டிவிட்டரில் கமல்; ஒரு இணைய ரசிகனின் எதிர்பார்ப்பு

CZpvuVPUcAAqhTtடிவிட்டரில் கமல்ஹாசன் இணைந்திருக்கிறார்.முதலில் கமல்ஹாசனுக்கு நல்வரவு.ஏற்கனவே பேஸ்புக்கில் இணைந்திருக்கும் கமல் குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கும் வந்திருப்பது நிச்சயம் திரைப்பட ரசிகர்கள் மகிழக்கூடியது தான்.கமலின் டிவிட்டர் பிரவேசத்தை அவரது மகள் ஸ்ருதிஹாசன் டிவிட்டர் மூலமே வரவேற்றிருக்கிறார். ஏற்கனவே டிவிட்டரில் இருக்கும் வேறு பல நட்சத்திரங்களும் வரவேற்றிருக்கின்றனர்.
பிரபலங்கள் டிவிட்டருக்கு வரும் போது நிகழ்வது போலவே கமலுக்கு கிடைக்கும் பாலோயர்கள் எண்ணிக்கை பற்றிய கணக்கும் துவங்கியிருக்கிறது.இனி கமல் டிவிட்டர் கணக்கு பாலோயர் எண்ணிக்கையில் மைல்கற்களை தொடும் போதெல்லாம் செய்தியில் அடிபடும் வாய்ப்புள்ளது.

ஒருவிதத்தில் கமலின் இந்த டிவிட்டர் வருகை ஆச்சர்யமானதே.இதையே வேறு விதமாக சொல்வது என்றால் அவர் இதுவரை டிவிட்டருக்கு வராமல் இருந்தது ஆச்சர்யமானது. அந்த வகையில் பார்த்தால் கமலின் டிவிட்டர் வருகை தாமதமாக நிகழ்ந்திருக்கிறது. இதை கமலே ஒப்புக்கொள்வார்.

டிவிட்டருக்கு கமல் எப்போதோ வந்திருக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை.அவரது சகாவான ரஜினி காந்த் ஏற்கனவே டிவிட்டரில் இருக்கிறார். அகில இந்திய அளவில் அமிதாப் டிவிட்டரில் கோலோச்சுகிறார்.ஷாருக்கும்,சல்மானும் டிவிட்டரில் தீவிரமாக இருக்கின்றனர்.இங்கேயே பல நட்சத்திரங்கள் டிவிட்டரில் இயங்கி கொண்டிருக்கின்றனர்.- இவர்கள் எல்லாம் வந்துவிட்ட நிலையில் கமல் டிவிட்டருக்கு வரவில்லை என்பதல்ல விஷயம், கமல் டிவிட்டருக்கு வந்திருக்க வேண்டும் என்பதே இங்கே நான் வலியுறுத்த விரும்புவது.

கமல் டிவிட்டருக்கு வருவதும் வராததும் அவரது விருப்பம் சார்ந்தது தான்.அதற்கான நேரத்தை தேர்வு செய்து கொள்ளும் உரிமையும் அவருக்கு இருக்கிறது.ஆனாலும் கூட, கமல் போன்ற முன்னோடி கலைஞர்களை டிவிட்டர் பயன்பாட்டில் முதலில் எதிர்பார்ப்பது மிக இயல்பானதே. டிவிட்டர் என்றில்லை,சமூக ஊடக செயல்பாட்டில் கமலை முன்வரிசையில் தான் எதிர்பார்க்க முடியும்.
CZpu2PqVIAMltH3
இந்த எதிர்பார்ப்பின் காரணத்தை மிக எளிதாக புரிந்து கொள்ளலாம்.கமல் தொழில்நுட்பத்தை புரிந்து கொள்வதிலும், பயன்படுத்துபதிலும் எப்போதுமே முன்னோடியாக தான் இருக்கிறார். கமல் படங்களை உருவாக்கும் வித்ததில் இதை பார்க்கலாம். திரைப்பட நுட்பங்கள் பற்றி பேசுவதில் இதை உணரலாம்.பெரும்பாலானோர் தயங்கிய நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பே டிஜிட்டல் நுட்பத்தில் படம் எடுக்கத்துணிந்தவர் அவர்.சொந்தமாக ரெட் ஒன் காமிரா வாங்கிவைத்துக்கொண்டு பயிற்சி செய்பவர்.ஸ்டிரீமிங் பற்றி எல்லாம் பெரிதாக பேச்சு வருவதற்கு முன்னதாகவே, லேப்டாப்பில் ரசிகர்கள் படம் பார்க்க விரும்பினால் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என பேசியவர்.தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் சாத்தியங்கள் பற்றி ஆழமாக அறிந்தவர் மட்டும் அல்ல, அதைவிட முக்கியமாக தொழில்நுட்ப மாற்றங்கள் வருங்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை முன்னதாகவே உணரும் தொலைநோக்கு பார்வை கொண்டவர் கமல்.
எனவே தான் கமலின் தாமதமான டிவிட்டர் வருகை வியப்பை அளிக்கிறது.ஆனால் இப்போது நிகழ்ந்திருக்கும் நிலையில் பல விஷயங்களை எதிர்பார்க்க வைக்கிறது.

கமல் டிவிட்டரை எப்படி பயன்படுத்தப்போகிறார் என்று தெரியவில்லை.அவரது டிவிட்டர் பக்கத்தில் இதற்கான குறிப்புகள் குறைவாகவே இருக்கின்றன.கமலின் டிவிட்டர் பயோவில் நடிகர், இயக்குனர், நடனக்கலைஞர், எழுத்தாளர், தயாரிப்பாளர்,என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர அவரது டிவிட்டர் பக்கத்தின் நோக்கம் பற்றிய குறிப்புகளை கொண்டிருக்கவில்லை. கமலின் முதல் குறும்பதிவும் இந்த நோக்கத்தை போட்டு உடைத்துவிடவில்லை. குடியரசு தினத்தன்று டிவிட்டருக்கு வந்த கமல், ஒரு வீடியோவை மட்டும் பகிர்ந்து கொண்டுள்ளார். தேசிய கீதம் இசைக்கும் அந்த வீடியோவுடன் இந்திய சுதந்திர போராட்டம் இன்னமும் தனித்தன்மை வாய்ந்த்தாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

கமலின் குறும்பதிவுகள் தொடர்ந்து எந்த வேகத்தில் வெளியாகும் என்பதும் அவரே இந்த கணக்கை கையாள திட்டமிட்டிருக்கிறாரா? என்பதும் தெரியவில்லை.
ஆனால் கமலின் டிவிட்டர் பக்கம் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவரை பின் தொடர விரும்புகிறவர்களுக்கு நிச்சயம் இருக்கும்.கமல் தனது கலையில் வெளிப்படுத்தி வரும் அதே முன்னோடித்தன்மையை, தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் அவரிடம் உள்ள பாய்ச்சலை அவரது டிவிட்டர் பகிர்விலும் எதிர்பார்க்க நமக்கு உரிமை இருக்கிறது.

டிவிட்டர் வெறும் சமூக ஊடக சாதனம் மட்டும் அல்ல; பிரபலங்களின் கைகளில் அது ரசிகர்களை நேரடியாக தொடர்பு கொள்வதற்கான, அவர்களுடன் உரையாடுவதற்கான சாதனமும் கூட! தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் இதை உணர்ந்து டிவிட்டர் மூலம் ரசிகர்களுடன் பாலம் அமைத்துக்கொண்டிருக்கின்றனர். தங்கள் எண்ணங்களையும்,விருப்பங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். நட்சத்திர வெளிச்சத்தை கடந்து தங்கள் உலகிற்குள் ரசிகர்களை அழைத்து தங்கள் கலை உலகின் அகத்தன்மையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர். பாலிவுட்டில் அமிதாப்பின் டிவிட்டர் பக்கத்தை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

அமிதாப் டிவிட்டரில் தீவிரமாக இயங்கி வருவதோடு ,ரசிகர்களை நேரில் சந்தித்து பேச முடியாத குறையை போக்கிக்கொள்ளும் வகையில் குறும்பதிவுகள் மூலம் அளவலாவி வருகிறார். அமிதாப் எனும் மனிதரை, அமிதாப் எனும் கலைஞரை அவரது குறும்பதிவுகள் வாயிலாக ரசிகர்கள் அறிந்து கொள்ளலாம். தனது திரையுலக அனுபவங்கள் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை அமிதாப் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.இவற்றை விட முக்கியமாக தன்னைப்பற்றிய செய்திகளுக்காக அவர் ரசிகர்களை தவிக்க விடுவதில்லை. பேத்தியை கொஞ்சி மகிழ்வது முதல் எல்லாவற்றையும் அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறார்.
அமிதாப்பின் டிவிட்டர் பக்கம் மட்டும் அல்ல அவரது வலைப்பதிவும் அதைவிட செழுமையானது. அமிதாப் பல விஷயங்கள் குறித்து தனது எண்ண அலைகளை வலைப்பதிவில் விரிவாகவே பதிவிட்டு வருகிறார். ஒரு நடிகர் தனது ரசிகர்களுக்காக அக்கறையுடன் எழுதும் நாட்குறிப்பாக அமிதாப்பின் வலைப்பதிவு இருப்பதை பார்க்கலாம்.
முக்கிய பதிவுகளுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் அமிதாப் இணைப்பு தருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். ஒரு தீவிர ரசிகனுக்கு அமிதாபின் சமூக ஊடக பகிர்வுகள் தரக்கூடிய இளைப்பாறுதலும், மகிழ்ச்சியும் நிகரில்லாதது- நிழலாக ரசித்தவரை நிஜமாக தெரிந்து கொள்ள வழி செய்வது!.

கமல் நினைத்தால் இதே அனுபவத்தை அவரது ரசிகர்களுக்கு அளிக்க முடியும். தன்னைப்பற்றிய அப்டேட்கள் மட்டும் அல்ல, அவரது சிந்தனை ஓட்டம், புதிய போக்குகளை அவர் எதிர்கொள்ளும்விதம், திரை நுட்பங்களை புரிந்து கொள்வதில் அவரது கோணம் என கமலிடம் எதிர்பார்க்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ரசிகர்களுக்கு மட்டும் அல்ல இளம் படைப்பாளிகளுக்கும் கமலின் டிவிட்டர் பக்கம் தகவல் சுரங்கமாக இருக்கும்.
கமலின் இலக்கிய ஆர்வமும்,வாசிப்பு அனுபவமும் இதற்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். மய்யம் இலக்கிய இதழை நடத்திவர் துடிப்பு மிக்க வலைப்பதிவாலும் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வழிகாட்ட முடியும்.
இவற்றை எல்லாம் அறியாதவர் அல்ல கமல்; ஒரு இணைய ரசிகனாக அவரது ரசிகர்கள் சார்பில் இந்த எதிர்பார்ப்பை முன்வைக்கிறேன்.அவ்வளவு தான் . டிவிட்டரில் கமல் எப்படி விஸ்வரூபம் எடுக்கிறார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

கமலின் டிவிட்டர் முகவரி: @iKamalhaasan
——

நன்றி; யுவர்ஸ்டோரியில் எழுதியது:

CZpvuVPUcAAqhTtடிவிட்டரில் கமல்ஹாசன் இணைந்திருக்கிறார்.முதலில் கமல்ஹாசனுக்கு நல்வரவு.ஏற்கனவே பேஸ்புக்கில் இணைந்திருக்கும் கமல் குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கும் வந்திருப்பது நிச்சயம் திரைப்பட ரசிகர்கள் மகிழக்கூடியது தான்.கமலின் டிவிட்டர் பிரவேசத்தை அவரது மகள் ஸ்ருதிஹாசன் டிவிட்டர் மூலமே வரவேற்றிருக்கிறார். ஏற்கனவே டிவிட்டரில் இருக்கும் வேறு பல நட்சத்திரங்களும் வரவேற்றிருக்கின்றனர்.
பிரபலங்கள் டிவிட்டருக்கு வரும் போது நிகழ்வது போலவே கமலுக்கு கிடைக்கும் பாலோயர்கள் எண்ணிக்கை பற்றிய கணக்கும் துவங்கியிருக்கிறது.இனி கமல் டிவிட்டர் கணக்கு பாலோயர் எண்ணிக்கையில் மைல்கற்களை தொடும் போதெல்லாம் செய்தியில் அடிபடும் வாய்ப்புள்ளது.

ஒருவிதத்தில் கமலின் இந்த டிவிட்டர் வருகை ஆச்சர்யமானதே.இதையே வேறு விதமாக சொல்வது என்றால் அவர் இதுவரை டிவிட்டருக்கு வராமல் இருந்தது ஆச்சர்யமானது. அந்த வகையில் பார்த்தால் கமலின் டிவிட்டர் வருகை தாமதமாக நிகழ்ந்திருக்கிறது. இதை கமலே ஒப்புக்கொள்வார்.

டிவிட்டருக்கு கமல் எப்போதோ வந்திருக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை.அவரது சகாவான ரஜினி காந்த் ஏற்கனவே டிவிட்டரில் இருக்கிறார். அகில இந்திய அளவில் அமிதாப் டிவிட்டரில் கோலோச்சுகிறார்.ஷாருக்கும்,சல்மானும் டிவிட்டரில் தீவிரமாக இருக்கின்றனர்.இங்கேயே பல நட்சத்திரங்கள் டிவிட்டரில் இயங்கி கொண்டிருக்கின்றனர்.- இவர்கள் எல்லாம் வந்துவிட்ட நிலையில் கமல் டிவிட்டருக்கு வரவில்லை என்பதல்ல விஷயம், கமல் டிவிட்டருக்கு வந்திருக்க வேண்டும் என்பதே இங்கே நான் வலியுறுத்த விரும்புவது.

கமல் டிவிட்டருக்கு வருவதும் வராததும் அவரது விருப்பம் சார்ந்தது தான்.அதற்கான நேரத்தை தேர்வு செய்து கொள்ளும் உரிமையும் அவருக்கு இருக்கிறது.ஆனாலும் கூட, கமல் போன்ற முன்னோடி கலைஞர்களை டிவிட்டர் பயன்பாட்டில் முதலில் எதிர்பார்ப்பது மிக இயல்பானதே. டிவிட்டர் என்றில்லை,சமூக ஊடக செயல்பாட்டில் கமலை முன்வரிசையில் தான் எதிர்பார்க்க முடியும்.
CZpu2PqVIAMltH3
இந்த எதிர்பார்ப்பின் காரணத்தை மிக எளிதாக புரிந்து கொள்ளலாம்.கமல் தொழில்நுட்பத்தை புரிந்து கொள்வதிலும், பயன்படுத்துபதிலும் எப்போதுமே முன்னோடியாக தான் இருக்கிறார். கமல் படங்களை உருவாக்கும் வித்ததில் இதை பார்க்கலாம். திரைப்பட நுட்பங்கள் பற்றி பேசுவதில் இதை உணரலாம்.பெரும்பாலானோர் தயங்கிய நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பே டிஜிட்டல் நுட்பத்தில் படம் எடுக்கத்துணிந்தவர் அவர்.சொந்தமாக ரெட் ஒன் காமிரா வாங்கிவைத்துக்கொண்டு பயிற்சி செய்பவர்.ஸ்டிரீமிங் பற்றி எல்லாம் பெரிதாக பேச்சு வருவதற்கு முன்னதாகவே, லேப்டாப்பில் ரசிகர்கள் படம் பார்க்க விரும்பினால் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என பேசியவர்.தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் சாத்தியங்கள் பற்றி ஆழமாக அறிந்தவர் மட்டும் அல்ல, அதைவிட முக்கியமாக தொழில்நுட்ப மாற்றங்கள் வருங்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை முன்னதாகவே உணரும் தொலைநோக்கு பார்வை கொண்டவர் கமல்.
எனவே தான் கமலின் தாமதமான டிவிட்டர் வருகை வியப்பை அளிக்கிறது.ஆனால் இப்போது நிகழ்ந்திருக்கும் நிலையில் பல விஷயங்களை எதிர்பார்க்க வைக்கிறது.

கமல் டிவிட்டரை எப்படி பயன்படுத்தப்போகிறார் என்று தெரியவில்லை.அவரது டிவிட்டர் பக்கத்தில் இதற்கான குறிப்புகள் குறைவாகவே இருக்கின்றன.கமலின் டிவிட்டர் பயோவில் நடிகர், இயக்குனர், நடனக்கலைஞர், எழுத்தாளர், தயாரிப்பாளர்,என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர அவரது டிவிட்டர் பக்கத்தின் நோக்கம் பற்றிய குறிப்புகளை கொண்டிருக்கவில்லை. கமலின் முதல் குறும்பதிவும் இந்த நோக்கத்தை போட்டு உடைத்துவிடவில்லை. குடியரசு தினத்தன்று டிவிட்டருக்கு வந்த கமல், ஒரு வீடியோவை மட்டும் பகிர்ந்து கொண்டுள்ளார். தேசிய கீதம் இசைக்கும் அந்த வீடியோவுடன் இந்திய சுதந்திர போராட்டம் இன்னமும் தனித்தன்மை வாய்ந்த்தாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

கமலின் குறும்பதிவுகள் தொடர்ந்து எந்த வேகத்தில் வெளியாகும் என்பதும் அவரே இந்த கணக்கை கையாள திட்டமிட்டிருக்கிறாரா? என்பதும் தெரியவில்லை.
ஆனால் கமலின் டிவிட்டர் பக்கம் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவரை பின் தொடர விரும்புகிறவர்களுக்கு நிச்சயம் இருக்கும்.கமல் தனது கலையில் வெளிப்படுத்தி வரும் அதே முன்னோடித்தன்மையை, தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் அவரிடம் உள்ள பாய்ச்சலை அவரது டிவிட்டர் பகிர்விலும் எதிர்பார்க்க நமக்கு உரிமை இருக்கிறது.

டிவிட்டர் வெறும் சமூக ஊடக சாதனம் மட்டும் அல்ல; பிரபலங்களின் கைகளில் அது ரசிகர்களை நேரடியாக தொடர்பு கொள்வதற்கான, அவர்களுடன் உரையாடுவதற்கான சாதனமும் கூட! தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் இதை உணர்ந்து டிவிட்டர் மூலம் ரசிகர்களுடன் பாலம் அமைத்துக்கொண்டிருக்கின்றனர். தங்கள் எண்ணங்களையும்,விருப்பங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். நட்சத்திர வெளிச்சத்தை கடந்து தங்கள் உலகிற்குள் ரசிகர்களை அழைத்து தங்கள் கலை உலகின் அகத்தன்மையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர். பாலிவுட்டில் அமிதாப்பின் டிவிட்டர் பக்கத்தை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

அமிதாப் டிவிட்டரில் தீவிரமாக இயங்கி வருவதோடு ,ரசிகர்களை நேரில் சந்தித்து பேச முடியாத குறையை போக்கிக்கொள்ளும் வகையில் குறும்பதிவுகள் மூலம் அளவலாவி வருகிறார். அமிதாப் எனும் மனிதரை, அமிதாப் எனும் கலைஞரை அவரது குறும்பதிவுகள் வாயிலாக ரசிகர்கள் அறிந்து கொள்ளலாம். தனது திரையுலக அனுபவங்கள் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை அமிதாப் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.இவற்றை விட முக்கியமாக தன்னைப்பற்றிய செய்திகளுக்காக அவர் ரசிகர்களை தவிக்க விடுவதில்லை. பேத்தியை கொஞ்சி மகிழ்வது முதல் எல்லாவற்றையும் அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறார்.
அமிதாப்பின் டிவிட்டர் பக்கம் மட்டும் அல்ல அவரது வலைப்பதிவும் அதைவிட செழுமையானது. அமிதாப் பல விஷயங்கள் குறித்து தனது எண்ண அலைகளை வலைப்பதிவில் விரிவாகவே பதிவிட்டு வருகிறார். ஒரு நடிகர் தனது ரசிகர்களுக்காக அக்கறையுடன் எழுதும் நாட்குறிப்பாக அமிதாப்பின் வலைப்பதிவு இருப்பதை பார்க்கலாம்.
முக்கிய பதிவுகளுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் அமிதாப் இணைப்பு தருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். ஒரு தீவிர ரசிகனுக்கு அமிதாபின் சமூக ஊடக பகிர்வுகள் தரக்கூடிய இளைப்பாறுதலும், மகிழ்ச்சியும் நிகரில்லாதது- நிழலாக ரசித்தவரை நிஜமாக தெரிந்து கொள்ள வழி செய்வது!.

கமல் நினைத்தால் இதே அனுபவத்தை அவரது ரசிகர்களுக்கு அளிக்க முடியும். தன்னைப்பற்றிய அப்டேட்கள் மட்டும் அல்ல, அவரது சிந்தனை ஓட்டம், புதிய போக்குகளை அவர் எதிர்கொள்ளும்விதம், திரை நுட்பங்களை புரிந்து கொள்வதில் அவரது கோணம் என கமலிடம் எதிர்பார்க்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ரசிகர்களுக்கு மட்டும் அல்ல இளம் படைப்பாளிகளுக்கும் கமலின் டிவிட்டர் பக்கம் தகவல் சுரங்கமாக இருக்கும்.
கமலின் இலக்கிய ஆர்வமும்,வாசிப்பு அனுபவமும் இதற்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். மய்யம் இலக்கிய இதழை நடத்திவர் துடிப்பு மிக்க வலைப்பதிவாலும் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வழிகாட்ட முடியும்.
இவற்றை எல்லாம் அறியாதவர் அல்ல கமல்; ஒரு இணைய ரசிகனாக அவரது ரசிகர்கள் சார்பில் இந்த எதிர்பார்ப்பை முன்வைக்கிறேன்.அவ்வளவு தான் . டிவிட்டரில் கமல் எப்படி விஸ்வரூபம் எடுக்கிறார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

கமலின் டிவிட்டர் முகவரி: @iKamalhaasan
——

நன்றி; யுவர்ஸ்டோரியில் எழுதியது:

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.