ஜல்லிக்கட்டு போராட்டம்: தமிழகத்தில் ஒரு அரபு வசந்தம்

8agWVQ0T_400x400ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து புதிய எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்த போராட்டம் இளைஞர்கள் சக்தியை உணர்த்துவதாக அமைந்துள்ளதோடு, இணையத்தின் ஆற்றலை குறிப்பாக சமூக ஊடகங்களின் ஆற்றலையும் உணர்த்தியுள்ளது. மாணவர்களும் இளைஞர்களும் தன்னெழுச்சியாக திரண்டு வந்து போராடும் விதமும், இந்த போராட்டத்தின் பரப்பும்,வீச்சும் பெருகி வரும் விதம் பலரை வியக்க வைத்துள்ளது.
படையப்பா படத்தில் ரஜினி பேசும் வசனம் போல இது தானாக சேர்ந்த கூட்டம். பின்னணியில் எந்த அமைப்பும் இல்லை, வழிநடத்த தலைவரும் இல்லை: ஆனால் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் மட்டும் பெருகி கொண்டே இருக்கின்றனர். மையமில்லாமல் நடைபெறும் இந்த போராட்டம், முதலில் அலங்காநல்லூரில் துவங்கி, சென்னை மெரினாவில் தீவிரமடைந்து, தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது. தேசிய அளவிலும், ஏன் உலக அளவிலும் இதற்கு ஆதரவு குவிந்து கொண்டிருக்கிறது.
இந்த போராட்டத்தின் உந்துசக்தியாக இருப்பது ஜல்லிக்கட்டை காப்பாற்றுவது தான் என்றாலும், அதன் பின்னணியில் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் உரிமைகளை காக்க வேண்டும் எனும் உணர்வும் வலுவாக இருப்பதை மறுக்க முடியாது. சமீக காலங்களில் தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகளில் தொடர்ந்து மாநிலம் கைவிடப்பட்டவிதமும் இதற்கு வலு சேர்த்திருக்கிறது. இப்படி ஒரு போராட்டம் தமிழகத்திற்கு தேவையாக இருக்கிறது.
வழக்கம் போல துவக்கத்தில் தேசிய ஊடகங்கள் கண்டு கொள்ளாத நிலை மாறி இப்போது சர்வதேச ஊடகங்களும் புறக்கணிக்க முடியாத மக்கள் போராட்டமாக ஜல்லிக்கட்டுவை காக்கும் போராட்டம் தீவிரமாகி இருக்கிறது. இதற்கு பிரதான காரணம், இணையமும், சமூக ஊடகங்களும் தான்.
பேஸ்புக் பதிவுகளாகவும், டிவிட்டர் குறும்பதிவுகளாகவும், வாட்ஸ் அப் பகிர்வாகவும் பரவி இந்த போராட்டம் வளர்ந்திருக்கிறது. யூடியூப் காணொலிகளும், குவோரா விளக்கங்களும் கைகொடுத்திருக்கின்றன.
பேஸ்புக் நிலைத்தகவல்களாகவும், டிவிட்டர் குறும்பதிவுகளாகவும் ஜல்லிக்கட்டு மீதான தடை தொடர்பான விவாதம் துவங்கிய போது, இப்படி ஒரு போராட்டம் வெடிக்கும் என யாரேனும் எதிர்பார்த்திருப்பார்களா? எனத்தெரியவில்லை. அதிலும் ஜல்லிக்கட்டு ஆதரவு நிலை, எதிர்ப்பு நிலை என கருத்துக்கள் வெளியாகி விவாதம் சூடு பிடித்த நிலையில், இதுவும் மற்ற சொற்போர்களில் ஒன்றே என பலரும் நினைத்திருக்கலாம். பேஸ்புக் கருத்து போராளிகளை பலரும் கேலியும் செய்திருக்கலாம்.
இதனிடையே ஜல்லிக்கட்டு தேவையா எனும் கேள்வியும், இதில் கலந்திருக்கும் சாதீய பாகுபாடு பற்றிய கருத்து மோதல்களும் , இதெல்லாம் வீண் வேலை எனும் எண்ணத்தை ஏற்படுத்திய நிலையில், இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடத்துவங்கிவிட்டனர். அதன் பிறகு மெல்ல படிப்படியாக போராட்டம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் அலங்காநல்லூரியில் தடையை மீறி ஜல்லிகட்டு எனும் கோஷத்துடன் துவங்கிய போராட்டம் சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர் குரலாக தீவிரமானது. மெரீனாவில் குவிந்த இளைஞர் பட்டாளம் கரையாமல் இருந்ததோடு, ஏதோ பயிற்சி முகாமிற்கு வருபவர்கள் போல மேலும் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் இணையத்துவங்கிய காட்சி , போராட்ட உணர்வின் உச்சமாக அமைந்துள்ளது.C2ha4uyUsAEPPpV
இதற்கு முன்னர் இணைய ஆதரவுடன் வெடித்த இரண்டு முக்கிய போராட்டங்களை இந்த போராட்டம் நினைவுபடுத்துகிறது. ஒன்று, 2011 ல், வளைகுடா நாடுகளில் ஜனநாயகத்திற்கு ஆதரவான குரலாக ஒலித்த போராட்டம். எகிப்தில் துவங்கி, பல அரபு நாடுகளில் தன்னெழுச்சியாக பிரதிபலித்த இந்த போராட்டத்தை அரபு வசந்தம் என இணைய வரலாறு குறித்து வைத்துள்ளது. மற்றொரு போராட்டம், அமெரிக்காவில் செல்வ பாகுபாட்டை எதிர்த்து வெடித்த வால்ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு போராட்டம். பெரும்பாலான செல்வம் ஒரு சதவீதம் பேரிடம் மட்டுமே குவிந்து கிடக்கும் நிதி ஏற்றத்தாழ்வை எதிர்த்து, அதன் மையான வால்ஸ்டீரிட்டை மையமாக கொண்டு இந்த போராட்டம் நடைபெற்றது. ஆக்குபை வால்ஸ்டீரிட் எனும் பெயரிலான இந்த போராட்டத்திற்கு இதே பெயரிலான டிவிட்டர் ஹாஷ்டேகுகளே கைகொடுத்தன.
இதோ இப்போது இணைய வரலாற்றில் மூன்றாவது பெரிய மக்கள் போராட்டமாக ஜல்லிக்கட்டை காப்போம் போராட்டம் வெடித்திருக்கிறது. முந்தைய போராட்டம் போலவே இதற்கும், ஹாஷ்டேக் ஆயுதெமே மையமாக இருக்கிறது. பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் ஜல்லிக்கட்டு தொடர்பான பதிவுகளும், குறும்பதிவுகளும் அலையென வெளியானாலும், அவை ஹாஷ்டேக் அடையாளத்தால் அருமையாக ஒருங்கிணைக்கப்பட்டன.
சேவ் ஜல்லிக்கட்டு (#SaveOurCultureJALLIKATTU ), ஜஸ்டீஸ் பார் ஜல்லிக்கட்டு(#JusticeforJallikattu ), ஜல்லிக்கட்டு (#Jallikattu ), #JallikattuProtest உள்ளிட்ட ஹாஷ்டேகுகள் உருவாக்கப்பட்டு, தொடர்புடைய குறும்பதிவுகள் அனைத்தும் இவற்றின் துணையோடு பகிர்ந்து கொள்ளப்பட்டன. பேஸ்புக்கிலும் இதே போன்ற ஹாஷ்டேகுகள் உருவாக்கப்பட்டன.
குமுறல், ஆவேசத்தின் வெளிப்பாடு, நியாத்தின் வாதம், தமழரின் பெருமை என பலவிதமாக வெளிப்பட்ட டிவிட்டர் குறும்பதிவுகள் ஒரு நதியாக பெருக்கெடுத்தன. இந்த குறும்பதிவுகள் ஜல்லிக்கட்டு தொடர்பான மைய விவாதத்தை உணர்த்தியதோடு, ஏன் போரட்டம், எதற்காக போராட்டம் எனும் புரிதலையும் ஏற்படுத்துவாக அமைந்தன. இந்த குறும்பதிவுகளில் வெளிப்பட்ட வேகமும், உணர்வும் மற்றவர்களை கருத்து தெரிவிக்க ஊக்குவித்தோடு, பலரை களமிறங்கி போராடவும் தூண்டுகோளாக அமைந்தன.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நான், ஜல்லிக்கட்டை நான் ஆதரிக்கிறேன் என உணர்த்தும் லோகோக்களையும் பலரும் தங்கள் டிவிட்டர் பக்கங்களில் இடம்பெறச்செய்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான குறும்பதிவுகளொடு, இந்த நிலையை ஏற்படுத்திய பிட்டா அமைப்புக்கு எதிரான குறும்பதிவுகளும் அதிக அளவில் வெளியாகி கொண்டிருக்கின்றன. பல குறும்பதிவுகள் வெற்று கோஷமாக அமைந்திருந்தாலும், எண்ணற்ற குறும்பதிவுகள் பிரச்சனையின் பல பரிமாணங்களை புரிய வைத்துக்கொண்டிருக்கின்றன. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரியம் என்பதை வலியுறுத்தும் அதே நேரத்தில், காளைகள் இதில் துண்புறுத்தப்படுவதில்லை எனும் தகவலும், மாடுகள் குடும்பத்தின் அங்கமாக இருக்கும் கிராமிய யதார்த்தமும் வெளிப்படுகிறது. இவைத்தவிர, நமது மண்ணின் பாரம்பரிய காளை இனங்கள் அழியாமல் காக்கப்படுவதன் அவசியத்தையும், ஜல்லிக்கட்டு இல்லாமல் இது சாத்தியமாகாது எனும் கருத்துக்களும், புதிய புரிதலை தர வல்லவை.
ஜல்லிக்கட்டு தொடர்பான குறும்பதிவுகளுக்காகவே பிரத்யேக டிவிட்டர் கணக்குகளும் உருவாகி இருக்கின்றன: @Jallikatu , @AgentSaffron,
இவற்றின் நடுவே கேலியும் கிண்டலும் கலந்த மீமிக்களும் இல்லாமல் இல்லை. ஆனால் குறும்பதிவுகள் போராட்டத்தின் நியாயத்தையும், தேவையையும் உணர்த்திக்கொண்டிருக்கின்றன. பேஸ்புக்கிலும் இதே நிலை தான். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உணவு அளிப்பதற்கான உதவியும் பதிவுகளாக, குறும்பதிவுகளாக ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இவற்றோடு உணர்வு மிக்க இளைஞர்களின் தன்னெழுச்சியும் சேர்ந்து கொண்டு உலகமே இன்று இந்த போராட்டத்தை உன்னிபாக கவனிக்க வைத்திருக்கிறது.
சமூக ஊடகங்கள் வீண் அக்கப்போர் மற்றும் வதந்திகளுக்கான இடமாக கருதப்பட்டாலும், அவை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கும் களமாக இருப்பது மீண்டும் ஒரு முறை நிருபிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2015 சென்னை பெருமழையின் போதும் இது வெளிப்பட்டது நினைவிருக்கலாம். சென்னை உள்ளிட்ட நகரங்களை வரலாறு காணாத மழை வெள்ளத்தில் மூழ்கடித்த போது மீட்பு பணியிலும் நிவாரண உதவிகள் வழங்குவதிலும் இணையவாசிகள் பெரும் பங்காற்றினர். தகவல்களை பகிர்வதில் துவங்கி, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைப்பதில் சென்னைரெயின்ஸ், சென்னை மைக்ரோ, சென்னை பிளட்ஸ் போன்ற ஹாஷ்டேகுகள் உதவின.
இம்முறை ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தை காப்பதற்காக இணையத்தின் ஆற்றலை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

* அரபு வசந்தம் பற்றிய முந்திய பதிவு :

* சென்னை மழை மீட்பு தொடர்பான பதிவு:

8agWVQ0T_400x400ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து புதிய எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்த போராட்டம் இளைஞர்கள் சக்தியை உணர்த்துவதாக அமைந்துள்ளதோடு, இணையத்தின் ஆற்றலை குறிப்பாக சமூக ஊடகங்களின் ஆற்றலையும் உணர்த்தியுள்ளது. மாணவர்களும் இளைஞர்களும் தன்னெழுச்சியாக திரண்டு வந்து போராடும் விதமும், இந்த போராட்டத்தின் பரப்பும்,வீச்சும் பெருகி வரும் விதம் பலரை வியக்க வைத்துள்ளது.
படையப்பா படத்தில் ரஜினி பேசும் வசனம் போல இது தானாக சேர்ந்த கூட்டம். பின்னணியில் எந்த அமைப்பும் இல்லை, வழிநடத்த தலைவரும் இல்லை: ஆனால் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் மட்டும் பெருகி கொண்டே இருக்கின்றனர். மையமில்லாமல் நடைபெறும் இந்த போராட்டம், முதலில் அலங்காநல்லூரில் துவங்கி, சென்னை மெரினாவில் தீவிரமடைந்து, தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது. தேசிய அளவிலும், ஏன் உலக அளவிலும் இதற்கு ஆதரவு குவிந்து கொண்டிருக்கிறது.
இந்த போராட்டத்தின் உந்துசக்தியாக இருப்பது ஜல்லிக்கட்டை காப்பாற்றுவது தான் என்றாலும், அதன் பின்னணியில் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் உரிமைகளை காக்க வேண்டும் எனும் உணர்வும் வலுவாக இருப்பதை மறுக்க முடியாது. சமீக காலங்களில் தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகளில் தொடர்ந்து மாநிலம் கைவிடப்பட்டவிதமும் இதற்கு வலு சேர்த்திருக்கிறது. இப்படி ஒரு போராட்டம் தமிழகத்திற்கு தேவையாக இருக்கிறது.
வழக்கம் போல துவக்கத்தில் தேசிய ஊடகங்கள் கண்டு கொள்ளாத நிலை மாறி இப்போது சர்வதேச ஊடகங்களும் புறக்கணிக்க முடியாத மக்கள் போராட்டமாக ஜல்லிக்கட்டுவை காக்கும் போராட்டம் தீவிரமாகி இருக்கிறது. இதற்கு பிரதான காரணம், இணையமும், சமூக ஊடகங்களும் தான்.
பேஸ்புக் பதிவுகளாகவும், டிவிட்டர் குறும்பதிவுகளாகவும், வாட்ஸ் அப் பகிர்வாகவும் பரவி இந்த போராட்டம் வளர்ந்திருக்கிறது. யூடியூப் காணொலிகளும், குவோரா விளக்கங்களும் கைகொடுத்திருக்கின்றன.
பேஸ்புக் நிலைத்தகவல்களாகவும், டிவிட்டர் குறும்பதிவுகளாகவும் ஜல்லிக்கட்டு மீதான தடை தொடர்பான விவாதம் துவங்கிய போது, இப்படி ஒரு போராட்டம் வெடிக்கும் என யாரேனும் எதிர்பார்த்திருப்பார்களா? எனத்தெரியவில்லை. அதிலும் ஜல்லிக்கட்டு ஆதரவு நிலை, எதிர்ப்பு நிலை என கருத்துக்கள் வெளியாகி விவாதம் சூடு பிடித்த நிலையில், இதுவும் மற்ற சொற்போர்களில் ஒன்றே என பலரும் நினைத்திருக்கலாம். பேஸ்புக் கருத்து போராளிகளை பலரும் கேலியும் செய்திருக்கலாம்.
இதனிடையே ஜல்லிக்கட்டு தேவையா எனும் கேள்வியும், இதில் கலந்திருக்கும் சாதீய பாகுபாடு பற்றிய கருத்து மோதல்களும் , இதெல்லாம் வீண் வேலை எனும் எண்ணத்தை ஏற்படுத்திய நிலையில், இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடத்துவங்கிவிட்டனர். அதன் பிறகு மெல்ல படிப்படியாக போராட்டம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் அலங்காநல்லூரியில் தடையை மீறி ஜல்லிகட்டு எனும் கோஷத்துடன் துவங்கிய போராட்டம் சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர் குரலாக தீவிரமானது. மெரீனாவில் குவிந்த இளைஞர் பட்டாளம் கரையாமல் இருந்ததோடு, ஏதோ பயிற்சி முகாமிற்கு வருபவர்கள் போல மேலும் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் இணையத்துவங்கிய காட்சி , போராட்ட உணர்வின் உச்சமாக அமைந்துள்ளது.C2ha4uyUsAEPPpV
இதற்கு முன்னர் இணைய ஆதரவுடன் வெடித்த இரண்டு முக்கிய போராட்டங்களை இந்த போராட்டம் நினைவுபடுத்துகிறது. ஒன்று, 2011 ல், வளைகுடா நாடுகளில் ஜனநாயகத்திற்கு ஆதரவான குரலாக ஒலித்த போராட்டம். எகிப்தில் துவங்கி, பல அரபு நாடுகளில் தன்னெழுச்சியாக பிரதிபலித்த இந்த போராட்டத்தை அரபு வசந்தம் என இணைய வரலாறு குறித்து வைத்துள்ளது. மற்றொரு போராட்டம், அமெரிக்காவில் செல்வ பாகுபாட்டை எதிர்த்து வெடித்த வால்ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு போராட்டம். பெரும்பாலான செல்வம் ஒரு சதவீதம் பேரிடம் மட்டுமே குவிந்து கிடக்கும் நிதி ஏற்றத்தாழ்வை எதிர்த்து, அதன் மையான வால்ஸ்டீரிட்டை மையமாக கொண்டு இந்த போராட்டம் நடைபெற்றது. ஆக்குபை வால்ஸ்டீரிட் எனும் பெயரிலான இந்த போராட்டத்திற்கு இதே பெயரிலான டிவிட்டர் ஹாஷ்டேகுகளே கைகொடுத்தன.
இதோ இப்போது இணைய வரலாற்றில் மூன்றாவது பெரிய மக்கள் போராட்டமாக ஜல்லிக்கட்டை காப்போம் போராட்டம் வெடித்திருக்கிறது. முந்தைய போராட்டம் போலவே இதற்கும், ஹாஷ்டேக் ஆயுதெமே மையமாக இருக்கிறது. பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் ஜல்லிக்கட்டு தொடர்பான பதிவுகளும், குறும்பதிவுகளும் அலையென வெளியானாலும், அவை ஹாஷ்டேக் அடையாளத்தால் அருமையாக ஒருங்கிணைக்கப்பட்டன.
சேவ் ஜல்லிக்கட்டு (#SaveOurCultureJALLIKATTU ), ஜஸ்டீஸ் பார் ஜல்லிக்கட்டு(#JusticeforJallikattu ), ஜல்லிக்கட்டு (#Jallikattu ), #JallikattuProtest உள்ளிட்ட ஹாஷ்டேகுகள் உருவாக்கப்பட்டு, தொடர்புடைய குறும்பதிவுகள் அனைத்தும் இவற்றின் துணையோடு பகிர்ந்து கொள்ளப்பட்டன. பேஸ்புக்கிலும் இதே போன்ற ஹாஷ்டேகுகள் உருவாக்கப்பட்டன.
குமுறல், ஆவேசத்தின் வெளிப்பாடு, நியாத்தின் வாதம், தமழரின் பெருமை என பலவிதமாக வெளிப்பட்ட டிவிட்டர் குறும்பதிவுகள் ஒரு நதியாக பெருக்கெடுத்தன. இந்த குறும்பதிவுகள் ஜல்லிக்கட்டு தொடர்பான மைய விவாதத்தை உணர்த்தியதோடு, ஏன் போரட்டம், எதற்காக போராட்டம் எனும் புரிதலையும் ஏற்படுத்துவாக அமைந்தன. இந்த குறும்பதிவுகளில் வெளிப்பட்ட வேகமும், உணர்வும் மற்றவர்களை கருத்து தெரிவிக்க ஊக்குவித்தோடு, பலரை களமிறங்கி போராடவும் தூண்டுகோளாக அமைந்தன.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நான், ஜல்லிக்கட்டை நான் ஆதரிக்கிறேன் என உணர்த்தும் லோகோக்களையும் பலரும் தங்கள் டிவிட்டர் பக்கங்களில் இடம்பெறச்செய்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான குறும்பதிவுகளொடு, இந்த நிலையை ஏற்படுத்திய பிட்டா அமைப்புக்கு எதிரான குறும்பதிவுகளும் அதிக அளவில் வெளியாகி கொண்டிருக்கின்றன. பல குறும்பதிவுகள் வெற்று கோஷமாக அமைந்திருந்தாலும், எண்ணற்ற குறும்பதிவுகள் பிரச்சனையின் பல பரிமாணங்களை புரிய வைத்துக்கொண்டிருக்கின்றன. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரியம் என்பதை வலியுறுத்தும் அதே நேரத்தில், காளைகள் இதில் துண்புறுத்தப்படுவதில்லை எனும் தகவலும், மாடுகள் குடும்பத்தின் அங்கமாக இருக்கும் கிராமிய யதார்த்தமும் வெளிப்படுகிறது. இவைத்தவிர, நமது மண்ணின் பாரம்பரிய காளை இனங்கள் அழியாமல் காக்கப்படுவதன் அவசியத்தையும், ஜல்லிக்கட்டு இல்லாமல் இது சாத்தியமாகாது எனும் கருத்துக்களும், புதிய புரிதலை தர வல்லவை.
ஜல்லிக்கட்டு தொடர்பான குறும்பதிவுகளுக்காகவே பிரத்யேக டிவிட்டர் கணக்குகளும் உருவாகி இருக்கின்றன: @Jallikatu , @AgentSaffron,
இவற்றின் நடுவே கேலியும் கிண்டலும் கலந்த மீமிக்களும் இல்லாமல் இல்லை. ஆனால் குறும்பதிவுகள் போராட்டத்தின் நியாயத்தையும், தேவையையும் உணர்த்திக்கொண்டிருக்கின்றன. பேஸ்புக்கிலும் இதே நிலை தான். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உணவு அளிப்பதற்கான உதவியும் பதிவுகளாக, குறும்பதிவுகளாக ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இவற்றோடு உணர்வு மிக்க இளைஞர்களின் தன்னெழுச்சியும் சேர்ந்து கொண்டு உலகமே இன்று இந்த போராட்டத்தை உன்னிபாக கவனிக்க வைத்திருக்கிறது.
சமூக ஊடகங்கள் வீண் அக்கப்போர் மற்றும் வதந்திகளுக்கான இடமாக கருதப்பட்டாலும், அவை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கும் களமாக இருப்பது மீண்டும் ஒரு முறை நிருபிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2015 சென்னை பெருமழையின் போதும் இது வெளிப்பட்டது நினைவிருக்கலாம். சென்னை உள்ளிட்ட நகரங்களை வரலாறு காணாத மழை வெள்ளத்தில் மூழ்கடித்த போது மீட்பு பணியிலும் நிவாரண உதவிகள் வழங்குவதிலும் இணையவாசிகள் பெரும் பங்காற்றினர். தகவல்களை பகிர்வதில் துவங்கி, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைப்பதில் சென்னைரெயின்ஸ், சென்னை மைக்ரோ, சென்னை பிளட்ஸ் போன்ற ஹாஷ்டேகுகள் உதவின.
இம்முறை ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தை காப்பதற்காக இணையத்தின் ஆற்றலை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

* அரபு வசந்தம் பற்றிய முந்திய பதிவு :

* சென்னை மழை மீட்பு தொடர்பான பதிவு:

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.