கண்ணை நம்பாதே! ஒளிப்படங்கள் ஏமாற்றும்…

42570D2B00000578-4697160-One_of_these_images_has_been_changed_but_which_one_is_it_and_whe-a-90_1500359733849இனி அடுத்தமுறை இணையத்தில் ஒளிப்படங்களை பார்த்து ரசிக்கும் போது கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்ப்பது என்பார்களே, அது போல கூட நீங்கள் காணும் ஒளிப்படத்தை ஆய்வு செய்யுங்கள். அதிலும் முக்கியமாக, ஒரு ஒளிப்படம் உங்களை கவர்ந்து அதை இணையவெளியில் பகிர்ந்து கொள்ளத்தோன்றும் நிலையில், அந்த படத்தை ஒருமுறைக்கு இருமுறை கூர்ந்து கவனிப்பது நல்லது. ஏனெனில், அந்த படம் போலியான ஒளிப்படமாக கூட இருக்கலாம். எனவே நீங்களும் ஏமாந்து, மற்றவர்களையும் ஏமாற செய்யக்கூடாது அல்லவா? அதனால் தான், ஒளிப்படங்கள் விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கை தேவை.

இது என்ன வம்பா பேச்சோ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இணைய யதார்த்தம் இப்படி தான் இருக்கிறது. இணையத்தை ஒரு பக்கம், ஃபேக் நியூஸ் எனப்படும் பொய்ச்செய்தி உலக்கிக்கொண்டிருக்கிறது என்றால் இன்னொரு பக்கம் பொய் படங்கள் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அண்மையில் இது தொடர்பாக முக்கியமான ஆய்வு முடிவு ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அதைப்பற்றி பார்க்கும் முன், முதலில் பொய் படங்களின் பிரச்சனையை சுருக்கமாக பார்த்துவிடலாம்.

ஃபேக் நியூஸ் பிரச்சனை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இணையத்தில் நிஜ செய்திகள் ;போலவே வெளியிடப்படும் உண்மை அல்லாத செய்திகளே இவ்வாறு கூறப்படுகின்றன. உண்மையான இணையதளம் போல தோன்றும் இணையதளங்களில் வெளியிடப்படுவதும், கவனத்தை ஈர்க்கும் பளிச் தலைப்புகளும், விறுவிறுப்பான விவரிப்பும் பொய்ச்செய்திகளின் முக்கிய அம்சங்களாக அமைகின்றன. பெரும்பாலான இணையவாசிகள் இவற்றை அடையாளம் காண முடியாமல் ஏமாந்து போவதும், அதைவிட முக்கியமாக இவற்றை சமூக ஊடகங்களில் தாராளமாக பகிர்ந்து கொண்டு பிரபலமாக்குவதும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் மற்றும் கூகுளில் இத்தகைய பொய்ச்செய்திகள் வடிகட்டப்படாமல் தலைகாட்டுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொய்ச்செய்திகளை கண்டறிவது எப்படி? கட்டுப்படுத்துவது எப்படி? களைவது எப்படி? என்றெல்லாம் விவாதம் தீவிரமாகி இருக்கிறது. இதற்காக என்றே பிரத்யேக அல்கோரிதம்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த பொறுப்பை மென்பொருள்கள் வசம் ஒப்படைப்பது பலன் தராது, விக்கிபீடியா பாணியில் இணைய கூட்டமே இந்த கண்டறிதலை சிறப்பாக செய்ய முடியும் எனும் நம்பிக்கையில், விக்கிபீடியா நிறுவனர் ஜிம்மி வேல்சும் தன் பங்கிற்கு, விக்கிடிரிப்யூன் எனும் புதிய இணையதளத்தை நிறுவியிருக்கிறார்.

பொய்ச்செய்திகள் போலவே, பொய் படங்களும் இணையத்தில் உலா வருகின்றன. அதாவது ஒளிப்படங்களை திருத்தி மேம்படுத்த உதவும் போட்டோஷாப் மென்பொருள் கொண்டு, மாற்றப்பட்ட படங்கள். பொதுவாக ஒளிப்படத்தின் பின்னணியில் உள்ள ஒளி அடர்த்தியை மாற்றுவது, சின்ன சின்ன குறைகளை சரி செய்வது போன்றவை மூலம் ஒளிப்படத்தை மெருகேற்றுவதற்காக போட்டோஷாப் பயன்படுகிறது. வண்ணத்தை கூட்டலாம், குறைக்கலாம் என்றாலும், படத்தின் மூல அம்சங்களில் கை வைக்க கூடாது. அதாவது படத்தில் இல்லாத அம்சத்தை சேர்ப்பது, இருக்கும் அம்சத்தை நீக்குவது போன்றவற்றை செய்யக்கூடாது. இப்படி மூல அம்சங்களில் மாற்றம் அல்லது திருத்தங்களை செய்தால் அந்த படம் பொய் படமாக கருதப்படுகிறது.

ஆர்வக்கோளாறு கொண்ட இணையவாசிகள் பலர் இப்படி போடோஷாப் செய்த படங்களை வெளியிட்டு மாட்டிக்கொண்டிருக்கின்றனர். இதைவிட மோசம், முன்னணி ஒளிப்பட கலைஞர்கள் சிலரும் இத்தகைய சர்ச்சையில் சிக்கி இருக்கின்றனர். அதே போல முன்னணி வலைப்பதிவாளர்கள் சிலரும் கூட, ஒளிப்படத்தில் கையை வைத்து மாட்டிக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் கூட, பிரபல பேஷன் மற்றும் சுற்றுலா வலைப்பதிவாளரான அமீலியா லயானா என்பவர், போட்டோஷாப் மூலம் மாற்றப்பட்ட படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டது கண்டுபிடிக்கபட்டு கடும் விமர்சனத்திற்கு இலக்கானார்.

இன்னொரு பக்கம் பார்த்தால், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பரபரப்பாக பேசப்படும் பல படங்கள் உண்மையில் மாற்றம் அல்லது திருத்தம் செய்யப்பட்டவையாக இருப்பதை பலரும் உணர்வதில்லை. இந்த பின்னணியில் தான், பிரிட்டனின் வார்விக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வுக்குழு ஒன்று, பொய் படங்கள் தொடர்பான ஆய்வை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது, 707 பயனாளிகளிடம் இரண்டு வகையான ஒளிப்படங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து மூலப்படங்கள் மற்றும் ஐந்த படங்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டவை. இந்த படங்களில் பொய்யான அம்சங்களை கண்டறிய முடியுமா எனும் கேள்வியோடு, அவற்றை கண்டறியும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் 60 சதவீதம் பேருக்கு மேல் பொய் படங்களை கண்டறிந்தாலும், அதில் என்ன பிரச்சனை என கண்டறிய முடியாமல் திண்டாடியிருக்கின்றனர்.

இன்னொரு சோதனையில், பொய்படங்கள் பற்றிய தகவல் தெரிவிக்காமல் இரண்டு வகையான படங்களை பார்த்து வித்தியாசத்தை கண்டறியுமாறு கேட்கப்பட்டனர். இவர்களில் 65 சதவீதம் பேர் படத்தில் வில்லங்கம் இருப்பதை கண்டுபிடித்தாலும், பெரும்பாலானோரால் படத்தில், எந்த இடத்தில் பிரச்சனை இருக்கிறது என கண்டறிய முடியவில்லை.

இந்த ஆய்வு முடிவுகள் தொடர்பான விரிவான கட்டுரை அறிவியல் சஞ்சிகை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ஒளிப்படம் உண்மையானதா? பொய்யானதா? என்பதை கண்டறியும் திறன் மக்களிடம் குறைவாக இருப்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

முனைவர் பட்ட ஆய்வாளர் சோபியா நைட்டிங்கேல் மற்றும் டெரிக் வாட்சன் உள்ளிட்டோர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். ஒளிப்படங்களை ஆதாரமாக கொள்வதை இது சிக்கலாக்கும் என்று சோபியா கூறியிருக்கிறார். ஒளிப்படங்கள் நமது நினைவாற்றல் மீது மிகப்பெரிய தாக்கம் செலுத்துவதால், உண்மையான படத்தையும், பொய்யான படத்தையும் கண்டறிய முடியாதது நாம் நம்புவது மற்றும் நினைவில் கொள்வது மீது தாக்கம் செலுத்தலாம் என்கிறார் வாட்சன்.

இந்த ஆய்வு தொடர்பாக இணையதளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது; http://bit.ly/2uEbjow  இந்த தளத்தில் நீங்களும் கூட பொய பட கண்டறிதல் சோதனைக்கு உங்களை உட்படுத்திக்கொள்ளலாம். உங்கள் திறமையை சோதித்துக்கொள்வதோடு, இணைய ஆய்வுக்கு பங்களிப்பு செலுத்தியது போலவும் இருக்கும்.

 

 

தளம் புதிது; செய்திகளுக்கான சமூக வலைப்பின்னல்

செய்திப்பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில், செய்திகளை தெரிந்து கொள்வதற்காக புதிய இணையதளம் ஒன்று அறிமுகம் ஆகியிருக்கிறது. காங்ஸ்டர்ஸ் எனும் அந்த தளம், செய்திகளை கண்டறிவதற்கானது மட்டும் அல்ல, பகிர்ந்து கொள்வதற்கானதாகவும் இருக்கிறது. அதாவது செய்திகளுக்கான வலைப்பின்னல் தளம் போல இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் சக உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ளும் செய்திகளை பார்ப்பதோடு, அவற்றை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம். இதில் முன்னிலை பெறும் செய்திகளை கிளிக் செய்தால் அவற்றின் சுருக்கத்தை வாசிக்கலாம். மேலும் கிளிக் செய்தால் விரிவான செய்தியை வாசிக்கலாம்.

பலவித தலைப்புகளில் செய்திகள் வெளியாகின்றன. தினமும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட செய்திகளை பரிசீலித்து செய்திகளை தேர்வு செய்து வழங்குவதாக இந்த தளத்தின் அறிமுகப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக செய்தி கண்டறிதல் சேவையாக அறியப்பட்ட டிக் உள்ளிட்ட தளங்கள் வழங்கிய சேவையை போன்றதே என்றாலும், செய்திகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளத்தை பயன்படுத்திப்பார்க்கலாம்.

செய்திகளை தேடிப்பார்க்கும் மற்றும் சமர்பிக்கும் வசதி இருக்கிறது.

இணைய முகவரி: http://gongsters.com/

 

 

 

செயலி புதிது: வரலாற்றில் நடந்தது என்ன?

வரலாற்று நிகழ்வுகளை உள்ளங்கையில் கொண்டு வரும் வகையில் வாட் ஹாப்பண்ட் டுடே இன் ஹிஸ்டிரி, செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஐபோனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில், ஒவ்வொரு மாதத்திற்கான முக்கிய வரலாற்று நிகழ்வுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவற்றில் எந்த நிகழ்வு தொடர்பான கூடுதல் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். நிகழ்வுகளின் ஒளிப்படங்களையும் காணலாம். எல்லா நிகழ்வுகளுமே கவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முப்பரிமான டச் முன்னோட்ட வசதியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வுகளை அறிவிக்கையாக பெறும் வசதியும் இருக்கிறது. இந்த வசதி மூலம் முக்கிய நிகழ்வுகளை தவறவிடாமல் இருக்கலாம். வரலாற்று நிகழ்வுகளில் ஆர்வம் உள்ளவர்களை கவரக்கூடிய செயலி இது. ஆண்ட்ராய்டு வடிவம் எப்போது வெளியாகும் என்றுத்தெரியவில்லை.

மேலும் தகவல்களுக்கு: http://apple.co/2gX5U6R

 

 

 

சைபர்சிம்மன்

 

42570D2B00000578-4697160-One_of_these_images_has_been_changed_but_which_one_is_it_and_whe-a-90_1500359733849இனி அடுத்தமுறை இணையத்தில் ஒளிப்படங்களை பார்த்து ரசிக்கும் போது கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்ப்பது என்பார்களே, அது போல கூட நீங்கள் காணும் ஒளிப்படத்தை ஆய்வு செய்யுங்கள். அதிலும் முக்கியமாக, ஒரு ஒளிப்படம் உங்களை கவர்ந்து அதை இணையவெளியில் பகிர்ந்து கொள்ளத்தோன்றும் நிலையில், அந்த படத்தை ஒருமுறைக்கு இருமுறை கூர்ந்து கவனிப்பது நல்லது. ஏனெனில், அந்த படம் போலியான ஒளிப்படமாக கூட இருக்கலாம். எனவே நீங்களும் ஏமாந்து, மற்றவர்களையும் ஏமாற செய்யக்கூடாது அல்லவா? அதனால் தான், ஒளிப்படங்கள் விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கை தேவை.

இது என்ன வம்பா பேச்சோ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இணைய யதார்த்தம் இப்படி தான் இருக்கிறது. இணையத்தை ஒரு பக்கம், ஃபேக் நியூஸ் எனப்படும் பொய்ச்செய்தி உலக்கிக்கொண்டிருக்கிறது என்றால் இன்னொரு பக்கம் பொய் படங்கள் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அண்மையில் இது தொடர்பாக முக்கியமான ஆய்வு முடிவு ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அதைப்பற்றி பார்க்கும் முன், முதலில் பொய் படங்களின் பிரச்சனையை சுருக்கமாக பார்த்துவிடலாம்.

ஃபேக் நியூஸ் பிரச்சனை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இணையத்தில் நிஜ செய்திகள் ;போலவே வெளியிடப்படும் உண்மை அல்லாத செய்திகளே இவ்வாறு கூறப்படுகின்றன. உண்மையான இணையதளம் போல தோன்றும் இணையதளங்களில் வெளியிடப்படுவதும், கவனத்தை ஈர்க்கும் பளிச் தலைப்புகளும், விறுவிறுப்பான விவரிப்பும் பொய்ச்செய்திகளின் முக்கிய அம்சங்களாக அமைகின்றன. பெரும்பாலான இணையவாசிகள் இவற்றை அடையாளம் காண முடியாமல் ஏமாந்து போவதும், அதைவிட முக்கியமாக இவற்றை சமூக ஊடகங்களில் தாராளமாக பகிர்ந்து கொண்டு பிரபலமாக்குவதும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் மற்றும் கூகுளில் இத்தகைய பொய்ச்செய்திகள் வடிகட்டப்படாமல் தலைகாட்டுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொய்ச்செய்திகளை கண்டறிவது எப்படி? கட்டுப்படுத்துவது எப்படி? களைவது எப்படி? என்றெல்லாம் விவாதம் தீவிரமாகி இருக்கிறது. இதற்காக என்றே பிரத்யேக அல்கோரிதம்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த பொறுப்பை மென்பொருள்கள் வசம் ஒப்படைப்பது பலன் தராது, விக்கிபீடியா பாணியில் இணைய கூட்டமே இந்த கண்டறிதலை சிறப்பாக செய்ய முடியும் எனும் நம்பிக்கையில், விக்கிபீடியா நிறுவனர் ஜிம்மி வேல்சும் தன் பங்கிற்கு, விக்கிடிரிப்யூன் எனும் புதிய இணையதளத்தை நிறுவியிருக்கிறார்.

பொய்ச்செய்திகள் போலவே, பொய் படங்களும் இணையத்தில் உலா வருகின்றன. அதாவது ஒளிப்படங்களை திருத்தி மேம்படுத்த உதவும் போட்டோஷாப் மென்பொருள் கொண்டு, மாற்றப்பட்ட படங்கள். பொதுவாக ஒளிப்படத்தின் பின்னணியில் உள்ள ஒளி அடர்த்தியை மாற்றுவது, சின்ன சின்ன குறைகளை சரி செய்வது போன்றவை மூலம் ஒளிப்படத்தை மெருகேற்றுவதற்காக போட்டோஷாப் பயன்படுகிறது. வண்ணத்தை கூட்டலாம், குறைக்கலாம் என்றாலும், படத்தின் மூல அம்சங்களில் கை வைக்க கூடாது. அதாவது படத்தில் இல்லாத அம்சத்தை சேர்ப்பது, இருக்கும் அம்சத்தை நீக்குவது போன்றவற்றை செய்யக்கூடாது. இப்படி மூல அம்சங்களில் மாற்றம் அல்லது திருத்தங்களை செய்தால் அந்த படம் பொய் படமாக கருதப்படுகிறது.

ஆர்வக்கோளாறு கொண்ட இணையவாசிகள் பலர் இப்படி போடோஷாப் செய்த படங்களை வெளியிட்டு மாட்டிக்கொண்டிருக்கின்றனர். இதைவிட மோசம், முன்னணி ஒளிப்பட கலைஞர்கள் சிலரும் இத்தகைய சர்ச்சையில் சிக்கி இருக்கின்றனர். அதே போல முன்னணி வலைப்பதிவாளர்கள் சிலரும் கூட, ஒளிப்படத்தில் கையை வைத்து மாட்டிக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் கூட, பிரபல பேஷன் மற்றும் சுற்றுலா வலைப்பதிவாளரான அமீலியா லயானா என்பவர், போட்டோஷாப் மூலம் மாற்றப்பட்ட படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டது கண்டுபிடிக்கபட்டு கடும் விமர்சனத்திற்கு இலக்கானார்.

இன்னொரு பக்கம் பார்த்தால், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பரபரப்பாக பேசப்படும் பல படங்கள் உண்மையில் மாற்றம் அல்லது திருத்தம் செய்யப்பட்டவையாக இருப்பதை பலரும் உணர்வதில்லை. இந்த பின்னணியில் தான், பிரிட்டனின் வார்விக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வுக்குழு ஒன்று, பொய் படங்கள் தொடர்பான ஆய்வை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது, 707 பயனாளிகளிடம் இரண்டு வகையான ஒளிப்படங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து மூலப்படங்கள் மற்றும் ஐந்த படங்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டவை. இந்த படங்களில் பொய்யான அம்சங்களை கண்டறிய முடியுமா எனும் கேள்வியோடு, அவற்றை கண்டறியும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் 60 சதவீதம் பேருக்கு மேல் பொய் படங்களை கண்டறிந்தாலும், அதில் என்ன பிரச்சனை என கண்டறிய முடியாமல் திண்டாடியிருக்கின்றனர்.

இன்னொரு சோதனையில், பொய்படங்கள் பற்றிய தகவல் தெரிவிக்காமல் இரண்டு வகையான படங்களை பார்த்து வித்தியாசத்தை கண்டறியுமாறு கேட்கப்பட்டனர். இவர்களில் 65 சதவீதம் பேர் படத்தில் வில்லங்கம் இருப்பதை கண்டுபிடித்தாலும், பெரும்பாலானோரால் படத்தில், எந்த இடத்தில் பிரச்சனை இருக்கிறது என கண்டறிய முடியவில்லை.

இந்த ஆய்வு முடிவுகள் தொடர்பான விரிவான கட்டுரை அறிவியல் சஞ்சிகை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ஒளிப்படம் உண்மையானதா? பொய்யானதா? என்பதை கண்டறியும் திறன் மக்களிடம் குறைவாக இருப்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

முனைவர் பட்ட ஆய்வாளர் சோபியா நைட்டிங்கேல் மற்றும் டெரிக் வாட்சன் உள்ளிட்டோர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். ஒளிப்படங்களை ஆதாரமாக கொள்வதை இது சிக்கலாக்கும் என்று சோபியா கூறியிருக்கிறார். ஒளிப்படங்கள் நமது நினைவாற்றல் மீது மிகப்பெரிய தாக்கம் செலுத்துவதால், உண்மையான படத்தையும், பொய்யான படத்தையும் கண்டறிய முடியாதது நாம் நம்புவது மற்றும் நினைவில் கொள்வது மீது தாக்கம் செலுத்தலாம் என்கிறார் வாட்சன்.

இந்த ஆய்வு தொடர்பாக இணையதளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது; http://bit.ly/2uEbjow  இந்த தளத்தில் நீங்களும் கூட பொய பட கண்டறிதல் சோதனைக்கு உங்களை உட்படுத்திக்கொள்ளலாம். உங்கள் திறமையை சோதித்துக்கொள்வதோடு, இணைய ஆய்வுக்கு பங்களிப்பு செலுத்தியது போலவும் இருக்கும்.

 

 

தளம் புதிது; செய்திகளுக்கான சமூக வலைப்பின்னல்

செய்திப்பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில், செய்திகளை தெரிந்து கொள்வதற்காக புதிய இணையதளம் ஒன்று அறிமுகம் ஆகியிருக்கிறது. காங்ஸ்டர்ஸ் எனும் அந்த தளம், செய்திகளை கண்டறிவதற்கானது மட்டும் அல்ல, பகிர்ந்து கொள்வதற்கானதாகவும் இருக்கிறது. அதாவது செய்திகளுக்கான வலைப்பின்னல் தளம் போல இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் சக உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ளும் செய்திகளை பார்ப்பதோடு, அவற்றை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம். இதில் முன்னிலை பெறும் செய்திகளை கிளிக் செய்தால் அவற்றின் சுருக்கத்தை வாசிக்கலாம். மேலும் கிளிக் செய்தால் விரிவான செய்தியை வாசிக்கலாம்.

பலவித தலைப்புகளில் செய்திகள் வெளியாகின்றன. தினமும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட செய்திகளை பரிசீலித்து செய்திகளை தேர்வு செய்து வழங்குவதாக இந்த தளத்தின் அறிமுகப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக செய்தி கண்டறிதல் சேவையாக அறியப்பட்ட டிக் உள்ளிட்ட தளங்கள் வழங்கிய சேவையை போன்றதே என்றாலும், செய்திகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளத்தை பயன்படுத்திப்பார்க்கலாம்.

செய்திகளை தேடிப்பார்க்கும் மற்றும் சமர்பிக்கும் வசதி இருக்கிறது.

இணைய முகவரி: http://gongsters.com/

 

 

 

செயலி புதிது: வரலாற்றில் நடந்தது என்ன?

வரலாற்று நிகழ்வுகளை உள்ளங்கையில் கொண்டு வரும் வகையில் வாட் ஹாப்பண்ட் டுடே இன் ஹிஸ்டிரி, செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஐபோனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில், ஒவ்வொரு மாதத்திற்கான முக்கிய வரலாற்று நிகழ்வுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவற்றில் எந்த நிகழ்வு தொடர்பான கூடுதல் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். நிகழ்வுகளின் ஒளிப்படங்களையும் காணலாம். எல்லா நிகழ்வுகளுமே கவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முப்பரிமான டச் முன்னோட்ட வசதியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வுகளை அறிவிக்கையாக பெறும் வசதியும் இருக்கிறது. இந்த வசதி மூலம் முக்கிய நிகழ்வுகளை தவறவிடாமல் இருக்கலாம். வரலாற்று நிகழ்வுகளில் ஆர்வம் உள்ளவர்களை கவரக்கூடிய செயலி இது. ஆண்ட்ராய்டு வடிவம் எப்போது வெளியாகும் என்றுத்தெரியவில்லை.

மேலும் தகவல்களுக்கு: http://apple.co/2gX5U6R

 

 

 

சைபர்சிம்மன்

 

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.