அம்மா டிவிட்டரில் என்னை பின் தொடர்ந்த போது!

டிவிட்டரில் நண்பர்களை ஆர்வத்தோடு பின் தொடர்கிறோம்.பின்தொடர்பவர்களை நண்பர்களாக்கி கொள்கிறோம்.ஆனால் பெற்றோர்களையோ அல்லது சகோதரர்களையோ டிவிட்டரில் பிந்தொடர நினைத்திருக்கிறோமா?இப்படி அப்பாவையோ அல்லது அம்மாவையோ டிவிட்டரில் பின் தொடர்ந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறோமா?

அப்பாவையோ அம்மாவையோ டிவிட்டரில் பின் தொடர்வது வெறும் புதுமை அல்ல;அது எத்தனை அற்புதமான அனுபவமாக இருக்ககூடும் என்பதை அமெரிக்காவை சேர்ந்த மயா கவுர்னியேரி அழகாக விவரித்திருக்கிறார்.

டிவிட்டர் அம்மாவை மேலும் சரியாக புரிய வைத்ததாக மீண்டும் அம்மாவோடு ஒன்ற வைத்ததாக அவர் குறிப்பிடுகிறார்.இதனை விவரித்து அவர் எழுதியுள்ள கட்டுரையை நவீன இலக்கியம் என்றே சொல்ல வேண்டும்.

டிவிட்டர் திறக்ககூடிய புதிய வாயில்கள் பற்றி உணர்த்தும் அழகான கட்டுரை அது.டிவிட்டர் எத்தகைய தரிசனத்தை தரக்கூடும் என்றும் உணர்த்தவும் செய்யும் கட்டுரை.

டிவிட்டரால் உண்டான சின்ன சங்கடத்தோடு தான் கட்டுரையை அவர் ஆரம்பிக்கிறார்.

டிவிட்டரில் அம்மா அவரை பின் தொடர்த்துவங்கியதுமே மற்றவர்கள் பின் தொடர்வதற்கும் அம்மா பின்தொடர்வதற்கும் வேறுபாடு இருக்கிறது என அவர் புரிந்து கொண்டார்.

விஷய்ம் இது தான்,டிவிட்டரில் தோழி ஒருவரது சகோதரார் அழகாக இருப்பதாக மயா குறும்பதிவு செய்திருந்தார்.அதை படித்து விட்டு அவரது அம்மா,ரொம்ப அழகோ எனப்து போல கேட்டிரிந்தார்.மகள் வேறொரு ஆண் மகனின் அழகை வர்ணிப்பதை நாசுக்காக அவர் கேள்விக்குள்ளாகி இருந்தார்.

அம்மாவை பின்னூட்டத்தை படித்து நாக்கை கடித்து கொண்ட மயா,அந்த குறும்ப்திவை டெலிட் செய்து விட்டார். அதன் பிறகு தனது பகிர்வுகளில் கவனமாக இருக்கத்துவங்கினார்.

ஒரு நாள் அம்மாவின் குறும்பதிவுகளை கூர்ந்து கவனித்து கொண்டிருந்த போது தாய் தன்னை பற்றிய அறிமுக குறிப்பில் ஓவியர் என்ற வார்த்தையை சேர்த்திருப்பதை பார்த்து ஆச்சர்யமடைந்தார்.தாய் தன்னை ஓவியர் என்று அழைத்து கொள்ள விரும்புவதை புரிந்து கொண்ட மயா அம்மாவின் இந்த விருப்பத்தை தெரிந்து கொள்ளாமல் போனோமே என்று வருத்தப்பட்டார்.

அமாவை பற்றி இன்னும் என்னவெல்லாம் தனக்கு தெரியவில்லை என்று அறிந்து கொள்வதற்காக தொடர்ந்து ஆர்வத்தோடு அம்மா குறும்பதிவுகளை படித்து வந்தார்.

ஒரு குறும்பதிவில் அம்மா புகைப்படக்கலையில் ஆர்வம் வந்திருப்பது பற்றி குறிப்பிடிருந்தார்.

மற்றொரு பதிவில் சவான்னா என்னும் நகரை விரும்புவதாக குறிப்பிட்டதை அப்டித்து வியந்து போனார்.எப்போதுமே நியூயார்க் நகரை புகந்து பேசும் அம்மா சவான்னாவின் தன்மையை விரும்பத்துவங்கியிருந்தது புதிய செய்தியாக இருந்தது.

அப்போது தான் அம்மாவுக்கும் தனக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டிருப்பதை அவர் புரிந்து கொண்டார். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேள்விகளை கேட்டு பல காலமாகிவிட்டது என்பதையும் உணர்ந்து கொண்டார்.

அருகருகே இருந்தும் பாசத்தோடு பல விஷயங்களை பேசியும் கூட அம்மாவை பற்றி தெரிந்து கொள்ளாத விஷயங்கள் இருக்கின்றன என்பது அவரை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அந்த வருத்ததோடு அம்மாவின் புகைப்பட கலை ஆர்வம் பற்றி விசாரித்து இமெயில் ஒன்றை அனுப்பினார்.பொதுவாக அவரது அம்மா இமெயில்களுக்கு பதில் அளிக்க சில நாட்கள் எடுத்து கொள்வது வழக்கம்.ஆனால் இந்த மெயில்லுக்கு மட்டும் அன்றைய தினமே பதில் அனுப்பியிருந்தார்.அதில் புகைப்படக்கலையில் தனக்குள்ள ஆர்வத்தை வரித்திருந்ததோடு ஏற்கனவே தான் எடுத்திருந்த புகைப்படங்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் புகைப்படக்கலை எப்படி தன்னையே மறு அறிமுகம் செய்து கொள்ள உதவுகிறது என்றும் எழுதியிருந்தார்.

இவற்றை எல்லாம் நாம் எப்படி கவனிக்க தவறினோம் என்ற எண்ணம் மயாவுக்கு மீண்டும் உண்டானது.

அப்போது தான் டிவிட்டர் அம்மாவிடம் தன்னை மீண்டும் நெருக்கமாக வைத்திருக்கிறது என்பதை உணர்ந்தார்.

டிவிட்டரில் நண்பர்களை ஆர்வத்தோடு பின் தொடர்கிறோம்.பின்தொடர்பவர்களை நண்பர்களாக்கி கொள்கிறோம்.ஆனால் பெற்றோர்களையோ அல்லது சகோதரர்களையோ டிவிட்டரில் பிந்தொடர நினைத்திருக்கிறோமா?இப்படி அப்பாவையோ அல்லது அம்மாவையோ டிவிட்டரில் பின் தொடர்ந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறோமா?

அப்பாவையோ அம்மாவையோ டிவிட்டரில் பின் தொடர்வது வெறும் புதுமை அல்ல;அது எத்தனை அற்புதமான அனுபவமாக இருக்ககூடும் என்பதை அமெரிக்காவை சேர்ந்த மயா கவுர்னியேரி அழகாக விவரித்திருக்கிறார்.

டிவிட்டர் அம்மாவை மேலும் சரியாக புரிய வைத்ததாக மீண்டும் அம்மாவோடு ஒன்ற வைத்ததாக அவர் குறிப்பிடுகிறார்.இதனை விவரித்து அவர் எழுதியுள்ள கட்டுரையை நவீன இலக்கியம் என்றே சொல்ல வேண்டும்.

டிவிட்டர் திறக்ககூடிய புதிய வாயில்கள் பற்றி உணர்த்தும் அழகான கட்டுரை அது.டிவிட்டர் எத்தகைய தரிசனத்தை தரக்கூடும் என்றும் உணர்த்தவும் செய்யும் கட்டுரை.

டிவிட்டரால் உண்டான சின்ன சங்கடத்தோடு தான் கட்டுரையை அவர் ஆரம்பிக்கிறார்.

டிவிட்டரில் அம்மா அவரை பின் தொடர்த்துவங்கியதுமே மற்றவர்கள் பின் தொடர்வதற்கும் அம்மா பின்தொடர்வதற்கும் வேறுபாடு இருக்கிறது என அவர் புரிந்து கொண்டார்.

விஷய்ம் இது தான்,டிவிட்டரில் தோழி ஒருவரது சகோதரார் அழகாக இருப்பதாக மயா குறும்பதிவு செய்திருந்தார்.அதை படித்து விட்டு அவரது அம்மா,ரொம்ப அழகோ எனப்து போல கேட்டிரிந்தார்.மகள் வேறொரு ஆண் மகனின் அழகை வர்ணிப்பதை நாசுக்காக அவர் கேள்விக்குள்ளாகி இருந்தார்.

அம்மாவை பின்னூட்டத்தை படித்து நாக்கை கடித்து கொண்ட மயா,அந்த குறும்ப்திவை டெலிட் செய்து விட்டார். அதன் பிறகு தனது பகிர்வுகளில் கவனமாக இருக்கத்துவங்கினார்.

ஒரு நாள் அம்மாவின் குறும்பதிவுகளை கூர்ந்து கவனித்து கொண்டிருந்த போது தாய் தன்னை பற்றிய அறிமுக குறிப்பில் ஓவியர் என்ற வார்த்தையை சேர்த்திருப்பதை பார்த்து ஆச்சர்யமடைந்தார்.தாய் தன்னை ஓவியர் என்று அழைத்து கொள்ள விரும்புவதை புரிந்து கொண்ட மயா அம்மாவின் இந்த விருப்பத்தை தெரிந்து கொள்ளாமல் போனோமே என்று வருத்தப்பட்டார்.

அமாவை பற்றி இன்னும் என்னவெல்லாம் தனக்கு தெரியவில்லை என்று அறிந்து கொள்வதற்காக தொடர்ந்து ஆர்வத்தோடு அம்மா குறும்பதிவுகளை படித்து வந்தார்.

ஒரு குறும்பதிவில் அம்மா புகைப்படக்கலையில் ஆர்வம் வந்திருப்பது பற்றி குறிப்பிடிருந்தார்.

மற்றொரு பதிவில் சவான்னா என்னும் நகரை விரும்புவதாக குறிப்பிட்டதை அப்டித்து வியந்து போனார்.எப்போதுமே நியூயார்க் நகரை புகந்து பேசும் அம்மா சவான்னாவின் தன்மையை விரும்பத்துவங்கியிருந்தது புதிய செய்தியாக இருந்தது.

அப்போது தான் அம்மாவுக்கும் தனக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டிருப்பதை அவர் புரிந்து கொண்டார். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேள்விகளை கேட்டு பல காலமாகிவிட்டது என்பதையும் உணர்ந்து கொண்டார்.

அருகருகே இருந்தும் பாசத்தோடு பல விஷயங்களை பேசியும் கூட அம்மாவை பற்றி தெரிந்து கொள்ளாத விஷயங்கள் இருக்கின்றன என்பது அவரை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அந்த வருத்ததோடு அம்மாவின் புகைப்பட கலை ஆர்வம் பற்றி விசாரித்து இமெயில் ஒன்றை அனுப்பினார்.பொதுவாக அவரது அம்மா இமெயில்களுக்கு பதில் அளிக்க சில நாட்கள் எடுத்து கொள்வது வழக்கம்.ஆனால் இந்த மெயில்லுக்கு மட்டும் அன்றைய தினமே பதில் அனுப்பியிருந்தார்.அதில் புகைப்படக்கலையில் தனக்குள்ள ஆர்வத்தை வரித்திருந்ததோடு ஏற்கனவே தான் எடுத்திருந்த புகைப்படங்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் புகைப்படக்கலை எப்படி தன்னையே மறு அறிமுகம் செய்து கொள்ள உதவுகிறது என்றும் எழுதியிருந்தார்.

இவற்றை எல்லாம் நாம் எப்படி கவனிக்க தவறினோம் என்ற எண்ணம் மயாவுக்கு மீண்டும் உண்டானது.

அப்போது தான் டிவிட்டர் அம்மாவிடம் தன்னை மீண்டும் நெருக்கமாக வைத்திருக்கிறது என்பதை உணர்ந்தார்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “அம்மா டிவிட்டரில் என்னை பின் தொடர்ந்த போது!

  1. Pingback: டிவிட்டரில் அப்பா என்னை பின் தொடர்ந்த போது! « Cybersimman's Blog

Leave a Comment

Your email address will not be published.