ஆன் –லைன் விற்பனையில் வீடு வாங்கலாமா?

இணையம் மூலம் பொருட்களை வாங்கும் மின்வணிகம் இந்தியாவில் பிரபலமாகி பட்டி தொட்டியெல்லாம் அறிமுகமாகி இருக்கிறது. மின் வணிகம் மூலம் பொருட்களை வாங்கும் பழக்கம் அதிகரித்திருப்பதோடு,மின் வணிகம் மூலம் வாங்கக்கூடிய பொருட்களின் பட்டியலில் விரிவடைந்திருக்கிறது.

இந்த பட்டியலில் இப்போது ரியல் எஸ்டேட்டும் சேர்ந்திருக்கிறது. ஆம், லட்சக்கணக்கில் மதிப்பு உள்ள வீடுகளையும் இப்போது மவுஸ் கிளிக்கில் வாங்கும் நிலை வந்திருக்கிறது.ஸ்மார்ட்போன்களுக்கும் ,ஆடைகளுக்கும் ஆன் –லைனில் தள்ளுபடி விற்பனை செய்யப்படுவது போல வீடுகளும் ஆன் –லைன் மூலம் அதிரடியாக விற்கப்படுகிறது.

கடந்த மாதம் 99 ஏக்கர்ஸ்.காம் நிறுவனம் இந்தியன் ரியாலிட்டி பிளேஷ் சேல் எனும் விற்பனையை நடத்தியது. பெரும் தள்ளுபடியில் வீடுகளை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இப்போது மேஜிக்பிரிக்ஸ்.காம் நிறுவனம் ஜூலை 18 ம் தேதி முதல் 10 நாள் கிரேட் ஆன் –லைன் ஹோம் பெஸ்டிவலை அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட் சந்தை தேக்க நிலையில் இருக்கிறது. கட்டி முடிக்கப்பட வீடுகள் பல விற்காமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் புதிய திட்டங்களின் வேகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் தான் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆன் –லைன் வழியை தேர்வு செய்துள்ளன.அவற்றை பொறுத்தவரை இது கூடுதலான ஒரு விளம்பரம் போல தான். அதோடு வீடு வாங்க தீர்மானித்து முடிவு எடுக்க காத்திருக்கும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க அதிரடி உத்திகள் உதவும் என்று எதிர்பார்க்கின்றன.தள்ளுபடி அளிக்கவும் தயாராக இருக்கின்றன.

ஆனால் இணைய விற்பனையில் வீடு வாங்குவது சரியாக இருக்குமா? நேரில் வாங்குவதாக இருந்தாலும் சரி ,இணையம் மூலம் வாங்குவதாக இருந்தாலும் சரி, வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் மாறுவதில்லை என்று வல்லுனர்கள் சொல்கின்றனர். வில்லங்கம் இல்லாமல் இருப்பது, பத்திரங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்வது ஆகியவை வாடிக்கையாளர்களின் பொறுப்பு என்கின்றனர். அதே போல கட்டுப்படும் வீட்டை நேரில் பார்த்து திட்டத்தின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்திலும் மாற்றம் இல்லை என்கின்றனர்.

மேலும் இந்த விற்பனையை குடியிருப்பு திட்டங்கள் பற்றி தகவல்களை திரட்ட பயன்படுத்திக்கொள்ளலாம் என்கின்றனர். குறிப்பிட்ட பகுதியில் வீடுகளின் விலை மற்றும் தள்ளுபடி அளவை தெரிந்து கொண்டு நேரில் சென்று பார்த்துப்பேசி சாதகமான விலையை குறைக்கலாம் என்றும் வல்லுனர்கள் சொல்கின்றனர்.
ஆனால் ஒன்று பல குடியிருப்பு திட்டங்கள் தாமதமாகி கொண்டிருக்கும் நிலையில் கட்டப்பட்டு வரும் வீடுகளை விட, வாங்கியவுடன் குடியேறக்கூடிய கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்குவதே சரியாக இருக்கும் என்கின்றனர். அதோடு புக் செய்த பிறகு வீடு பிடிக்கவில்லை என்றால் முதலில் செலுத்திய தொகை திருப்பு அளிக்கப்படும் வசதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்கின்றனர்.விதிகள் மற்றும் நிபந்தனைகள், ப்ணத்தை செலுத்தும் காலம் மற்றும் டீலை முடிப்பதற்கு உள்ள அவகாசம் ஆகிய அம்சங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறனர்.

இணையம் மூலம் பொருட்களை வாங்கும் மின்வணிகம் இந்தியாவில் பிரபலமாகி பட்டி தொட்டியெல்லாம் அறிமுகமாகி இருக்கிறது. மின் வணிகம் மூலம் பொருட்களை வாங்கும் பழக்கம் அதிகரித்திருப்பதோடு,மின் வணிகம் மூலம் வாங்கக்கூடிய பொருட்களின் பட்டியலில் விரிவடைந்திருக்கிறது.

இந்த பட்டியலில் இப்போது ரியல் எஸ்டேட்டும் சேர்ந்திருக்கிறது. ஆம், லட்சக்கணக்கில் மதிப்பு உள்ள வீடுகளையும் இப்போது மவுஸ் கிளிக்கில் வாங்கும் நிலை வந்திருக்கிறது.ஸ்மார்ட்போன்களுக்கும் ,ஆடைகளுக்கும் ஆன் –லைனில் தள்ளுபடி விற்பனை செய்யப்படுவது போல வீடுகளும் ஆன் –லைன் மூலம் அதிரடியாக விற்கப்படுகிறது.

கடந்த மாதம் 99 ஏக்கர்ஸ்.காம் நிறுவனம் இந்தியன் ரியாலிட்டி பிளேஷ் சேல் எனும் விற்பனையை நடத்தியது. பெரும் தள்ளுபடியில் வீடுகளை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இப்போது மேஜிக்பிரிக்ஸ்.காம் நிறுவனம் ஜூலை 18 ம் தேதி முதல் 10 நாள் கிரேட் ஆன் –லைன் ஹோம் பெஸ்டிவலை அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட் சந்தை தேக்க நிலையில் இருக்கிறது. கட்டி முடிக்கப்பட வீடுகள் பல விற்காமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் புதிய திட்டங்களின் வேகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் தான் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆன் –லைன் வழியை தேர்வு செய்துள்ளன.அவற்றை பொறுத்தவரை இது கூடுதலான ஒரு விளம்பரம் போல தான். அதோடு வீடு வாங்க தீர்மானித்து முடிவு எடுக்க காத்திருக்கும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க அதிரடி உத்திகள் உதவும் என்று எதிர்பார்க்கின்றன.தள்ளுபடி அளிக்கவும் தயாராக இருக்கின்றன.

ஆனால் இணைய விற்பனையில் வீடு வாங்குவது சரியாக இருக்குமா? நேரில் வாங்குவதாக இருந்தாலும் சரி ,இணையம் மூலம் வாங்குவதாக இருந்தாலும் சரி, வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் மாறுவதில்லை என்று வல்லுனர்கள் சொல்கின்றனர். வில்லங்கம் இல்லாமல் இருப்பது, பத்திரங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்வது ஆகியவை வாடிக்கையாளர்களின் பொறுப்பு என்கின்றனர். அதே போல கட்டுப்படும் வீட்டை நேரில் பார்த்து திட்டத்தின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்திலும் மாற்றம் இல்லை என்கின்றனர்.

மேலும் இந்த விற்பனையை குடியிருப்பு திட்டங்கள் பற்றி தகவல்களை திரட்ட பயன்படுத்திக்கொள்ளலாம் என்கின்றனர். குறிப்பிட்ட பகுதியில் வீடுகளின் விலை மற்றும் தள்ளுபடி அளவை தெரிந்து கொண்டு நேரில் சென்று பார்த்துப்பேசி சாதகமான விலையை குறைக்கலாம் என்றும் வல்லுனர்கள் சொல்கின்றனர்.
ஆனால் ஒன்று பல குடியிருப்பு திட்டங்கள் தாமதமாகி கொண்டிருக்கும் நிலையில் கட்டப்பட்டு வரும் வீடுகளை விட, வாங்கியவுடன் குடியேறக்கூடிய கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்குவதே சரியாக இருக்கும் என்கின்றனர். அதோடு புக் செய்த பிறகு வீடு பிடிக்கவில்லை என்றால் முதலில் செலுத்திய தொகை திருப்பு அளிக்கப்படும் வசதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்கின்றனர்.விதிகள் மற்றும் நிபந்தனைகள், ப்ணத்தை செலுத்தும் காலம் மற்றும் டீலை முடிப்பதற்கு உள்ள அவகாசம் ஆகிய அம்சங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறனர்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.