மீண்டும் மறைந்த யுனிக்ஸ் நிறுவனர் டென்னிஸ் ரிட்சி!

ritchieதொழில்நுட்ப முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படும் டென்னிஸ் ரிட்சி மறைந்துவிட்ட செய்தி தொடர்பான கட்டுரையை பேஸ்புக் டைம்லைனில் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. என்னது ரிட்சி மீண்டும் மறைந்துவிட்டாரா? என்று கேடக்கத்தோன்றியது. ஏனெனில் ரிட்சி, மறைந்து ஐந்தாண்டுகள் ஆகின்றன. 2011 ம் ஆண்டு அக்டோபர் மாதம் மறைந்த அவர் மீண்டும் எப்படி மறைந்திருக்க முடியும்!

ரிட்சி மறைவு செய்தி இணைப்பை கிளிக் செய்து பார்த்தால், வயர்டு இதழின் அந்த செய்தி ஒரு மீள் பிரசுரமாக இருந்தது. அநேகமாக ரிட்சி மறைவை நினைவு கூறும் வகையில் அந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கலாம். எது எப்படியோ இணையவெளியில் இந்த செய்தி பரவி, சி கம்ப்யூட்டர் மொழி கண்டுபிடிப்பாளர் மற்றும் யூனிக்ஸ் இணை நிறுவனரான முன்னோடி ரிட்சி மறைந்தார் எனும் விதமாக சமூக ஊடக தளங்களில் நினைவுக்குறிப்புகளும் வெளியாகத்துவங்கின.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை போன்றவர்களும் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டதால் குழப்பம் மேலும் அதிகரித்தது.
இந்த குழப்பம் பற்றி சிநெட் இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரையில் பல கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.

தொழில்நுட்ப வலைப்பதிவாளரான ஒம் மாலிக் என்பவர் தான் இந்த செய்திக்கட்டுரையை டிவிட்டரில் முதலில் பகிர்ந்து கொண்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதன் பிறகு சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலர் அதை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இந்த செய்தி அதிகம் பகிரப்பட்டது.
ஆனால் நல்லவேளையாக இதற்குள் ஓம் மாலிக் தனது தவற்றை உணர்ந்து அதை திருத்திக்கொண்டார். ஐந்த ஆண்டுக்கு முந்தையை செய்தியை தேதியை பார்க்காமல் பகிர்ந்து கொண்டது தவறு தான் என மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை கவனித்த சுந்தர்பிச்சை, இருந்தாலும் என்ன, மறைந்த முன்னோடியை நினைவு கூற இது ஒரு வாய்ப்பானது என்பது போல கருத்து தெரிவித்திருந்தார்.
ரிட்சி நிச்சயம் மறக்கப்படாமல் நினைவு கூறப்பட வேண்டிய மேதை தான், ஆனால் அதற்காக அவரை மீண்டும் ஒரு முறை மறையச்செய்ய வேண்டுமா என்ன?

ஆனால், கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் இது ரிட்சிக்கு மட்டும் நிகழுந்துள்ள விஷயம் அல்ல. கடந்த ஆண்டு ஜோ கோக்கர் எனும் அமெரிக்க பிரபலம் இறந்துவிட்டதாக பேஸ்புக், டிவிட்டரில் பரவலாக அஞ்சலி செலுத்தப்பட்டது. விஷயம் என்ன என்றால், கோக்கர் முந்தைய ஆண்டே மறைந்துவிட்டார். ஏதோ பழைய செய்தி பேஸ்புக்கில் தீயாக பரவிவிட்டது.

இது போல ஏற்கனவே மறைந்த பிரபலங்கள் மீண்டும் மறைந்து விட்டதாக செய்திகள் வெளியாவும், அஞ்சலி செலுத்தப்படுவதும் இணையத்தில் அடிக்கடி நிகழ்கின்றன என்கின்றனர். இந்த நிகழ்வுக்கு இரண்டாம் மரண பாதிப்பு ( செகண்ட் டெத் சிண்ட்ரோம்) என பெயரால் குறிப்பிடப்படுகிறது.

தினமும் கோடிக்கணக்கில் பேஸ்புக்கிலும் ,டிவிட்டரிலும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் போது, பழைய செய்திகள் அல்லது நினைவு குறிப்புகள் அவசரத்தில் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு இப்படி பகிரப்படுவதாக விளக்கம் தரப்படுகிறது. இப்படி சமூக ஊடகங்களால் மீண்டும் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருப்பதற்கு யூனிக்ஸ் இணை நிறுவனர் ரிட்சியின் மறு மரணம் ஒரு உதாரணம்.
பிரபலங்கள் மறைவுக்கு நினைவாஞ்சலில் செலுத்துவதற்கான பரவலான வேட்கையும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

காரணம் எதுவாக இருந்தாலும், அடுத்த முறை பிரபலங்களின் மறைவு செய்தியை பகிரும் முன் அல்லது நினைவாஞ்சலி செலுத்தும் முன், அந்த செய்தியை உறுதி செய்து கொள்ள ஒரு சில நிமிடங்கள் செலவிடுவது நல்லது.

சந்தேகத்திற்கு உரிய செய்தி என்றால், அதன் உண்மை தன்மையை உறுதி செய்து கொள்ள, இணைய பொய்களை அம்பலமாக்கும் ஸ்னோஸ்.காம் ( snopes.com ) போன்ற இணையதளங்களை நாடலாம்.
இந்த விஷயத்தில் கவனிக்க வேண்டிய விஷயம், வலைப்பதிவாளர் ஓம் மாலிக்கின் நேர்மை. வயர்டு செய்தியின் தேதியை சரியாக பார்க்காமல் பழைய செய்தியை பகிர்ந்து கொண்ட, அவர் பின்னர் அந்த தவற்றை உணர்ந்து பகிர்ங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். மன்னிப்பு கேட்டதோடு, இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதற்காக தன் மீதே வருத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கான வரிசையாக இரண்டு மூன்று குறும்பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

தவறுகளை ஒப்புக்கொள்ளும் இந்த திறந்த மனத்திலான அணுகுமுறை இணைய உரையாடலில் மிகவும் முக்கியம். அந்த வகையில் ஓம் மாலிக்கிறகு (@om ) சபாஷ்.

* சினெட் விளக்க கட்டுரை: https://www.cnet.com/news/tech-luminaries-laud-dennis-ritchie-5-years-after-death-second-death-syndrome/
* வயர்டு பழைய கட்டுரை:https://www.wired.com/2011/10/dennis-ritchie/

குறிப்பு: டென்னிஸ் ரிட்சி நவீன கம்யூட்டரின் முன்னோடியாக போற்றப்படுகிறார். ஸ்டீவ் ஜாப்ஸ் உள்ளிட்ட பல முன்னோடிகளுக்கு அவர் உந்துசக்தியாக இருந்திருக்கிறார். தனது கண்டுபிடிப்பை பொருளாதார நோக்கில் பயன்படுத்திக்கொள்ள நினைக்காமல் கம்ப்ட்யூட்டர் மொழி வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தியவராகவும் அவர் கொண்டாடப்படுகிறார்.

———

ritchieதொழில்நுட்ப முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படும் டென்னிஸ் ரிட்சி மறைந்துவிட்ட செய்தி தொடர்பான கட்டுரையை பேஸ்புக் டைம்லைனில் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. என்னது ரிட்சி மீண்டும் மறைந்துவிட்டாரா? என்று கேடக்கத்தோன்றியது. ஏனெனில் ரிட்சி, மறைந்து ஐந்தாண்டுகள் ஆகின்றன. 2011 ம் ஆண்டு அக்டோபர் மாதம் மறைந்த அவர் மீண்டும் எப்படி மறைந்திருக்க முடியும்!

ரிட்சி மறைவு செய்தி இணைப்பை கிளிக் செய்து பார்த்தால், வயர்டு இதழின் அந்த செய்தி ஒரு மீள் பிரசுரமாக இருந்தது. அநேகமாக ரிட்சி மறைவை நினைவு கூறும் வகையில் அந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கலாம். எது எப்படியோ இணையவெளியில் இந்த செய்தி பரவி, சி கம்ப்யூட்டர் மொழி கண்டுபிடிப்பாளர் மற்றும் யூனிக்ஸ் இணை நிறுவனரான முன்னோடி ரிட்சி மறைந்தார் எனும் விதமாக சமூக ஊடக தளங்களில் நினைவுக்குறிப்புகளும் வெளியாகத்துவங்கின.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை போன்றவர்களும் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டதால் குழப்பம் மேலும் அதிகரித்தது.
இந்த குழப்பம் பற்றி சிநெட் இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரையில் பல கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.

தொழில்நுட்ப வலைப்பதிவாளரான ஒம் மாலிக் என்பவர் தான் இந்த செய்திக்கட்டுரையை டிவிட்டரில் முதலில் பகிர்ந்து கொண்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதன் பிறகு சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலர் அதை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இந்த செய்தி அதிகம் பகிரப்பட்டது.
ஆனால் நல்லவேளையாக இதற்குள் ஓம் மாலிக் தனது தவற்றை உணர்ந்து அதை திருத்திக்கொண்டார். ஐந்த ஆண்டுக்கு முந்தையை செய்தியை தேதியை பார்க்காமல் பகிர்ந்து கொண்டது தவறு தான் என மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை கவனித்த சுந்தர்பிச்சை, இருந்தாலும் என்ன, மறைந்த முன்னோடியை நினைவு கூற இது ஒரு வாய்ப்பானது என்பது போல கருத்து தெரிவித்திருந்தார்.
ரிட்சி நிச்சயம் மறக்கப்படாமல் நினைவு கூறப்பட வேண்டிய மேதை தான், ஆனால் அதற்காக அவரை மீண்டும் ஒரு முறை மறையச்செய்ய வேண்டுமா என்ன?

ஆனால், கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் இது ரிட்சிக்கு மட்டும் நிகழுந்துள்ள விஷயம் அல்ல. கடந்த ஆண்டு ஜோ கோக்கர் எனும் அமெரிக்க பிரபலம் இறந்துவிட்டதாக பேஸ்புக், டிவிட்டரில் பரவலாக அஞ்சலி செலுத்தப்பட்டது. விஷயம் என்ன என்றால், கோக்கர் முந்தைய ஆண்டே மறைந்துவிட்டார். ஏதோ பழைய செய்தி பேஸ்புக்கில் தீயாக பரவிவிட்டது.

இது போல ஏற்கனவே மறைந்த பிரபலங்கள் மீண்டும் மறைந்து விட்டதாக செய்திகள் வெளியாவும், அஞ்சலி செலுத்தப்படுவதும் இணையத்தில் அடிக்கடி நிகழ்கின்றன என்கின்றனர். இந்த நிகழ்வுக்கு இரண்டாம் மரண பாதிப்பு ( செகண்ட் டெத் சிண்ட்ரோம்) என பெயரால் குறிப்பிடப்படுகிறது.

தினமும் கோடிக்கணக்கில் பேஸ்புக்கிலும் ,டிவிட்டரிலும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் போது, பழைய செய்திகள் அல்லது நினைவு குறிப்புகள் அவசரத்தில் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு இப்படி பகிரப்படுவதாக விளக்கம் தரப்படுகிறது. இப்படி சமூக ஊடகங்களால் மீண்டும் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருப்பதற்கு யூனிக்ஸ் இணை நிறுவனர் ரிட்சியின் மறு மரணம் ஒரு உதாரணம்.
பிரபலங்கள் மறைவுக்கு நினைவாஞ்சலில் செலுத்துவதற்கான பரவலான வேட்கையும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

காரணம் எதுவாக இருந்தாலும், அடுத்த முறை பிரபலங்களின் மறைவு செய்தியை பகிரும் முன் அல்லது நினைவாஞ்சலி செலுத்தும் முன், அந்த செய்தியை உறுதி செய்து கொள்ள ஒரு சில நிமிடங்கள் செலவிடுவது நல்லது.

சந்தேகத்திற்கு உரிய செய்தி என்றால், அதன் உண்மை தன்மையை உறுதி செய்து கொள்ள, இணைய பொய்களை அம்பலமாக்கும் ஸ்னோஸ்.காம் ( snopes.com ) போன்ற இணையதளங்களை நாடலாம்.
இந்த விஷயத்தில் கவனிக்க வேண்டிய விஷயம், வலைப்பதிவாளர் ஓம் மாலிக்கின் நேர்மை. வயர்டு செய்தியின் தேதியை சரியாக பார்க்காமல் பழைய செய்தியை பகிர்ந்து கொண்ட, அவர் பின்னர் அந்த தவற்றை உணர்ந்து பகிர்ங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். மன்னிப்பு கேட்டதோடு, இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதற்காக தன் மீதே வருத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கான வரிசையாக இரண்டு மூன்று குறும்பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

தவறுகளை ஒப்புக்கொள்ளும் இந்த திறந்த மனத்திலான அணுகுமுறை இணைய உரையாடலில் மிகவும் முக்கியம். அந்த வகையில் ஓம் மாலிக்கிறகு (@om ) சபாஷ்.

* சினெட் விளக்க கட்டுரை: https://www.cnet.com/news/tech-luminaries-laud-dennis-ritchie-5-years-after-death-second-death-syndrome/
* வயர்டு பழைய கட்டுரை:https://www.wired.com/2011/10/dennis-ritchie/

குறிப்பு: டென்னிஸ் ரிட்சி நவீன கம்யூட்டரின் முன்னோடியாக போற்றப்படுகிறார். ஸ்டீவ் ஜாப்ஸ் உள்ளிட்ட பல முன்னோடிகளுக்கு அவர் உந்துசக்தியாக இருந்திருக்கிறார். தனது கண்டுபிடிப்பை பொருளாதார நோக்கில் பயன்படுத்திக்கொள்ள நினைக்காமல் கம்ப்ட்யூட்டர் மொழி வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தியவராகவும் அவர் கொண்டாடப்படுகிறார்.

———

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.