செயற்கைகோள் படங்களால் வியக்க வைக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம்

விண்ணில் இருந்து மண்ணுலகை பார்த்தால் எப்படி இருக்கும்? இப்படி பார்க்கும் காட்சிகள் எப்படி வியக்க வைக்கப்பதாக இருக்கும் என்பதை உணர விண்வெளியில் இருந்து பூமியை பார்க்க வேண்டும்.விண்வெளி வீரர்களுக்கு மட்டும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்கும்.

பூமியில் பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பும் அதன் மீது பிரம்மாண்டமாக காட்சி தரும் கட்டிடங்களும் விண்வெளியில் இருந்து பார்க்கும் போது சின்னஞ்சிறியதாக தோற்றம் தரும். இந்த உணர்வு உலகம் பற்றிய நமது பார்வையை மாற்றக்கூடியதாக இருக்கும். இந்த விளைவை ஓவர்வியூ எஃபெக்ட் என்கின்றனர்.

விண்வெளி வீரர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும் இந்த உணர்வை எல்லோருக்கும் சாத்தியமாக்கி வருகிறார் பெஞ்சமின் கிராண்ட். இவர், டெய்லி ஓவர்வீயூ எனும் தனது இனஸ்டாகிராம் புகைப்பட சேவை பக்கம் மூலமாக விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளை புகைபப்டங்களாக பகிர்ந்து கொண்டு வருகிறார். அநேகமாக தினம் ஒரு பிரம்மாண்ட பார்வை படத்தை பகிர்ந்து வருகிறார்.
1i
இந்த புகைப்படங்கள் உண்மையில் வியக்க வைக்க கூடியதாக இருக்கிறது. ஒரு படத்தில் கலிப்போர்னியா சரக்கு விமான நிலையத்தில் வரிசையாக விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சியை பார்தால் , சிறுவர்கள் அடுக்கி வைத்திருக்கும் பொம்மை விமானங்கள் போல இருக்கின்றன. ஆனால் எல்லாமே பெரிய விமானங்கள். பயன்பாட்டில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டவை.

இன்னொரு படத்தில் பார்த்தால் வர்ஜினியாவில் உள்ள நிலக்கரி ஆலையில் வரிசையாக டிரக்குகள் ஊர்ந்து செல்வது ஓவிய வரிசை போல இருக்கிறது.

சிங்கப்பூர் துறைமுகத்தின் மேல் பகுதியில் எடுக்கப்பட்ட படத்தில் கப்பல்கள் வல வண்ணங்களில் மீன்கள் போல நீந்திக்கொண்டிருக்கின்றன. உலகிலேயே மிகவும் ப்ரபரப்பாக இருக்கும் இரண்டாவது துறைமுகம் எனும் தகவலை மனதில் கொண்டு பார்க்கும் போது கப்பல்கள் பாய்ந்து முன்னேறும் உணர்வை பெறலாம்.
துபாயில் மூன்று சாலைகளை இணைக்கும் மிராகல் தோட்டத்தை மேலிருந்து பார்க்கும் போது அந்த காட்சி மலைக்க வைக்கிறது. கொஞ்சம் குளோசப்பில் பார்த்தால் சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களை சிறியதாக பார்க்கலாம்.

இப்படி ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் பிரம்மாண்டத்தை உள்ளடக்கியிருக்கும் விதத்தில் வியக்க வைக்கின்றன.
கிட்டத்தட்ட பூமி பற்றிய புதிய பார்வையை தருவதாகவும் இருக்கின்றன.
1i2
கிராண்டும் இந்த நோக்கத்துடன் இந்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். கூகுள் எர்த் செயற்கைகோள் சேவையில் இருந்து புகைப்படங்களை அவர் தேடி எடுத்து வெளியிடுகிறார். ஒவ்வொரு படத்தையும் தேட ஒரு மணி நேரம் வரை ஆகலாம் என்கிறார்.

நம்முடைய பூமி நிலப்பரப்பு பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி கொண்டிருக்கும் முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம் என்பதை இந்த படங்கள் மூலம் உணர்த்த விரும்புவதாக கிராண்ட் சொல்கிறார்.
அதற்கேற்ப புகைப்படங்களை தேடுவதற்கும் சுவார்ஸ்யமான வழிகளை வைத்திருக்கிறார். நடப்பு நிகழ்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தொடர்பான புகைப்படங்களை செயற்கைகோள் படங்களில் இருந்து தேடி எடுத்து வெளியிடுகிறார்.

இந்த படங்கள் சுற்றுப்புறச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வல்லவை என்கிறார் கிராண்ட்.

பெஞ்சமின் கிராண்ட் இன்ஸ்டாகிராம் பக்கம்: https://instagram.com/benjaminrgrant/

——

விண்ணில் இருந்து மண்ணுலகை பார்த்தால் எப்படி இருக்கும்? இப்படி பார்க்கும் காட்சிகள் எப்படி வியக்க வைக்கப்பதாக இருக்கும் என்பதை உணர விண்வெளியில் இருந்து பூமியை பார்க்க வேண்டும்.விண்வெளி வீரர்களுக்கு மட்டும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்கும்.

பூமியில் பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பும் அதன் மீது பிரம்மாண்டமாக காட்சி தரும் கட்டிடங்களும் விண்வெளியில் இருந்து பார்க்கும் போது சின்னஞ்சிறியதாக தோற்றம் தரும். இந்த உணர்வு உலகம் பற்றிய நமது பார்வையை மாற்றக்கூடியதாக இருக்கும். இந்த விளைவை ஓவர்வியூ எஃபெக்ட் என்கின்றனர்.

விண்வெளி வீரர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும் இந்த உணர்வை எல்லோருக்கும் சாத்தியமாக்கி வருகிறார் பெஞ்சமின் கிராண்ட். இவர், டெய்லி ஓவர்வீயூ எனும் தனது இனஸ்டாகிராம் புகைப்பட சேவை பக்கம் மூலமாக விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளை புகைபப்டங்களாக பகிர்ந்து கொண்டு வருகிறார். அநேகமாக தினம் ஒரு பிரம்மாண்ட பார்வை படத்தை பகிர்ந்து வருகிறார்.
1i
இந்த புகைப்படங்கள் உண்மையில் வியக்க வைக்க கூடியதாக இருக்கிறது. ஒரு படத்தில் கலிப்போர்னியா சரக்கு விமான நிலையத்தில் வரிசையாக விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சியை பார்தால் , சிறுவர்கள் அடுக்கி வைத்திருக்கும் பொம்மை விமானங்கள் போல இருக்கின்றன. ஆனால் எல்லாமே பெரிய விமானங்கள். பயன்பாட்டில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டவை.

இன்னொரு படத்தில் பார்த்தால் வர்ஜினியாவில் உள்ள நிலக்கரி ஆலையில் வரிசையாக டிரக்குகள் ஊர்ந்து செல்வது ஓவிய வரிசை போல இருக்கிறது.

சிங்கப்பூர் துறைமுகத்தின் மேல் பகுதியில் எடுக்கப்பட்ட படத்தில் கப்பல்கள் வல வண்ணங்களில் மீன்கள் போல நீந்திக்கொண்டிருக்கின்றன. உலகிலேயே மிகவும் ப்ரபரப்பாக இருக்கும் இரண்டாவது துறைமுகம் எனும் தகவலை மனதில் கொண்டு பார்க்கும் போது கப்பல்கள் பாய்ந்து முன்னேறும் உணர்வை பெறலாம்.
துபாயில் மூன்று சாலைகளை இணைக்கும் மிராகல் தோட்டத்தை மேலிருந்து பார்க்கும் போது அந்த காட்சி மலைக்க வைக்கிறது. கொஞ்சம் குளோசப்பில் பார்த்தால் சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களை சிறியதாக பார்க்கலாம்.

இப்படி ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் பிரம்மாண்டத்தை உள்ளடக்கியிருக்கும் விதத்தில் வியக்க வைக்கின்றன.
கிட்டத்தட்ட பூமி பற்றிய புதிய பார்வையை தருவதாகவும் இருக்கின்றன.
1i2
கிராண்டும் இந்த நோக்கத்துடன் இந்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். கூகுள் எர்த் செயற்கைகோள் சேவையில் இருந்து புகைப்படங்களை அவர் தேடி எடுத்து வெளியிடுகிறார். ஒவ்வொரு படத்தையும் தேட ஒரு மணி நேரம் வரை ஆகலாம் என்கிறார்.

நம்முடைய பூமி நிலப்பரப்பு பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி கொண்டிருக்கும் முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம் என்பதை இந்த படங்கள் மூலம் உணர்த்த விரும்புவதாக கிராண்ட் சொல்கிறார்.
அதற்கேற்ப புகைப்படங்களை தேடுவதற்கும் சுவார்ஸ்யமான வழிகளை வைத்திருக்கிறார். நடப்பு நிகழ்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தொடர்பான புகைப்படங்களை செயற்கைகோள் படங்களில் இருந்து தேடி எடுத்து வெளியிடுகிறார்.

இந்த படங்கள் சுற்றுப்புறச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வல்லவை என்கிறார் கிராண்ட்.

பெஞ்சமின் கிராண்ட் இன்ஸ்டாகிராம் பக்கம்: https://instagram.com/benjaminrgrant/

——

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.