புயலுக்கு பின் ஒரு இணையதளம்.

தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி அளிப்பதற்காகவோ நேசக்கரம் நீட்டுவதற்காக ஒரு இணையதளம் கூட உருவாக்கப்படவில்லை. ஆனால் அமெரிக்காவை உலுக்கிய சாண்டி சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான இணைய முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இதற்கான சமீபத்திய உதாரணம் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுமுறை கால பரிசளிக்க உதவுவதற்காக துவக்கப்பட்டுள்ள சீக்ரெட் சாண்டி இணையதளம்.

ஒட்டுமொத்த அமெரிக்காவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தயாராகி கொண்டிருக்கிருக்கும் நிலையில் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க கை கொடுக்கும் வகையில் இந்த தளம் துவக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் காலம் மகிழ்ச்சிக்கும் பரிசளிப்பதற்குமான காலம்.எல்லோரும் கிறிஸ்துமசுக்காக குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசளித்து மகிழ்வார்கள்.ஆனால் சாண்டி சூறாவளி உலுக்கி போட்ட பகுதிகளில் இருப்பவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவே போராடி கொண்டிருக்கும் போது கிறிஸ்துமஸ் விழாவை கோலகலமாக கொண்டாடுவது எப்படி?

அதனால் சுறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கைதூக்கி விடுவதற்காக என்று சீக்ரெட்சாண்டி தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

தாரள மனம் கொண்டவர்கள் இந்த தளத்தின் மூலம் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்ற பரிசுகளை வழங்கி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு உதவலாம்.

அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது சான்டா கிளாஸ் வடிவில் பரிசளிப்பது போல இந்த தளத்தின் வாயிலாக ரகசிய சான்டாவாக மாறி முன் பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு பரிசளித்து மகிழலாம்.

அதே போல சூறாவளியால் பாதிக்கப்பட்டு பிறர் உதவியை எதிர்பார்த்திருப்பவர்கள் தங்களுக்கு தேவைப்படும் உதவியையும் இந்த தளம் மூலம் தெரிவிக்கலாம்.இதற்கு என்று உள்ள உதவி கோரும் பகுதியில் தங்களது கோரிக்கையை சமர்பிக்கலாம்.இதே போல உதவ தயாராக இருப்பவர்கள் அதனை தெரிவிப்பதற்கான பகுதியும் இருக்கிறது.

இந்த தளம் இரு தரப்பினருக்கும் இடையே பாலமாக இருந்து உதவி தேவைபடுபவருடன் உதவ தயராக இருப்பவர்களை இணைத்து வைக்கிறது.

இந்த பண்டிகை காலத்தை சாண்டி சுறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து கொண்டாடுங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளத்தை ஜாய் ஹாவுங் என்பவரும் அவரது நண்பருமான கிம்பர்லி பெர்டியும் இணைந்து தளத்தை அமைத்துள்ளனர்.

பண்டிகை காலம் என்பதே பரஸ்பரம் பரிசளித்து மகிழ்வதற்கான வாய்ப்பை உருவாக்கித்தரும் காலம் என்னும் போது அந்த மகிழ்ச்சியோடு மனநிறைவை ஏற்படுத்தி தரும் வகையில் சூறாவளி பாதிப்பால் கிறிஸ்துமசை கொண்டாட முடியாமல் தவிப்பவர்களுக்கு நேசக்கரம் நீட்டி உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த தளம் பாராட்டத்தக்க முயற்சி தானே.

இணையதள முகவரி;http://secretsandy.org/

—————

இதே போலவே சாண்டி சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட தளம் பற்றிய முந்தைய பதிவு…..
சூறாவளிக்கு பின் இணையத்தில் துளிர்த்த மனிதநேயம்.

தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி அளிப்பதற்காகவோ நேசக்கரம் நீட்டுவதற்காக ஒரு இணையதளம் கூட உருவாக்கப்படவில்லை. ஆனால் அமெரிக்காவை உலுக்கிய சாண்டி சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான இணைய முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இதற்கான சமீபத்திய உதாரணம் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுமுறை கால பரிசளிக்க உதவுவதற்காக துவக்கப்பட்டுள்ள சீக்ரெட் சாண்டி இணையதளம்.

ஒட்டுமொத்த அமெரிக்காவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தயாராகி கொண்டிருக்கிருக்கும் நிலையில் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க கை கொடுக்கும் வகையில் இந்த தளம் துவக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் காலம் மகிழ்ச்சிக்கும் பரிசளிப்பதற்குமான காலம்.எல்லோரும் கிறிஸ்துமசுக்காக குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசளித்து மகிழ்வார்கள்.ஆனால் சாண்டி சூறாவளி உலுக்கி போட்ட பகுதிகளில் இருப்பவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவே போராடி கொண்டிருக்கும் போது கிறிஸ்துமஸ் விழாவை கோலகலமாக கொண்டாடுவது எப்படி?

அதனால் சுறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கைதூக்கி விடுவதற்காக என்று சீக்ரெட்சாண்டி தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

தாரள மனம் கொண்டவர்கள் இந்த தளத்தின் மூலம் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்ற பரிசுகளை வழங்கி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு உதவலாம்.

அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது சான்டா கிளாஸ் வடிவில் பரிசளிப்பது போல இந்த தளத்தின் வாயிலாக ரகசிய சான்டாவாக மாறி முன் பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு பரிசளித்து மகிழலாம்.

அதே போல சூறாவளியால் பாதிக்கப்பட்டு பிறர் உதவியை எதிர்பார்த்திருப்பவர்கள் தங்களுக்கு தேவைப்படும் உதவியையும் இந்த தளம் மூலம் தெரிவிக்கலாம்.இதற்கு என்று உள்ள உதவி கோரும் பகுதியில் தங்களது கோரிக்கையை சமர்பிக்கலாம்.இதே போல உதவ தயாராக இருப்பவர்கள் அதனை தெரிவிப்பதற்கான பகுதியும் இருக்கிறது.

இந்த தளம் இரு தரப்பினருக்கும் இடையே பாலமாக இருந்து உதவி தேவைபடுபவருடன் உதவ தயராக இருப்பவர்களை இணைத்து வைக்கிறது.

இந்த பண்டிகை காலத்தை சாண்டி சுறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து கொண்டாடுங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளத்தை ஜாய் ஹாவுங் என்பவரும் அவரது நண்பருமான கிம்பர்லி பெர்டியும் இணைந்து தளத்தை அமைத்துள்ளனர்.

பண்டிகை காலம் என்பதே பரஸ்பரம் பரிசளித்து மகிழ்வதற்கான வாய்ப்பை உருவாக்கித்தரும் காலம் என்னும் போது அந்த மகிழ்ச்சியோடு மனநிறைவை ஏற்படுத்தி தரும் வகையில் சூறாவளி பாதிப்பால் கிறிஸ்துமசை கொண்டாட முடியாமல் தவிப்பவர்களுக்கு நேசக்கரம் நீட்டி உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த தளம் பாராட்டத்தக்க முயற்சி தானே.

இணையதள முகவரி;http://secretsandy.org/

—————

இதே போலவே சாண்டி சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட தளம் பற்றிய முந்தைய பதிவு…..
சூறாவளிக்கு பின் இணையத்தில் துளிர்த்த மனிதநேயம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “புயலுக்கு பின் ஒரு இணையதளம்.

  1. அன்பின் சிம்மன் – அரிய செயல் – மனிதம் இன்று,ம் நிலைத்திருக்கிறது. – நற்செயல் புரியும் நல்லவர்களுக்கு நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply

Leave a Comment

Your email address will not be published.