பேஸ்புக் அடிமைகளா நாம்?


உழைப்பு யாருது, செல்வம் யாருது …
என்பது ஆந்திராவின் மக்கள் கவிஞரான செரபண்ட ராஜுவின் கவிதை வரி.
இந்த ஆவேச வரிகள் உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுத்து எழுதப்பட்டவை.
பேஸ்புக் தொடர்பாக அமெரிக்கரான மைக்கேல் ரோசன்பிளம்’ என்பவர் எழுதியுள்ள இணைய பத்தியை படிக்கும் போது இந்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
உழைப்பாளிகளுக்கான செரபண்ட ராஜுவின் தார்மீக கோபம் போல, ரோசன்பிளம் இணையவாசிகளின் சார்பில், உள்ளடக்கம் யாருடையது ,செல்வம் யாருடையது ? என கேட்டு இந்த பத்தியை எழுதியிருக்கிறார்.
ஹபிங்டன் போஸ்ட் இணைய இதழில் பேஸ்புக்கை தொழிற்சங்கமயமாக்குவோம் (Let’s Unionize Facebook) எனும் தலைப்பில் எழுதியுள்ள இந்த பத்தியில், அவர் நாமெல்லாம் பேஸ்புக் அடிமைகளா? என்று கேள்வி எழுப்புகிறார். பேஸ்புக்கிற்கு மட்டும் அல்ல, டிவிட்டர் அடிமைகள், இன்ஸ்டாகிராம் அடிமைகள் என்றும் குறிப்பிடுகிறார். இந்த இணைய சேவைகளுக்காக நாம் ஓயாமல் உள்ளடக்கத்தை உருவாக்கி கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்றும் அவர் குறைப்பட்டுக்கொள்கிறார்.
இந்த கருத்துக்கு அவர் வந்து நிற்கும் விதம் தான் கவனத்திற்கு உரியது. வரலாற்றின் இடைப்பட்ட காலமான 15 ம் நூற்றாண்டில் நிலமே பெரும் செல்வமாக கருதப்பட்டதாகவும், பெரும் நிலப்பரப்பை கொண்ட பிரபுக்களிடம் பலரும் அடிமைகளாக வேலை பார்த்தனர் என்றும் குறிப்பிடுகிறார்.

சைபர்வெளி அடிமைகள்
காலம் மாறியிருக்கிறதே தவிர வரலாறு மாறவில்லை , இன்று நிலம் என்பது சைபர்வெளியாகி இருக்கிறது, அதில் நாமெல்லாம் அடிமைகளாக இருக்கிறோம், அமேசானின் ஜெப் பெசோசும், பேஸ்புக்கின் ஜக்கர்பெர்கும் இணைய பிரபுக்களாக நமது உள்ளடக்கத்தை கொண்டு செல்வம் சேர்த்துக்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
பேஸ்புக்கின் 100 சதவீத உள்ளடக்கம் நம்முடையது அல்லவா என கேட்கும், இதை இலவசமாக செய்து கொண்டிருக்கும் முட்டாள்கள் அல்லவா நாம் என்றும் கேட்கிறார். இதை அவர் சொல்லும் விதம் இன்னும் துடிப்பாக இருக்கிறது. தினமும் நாம் எந்த ஊதியமும் பெறாமல் , ஜக்கர்பர்கின் இணைய நிலத்தில் குடியிருக்கும் உரிமைக்காக அவருக்காக உள்ளடக்கத்தை உருவாக்கி கொண்டிருக்கிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.ஜக்கர்பர்கின் 33 பில்லியன் டாலர் செல்வமும் நாம் சேர்த்து கொடுத்தது என்கிறார்.
இதன் பிறகு அவர் சொல்லும் விஷயம் என்ன தெரியும? 20 ம் நூற்றாண்டில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் தங்களிடம் உழைப்பு எனும் சக்தி இருப்பதை உணர்ந்து கொண்டு அதன் ஆற்றலை உணர்த்த தொழிற்சங்கம் அமைத்துக்கொண்டது போல, பேஸ்புக் பயனாளிகள் தொழிற்சங்கம் அமைக்கலாகாதா? என்றும் ரோசன்பிளம்’ கேள்வி எழுப்புகிறார்.

f2பேஸ்புக்கிற்காக உழைப்பு!

நிச்சயம் புதுவிதமான சிந்தனை தான். அதற்காக பேஸ்புக்கிற்கு எதிராக நாம் கொடி பிடித்து போராட வேண்டும் என்று அர்த்தமில்லை. ஆனால் நிச்சயம் நமது பேஸ்புக பழக்கம் பற்றி யோசித்தாக வேண்டும். பேஸ்புக்கை இலவச சேவையாக கருதி மகிழ்ச்சியுடன் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால் நமது உள்ளடக்கத்தை வைத்து பேஸ்புக் விளம்பர வருவாயை அள்ளிக்கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடுகிறோம். நம்மை அறியாமல் நாம் பேஸ்புக் போன்ற தளங்களுக்காக அடிமைகள் போல உள்ளடக்கத்தை உருவாக்கி கொண்டிருக்கிறோம்.
இந்த கருத்து உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். சமூக வலைப்பின்னலாக அது ஏற்படுத்தி தரும் பலன்களை வைத்து நீங்கள் வாதிடலாம். உண்மை தான், பேஸ்புக் இணைய யுகத்தில் நட்புக்கும் ,தகவல் பரிமாற்றத்திற்கும் இன்னும் பல பயன்களுக்கும் வித்திட்டிருக்கிறது. மறுப்பதற்கில்லை. பல நேரங்களில் பேஸ்புக் போன்ற சேவைகள் சமூக ஊடகங்களாக செயல்படுகின்றன. எகிப்திலும் வளைகுடா நாடுகளிலும் மலர்ந்த சமூக புரட்சியில் பேஸ்புக்கிற்கும் அதன் சமூக சகாக்களுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. சமூக ஊடகங்களில் பயன்பாட்டிற்கு இன்னும் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.

பேஸ்புக் பயன்பாடு
பிரச்சனை பேஸ்புக்கை நாம் எப்படி பயன்படுத்த பழகியிருக்கிறோம் என்பது தான். சமூக வலைப்பின்னலாக பேஸ்புக்கின் ஆதார பலம் நண்பர்கள்,நண்பர்களின் நண்பர்கள் ,அவர்களின் நண்பர்கள் என நட்பு வளையத்தை விரியச்செய்வது தான். இந்த நட்பு வளையத்தில் எதை பகிர்ந்து கொள்கிறோம் என்பதும் , எதற்காக பகிர்ந்து கொள்கிறோம் என்பது முக்கியமானது இல்லையா?
எல்லாவற்றையும் நிலைத்தகவலாக பகிர்ந்து கொள்வது இயல்பாக இருக்கிறது. வீட்டு விஷேசத்தில் எடுத்த புகைப்படங்களையும், சுற்றுலா பயணத்தில் எடுத்த புகைப்படங்களையும் எந்த யோசனையும் இல்லாமல் பேஸ்புக்கில் பகிர்கிறோம். அதனால் என்ன வந்துவிடப்போகிறது?
ஆனால், உங்கள் தனிப்பட்ட பயணம் பற்றிய புகைப்படம் , நண்பர்களின் நண்பர்களுக்கு எந்த விதத்தில் அவசியமானது யோசித்துப்பாருங்கள்? உங்கள் மகனுடனோ , மகளுடனோ இருக்கும் புகைப்படம் நிலைத்தகவலாக வெளியிடுவது எதற்காக? அவற்றுக்கு காரணம் இல்லாமல் கிடைக்கும் லைக்குகளை விட்டுத்தள்ளுங்கள்.
புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது இயல்பானது தான். வீட்டிற்கு வரும் நண்பர்களிடமும் உறவினர்களிடமு புகைப்பட ஆல்பத்தை காண்பித்து மகிழ்வது வழக்கமானது தான். ஆனால் நன்றாக் யோசித்துப்பாருங்கள், எல்லோரிடமும் நீங்கள் இவ்வாறு செய்வதில்லை. அதற்கு ஒரு பரஸ்பர நெருக்கம் தேவை. வரவேற்பறையில் பேசிக்கொண்டிருக்கும் எல்லா நண்பர்களுக்கும் நீங்கள் புகைப்பட ஆல்பத்தை காட்ட விரும்ப மாட்டீர்கள். அதற்கான நெருக்கமும் இணக்கமும் இல்லாத நிலையில் அந்த நண்பரும் கூட அதை விரும்பமாட்டார். இதெல்லாம் எழுதப்படாத சமூக விதிகள். இயல்பாக எல்லோரும் அனுசரித்து நடப்பவை.
f3
தனியுரிமை கவலை
ஆனால் பேஸ்புக்கில் சொந்த ஊர் பயண புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது எந்தவகையான வெளிப்பாடு? ஊர் மாறியிருக்கிறது, விவசாயம் மங்கிவிட்டது போன்ற பொதுவான எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம். கிராமத்து மண்வாசத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் தனிப்பட்ட குடும்ப காட்சிகளை சித்தரிக்கும் புகைப்படங்களை பகிர்வது எதனால்? உங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களும் குடும்பத்தின் புகைப்படங்களும் தேவையில்லாமல் இணையத்தில் எல்லா இடங்களிலும் இறைந்து கிடப்பது நல்லதல்ல.
வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்கள் ,விண்ணப்பித்தவர்கள் பற்றி தகவல்கள் சேகரிக்க சமூக வலைப்பின்னல் பக்கங்களை அலசிக்கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத்தெரியுமா? விண்ணப்பத்தில் குறிப்பிடும் தகவல்களை எல்லாம் விட ஒருவரைப்பற்றி சித்திரத்தை அவரது சமூக வலைப்பின்னல் பதிவுகள் உணர்த்தி விடுவதாக கருதப்படுவதும் உங்களுக்குத்தெரியுமா? இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பேஸ்புக் பதிவுகளை ஆதாரமாக கொண்டு செயல்படுவதாக கூறப்படுவதை அறிந்திருக்கிறீர்களா?
நேற்று நீங்கள் பேஸ்புக்கில் எந்த சிந்தனையும் இல்லாமல் பகிர்ந்து கொண்ட தகவலும் புகைப்படமும் என்றேனும் ஒரு நாள் உங்களுக்கு வில்லங்கமாக முடியும் வாய்ப்பு இருக்கிறது தெரியுமா?
ஜார்ஜ் ஆர்வெல் சித்தரித்த கண்காணிப்பு யுகம் போல நாளை யாரேனும் , பேஸ்புக்கில் நீங்கள் விரோதமான கருத்தை சொல்லியிருந்தீர்களே என்று கேட்க்க்கூடிய நிலை வரலாம். இது கற்பனை தான். ஆனால் நிகழாது என்று சொல்வதற்கில்லை.

என்ன செய்யலாம் ?

அதற்காக பேஸ்புக் பயன்பாடே தவறு என்று பொருள் அல்ல. அது உங்கள் விருப்பம்; உரிமையும் கூட. பேஸ்புக்கை பயன்படுத்துங்கள், ஆனால் எதற்காக பயன்படுத்துகிறோம் என யோசிக்கவும் செய்யுங்கள். லைக்குகளுக்கும் ,கமெண்டுக்கும் ஆசைபட்டு நீங்கள் பொதுவில் பகிர விரும்பாத எதையும் இணையத்தில் ஆவணப்படுத்தாதீர்கள். இணையத்தில் வெளியிட்ட எதையும் நீங்கள் திரும்ப பெற முடியாது? உங்கள் பக்கத்தில் டெலிட் செய்தாலும் அதற்கு முன்பாகவே அதன் நகல் இணையத்தில் பல இடங்களில் பதிவாகி இருக்கும்.
எனவே , எதையும் பகிரும் முன் , இது சமூக வெளிக்கு ஏற்றதா என யோசியுங்கள்.
கருத்துக்கள் என்றால் வலைப்பதிவாக எழுத முடியுமா என முயன்றுப்பாருங்கள். புகைப்படங்கள் என்றால் இமெயில் மூலம் தேர்ந்தெடுத்த நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா என யோசியுங்கள்.
மறக்காமல் பேஸ்புக்கின் தனியுரிமை அமைப்பிற்கு (பிரைவசி செட்டிங்) சென்று பாருங்கள். எந்த வகை தகவல்கள் யாருக்கானவை என தீர்மானியுங்கள். தனியுரிமையில் இறுதி அதிகாரம் பேஸ்புக்கிடமே இருக்கிறது என்றாலும் கொடுக்கப்பட்டுள்ள உரிமையையாவது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இது பேஸ்புக்கை சரியாக பயன்படுத்த வைக்கும்.

விக்கி வாழ்க!
வலைப்பதிவு யுகம் முடிந்து பேஸ்புக் யுகம் துவங்கியிருப்பதாக கருதப்படும் நிலையில், பலரும் வலைப்பதிவுக்கு முழுக்கு போட்டு பேஸ்புக் படைப்பாளிகளாகில் வருவதாக சொல்லப்படும் கட்டத்தில் இந்த எதிர்கருத்து ஆச்சர்யத்தை அளிக்கலாம். ஆனால் இணையத்தில் தனியுரிமையின் அவசியத்தையும் அதன் அலட்சியத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் மெல்ல உணர்த்துவங்கியிருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது.
எல்லாவற்றையும் பகிரும் போக்கு பற்றிய கேள்விகளை எழுப்புவது தான் இந்த பதிவுன் நோக்கம்.
இன்னொரு முக்கிய விஷயம் சமூக ஊடக் பயன்பாட்டில் ஒருவர் தனக்கான சரியான வலைப்பின்னலை கண்டுகொள்வதும் முக்கியம். கல்லூரி மாணவர்களுக்கும், பணியிட்த்தில் இருப்பவர்களுக்கும் பேஸ்புக் பயன்பாடு கேளிக்கையை தரலாம். ஆனால் தொழில்முறை நபர்களுக்கான லிங்க்டுஇன் சமூக வலைப்பின்னல் தங்களுக்கு இன்னும் பொருத்தமாக இருக்காதா? என யோசிக்க வேண்டும்.
இவ்வளவு ஏன் விக்கிபீடியா கூட சமூக வலைப்பின்னல் ரகத்தை சேர்ந்தது தான் தெரியுமா? ஒயாமல் நிலைத்தகவல் பதிவு செய்வதற்கு நடுவே விக்கிபீடியாவிலும் நல்ல தகவல்களை பகிர்ந்து கொள்ளாலாமே!

பேஸ்புக் தொடர்பான மைக்கேல் ரோசன்பிளம்’ கட்டுரை: http://www.huffingtonpost.com/michael-rosenblum/lets-unionize-facebook_b_7526822.html?ir=India&adsSiteOverride=in

குறிப்பு; பேஸ்புக் தொடர்பான சிந்தனைகளில் ஓபன் சோர்ஸ் முன்னோடியான ரிச்சர்ட் ஸ்டால்மன் கருத்துக்கள் முக்கியமானவை. பேஸ்புக் பயன்பாட்டிற்கு எதிராக அவர் எழுதிய கட்டுரை எழுப்பும் கேள்விகள் சிந்தனைக்குறியவை; https://stallman.org/facebook.html

——–

நன்றி; தினமணி.காமில் நெட்டும் நடப்பும் பகுதியில் எழுதியது


உழைப்பு யாருது, செல்வம் யாருது …
என்பது ஆந்திராவின் மக்கள் கவிஞரான செரபண்ட ராஜுவின் கவிதை வரி.
இந்த ஆவேச வரிகள் உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுத்து எழுதப்பட்டவை.
பேஸ்புக் தொடர்பாக அமெரிக்கரான மைக்கேல் ரோசன்பிளம்’ என்பவர் எழுதியுள்ள இணைய பத்தியை படிக்கும் போது இந்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
உழைப்பாளிகளுக்கான செரபண்ட ராஜுவின் தார்மீக கோபம் போல, ரோசன்பிளம் இணையவாசிகளின் சார்பில், உள்ளடக்கம் யாருடையது ,செல்வம் யாருடையது ? என கேட்டு இந்த பத்தியை எழுதியிருக்கிறார்.
ஹபிங்டன் போஸ்ட் இணைய இதழில் பேஸ்புக்கை தொழிற்சங்கமயமாக்குவோம் (Let’s Unionize Facebook) எனும் தலைப்பில் எழுதியுள்ள இந்த பத்தியில், அவர் நாமெல்லாம் பேஸ்புக் அடிமைகளா? என்று கேள்வி எழுப்புகிறார். பேஸ்புக்கிற்கு மட்டும் அல்ல, டிவிட்டர் அடிமைகள், இன்ஸ்டாகிராம் அடிமைகள் என்றும் குறிப்பிடுகிறார். இந்த இணைய சேவைகளுக்காக நாம் ஓயாமல் உள்ளடக்கத்தை உருவாக்கி கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்றும் அவர் குறைப்பட்டுக்கொள்கிறார்.
இந்த கருத்துக்கு அவர் வந்து நிற்கும் விதம் தான் கவனத்திற்கு உரியது. வரலாற்றின் இடைப்பட்ட காலமான 15 ம் நூற்றாண்டில் நிலமே பெரும் செல்வமாக கருதப்பட்டதாகவும், பெரும் நிலப்பரப்பை கொண்ட பிரபுக்களிடம் பலரும் அடிமைகளாக வேலை பார்த்தனர் என்றும் குறிப்பிடுகிறார்.

சைபர்வெளி அடிமைகள்
காலம் மாறியிருக்கிறதே தவிர வரலாறு மாறவில்லை , இன்று நிலம் என்பது சைபர்வெளியாகி இருக்கிறது, அதில் நாமெல்லாம் அடிமைகளாக இருக்கிறோம், அமேசானின் ஜெப் பெசோசும், பேஸ்புக்கின் ஜக்கர்பெர்கும் இணைய பிரபுக்களாக நமது உள்ளடக்கத்தை கொண்டு செல்வம் சேர்த்துக்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
பேஸ்புக்கின் 100 சதவீத உள்ளடக்கம் நம்முடையது அல்லவா என கேட்கும், இதை இலவசமாக செய்து கொண்டிருக்கும் முட்டாள்கள் அல்லவா நாம் என்றும் கேட்கிறார். இதை அவர் சொல்லும் விதம் இன்னும் துடிப்பாக இருக்கிறது. தினமும் நாம் எந்த ஊதியமும் பெறாமல் , ஜக்கர்பர்கின் இணைய நிலத்தில் குடியிருக்கும் உரிமைக்காக அவருக்காக உள்ளடக்கத்தை உருவாக்கி கொண்டிருக்கிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.ஜக்கர்பர்கின் 33 பில்லியன் டாலர் செல்வமும் நாம் சேர்த்து கொடுத்தது என்கிறார்.
இதன் பிறகு அவர் சொல்லும் விஷயம் என்ன தெரியும? 20 ம் நூற்றாண்டில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் தங்களிடம் உழைப்பு எனும் சக்தி இருப்பதை உணர்ந்து கொண்டு அதன் ஆற்றலை உணர்த்த தொழிற்சங்கம் அமைத்துக்கொண்டது போல, பேஸ்புக் பயனாளிகள் தொழிற்சங்கம் அமைக்கலாகாதா? என்றும் ரோசன்பிளம்’ கேள்வி எழுப்புகிறார்.

f2பேஸ்புக்கிற்காக உழைப்பு!

நிச்சயம் புதுவிதமான சிந்தனை தான். அதற்காக பேஸ்புக்கிற்கு எதிராக நாம் கொடி பிடித்து போராட வேண்டும் என்று அர்த்தமில்லை. ஆனால் நிச்சயம் நமது பேஸ்புக பழக்கம் பற்றி யோசித்தாக வேண்டும். பேஸ்புக்கை இலவச சேவையாக கருதி மகிழ்ச்சியுடன் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால் நமது உள்ளடக்கத்தை வைத்து பேஸ்புக் விளம்பர வருவாயை அள்ளிக்கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடுகிறோம். நம்மை அறியாமல் நாம் பேஸ்புக் போன்ற தளங்களுக்காக அடிமைகள் போல உள்ளடக்கத்தை உருவாக்கி கொண்டிருக்கிறோம்.
இந்த கருத்து உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். சமூக வலைப்பின்னலாக அது ஏற்படுத்தி தரும் பலன்களை வைத்து நீங்கள் வாதிடலாம். உண்மை தான், பேஸ்புக் இணைய யுகத்தில் நட்புக்கும் ,தகவல் பரிமாற்றத்திற்கும் இன்னும் பல பயன்களுக்கும் வித்திட்டிருக்கிறது. மறுப்பதற்கில்லை. பல நேரங்களில் பேஸ்புக் போன்ற சேவைகள் சமூக ஊடகங்களாக செயல்படுகின்றன. எகிப்திலும் வளைகுடா நாடுகளிலும் மலர்ந்த சமூக புரட்சியில் பேஸ்புக்கிற்கும் அதன் சமூக சகாக்களுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. சமூக ஊடகங்களில் பயன்பாட்டிற்கு இன்னும் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.

பேஸ்புக் பயன்பாடு
பிரச்சனை பேஸ்புக்கை நாம் எப்படி பயன்படுத்த பழகியிருக்கிறோம் என்பது தான். சமூக வலைப்பின்னலாக பேஸ்புக்கின் ஆதார பலம் நண்பர்கள்,நண்பர்களின் நண்பர்கள் ,அவர்களின் நண்பர்கள் என நட்பு வளையத்தை விரியச்செய்வது தான். இந்த நட்பு வளையத்தில் எதை பகிர்ந்து கொள்கிறோம் என்பதும் , எதற்காக பகிர்ந்து கொள்கிறோம் என்பது முக்கியமானது இல்லையா?
எல்லாவற்றையும் நிலைத்தகவலாக பகிர்ந்து கொள்வது இயல்பாக இருக்கிறது. வீட்டு விஷேசத்தில் எடுத்த புகைப்படங்களையும், சுற்றுலா பயணத்தில் எடுத்த புகைப்படங்களையும் எந்த யோசனையும் இல்லாமல் பேஸ்புக்கில் பகிர்கிறோம். அதனால் என்ன வந்துவிடப்போகிறது?
ஆனால், உங்கள் தனிப்பட்ட பயணம் பற்றிய புகைப்படம் , நண்பர்களின் நண்பர்களுக்கு எந்த விதத்தில் அவசியமானது யோசித்துப்பாருங்கள்? உங்கள் மகனுடனோ , மகளுடனோ இருக்கும் புகைப்படம் நிலைத்தகவலாக வெளியிடுவது எதற்காக? அவற்றுக்கு காரணம் இல்லாமல் கிடைக்கும் லைக்குகளை விட்டுத்தள்ளுங்கள்.
புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது இயல்பானது தான். வீட்டிற்கு வரும் நண்பர்களிடமும் உறவினர்களிடமு புகைப்பட ஆல்பத்தை காண்பித்து மகிழ்வது வழக்கமானது தான். ஆனால் நன்றாக் யோசித்துப்பாருங்கள், எல்லோரிடமும் நீங்கள் இவ்வாறு செய்வதில்லை. அதற்கு ஒரு பரஸ்பர நெருக்கம் தேவை. வரவேற்பறையில் பேசிக்கொண்டிருக்கும் எல்லா நண்பர்களுக்கும் நீங்கள் புகைப்பட ஆல்பத்தை காட்ட விரும்ப மாட்டீர்கள். அதற்கான நெருக்கமும் இணக்கமும் இல்லாத நிலையில் அந்த நண்பரும் கூட அதை விரும்பமாட்டார். இதெல்லாம் எழுதப்படாத சமூக விதிகள். இயல்பாக எல்லோரும் அனுசரித்து நடப்பவை.
f3
தனியுரிமை கவலை
ஆனால் பேஸ்புக்கில் சொந்த ஊர் பயண புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது எந்தவகையான வெளிப்பாடு? ஊர் மாறியிருக்கிறது, விவசாயம் மங்கிவிட்டது போன்ற பொதுவான எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம். கிராமத்து மண்வாசத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் தனிப்பட்ட குடும்ப காட்சிகளை சித்தரிக்கும் புகைப்படங்களை பகிர்வது எதனால்? உங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களும் குடும்பத்தின் புகைப்படங்களும் தேவையில்லாமல் இணையத்தில் எல்லா இடங்களிலும் இறைந்து கிடப்பது நல்லதல்ல.
வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்கள் ,விண்ணப்பித்தவர்கள் பற்றி தகவல்கள் சேகரிக்க சமூக வலைப்பின்னல் பக்கங்களை அலசிக்கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத்தெரியுமா? விண்ணப்பத்தில் குறிப்பிடும் தகவல்களை எல்லாம் விட ஒருவரைப்பற்றி சித்திரத்தை அவரது சமூக வலைப்பின்னல் பதிவுகள் உணர்த்தி விடுவதாக கருதப்படுவதும் உங்களுக்குத்தெரியுமா? இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பேஸ்புக் பதிவுகளை ஆதாரமாக கொண்டு செயல்படுவதாக கூறப்படுவதை அறிந்திருக்கிறீர்களா?
நேற்று நீங்கள் பேஸ்புக்கில் எந்த சிந்தனையும் இல்லாமல் பகிர்ந்து கொண்ட தகவலும் புகைப்படமும் என்றேனும் ஒரு நாள் உங்களுக்கு வில்லங்கமாக முடியும் வாய்ப்பு இருக்கிறது தெரியுமா?
ஜார்ஜ் ஆர்வெல் சித்தரித்த கண்காணிப்பு யுகம் போல நாளை யாரேனும் , பேஸ்புக்கில் நீங்கள் விரோதமான கருத்தை சொல்லியிருந்தீர்களே என்று கேட்க்க்கூடிய நிலை வரலாம். இது கற்பனை தான். ஆனால் நிகழாது என்று சொல்வதற்கில்லை.

என்ன செய்யலாம் ?

அதற்காக பேஸ்புக் பயன்பாடே தவறு என்று பொருள் அல்ல. அது உங்கள் விருப்பம்; உரிமையும் கூட. பேஸ்புக்கை பயன்படுத்துங்கள், ஆனால் எதற்காக பயன்படுத்துகிறோம் என யோசிக்கவும் செய்யுங்கள். லைக்குகளுக்கும் ,கமெண்டுக்கும் ஆசைபட்டு நீங்கள் பொதுவில் பகிர விரும்பாத எதையும் இணையத்தில் ஆவணப்படுத்தாதீர்கள். இணையத்தில் வெளியிட்ட எதையும் நீங்கள் திரும்ப பெற முடியாது? உங்கள் பக்கத்தில் டெலிட் செய்தாலும் அதற்கு முன்பாகவே அதன் நகல் இணையத்தில் பல இடங்களில் பதிவாகி இருக்கும்.
எனவே , எதையும் பகிரும் முன் , இது சமூக வெளிக்கு ஏற்றதா என யோசியுங்கள்.
கருத்துக்கள் என்றால் வலைப்பதிவாக எழுத முடியுமா என முயன்றுப்பாருங்கள். புகைப்படங்கள் என்றால் இமெயில் மூலம் தேர்ந்தெடுத்த நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா என யோசியுங்கள்.
மறக்காமல் பேஸ்புக்கின் தனியுரிமை அமைப்பிற்கு (பிரைவசி செட்டிங்) சென்று பாருங்கள். எந்த வகை தகவல்கள் யாருக்கானவை என தீர்மானியுங்கள். தனியுரிமையில் இறுதி அதிகாரம் பேஸ்புக்கிடமே இருக்கிறது என்றாலும் கொடுக்கப்பட்டுள்ள உரிமையையாவது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இது பேஸ்புக்கை சரியாக பயன்படுத்த வைக்கும்.

விக்கி வாழ்க!
வலைப்பதிவு யுகம் முடிந்து பேஸ்புக் யுகம் துவங்கியிருப்பதாக கருதப்படும் நிலையில், பலரும் வலைப்பதிவுக்கு முழுக்கு போட்டு பேஸ்புக் படைப்பாளிகளாகில் வருவதாக சொல்லப்படும் கட்டத்தில் இந்த எதிர்கருத்து ஆச்சர்யத்தை அளிக்கலாம். ஆனால் இணையத்தில் தனியுரிமையின் அவசியத்தையும் அதன் அலட்சியத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் மெல்ல உணர்த்துவங்கியிருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது.
எல்லாவற்றையும் பகிரும் போக்கு பற்றிய கேள்விகளை எழுப்புவது தான் இந்த பதிவுன் நோக்கம்.
இன்னொரு முக்கிய விஷயம் சமூக ஊடக் பயன்பாட்டில் ஒருவர் தனக்கான சரியான வலைப்பின்னலை கண்டுகொள்வதும் முக்கியம். கல்லூரி மாணவர்களுக்கும், பணியிட்த்தில் இருப்பவர்களுக்கும் பேஸ்புக் பயன்பாடு கேளிக்கையை தரலாம். ஆனால் தொழில்முறை நபர்களுக்கான லிங்க்டுஇன் சமூக வலைப்பின்னல் தங்களுக்கு இன்னும் பொருத்தமாக இருக்காதா? என யோசிக்க வேண்டும்.
இவ்வளவு ஏன் விக்கிபீடியா கூட சமூக வலைப்பின்னல் ரகத்தை சேர்ந்தது தான் தெரியுமா? ஒயாமல் நிலைத்தகவல் பதிவு செய்வதற்கு நடுவே விக்கிபீடியாவிலும் நல்ல தகவல்களை பகிர்ந்து கொள்ளாலாமே!

பேஸ்புக் தொடர்பான மைக்கேல் ரோசன்பிளம்’ கட்டுரை: http://www.huffingtonpost.com/michael-rosenblum/lets-unionize-facebook_b_7526822.html?ir=India&adsSiteOverride=in

குறிப்பு; பேஸ்புக் தொடர்பான சிந்தனைகளில் ஓபன் சோர்ஸ் முன்னோடியான ரிச்சர்ட் ஸ்டால்மன் கருத்துக்கள் முக்கியமானவை. பேஸ்புக் பயன்பாட்டிற்கு எதிராக அவர் எழுதிய கட்டுரை எழுப்பும் கேள்விகள் சிந்தனைக்குறியவை; https://stallman.org/facebook.html

——–

நன்றி; தினமணி.காமில் நெட்டும் நடப்பும் பகுதியில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.