எங்கும் ட்ரோன்கள், மெய்நிகர் மாயம், புத்திசாலி பொருட்கள்… 2017 ல் தொழில்நுட்பம்!

s.aolcdn.comகாணுமிடமெல்லாம் ட்ரோன்கள் பறக்கும். மெய்நிகர் உலக அனுபவத்தை அளிக்க கூடிய சாதனங்களை மூக்கு கண்ணாடி போல அணிந்திருப்போம். பொருட்கள் எல்லாம் மேலும் புத்தி கூர்மை பெறும். எதிர்கால கார்கள் அணிவகுத்து நிற்கும். மனித அறிவை செயற்கை நுண்ணறிவு ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். பாட்கள் பேசிக்கொண்டே இருக்கும். செயலிகள் மேம்படும்… இவை எல்லாம் என்ன என்று வியக்கிறீர்களா? 2017 ம் ஆண்டில் தொழில்நுட்ப உலகில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய போக்குகளாக வல்லுனர்கள் ஆர்வத்துடன் சுட்டிக்காட்டும் போக்குகள் தான் இவை. தொழில்நுட்ப உலகின் மாற்றங்களும், முன்னேற்றமும் நாம் நினைப்பதையும், புரிந்து கொள்வதையும் விட வேகமாக ஏற்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு கவனத்தை ஈர்க்க கூடிய தொழில்நுட்ப போக்குகள் பற்றி பார்ப்போம்:
ட்ரோன்கள், மேலும் ட்ரோன்கள்
ட்ரோன்கள் எனப்படும் ஆள் இல்லா விமானங்கள் அல்லது தானியங்கி விமானங்கள் தொழில்நுட்ப பித்தர்களுக்கான நவீன விளையாட்டு சாதனங்கள் என்ற நிலையில் இருந்து முன்னேறி வந்துவிட்டன. கடந்த ஆண்டு நடைபெற்ற புகழ்பெற்ற நுகர்வோர் மின்னணு தொழில்நுட்ப கண்காட்சி அரங்கில் பலவித ட்ரோன்கள் முக்கிய பங்கு வகித்தன. மேலும் பேரிடர் மீட்பு பணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் ட்ரோன்களி பங்களிப்பு அதிகரித்து வருகிறது. மின் வணிக நிறுவனங்கள் ட்ரோன் டெலிவரியில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த ஆண்டு ட்ரோன்களின் பயன்பாடு மேலும் பல துறைகளில் உணரப்படலாம். கூடவே ட்ரோன்களில் தொல்லையும் அதிகரிக்கலாம்.


மெய்நிகர் மாயம்
பேஸ்புக் ஒரு நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துகிறது என்றால் எதிர்காலத்தில் அந்த நுட்பம் வெகுஜன பயன்பாட்டிற்கு வரப்போகிறது என உணர்ந்து கொள்ளலாம். அந்த வகையில் விர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் பெரிதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பேஸ்புக் தான் கையகப்படுத்திய ஆக்குலஸ் ரிப்ட் நிறுவனம் மூலம் இது தொடர்பான ஆய்வை தீவிரப்படுத்தியுள்ளது. சாம்சங், எச்.டி.சி உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த பிரிவில் தீவிரமாக உள்ளன. மூக்கு கண்ணாடி போல மெய்நிகர் சாதனத்தை மாட்டிக்கொண்டு முற்றிலும் புதிய அனுபவத்தில் திளைத்திருக்கும் சூழல் உருவாகலாம். வீடியோகேம் முதல் கொண்டு உளவியல் சிகிச்சை வரை மெய்நிகர் மாயம் ஆதிக்கம் செலுத்தலாம் என்கின்றனர். நீங்கள் தயாரா!


இன்னொரு யதார்த்தம்!

கடந்த ஆண்டு கலக்கிய போக்கேமான் கோ விளையாட்டை நினைவில் உள்ளதா? இது வெறும் ஸ்மார்ட்போன் விளையாட்டு அல்ல, நிஜ உலகையும், இணைய உலகையும் இணைத்த புதிய வகை விளையாட்டாக கொண்டாடப்படுகிறது. இந்த வகை கலப்பு ஆக்மெண்டெட் ரியாலிட்டி அதாவது மேம்பட்ட யதார்த்தம் என குறிப்பிடப்படுகிறது. அதாவது நிஜ வாழ்க்கை பொருட்கள் மீது தொழில்நுட்பத்தை இணைத்து அவற்றை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி. கல்வித்துறை முதல் கொண்டு பல துறைகளில் இதன் பயன்பாட்டை காணும் நிலை வரலாம்!.


செயற்கை நுண்ணறிவு
ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு வெகு வேகமாக முன்னேறி வருகிறது. இதன் செயல்பாடு பல துறைகளில் இன்னமும் ஆய்வு நிலையிலேயே இருந்தாலும், வங்கித்துறை உள்ளிட்ட சில துறைகளில் புதிய சேவை வடிவில் இதனுடன் கைகுலுக்கும் நிலை இருக்கிறது. பேஸ்புக், கூகிள் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இரண்டு நிறுவனங்களுமே அடுத்த கட்ட வளர்ச்சிக்காக இந்த நுட்பத்தை அதிகம் நம்பியுள்ளன. செயற்கை நுண்ணறிவு சார்ந்த செய்திகளையும், முன்னேற்றங்களையும் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கலாம். இதே போல, பாட்கள் எனப்படும், தானியங்கி புரோகிராம்களின் வளர்ச்சியும் தீவிரமடையும் என சொல்கின்றனர். அரட்டைக்கு உதவும் பாட்கள் முதல், சேவைகளுக்கு வழிகாட்டும் பாட்கள் வரை பலவித பாட்கள் உருவாக்கப்பட உள்ளன. எனக்கொரு பாட் வேண்டுமடா என பாடும் அளவுக்கு தனிநபர் உதவியாளர் பாட்களும் பெருகலாம்.

புத்திசாலி செயலிகள்
இப்போது விதவிதமான செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இனி வரப்போகும் செயலிகள் இப்போதுள்ள செயலிகளை விட புத்திசாலித்தனம் மிக்கதாக இருக்கும் என்கின்றனர். அதாவது இமெயில் சார்ந்த செயலி என்றால், உங்கள் சார்பாக முக்கியமான இமெயில்களை கண்டறிந்து இவற்றை மட்டும் படியுங்கள் பாஸ் போதும் என பரிந்துரைக்கும் செயலிகள் அதிகரிக்கலாம். திட்டமிடல், பயணம், வர்த்தகம், திரைப்பட நுகர்வு என எல்லாவற்றிலும் புத்திசாலித்தனமான செயலிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. இவற்றின் அடிநாதமும் செயற்கை நுண்ணறிவு தான்!

எதிர்கால கார்கள்
ஸ்மாட்ர் டிவி, ஸ்மார்ட்போன் போல கார்களும் ஸ்மார்ட்டாகி வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இந்த போக்கு இன்னும் தீவிரமாகும். ஏற்கனவே தானியங்கி கார்கள் எல்-போர்டு மாட்டிக்கொண்டு சோதனை முறையில் சாலைகளில் வலம் வரத்துவங்கியிருக்கின்றன. இதன் நீட்சியாக கார்கள் இன்னும் ஸ்மார்ட்டாக மாறக்கூடும். கார் வெறும் காராக இல்லாமல் தொழில்நுட்ப கூடமாக மாறிவிடும். தானியங்கி கார்கள் மட்டும் அல்ல தானியங்கி டிர்க மற்றும் தானியங்கி பஸ்களும் பவணி வரத்துவங்கியுள்ளன. இணைய கால் டாக்சி நிறுவனமான உபெர் நிறுவனமும் இதில் ஆர்வம் காட்டி வருகிறது.

அசத்தும் அணிகணிணிகள்
வியரபில்ஸ் எனப்படும் அணிகணிணிகள் ஏற்கனவே வெகுஜன பழக்கத்திற்கு வரத்துவங்கிவிட்டன. கூகுள் கிளாஸ் தோல்வி கொஞ்சம் பின்னடைவாக அமைந்தாலும், ஸ்னேப்சேட்டின் ஸ்பெக்டகல்ஸ் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. பேஷனுடன் இணைந்து, பாதுகாப்பையும், நவீன தகவல் தொடர்பு வசதிகளையும் அளிக்கும் நவீன காதணிகளையும், கழுத்து சங்கலிகளையும் பார்க்க முடிகிறது. இந்த வகை அணிகணிணிகள் மேலும் பாய்ச்சலை நிகழ்த்த உள்ளன.


சைபர் தாக்குதல் உஷார்
நிச்சயம் ஹேக்கர்கள் எனப்படும் தாக்காளர்களின் கைவரிசையில் இந்த ஆண்டு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு, இணைக்கப்பட்ட பொருட்கள் அதிகரிப்பது தாக்காளர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துவிடுகிறது. பாஸ்வேர்ட்களை கொத்து கொத்தாக களவாடிச்செல்வதும், போன்களையும், கம்ப்யூட்டர்களையும் லாக் செய்து வைத்து மிரட்டுவதும், பிஷிங் வகை மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இவை தொடர்பான விழிப்புணர்வு அவசியம் என்பதோடு, என்கிப்ரிஷன் பாதுகாப்பு குறித்தெல்லா இணைய சாமானியர்களும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. தனியுரிமை பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். பிக்டேட்டா பற்றி பெரிதாக பேசப்படும் நிலையில், நிறுவனங்கள் கையில் நம் டேட்டா எப்படி எல்லாம் பயன்படுகின்றன என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பேட்டரி ஆற்றல்
ஸ்மார்ட்போன் உள்ளிட்ட கேட்ஜெட்களை அதிக அளவில் பயன்படுத்தும் நிலையில் அவற்றுக்கு தீனி போடும் பேட்டரிகளின் ஆற்றலை அதிகரிக்கும் தேவையும் அதிகம் உணரப்படுகிறது. அதற்கேற்ப பேட்டரி தொடர்பான ஆய்வுகளும் தீவிரமடைந்துள்ளன. மேலும் புதுமையான பேட்டரி நுட்பங்களை எதிர்பார்க்கலாம்.! அதே போல புதிய வகை ஸ்மார்ட்போன் மாதிரிகளையும் அதிகம் எதிர்பார்க்கலாம்.

இயர்போன் புதிது
காதில் மாட்டிக்கொள்ளும் இயர்போன்கள் வயர்லெஸ் நுட்பத்தில் புதிய அவதாரம் எடுத்து வருகின்றன. ஆப்பிளின் ஏர்பாடு உள்ளிட்ட பல புதுமை சாதனங்கள் கவர்ந்திழுத்து வருகின்றன. மேலும் புதுமையான இயர்போன்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன.


பொருட்களின் இணையம்
இண்டெர்நெட் ஆப் திங்ஸ் எனப்படும் பொருட்களின் இணையம் தொடர்பாக பல ஆண்டுகளாகவே பெரிதாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த போக்கு இன்னும் தீவிரம் ஆகியுள்ளது. இணைய வசதி கொண்ட பொருட்களின் எண்ணிக்கையும், பயன்பாடும் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. இத்துறையில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் ஆர்வன் காட்டி வருவதால், புதுமையான சேவைகள் அறிமுகமாகும் வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளன.

பிளாக்செயின் நுட்பம்
தொழில்நுட்பத்தின் தாக்கம் மற்ற துறைகளைவிட நிதித்துறையில் அதிகம் நிகழ்வதை அன்மை காலத்தில் நீங்கள் கவனித்திருக்கலாம். இந்த வகை நிறுவனங்கள் நிதி நுட்ப நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவிலும் இந்த வகை நிறுவனங்கள் சுறுசுறுப்புடன் இயங்கி வருகின்றன. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை மீதான கவனம் அதிகமாகியுள்ளதால் நிதி நுட்ப நிறுவனங்கள் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளன. இந்த பிரிவில் முக்கியமாக பேசப்படும் பிளாக்செயின் நுட்பம் வங்கிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. பிரபல மறை பணமான பிட்காயினுக்கு அடிப்படையாக விளங்கும் இந்த நுட்பம் பாதுகாப்பான பரிவர்த்தனைக்கான அடித்தளமாகவும் கருதப்படுகிறது.

தமிழ் இந்துவில் எழுதியது;

s.aolcdn.comகாணுமிடமெல்லாம் ட்ரோன்கள் பறக்கும். மெய்நிகர் உலக அனுபவத்தை அளிக்க கூடிய சாதனங்களை மூக்கு கண்ணாடி போல அணிந்திருப்போம். பொருட்கள் எல்லாம் மேலும் புத்தி கூர்மை பெறும். எதிர்கால கார்கள் அணிவகுத்து நிற்கும். மனித அறிவை செயற்கை நுண்ணறிவு ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். பாட்கள் பேசிக்கொண்டே இருக்கும். செயலிகள் மேம்படும்… இவை எல்லாம் என்ன என்று வியக்கிறீர்களா? 2017 ம் ஆண்டில் தொழில்நுட்ப உலகில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய போக்குகளாக வல்லுனர்கள் ஆர்வத்துடன் சுட்டிக்காட்டும் போக்குகள் தான் இவை. தொழில்நுட்ப உலகின் மாற்றங்களும், முன்னேற்றமும் நாம் நினைப்பதையும், புரிந்து கொள்வதையும் விட வேகமாக ஏற்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு கவனத்தை ஈர்க்க கூடிய தொழில்நுட்ப போக்குகள் பற்றி பார்ப்போம்:
ட்ரோன்கள், மேலும் ட்ரோன்கள்
ட்ரோன்கள் எனப்படும் ஆள் இல்லா விமானங்கள் அல்லது தானியங்கி விமானங்கள் தொழில்நுட்ப பித்தர்களுக்கான நவீன விளையாட்டு சாதனங்கள் என்ற நிலையில் இருந்து முன்னேறி வந்துவிட்டன. கடந்த ஆண்டு நடைபெற்ற புகழ்பெற்ற நுகர்வோர் மின்னணு தொழில்நுட்ப கண்காட்சி அரங்கில் பலவித ட்ரோன்கள் முக்கிய பங்கு வகித்தன. மேலும் பேரிடர் மீட்பு பணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் ட்ரோன்களி பங்களிப்பு அதிகரித்து வருகிறது. மின் வணிக நிறுவனங்கள் ட்ரோன் டெலிவரியில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த ஆண்டு ட்ரோன்களின் பயன்பாடு மேலும் பல துறைகளில் உணரப்படலாம். கூடவே ட்ரோன்களில் தொல்லையும் அதிகரிக்கலாம்.


மெய்நிகர் மாயம்
பேஸ்புக் ஒரு நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துகிறது என்றால் எதிர்காலத்தில் அந்த நுட்பம் வெகுஜன பயன்பாட்டிற்கு வரப்போகிறது என உணர்ந்து கொள்ளலாம். அந்த வகையில் விர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் பெரிதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பேஸ்புக் தான் கையகப்படுத்திய ஆக்குலஸ் ரிப்ட் நிறுவனம் மூலம் இது தொடர்பான ஆய்வை தீவிரப்படுத்தியுள்ளது. சாம்சங், எச்.டி.சி உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த பிரிவில் தீவிரமாக உள்ளன. மூக்கு கண்ணாடி போல மெய்நிகர் சாதனத்தை மாட்டிக்கொண்டு முற்றிலும் புதிய அனுபவத்தில் திளைத்திருக்கும் சூழல் உருவாகலாம். வீடியோகேம் முதல் கொண்டு உளவியல் சிகிச்சை வரை மெய்நிகர் மாயம் ஆதிக்கம் செலுத்தலாம் என்கின்றனர். நீங்கள் தயாரா!


இன்னொரு யதார்த்தம்!

கடந்த ஆண்டு கலக்கிய போக்கேமான் கோ விளையாட்டை நினைவில் உள்ளதா? இது வெறும் ஸ்மார்ட்போன் விளையாட்டு அல்ல, நிஜ உலகையும், இணைய உலகையும் இணைத்த புதிய வகை விளையாட்டாக கொண்டாடப்படுகிறது. இந்த வகை கலப்பு ஆக்மெண்டெட் ரியாலிட்டி அதாவது மேம்பட்ட யதார்த்தம் என குறிப்பிடப்படுகிறது. அதாவது நிஜ வாழ்க்கை பொருட்கள் மீது தொழில்நுட்பத்தை இணைத்து அவற்றை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி. கல்வித்துறை முதல் கொண்டு பல துறைகளில் இதன் பயன்பாட்டை காணும் நிலை வரலாம்!.


செயற்கை நுண்ணறிவு
ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு வெகு வேகமாக முன்னேறி வருகிறது. இதன் செயல்பாடு பல துறைகளில் இன்னமும் ஆய்வு நிலையிலேயே இருந்தாலும், வங்கித்துறை உள்ளிட்ட சில துறைகளில் புதிய சேவை வடிவில் இதனுடன் கைகுலுக்கும் நிலை இருக்கிறது. பேஸ்புக், கூகிள் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இரண்டு நிறுவனங்களுமே அடுத்த கட்ட வளர்ச்சிக்காக இந்த நுட்பத்தை அதிகம் நம்பியுள்ளன. செயற்கை நுண்ணறிவு சார்ந்த செய்திகளையும், முன்னேற்றங்களையும் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கலாம். இதே போல, பாட்கள் எனப்படும், தானியங்கி புரோகிராம்களின் வளர்ச்சியும் தீவிரமடையும் என சொல்கின்றனர். அரட்டைக்கு உதவும் பாட்கள் முதல், சேவைகளுக்கு வழிகாட்டும் பாட்கள் வரை பலவித பாட்கள் உருவாக்கப்பட உள்ளன. எனக்கொரு பாட் வேண்டுமடா என பாடும் அளவுக்கு தனிநபர் உதவியாளர் பாட்களும் பெருகலாம்.

புத்திசாலி செயலிகள்
இப்போது விதவிதமான செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இனி வரப்போகும் செயலிகள் இப்போதுள்ள செயலிகளை விட புத்திசாலித்தனம் மிக்கதாக இருக்கும் என்கின்றனர். அதாவது இமெயில் சார்ந்த செயலி என்றால், உங்கள் சார்பாக முக்கியமான இமெயில்களை கண்டறிந்து இவற்றை மட்டும் படியுங்கள் பாஸ் போதும் என பரிந்துரைக்கும் செயலிகள் அதிகரிக்கலாம். திட்டமிடல், பயணம், வர்த்தகம், திரைப்பட நுகர்வு என எல்லாவற்றிலும் புத்திசாலித்தனமான செயலிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. இவற்றின் அடிநாதமும் செயற்கை நுண்ணறிவு தான்!

எதிர்கால கார்கள்
ஸ்மாட்ர் டிவி, ஸ்மார்ட்போன் போல கார்களும் ஸ்மார்ட்டாகி வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இந்த போக்கு இன்னும் தீவிரமாகும். ஏற்கனவே தானியங்கி கார்கள் எல்-போர்டு மாட்டிக்கொண்டு சோதனை முறையில் சாலைகளில் வலம் வரத்துவங்கியிருக்கின்றன. இதன் நீட்சியாக கார்கள் இன்னும் ஸ்மார்ட்டாக மாறக்கூடும். கார் வெறும் காராக இல்லாமல் தொழில்நுட்ப கூடமாக மாறிவிடும். தானியங்கி கார்கள் மட்டும் அல்ல தானியங்கி டிர்க மற்றும் தானியங்கி பஸ்களும் பவணி வரத்துவங்கியுள்ளன. இணைய கால் டாக்சி நிறுவனமான உபெர் நிறுவனமும் இதில் ஆர்வம் காட்டி வருகிறது.

அசத்தும் அணிகணிணிகள்
வியரபில்ஸ் எனப்படும் அணிகணிணிகள் ஏற்கனவே வெகுஜன பழக்கத்திற்கு வரத்துவங்கிவிட்டன. கூகுள் கிளாஸ் தோல்வி கொஞ்சம் பின்னடைவாக அமைந்தாலும், ஸ்னேப்சேட்டின் ஸ்பெக்டகல்ஸ் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. பேஷனுடன் இணைந்து, பாதுகாப்பையும், நவீன தகவல் தொடர்பு வசதிகளையும் அளிக்கும் நவீன காதணிகளையும், கழுத்து சங்கலிகளையும் பார்க்க முடிகிறது. இந்த வகை அணிகணிணிகள் மேலும் பாய்ச்சலை நிகழ்த்த உள்ளன.


சைபர் தாக்குதல் உஷார்
நிச்சயம் ஹேக்கர்கள் எனப்படும் தாக்காளர்களின் கைவரிசையில் இந்த ஆண்டு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு, இணைக்கப்பட்ட பொருட்கள் அதிகரிப்பது தாக்காளர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துவிடுகிறது. பாஸ்வேர்ட்களை கொத்து கொத்தாக களவாடிச்செல்வதும், போன்களையும், கம்ப்யூட்டர்களையும் லாக் செய்து வைத்து மிரட்டுவதும், பிஷிங் வகை மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இவை தொடர்பான விழிப்புணர்வு அவசியம் என்பதோடு, என்கிப்ரிஷன் பாதுகாப்பு குறித்தெல்லா இணைய சாமானியர்களும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. தனியுரிமை பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். பிக்டேட்டா பற்றி பெரிதாக பேசப்படும் நிலையில், நிறுவனங்கள் கையில் நம் டேட்டா எப்படி எல்லாம் பயன்படுகின்றன என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பேட்டரி ஆற்றல்
ஸ்மார்ட்போன் உள்ளிட்ட கேட்ஜெட்களை அதிக அளவில் பயன்படுத்தும் நிலையில் அவற்றுக்கு தீனி போடும் பேட்டரிகளின் ஆற்றலை அதிகரிக்கும் தேவையும் அதிகம் உணரப்படுகிறது. அதற்கேற்ப பேட்டரி தொடர்பான ஆய்வுகளும் தீவிரமடைந்துள்ளன. மேலும் புதுமையான பேட்டரி நுட்பங்களை எதிர்பார்க்கலாம்.! அதே போல புதிய வகை ஸ்மார்ட்போன் மாதிரிகளையும் அதிகம் எதிர்பார்க்கலாம்.

இயர்போன் புதிது
காதில் மாட்டிக்கொள்ளும் இயர்போன்கள் வயர்லெஸ் நுட்பத்தில் புதிய அவதாரம் எடுத்து வருகின்றன. ஆப்பிளின் ஏர்பாடு உள்ளிட்ட பல புதுமை சாதனங்கள் கவர்ந்திழுத்து வருகின்றன. மேலும் புதுமையான இயர்போன்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன.


பொருட்களின் இணையம்
இண்டெர்நெட் ஆப் திங்ஸ் எனப்படும் பொருட்களின் இணையம் தொடர்பாக பல ஆண்டுகளாகவே பெரிதாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த போக்கு இன்னும் தீவிரம் ஆகியுள்ளது. இணைய வசதி கொண்ட பொருட்களின் எண்ணிக்கையும், பயன்பாடும் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. இத்துறையில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் ஆர்வன் காட்டி வருவதால், புதுமையான சேவைகள் அறிமுகமாகும் வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளன.

பிளாக்செயின் நுட்பம்
தொழில்நுட்பத்தின் தாக்கம் மற்ற துறைகளைவிட நிதித்துறையில் அதிகம் நிகழ்வதை அன்மை காலத்தில் நீங்கள் கவனித்திருக்கலாம். இந்த வகை நிறுவனங்கள் நிதி நுட்ப நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவிலும் இந்த வகை நிறுவனங்கள் சுறுசுறுப்புடன் இயங்கி வருகின்றன. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை மீதான கவனம் அதிகமாகியுள்ளதால் நிதி நுட்ப நிறுவனங்கள் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளன. இந்த பிரிவில் முக்கியமாக பேசப்படும் பிளாக்செயின் நுட்பம் வங்கிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. பிரபல மறை பணமான பிட்காயினுக்கு அடிப்படையாக விளங்கும் இந்த நுட்பம் பாதுகாப்பான பரிவர்த்தனைக்கான அடித்தளமாகவும் கருதப்படுகிறது.

தமிழ் இந்துவில் எழுதியது;

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.