தகவல் திங்கள்: ஒரு புகைப்படத்தின் கதை

Bliss
அந்த ஒளிபடத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். நீங்களும் பல முறை பார்த்திருப்பீர்கள். நம்மைப்போலவே உலகின் பல பகுதிகளில் இருக்கும் எண்ணற்ற மனிதர்கள் அந்த படத்தை பார்த்திருக்கிறார்கள். ஆனால், அந்த படத்தின் அருமையை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் எனத்தெரியவில்லை. உங்களைப்பற்றி தெரியவில்லை; ஆனால் நான் நிச்சயம் உணரவில்லை. அந்த படத்தின் சிறப்பை தற்செயலாக படித்த போது, அடாடா இந்த படத்தின் பின் இத்தனை விஷயங்கள் இருக்கின்றனவா? என வியந்து போனேன். அந்த வியப்பை பகிர்ந்து கொள்ளத்தான் இந்த பதிவு.

அந்த ஒளிபடம் கம்ப்யூட்டர் திரையில் ஸ்கிரீன்சேவர் சித்திரமாக நாம் பார்த்துப்பழகிய காட்சி தான். பச்சை புல் வெளி பரந்து விரிந்திருக்க அதன் விளிம்பில் நீல வான மேகங்கள் திரண்டிருக்கும் காட்சி தான் அது. இப்போது, அட ஆமாம் எனும் ஆமோதிப்புடன் உங்கள் மனத்திரையிலும் அந்த ஒளிபடம் காட்சியாக ஓடிக்கொண்டிருக்கலாம். பல இடங்களில் வால்பேப்பராக பார்த்து பழகிய ஸ்கிரீன்சேவவர் தான் என்றாலும் அது பத்தோடு பதினொன்னு ரக வால்பேப்பர் அல்ல;

உலகில் எந்த மூளைக்குச்சென்றாலும் அங்குள்ள கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பார்க்க கூடிய வால்பேப்பர் அது. மைக்ரோசாப்டின் எக்ஸ்பி இயங்குதள வடிவின் தானாக தோன்றும் வால்பேப்பராக அமைக்கப்பட்ட காரணமாக அந்த வால்பேப்பர் எங்கெலும் விண்டோஸ் கம்ப்யூட்டர்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அதனால் தான் அந்த படம் உலகில் அதிகம் பார்க்கப்பட ஒளிபடம் எனும் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஆம், ஒரு கணக்குபடி அந்த படம் 100 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. சும்மாயில்லை புகழ் பெற்ற மோனோலிசா ஓவியத்திற்கு அடுத்தபடியாக இப்படி உலகம் முழுவதும் பார்த்து ரசிக்கப்பட்ட படமாக இது இருக்கிறது.

ஆனால் வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல இதன் பலம். இந்த படத்தின் பின்னே ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. அது மட்டும் அல்ல அந்த படமே ஒரு அர்த்தம் நிறைந்த ஓவியமாக இருக்கிறது. கவித்துவமாக அதை ஒரு காமிரா காவியம் என்று கூறலாம். அதனால் தான் அதை நாம் பார்த்து ரசித்திருக்கிறோம்.
முதலில் அந்த படம் மைக்ரோசாப்ட் வசம் வந்த கதையை பார்க்கலாம்.

புத்தாயிரமாண்டின் துவக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் எக்ஸ்பி இயங்குதள வடிவத்தை அறிமுகம் செய்தது. அதற்கு முன்னதாக புதிய இயங்கு தளத்தின் தானாக தோன்றும் பின்னணி காட்சியாக அமைப்பதற்கான ஒரு ஒளிபடம் மைக்ரோசாப்ட் பொறியாளர்களுக்கு தேவைப்பட்டது. அவர்கள் வலைவீசி கோர்பிஸ் ஒளிபட நிறுவனத்திடம் இருந்து ஒரு படத்தை தேர்வு செய்தனர். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் கோர்பிஸ் மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்சுக்கு சொந்தமான நிறுவனமாகும். எனவே அவர்கள் மற்றொரு ஒளிபட சேவை நிறுவனமான கெட்டி இமேஜசிடம் செல்லவில்லை.

கோர்பிஸ் கோப்புகளில் இருந்து அவர்கள் தேர்வு செய்த படம் தான் சார்லஸ் ஓ’ரியர் எனும் ஒளிபட கலைஞர் எடுத்த புல்வெளி படர்ந்த மலைச்சரிவும், நீல வானமும் சங்கமிக்கும் காட்சி. புகழ் பெற்ற நேஷனல் ஜியாகிராபிக் இதழின் முன்னாள் ஒளிபட கலைஞரான ஓ’ரியர், 1996 ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோரினியா மாகாணத்தில் தனது காதலியை பார்க்கச்சென்ற போது அந்த படத்தை எடுத்திருந்தார். அவரது காதலி ( அவரும் முன்னாள் தான்) ஓயின் தோட்டம் பற்றிய புத்தகம் எழுதிக்கொண்டிருந்தார். அதற்கான படம் எடுக்க வந்த ஓ’ரியர் வேலையை முடித்து திரும்பிச்செல்லும் வழியில், நேபா பள்ளத்தாக்கில் வழக்கமான திராட்சை கொடிகளுக்கு பதிலாக பச்சை பசேலென புல்வெளியாக காட்சி அளித்த மலைப்பகுதியை பார்த்து மனதை பறி கொடுத்து அந்த காட்சியை கிளிக் செய்தார். சூரிய ஒளி மின்ன, பின்னணியில் மேக கூட்டம் தவழ புல்வெளி படர்ந்த தாழ்வான மலைப்பகுதி காமிராவில் அழகிய காட்சியாக பதிவானது.

இந்த படத்தை பயன்படுத்த விரும்பிய மைக்ரோசாப்ட் அதிக விலை கொடுத்து வாங்க தீர்மானித்தது. அந்த படத்தை பயன்படுத்தும் உரிமையை மட்டும் வாங்காமல் அந்த படத்திற்கான மொத்த உரிமத்தையும் வாங்க தீர்மானித்தது. இதற்காக பெரும் தொகை கொடுக்கப்பட்டது. தொகையின் அளவு ரகசியமாக வைத்துக்கொள்ளப்பட்டாலும், ஒரு ஒளிபடத்திற்கு அளிக்கப்பட்ட இரண்டாவது பெரிய தொகை என்றும் மட்டும் ஒ’ரியர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
Charles_O'Rear
இதன் காரணமாகவே கூரியர் நிறுவனம் அந்த படத்தை கொண்டு சேர்க்கும் பொறுப்பில் இருந்து பின் வாங்கி கொண்டதால், ஒ’ரியரே விமானத்தில் நேரில் சென்று படத்தை மைக்ரோசாப்டிடம் ஒப்படைத்திருக்கிறார்.
அப்போது அந்த படம் எதற்காக பயன்படுத்தப்பட போகிறது எனும் விவரம் அவருக்கு தெரியாது. எக்ஸ்.பி வெளியான பின்னர் தான் அதன் பின்னணிக்காட்சியாக அலங்கரித்த விஷயம் தெரிய வந்தது. மைக்ரோசாப்ட் அந்த படத்திற்கு பிளிஸ் அதாவது ஏகாந்தம் என்றும் பெயர் சூட்டியிருந்தது.

அதன் பிறகு எங்கு பார்த்தாலும் அந்த படத்தை பார்க்க முடிந்தது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, ரஷ்யாவின் அதிபர் மாளிகையான கிரெம்லின் என எல்லா இடங்களிலும் அந்த படத்தை பார்க்க முடிந்திருக்கிறது. உலகின் பார்வையில் இருந்து விலகி இருக்கும் வட கொரியா சென்றால் கூட கம்ப்யூட்டரில் அந்த படத்தை பார்க்க முடிந்தது என ஓ’’ரியரே வியந்து போய் கூறியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்போது 15 வயதில் இருக்கும் எவருக்கும் வாழ்நாள் முழுவதும் இந்த படம் நினைவில் இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்திருந்தாலும் இந்த ஒரு படத்திற்காக தான் அறியப்படுவேன் என்றும் ஓ’ரியர் கூறியிருக்கிறார்.
இந்த படத்தை அவர் புகைப்பட சுருளில் எடுத்தார். அதன் தனித்தன்மைக்கு இதுவும் ஒரு காரணம்.
எல்லாம் சரி, இந்த படம் ஏன் இத்தனை கோடி பேரை கவர்ந்திருக்கிறது. மைக்ரோசாப்டின் திணிப்பு தான் காரணமா? நிச்சயம் இல்லை.பெயருக்கு ஏற்ப அந்த படத்தில் ஏகாந்தமான ஒன்று இருக்கிறது. ஒளிபட கலைஞர் ஒருவர் இது பற்றி அழகாக விளக்கியிருக்கிறார். “சிலர் இந்த படம் வெறுமையாக ,சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக கருதலாம். ஆனால் அழகிய பரப்பில் பளிச்சென மின்னும் பொழுதே ஈர்க்கிறது என பலரும் கருதலாம். மலைச்சரிவில் ஊடுருவும் சூரிய ஒளி கனவு போன்ற தோற்றத்தை அளிக்கிறது. அதுவே இந்த பட்த்தை தனித்து காட்டுகிறது” என்கிறார் டேவிட் கிளார்க் எனும் அந்த கலைஞர். இந்த படம் பார்க்க உறுத்தாமல் சுலபமானதாக இருப்பதால் மைக்ரோசார்ப் இதை தேர்வு செய்திருக்கலாம் என்கிறார் அவர். அதே நேரத்தில் டெஸ்க்டாப்பில் உள்ள எதற்கும் இடையூறு இல்லாமல் அமைந்திருக்கிறது என்றும் அவர் சொல்கிறார்.
எது எப்படியோ, இணைய யுகத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக இது இருக்கிறது.

நடுவே சில காலம் இந்த ஒளிபடம் எங்கே எடுக்கப்பட்டது எனத்தெரியாமல் குழப்பமாக இருந்திருக்கிறது. பல யூகங்களும் வெளியாகி இருக்கின்றன. ஆனால் சில ஆண்டுகள் கழித்து இதன் பின்னணி பற்றிய விவரங்கள் வெளியாகின.

இப்போது குழப்பமே இல்லை. இந்த ஒளிபடத்திற்கு என தனியே ஒரு விக்கிபீடியா பக்கம் இருக்கிறது. இந்த படம் தொடர்பாக ஒரு ஆவணப்பட வீடியோவும் இருக்கிறது. இந்த இடத்தை கூகுள் ஸ்டிரீட் வீயூவிலும் பார்க்கலாம். அது மட்டும் அல்ல, மேலும் பல ஒளிபட கலைஞர்கள் அந்த இடத்திற்கு சென்று அதே படத்தை எடுக்க முயன்றிருக்கின்றனர். அந்த இடமே மாறிப்போய்விட்டாலும் கூட பலரும் சளைக்காமல் அங்கு படம் எடுத்து மூல காட்சியை மறு உருவாக்கம் செய்ய முயன்றிருக்கின்றனர். ஆனால் மூலப்படத்திற்கு நிகரான காட்சி யாருக்குமே கிடைக்கவில்லை!

பிளிஸ் ஒளி படத்திற்கான விக்கிபீடியா பக்கம்: https://en.wikipedia.org/wiki/Bliss_(image)

Bliss
அந்த ஒளிபடத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். நீங்களும் பல முறை பார்த்திருப்பீர்கள். நம்மைப்போலவே உலகின் பல பகுதிகளில் இருக்கும் எண்ணற்ற மனிதர்கள் அந்த படத்தை பார்த்திருக்கிறார்கள். ஆனால், அந்த படத்தின் அருமையை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் எனத்தெரியவில்லை. உங்களைப்பற்றி தெரியவில்லை; ஆனால் நான் நிச்சயம் உணரவில்லை. அந்த படத்தின் சிறப்பை தற்செயலாக படித்த போது, அடாடா இந்த படத்தின் பின் இத்தனை விஷயங்கள் இருக்கின்றனவா? என வியந்து போனேன். அந்த வியப்பை பகிர்ந்து கொள்ளத்தான் இந்த பதிவு.

அந்த ஒளிபடம் கம்ப்யூட்டர் திரையில் ஸ்கிரீன்சேவர் சித்திரமாக நாம் பார்த்துப்பழகிய காட்சி தான். பச்சை புல் வெளி பரந்து விரிந்திருக்க அதன் விளிம்பில் நீல வான மேகங்கள் திரண்டிருக்கும் காட்சி தான் அது. இப்போது, அட ஆமாம் எனும் ஆமோதிப்புடன் உங்கள் மனத்திரையிலும் அந்த ஒளிபடம் காட்சியாக ஓடிக்கொண்டிருக்கலாம். பல இடங்களில் வால்பேப்பராக பார்த்து பழகிய ஸ்கிரீன்சேவவர் தான் என்றாலும் அது பத்தோடு பதினொன்னு ரக வால்பேப்பர் அல்ல;

உலகில் எந்த மூளைக்குச்சென்றாலும் அங்குள்ள கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பார்க்க கூடிய வால்பேப்பர் அது. மைக்ரோசாப்டின் எக்ஸ்பி இயங்குதள வடிவின் தானாக தோன்றும் வால்பேப்பராக அமைக்கப்பட்ட காரணமாக அந்த வால்பேப்பர் எங்கெலும் விண்டோஸ் கம்ப்யூட்டர்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அதனால் தான் அந்த படம் உலகில் அதிகம் பார்க்கப்பட ஒளிபடம் எனும் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஆம், ஒரு கணக்குபடி அந்த படம் 100 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. சும்மாயில்லை புகழ் பெற்ற மோனோலிசா ஓவியத்திற்கு அடுத்தபடியாக இப்படி உலகம் முழுவதும் பார்த்து ரசிக்கப்பட்ட படமாக இது இருக்கிறது.

ஆனால் வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல இதன் பலம். இந்த படத்தின் பின்னே ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. அது மட்டும் அல்ல அந்த படமே ஒரு அர்த்தம் நிறைந்த ஓவியமாக இருக்கிறது. கவித்துவமாக அதை ஒரு காமிரா காவியம் என்று கூறலாம். அதனால் தான் அதை நாம் பார்த்து ரசித்திருக்கிறோம்.
முதலில் அந்த படம் மைக்ரோசாப்ட் வசம் வந்த கதையை பார்க்கலாம்.

புத்தாயிரமாண்டின் துவக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் எக்ஸ்பி இயங்குதள வடிவத்தை அறிமுகம் செய்தது. அதற்கு முன்னதாக புதிய இயங்கு தளத்தின் தானாக தோன்றும் பின்னணி காட்சியாக அமைப்பதற்கான ஒரு ஒளிபடம் மைக்ரோசாப்ட் பொறியாளர்களுக்கு தேவைப்பட்டது. அவர்கள் வலைவீசி கோர்பிஸ் ஒளிபட நிறுவனத்திடம் இருந்து ஒரு படத்தை தேர்வு செய்தனர். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் கோர்பிஸ் மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்சுக்கு சொந்தமான நிறுவனமாகும். எனவே அவர்கள் மற்றொரு ஒளிபட சேவை நிறுவனமான கெட்டி இமேஜசிடம் செல்லவில்லை.

கோர்பிஸ் கோப்புகளில் இருந்து அவர்கள் தேர்வு செய்த படம் தான் சார்லஸ் ஓ’ரியர் எனும் ஒளிபட கலைஞர் எடுத்த புல்வெளி படர்ந்த மலைச்சரிவும், நீல வானமும் சங்கமிக்கும் காட்சி. புகழ் பெற்ற நேஷனல் ஜியாகிராபிக் இதழின் முன்னாள் ஒளிபட கலைஞரான ஓ’ரியர், 1996 ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோரினியா மாகாணத்தில் தனது காதலியை பார்க்கச்சென்ற போது அந்த படத்தை எடுத்திருந்தார். அவரது காதலி ( அவரும் முன்னாள் தான்) ஓயின் தோட்டம் பற்றிய புத்தகம் எழுதிக்கொண்டிருந்தார். அதற்கான படம் எடுக்க வந்த ஓ’ரியர் வேலையை முடித்து திரும்பிச்செல்லும் வழியில், நேபா பள்ளத்தாக்கில் வழக்கமான திராட்சை கொடிகளுக்கு பதிலாக பச்சை பசேலென புல்வெளியாக காட்சி அளித்த மலைப்பகுதியை பார்த்து மனதை பறி கொடுத்து அந்த காட்சியை கிளிக் செய்தார். சூரிய ஒளி மின்ன, பின்னணியில் மேக கூட்டம் தவழ புல்வெளி படர்ந்த தாழ்வான மலைப்பகுதி காமிராவில் அழகிய காட்சியாக பதிவானது.

இந்த படத்தை பயன்படுத்த விரும்பிய மைக்ரோசாப்ட் அதிக விலை கொடுத்து வாங்க தீர்மானித்தது. அந்த படத்தை பயன்படுத்தும் உரிமையை மட்டும் வாங்காமல் அந்த படத்திற்கான மொத்த உரிமத்தையும் வாங்க தீர்மானித்தது. இதற்காக பெரும் தொகை கொடுக்கப்பட்டது. தொகையின் அளவு ரகசியமாக வைத்துக்கொள்ளப்பட்டாலும், ஒரு ஒளிபடத்திற்கு அளிக்கப்பட்ட இரண்டாவது பெரிய தொகை என்றும் மட்டும் ஒ’ரியர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
Charles_O'Rear
இதன் காரணமாகவே கூரியர் நிறுவனம் அந்த படத்தை கொண்டு சேர்க்கும் பொறுப்பில் இருந்து பின் வாங்கி கொண்டதால், ஒ’ரியரே விமானத்தில் நேரில் சென்று படத்தை மைக்ரோசாப்டிடம் ஒப்படைத்திருக்கிறார்.
அப்போது அந்த படம் எதற்காக பயன்படுத்தப்பட போகிறது எனும் விவரம் அவருக்கு தெரியாது. எக்ஸ்.பி வெளியான பின்னர் தான் அதன் பின்னணிக்காட்சியாக அலங்கரித்த விஷயம் தெரிய வந்தது. மைக்ரோசாப்ட் அந்த படத்திற்கு பிளிஸ் அதாவது ஏகாந்தம் என்றும் பெயர் சூட்டியிருந்தது.

அதன் பிறகு எங்கு பார்த்தாலும் அந்த படத்தை பார்க்க முடிந்தது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, ரஷ்யாவின் அதிபர் மாளிகையான கிரெம்லின் என எல்லா இடங்களிலும் அந்த படத்தை பார்க்க முடிந்திருக்கிறது. உலகின் பார்வையில் இருந்து விலகி இருக்கும் வட கொரியா சென்றால் கூட கம்ப்யூட்டரில் அந்த படத்தை பார்க்க முடிந்தது என ஓ’’ரியரே வியந்து போய் கூறியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்போது 15 வயதில் இருக்கும் எவருக்கும் வாழ்நாள் முழுவதும் இந்த படம் நினைவில் இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்திருந்தாலும் இந்த ஒரு படத்திற்காக தான் அறியப்படுவேன் என்றும் ஓ’ரியர் கூறியிருக்கிறார்.
இந்த படத்தை அவர் புகைப்பட சுருளில் எடுத்தார். அதன் தனித்தன்மைக்கு இதுவும் ஒரு காரணம்.
எல்லாம் சரி, இந்த படம் ஏன் இத்தனை கோடி பேரை கவர்ந்திருக்கிறது. மைக்ரோசாப்டின் திணிப்பு தான் காரணமா? நிச்சயம் இல்லை.பெயருக்கு ஏற்ப அந்த படத்தில் ஏகாந்தமான ஒன்று இருக்கிறது. ஒளிபட கலைஞர் ஒருவர் இது பற்றி அழகாக விளக்கியிருக்கிறார். “சிலர் இந்த படம் வெறுமையாக ,சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக கருதலாம். ஆனால் அழகிய பரப்பில் பளிச்சென மின்னும் பொழுதே ஈர்க்கிறது என பலரும் கருதலாம். மலைச்சரிவில் ஊடுருவும் சூரிய ஒளி கனவு போன்ற தோற்றத்தை அளிக்கிறது. அதுவே இந்த பட்த்தை தனித்து காட்டுகிறது” என்கிறார் டேவிட் கிளார்க் எனும் அந்த கலைஞர். இந்த படம் பார்க்க உறுத்தாமல் சுலபமானதாக இருப்பதால் மைக்ரோசார்ப் இதை தேர்வு செய்திருக்கலாம் என்கிறார் அவர். அதே நேரத்தில் டெஸ்க்டாப்பில் உள்ள எதற்கும் இடையூறு இல்லாமல் அமைந்திருக்கிறது என்றும் அவர் சொல்கிறார்.
எது எப்படியோ, இணைய யுகத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக இது இருக்கிறது.

நடுவே சில காலம் இந்த ஒளிபடம் எங்கே எடுக்கப்பட்டது எனத்தெரியாமல் குழப்பமாக இருந்திருக்கிறது. பல யூகங்களும் வெளியாகி இருக்கின்றன. ஆனால் சில ஆண்டுகள் கழித்து இதன் பின்னணி பற்றிய விவரங்கள் வெளியாகின.

இப்போது குழப்பமே இல்லை. இந்த ஒளிபடத்திற்கு என தனியே ஒரு விக்கிபீடியா பக்கம் இருக்கிறது. இந்த படம் தொடர்பாக ஒரு ஆவணப்பட வீடியோவும் இருக்கிறது. இந்த இடத்தை கூகுள் ஸ்டிரீட் வீயூவிலும் பார்க்கலாம். அது மட்டும் அல்ல, மேலும் பல ஒளிபட கலைஞர்கள் அந்த இடத்திற்கு சென்று அதே படத்தை எடுக்க முயன்றிருக்கின்றனர். அந்த இடமே மாறிப்போய்விட்டாலும் கூட பலரும் சளைக்காமல் அங்கு படம் எடுத்து மூல காட்சியை மறு உருவாக்கம் செய்ய முயன்றிருக்கின்றனர். ஆனால் மூலப்படத்திற்கு நிகரான காட்சி யாருக்குமே கிடைக்கவில்லை!

பிளிஸ் ஒளி படத்திற்கான விக்கிபீடியா பக்கம்: https://en.wikipedia.org/wiki/Bliss_(image)

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.