-8-mobile-essentials-in-one-cubic-inch

—–
வாட்ஸ் அப் அழைப்பு சேவை

மெசேஜிங் சேவைகளில் பிரபலமாக இருக்கும் வாட்ஸ் அப் குரல் வழி வசதி பற்றி கொஞ்ச காலமாகவே பேசப்பட்டு வருகிறது. இந்த வாட்ஸ் அப் காலிங் வசதி இப்போது பயனாளிகளுக்கு அறிமுகமாகியுள்ளது. வாட்ஸ் அப் மெசஞ்சரின் சமீபத்தில் வடிவில் இதை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் பிளேவில் இருந்து இதை டவுண்லோடு செய்து கொள்ளலாம். (வர்ஷென் 2.11.561)
இந்த வசதியை நிறுவும் முறை சுபலமானது. முதலில் கூகுள் பிளேவில் இருந்து டவுண்லோடு செய்யவேண்டும். ஆனால் இதன் பிறகு வேறு ஒரு பயனாளியிடம் இருந்து அழைப்பு வந்தால் தான் இந்த சேவை ஆக்டிவேட் ஆகும். எனவே சக பயனாளிகளிடம் கோரிகை அவைத்து அவர்கள் அழைத்த பிறகு , வாட்ஸ் அப்பில் செய்லையில் அரட்டை வசதிக்கு அருகே கால் செய்யும் வசதியை பார்க்கலாம்.
அதிகார்பூர்வ செயலிகளை மட்டுமே வாட்ஸ் அப் அங்கீகரிப்பதால் கூகுளில் பிளேவில் இருந்து அல்லது வாட்ஸ் அப் இணையதளத்தில் இருந்து டவுண்லோடு செய்யவும்: இதனிடையே ஐபோனிலும் இந்த வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய ஆயுத்தமாகி கொண்டிருப்பதாக தகவல்!
டவுண்லோடு செய்ய; https://play.google.com/store/apps/details?id=com.whatsapp&hl=en

——-

போனுக்கு இரண்டாம் திரை

யோட்டோ போனி இரட்டைத்திரை அம்சம் பிடித்திருந்தால், அதே போன்ற அம்சத்தை மற்ற ஸ்மார்ட்போனிலும் கொண்டு வர வழி இருக்கிறது தெரியுமா? இன்க் கேஸ் பிளஸ் ( InkCase Plus) தான் அந்த வழி. இங்க் கேஸ் பிளஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான கேஸ் போன்றது. கேஸ் மட்டும் அல்ல, இதுவே இன்னொரு திரையாக இருக்கும். பிரதான திரையில் பேட்டரியை மிச்சம் செய்ய இதை பயன்படுத்தலாம். டிஸ்பிளேவில் நோட்டிப்பிகேஷன் தெரியும். முக்கிய செயலிகளை பயன்படுத்தலாம். புகைப்படங்களை பார்க்கலம். மின்னூல்களை படிக்கலாம்., 3.5 இன்ச் அகலம் கொண்டது. இதிலேயே பேட்டரி உள்ளது. ப்ளூடூத் வசதியும் கொண்டிருக்கிறது. பிடித்தமான புகைப்படங்களை இதில் தோன்றச்செய்யலாம். தனியே மின்னூல் வாசிப்பாகவும் ( இபுக் ரீடர்) பயன்படுத்தலாம். ஸ்மார்ட்போனுக்கான பாதுகாப்பாகவும் ஒருக்கும். இரண்டாம் திரையாகவும் இருக்கும். தனியாகவும் பயன்படுத்தலாம், பிட்கேசுடம் சேர்ந்தும் பயன்படுத்தலாம். கிக்ஸ்டார்ட்டர் இணைதளம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகமான இது இப்போது பொதுவான பயனாளிகளுக்கும் விற்பனைக்கு வந்திருக்கிறது. சிங்கப்பூரைச்சேர்ந்த ஆகிசிஸ் ( Oaxis) நிறுவன தயாரிப்பு; இதற்கான துணை செயலியும் இருக்கிறது.
மேலும் தகவல்களுக்கு: http://www.oaxis.com/shop/product_detail.php?id=16

———–

கார்பனின் புதிய போன்

கார்பன் நிறுவனம் தனது டைட்டானியம் ஸ்மார்ட்போன் வரிசையில் டைட்டனியம் மேக் டு ( Titanium Mach Two) புதிய போனை அறிமுகம் செய்துள்ளது. 112 கிராம் எடை கொண்ட இது கோரிங் கொரில்லா கிலாஸ் 3 கொண்டுள்ளது. இதனால் கீறல் விழ வாய்ப்பில்லை என்கிறது,.
5 இன்ச் டிஸ்பிளேவுடன் 8 மெகாபிக்சல் முன் பக்க மற்றும் பின் பக்க காமிரா இருக்கின்றன. 1.4GHz ஆக்டா கோர் பிராசஸர் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4. வர்ஷன் என்றாலும் ஆண்ட்ராய்டு லாலிபாப்பிற்கு மேம்படுத்திக்கொள்ளலாம். 8 ஜிபி சேமிப்புத்திறன் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு வசதியும் கொண்டுள்ளது. இரட்டை சிம்முடன் அடர் நீள நிறத்தில் கிடைக்கிறது. விலை. ரூ. 10,490.

—-

லாவாவின் புதிய அறிமுகம்

லாவா தனது பியல் சீரிசில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஐரிஸ் பியல் 10 மற்றும் ஐரிஸ் பியல் 25 (Iris Fuel 25 )ஆகிய் இஒந்த போன்கள் மேம்பட்ட பேட்டரி ஆற்றலை கொண்டிருப்பதாக லாவா தெரிவிக்கிறது. ஐரிஸ் பியல் 10 மாதிரி 4.5 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கிறது. நல்ல ரிசல்யூஷன் கொண்டது. 5 மெகாபிக்சல் பின் பக்க காமிரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் பக்க காமிரா கொண்டிருக்கிறது. இதன் பின் பக்கத்தில் செல்ஃபிக்கான தனி பட்டன் இருகிறதார். புகைப்படத்தை குரல் வழியே கட்டுப்படுதலாம்.
ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4. கொண்டுள்ளது.பின்னர் ஆண்ட்ராய்டு லாலிபாப்பிற்கு மேம்படுத்திக்கொள்ளலாம். 3ஜி வசதி கொண்டது.
ஐரிஸ் பியல் 25 மாதிரி 5 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கிறது. காமிரா சிப் சென்சார் கொண்ட பின் பக்க காமிரா மற்றும் முன் பக்க காமிரா உள்ளது. இதன் பேட்டரி 15 நிமிட தொடர் பேசும் ஆற்றல் கொண்டதாக லாவா சொல்கிறது. 4 ஜிபி சேமிப்புத்திறன் கொண்டது. ரூ.6,541 மற்றும் ரூ.5,666 விலையில் கிடைக்கின்றன.

—-

தமிழ் இந்துவில் எழுதியது

ஸ்மார்ட்போன் சந்தையில் எப்படியோ, இப்போதைக்கு ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் சாம்சங் முதலிடத்தை பிடித்திருக்கிறது. புள்ளிவிவரங்களுக்காக அறியப்படும் இணையதளமான ஸ்டாஸ்டா இந்த தகவலை தெரிவித்துள்ளது.
2014 ம் ஆண்டியில் சாம்சங் 12 லட்சம் ஸ்மார்ட்வாட்ச்களை விற்பனைஉ செய்துள்ளதாக ஸ்டாடிஸ்டா தெரிவிக்கிறது. இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் நிறுவனம் கிக்ஸ்டாட்ர்ட்டர் செல்லப்பிள்ளையான பெப்பில். ஏழு லட்சம் வாட்ச்களை பெப்பில் விற்பனை செய்துள்ளது. ஃபிட்பிட் நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது. சோனி, லெனோனோ, எல்ஜி. போன்றவை வரிசையாக அடுத்த இடங்களில் உள்ளன்.
மொத்தமாக கடந்த ஆண்டு 68 லட்சம் ஸ்மார்ட்வாட்கள் விற்பனையாகி இருக்கின்றன. ஸ்மார்ட்வாட்சின் சராசரி விலை 189 டாலர் ( ரூ.11,800) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இறுதியில் ஆப்பிளின் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் ஆகும் போது இந்த நிலை மாறக்கூடும். இதனிடையே சீன சந்தையில் இப்போதே ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் போன்ற தோற்றம் கொண்ட போலி ஸ்மார்ட்வாட்ச்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. வடிவமைப்பில் ஆப்பில் வாட்ச் போலவே தோற்றம் கொண்ட இவை ஆண்ட்ராய்டில் இயங்குகின்றன. 35 டாலரில் இருந்து கிடைக்கும் இந்த போலி வாட்ச்கள் மின்வணிக தளங்களும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளன.
சீன சந்தையில் தயாரிப்புகள் நகலெடுக்கப்படும் வேகம் மிரள வைப்ப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிள் வாட்ச் ஏப்ரல் 24 முதல் விற்பனைக்கு வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. ஆனால் இந்தியாவில் உள்ள ஆப்பிள் வாட்ச் ஆர்வலர்கள் கவலைப்பட வேண்டாம் ஜூன் மாத வாக்கிலேயே இந்தியாவிலும் ஆப்பிள் வாட்சி அறிமுகமாகலாம் என்பது லேட்டஸ்ட்டாக கசிந்திருக்கும் தகவல்.

சார்ஜர் மட்டும் அல்ல!

சின்ன பெட்டி போல இருக்கும் வொண்டர்கியூப் (WonderCube ) சாதனம் பற்றி அநேகமாக எல்லா முக்கிய தொழில்நுட்ப இணையதளங்களிலும் செய்தி வெளியாகியிருக்கிறது. என்கேட்ஜட் தளம் இதை சூப்பர் கியூப் என குறிப்பிட்டுள்ளது. அப்படி என்ன செய்கிறது இந்த வொண்டர்கியூப் ? உண்மையில் , ஒன்றல்ல பலவித பயன்பாடுகளை கொண்டிருக்கிறது இது. இந்த கன சதுர சாதனத்தை எந்தப்பக்கம் பிரித்தாலும் ஒரு பயன்பாடு இருக்கிறது. ஒரு பக்கத்தில் கேபிள் இணைப்பு வசதி கொண்டிருப்பதால், லேப்டாப் போன்ற மற்ற சாதனங்களுடன் இணைக்க பயன்படுத்திக்கொள்ளலாம். கோப்புகளை பேக் அப் எடுக்கவும் இது பயன்படும். இதே முறையில் போனை சார்ஜ் செய்யவும் பயன்படுத்தலாம். ஸ்மார்டிபோனில் வீடியோ அல்லது புகைப்படம் பார்க்க விரும்பினால், இதை போன் பின்னே வைத்து ஸ்டாண்டாக பயன்படுத்தலாம். யு.எஸ்பி சாதனமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். மெமரி கார்டையும் இதில் பொருத்திக்கொள்ளலாம். இருளில் டார்ச்சாகவும் ஒளி பாய்ச்சும்.
எல்லாவற்றுக்கும் மேல் ஸ்மார்ட்போனில் சார்ஜ் தீர்ந்து போய்விட்டால் ஒரு 9 வோல்ட் பேட்டரியை இணைத்து அவசரகால சார்ஜராகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். எட்டுவிதமான மொபைல் பயன்பாடுகள் ஒரே சாதனத்தில் இருப்பதாக வொண்டர்கியூப் பெருமைப்பட்டுக்கொள்கிறது.
அழகாக சாவிக்கொத்தில் கோர்த்துக்கொண்டு எங்கும் எடுத்துச்செல்லலாம். இதுவே அழகான சாவிக்கொத்தாகவும் இருக்கும்.
இணைய நிதி திரட்டும் மேடையான இண்டிகோகோவில் அறிமுகமாகி இருக்கிறது இந்த வொண்டர்கியூப். முயற்சியை ஆதரிக்க விரும்புகிறவர்கள் முன்பதிவு செய்து கொண்டால் 40 டாலருக்கு இந்த சாதனம் அனுப்பி வைக்கப்படுமாம்!.
மேலும் தகவல்களுக்கு: https://www.indiegogo.com/projects/wondercube-8-mobile-essentials-in-one-cubic-inch

—–
வாட்ஸ் அப் அழைப்பு சேவை

மெசேஜிங் சேவைகளில் பிரபலமாக இருக்கும் வாட்ஸ் அப் குரல் வழி வசதி பற்றி கொஞ்ச காலமாகவே பேசப்பட்டு வருகிறது. இந்த வாட்ஸ் அப் காலிங் வசதி இப்போது பயனாளிகளுக்கு அறிமுகமாகியுள்ளது. வாட்ஸ் அப் மெசஞ்சரின் சமீபத்தில் வடிவில் இதை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் பிளேவில் இருந்து இதை டவுண்லோடு செய்து கொள்ளலாம். (வர்ஷென் 2.11.561)
இந்த வசதியை நிறுவும் முறை சுபலமானது. முதலில் கூகுள் பிளேவில் இருந்து டவுண்லோடு செய்யவேண்டும். ஆனால் இதன் பிறகு வேறு ஒரு பயனாளியிடம் இருந்து அழைப்பு வந்தால் தான் இந்த சேவை ஆக்டிவேட் ஆகும். எனவே சக பயனாளிகளிடம் கோரிகை அவைத்து அவர்கள் அழைத்த பிறகு , வாட்ஸ் அப்பில் செய்லையில் அரட்டை வசதிக்கு அருகே கால் செய்யும் வசதியை பார்க்கலாம்.
அதிகார்பூர்வ செயலிகளை மட்டுமே வாட்ஸ் அப் அங்கீகரிப்பதால் கூகுளில் பிளேவில் இருந்து அல்லது வாட்ஸ் அப் இணையதளத்தில் இருந்து டவுண்லோடு செய்யவும்: இதனிடையே ஐபோனிலும் இந்த வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய ஆயுத்தமாகி கொண்டிருப்பதாக தகவல்!
டவுண்லோடு செய்ய; https://play.google.com/store/apps/details?id=com.whatsapp&hl=en

——-

போனுக்கு இரண்டாம் திரை

யோட்டோ போனி இரட்டைத்திரை அம்சம் பிடித்திருந்தால், அதே போன்ற அம்சத்தை மற்ற ஸ்மார்ட்போனிலும் கொண்டு வர வழி இருக்கிறது தெரியுமா? இன்க் கேஸ் பிளஸ் ( InkCase Plus) தான் அந்த வழி. இங்க் கேஸ் பிளஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான கேஸ் போன்றது. கேஸ் மட்டும் அல்ல, இதுவே இன்னொரு திரையாக இருக்கும். பிரதான திரையில் பேட்டரியை மிச்சம் செய்ய இதை பயன்படுத்தலாம். டிஸ்பிளேவில் நோட்டிப்பிகேஷன் தெரியும். முக்கிய செயலிகளை பயன்படுத்தலாம். புகைப்படங்களை பார்க்கலம். மின்னூல்களை படிக்கலாம்., 3.5 இன்ச் அகலம் கொண்டது. இதிலேயே பேட்டரி உள்ளது. ப்ளூடூத் வசதியும் கொண்டிருக்கிறது. பிடித்தமான புகைப்படங்களை இதில் தோன்றச்செய்யலாம். தனியே மின்னூல் வாசிப்பாகவும் ( இபுக் ரீடர்) பயன்படுத்தலாம். ஸ்மார்ட்போனுக்கான பாதுகாப்பாகவும் ஒருக்கும். இரண்டாம் திரையாகவும் இருக்கும். தனியாகவும் பயன்படுத்தலாம், பிட்கேசுடம் சேர்ந்தும் பயன்படுத்தலாம். கிக்ஸ்டார்ட்டர் இணைதளம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகமான இது இப்போது பொதுவான பயனாளிகளுக்கும் விற்பனைக்கு வந்திருக்கிறது. சிங்கப்பூரைச்சேர்ந்த ஆகிசிஸ் ( Oaxis) நிறுவன தயாரிப்பு; இதற்கான துணை செயலியும் இருக்கிறது.
மேலும் தகவல்களுக்கு: http://www.oaxis.com/shop/product_detail.php?id=16

———–

கார்பனின் புதிய போன்

கார்பன் நிறுவனம் தனது டைட்டானியம் ஸ்மார்ட்போன் வரிசையில் டைட்டனியம் மேக் டு ( Titanium Mach Two) புதிய போனை அறிமுகம் செய்துள்ளது. 112 கிராம் எடை கொண்ட இது கோரிங் கொரில்லா கிலாஸ் 3 கொண்டுள்ளது. இதனால் கீறல் விழ வாய்ப்பில்லை என்கிறது,.
5 இன்ச் டிஸ்பிளேவுடன் 8 மெகாபிக்சல் முன் பக்க மற்றும் பின் பக்க காமிரா இருக்கின்றன. 1.4GHz ஆக்டா கோர் பிராசஸர் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4. வர்ஷன் என்றாலும் ஆண்ட்ராய்டு லாலிபாப்பிற்கு மேம்படுத்திக்கொள்ளலாம். 8 ஜிபி சேமிப்புத்திறன் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு வசதியும் கொண்டுள்ளது. இரட்டை சிம்முடன் அடர் நீள நிறத்தில் கிடைக்கிறது. விலை. ரூ. 10,490.

—-

லாவாவின் புதிய அறிமுகம்

லாவா தனது பியல் சீரிசில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஐரிஸ் பியல் 10 மற்றும் ஐரிஸ் பியல் 25 (Iris Fuel 25 )ஆகிய் இஒந்த போன்கள் மேம்பட்ட பேட்டரி ஆற்றலை கொண்டிருப்பதாக லாவா தெரிவிக்கிறது. ஐரிஸ் பியல் 10 மாதிரி 4.5 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கிறது. நல்ல ரிசல்யூஷன் கொண்டது. 5 மெகாபிக்சல் பின் பக்க காமிரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் பக்க காமிரா கொண்டிருக்கிறது. இதன் பின் பக்கத்தில் செல்ஃபிக்கான தனி பட்டன் இருகிறதார். புகைப்படத்தை குரல் வழியே கட்டுப்படுதலாம்.
ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4. கொண்டுள்ளது.பின்னர் ஆண்ட்ராய்டு லாலிபாப்பிற்கு மேம்படுத்திக்கொள்ளலாம். 3ஜி வசதி கொண்டது.
ஐரிஸ் பியல் 25 மாதிரி 5 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கிறது. காமிரா சிப் சென்சார் கொண்ட பின் பக்க காமிரா மற்றும் முன் பக்க காமிரா உள்ளது. இதன் பேட்டரி 15 நிமிட தொடர் பேசும் ஆற்றல் கொண்டதாக லாவா சொல்கிறது. 4 ஜிபி சேமிப்புத்திறன் கொண்டது. ரூ.6,541 மற்றும் ரூ.5,666 விலையில் கிடைக்கின்றன.

—-

தமிழ் இந்துவில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.