இந்திய சட்டங்களை எளிதாக புரிய வைக்கும் இணையதளம்!

44812-jxjagxhusx-1478365135இந்திய சட்டம் தொடர்பான தகவல்கள் தேவை எனில் கைகொடுக்க கூடிய  இணையதளங்கள் இருக்கின்றன. சட்டப்பிரிவுகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளிட்ட விவரங்களை கூட எளிதாக தேடிக்கொள்ளலாம். ஆனால், சாமானியர்களுக்கு சட்டம் நுணுக்கங்கள் மட்டும் அல்ல, சட்டப்பிரிவுகளின் வாசகங்களே கூட குழப்பத்தை அளிக்கலாம். சட்டங்கள் அவற்றுக்கே உரிய தனித்துவமான மொழியில் உருவாக்கப்பட்டிருப்பது தான் இதற்கு காரணம். சட்டம் தொடர்பான துறைகளில் புழங்கி கொண்டிருப்பவர்களுக்கு இவற்றை புரிந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை.

இந்த நிலையில் தான் நியாய.இன் எனும் புதிய இணையதளம் அறிமுகம் ஆகியிருக்கிறது. இந்திய சட்டங்களுக்கான இணைய களஞ்சியமாக விளங்க வேண்டும் எனும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தளத்தின் சிறப்பம்சம், சட்ட ஷரத்துக்களை எல்லோருக்கும் புரியக்கூடிய வகையில் எளிமையான ஆங்கில விளக்கத்துடன் புரிய வைப்பது தான். அதாவது சட்ட வாசகங்களை புரியக்கூடிய வாசங்களாக இது மொழிபெயர்த்து தருகிறது.

இதுவரை 773 மத்திய சட்டங்களுக்கான விளக்கம் மற்றும் குற்றவியல் சட்டங்களின் 10 பிரிவுகளுக்கான வழிகாட்டி விளக்கம் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளன. முகப்பு பக்கத்திலேயே இதற்கான ஐகான்கள் இடம்பெற்றுள்ளன. சட்டப்பிரிவுகளுக்கான பட்டியலும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பிரிவை கிள்க் செய்தவுடன், அதற்கான விளக்கத்தை காணலாம். சட்டப்பிரிவுகள் எனில் இடப்பக்கம் மூல ஷரத்துகளும், அருகே அவற்றுக்கான எளிய ஆங்கில விளக்கமும் இடம்பெறுகின்றன. முக்கியமான சொற்களுக்கான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன.

வழிகாட்டி பகுதியில், அனைவருக்கும் கல்வி உரிமை, குடும்ப வன்முறை, பாலியல் தொல்லை, ஊழலுக்கு எதிரான பிரிவு உள்ளிட்டவற்றுக்கான விரிவான விளக்கத்தை காணலாம். சட்டம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களும் இடம்பெற்றுள்ளன.

இணைய உலகில் எல்லாமே பயனர் நோக்கிலேயே அமையும் போது சட்ட்த்திற்கான விளக்கத்தையும் பயனர் நோக்கில் அளிக்கிறது இந்த தளம். சட்டங்கள் பயனர்களை மனதில் கொண்டு எழுதப்படவில்லை, அந்தக்குறையை போக்கவே இந்த முயற்சி என்கிறார் இந்த தளத்தை உருவாக்கிய குழுவில் முக்கிய பங்கு வகிக்கும் தில்லியை சேர்ந்த வழக்கறிஞரான ஸ்ரீஜோனி சென். பெங்களூரு மற்றும் அமெரிக்காவில் சட்டம்க் பயின்ற சென், மெக்கின்ஸி நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். கடந்த ஆண்டு தில்லியில் சட்டம் தொடர்பான் ஆய்வு மையமான விதி செண்டரில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, சட்ட்த்தை எளிமையாக புரிய வைக்க உதவும் இணையதளத்தை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்ட்தாக ஸ்க்ரோல்.இன் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். நீர் தொடர்பான முக்கிய தகவல்களை அளிக்கும் இந்தியா வாட்டர் போர்ட்டல் தளத்தை நடத்தி வரும் ரோகினி நிலேகனியுடன் இது பற்றி விவாதித்து போது, சட்டத்துறைக்கான இதே போன்ற இணையதளம் தேவை எனும் உணர்வு வலுப்பட்டது.  அதன் பிறகு 3 வழக்கறிஞர்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் இணைந்து தளத்தை அமைத்துள்ளார். நாடு முழுவதும் உள்ள சட்ட மாணவர்கள், சட்ட வல்லுனர்கள் இதன் உருவாக்கத்தில் உதவியுள்ளதாக சென் குறிப்பிடுகிறார்.

இந்திய சட்டங்களுக்கான இணைய களஞ்சியமாக இந்த தளம் உருவாக வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்கிறார் அவர். இந்த தளத்தில் இணையவாசிகளும் பங்கேற்கலாம். இதில் உள்ள விளக்கத்தை மேம்படுத்த அல்லது திருத்தும் முயற்சியில் பங்களிப்பு செலுத்தலாம். இவை தளத்தின் குழுவால் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். இந்த தளத்தில் இன்னமும் முழுமையாக எல்லா சட்டங்களும் இடம்பெறவில்லை. அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆங்கிலத்தில் அமைந்திருந்தாலும் எதிர்காலத்தில் மாநில மொழிகளிலும் சேவை வழங்கும் திட்டம் இருகிறது என்கிறார் சென். அதே போல மாநில சட்டங்கள் குறித்து தனி கவனம் செலுத்த இருப்பதாகவும், சட்டம் தொடர்பான அறிவிக்கைகள், சுற்றறிக்கைகள் போன்றவையும் இதில் இடம்பெறும் என்கிறார் அவர்.

சட்டம் தொடர்பான அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ள இந்த தளம் உதவியாக இருக்கும். ஒரு குற்றத்தை புகார் செய்வதுடன் என்ன நடக்கிறது, கைது செய்யப்படும் போது ஒருவரின் உரிமைகள் என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களையும் அறியலாம். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து பொதுவாக மக்கள் மனதில் எழக்கூடிய கேள்விகளை தேர்வு செய்துள்ளனர்.

ஆனால் இதில் உள்ள விளக்கங்கள் சட்ட ஆலோசனையும் அல்ல, அவற்றுக்கு மாற்றும் அல்ல, இவை தகவல் நோக்கிலானது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

இணையதள முகவரி: http://nyaaya.in/

 

 

44812-jxjagxhusx-1478365135இந்திய சட்டம் தொடர்பான தகவல்கள் தேவை எனில் கைகொடுக்க கூடிய  இணையதளங்கள் இருக்கின்றன. சட்டப்பிரிவுகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளிட்ட விவரங்களை கூட எளிதாக தேடிக்கொள்ளலாம். ஆனால், சாமானியர்களுக்கு சட்டம் நுணுக்கங்கள் மட்டும் அல்ல, சட்டப்பிரிவுகளின் வாசகங்களே கூட குழப்பத்தை அளிக்கலாம். சட்டங்கள் அவற்றுக்கே உரிய தனித்துவமான மொழியில் உருவாக்கப்பட்டிருப்பது தான் இதற்கு காரணம். சட்டம் தொடர்பான துறைகளில் புழங்கி கொண்டிருப்பவர்களுக்கு இவற்றை புரிந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை.

இந்த நிலையில் தான் நியாய.இன் எனும் புதிய இணையதளம் அறிமுகம் ஆகியிருக்கிறது. இந்திய சட்டங்களுக்கான இணைய களஞ்சியமாக விளங்க வேண்டும் எனும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தளத்தின் சிறப்பம்சம், சட்ட ஷரத்துக்களை எல்லோருக்கும் புரியக்கூடிய வகையில் எளிமையான ஆங்கில விளக்கத்துடன் புரிய வைப்பது தான். அதாவது சட்ட வாசகங்களை புரியக்கூடிய வாசங்களாக இது மொழிபெயர்த்து தருகிறது.

இதுவரை 773 மத்திய சட்டங்களுக்கான விளக்கம் மற்றும் குற்றவியல் சட்டங்களின் 10 பிரிவுகளுக்கான வழிகாட்டி விளக்கம் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளன. முகப்பு பக்கத்திலேயே இதற்கான ஐகான்கள் இடம்பெற்றுள்ளன. சட்டப்பிரிவுகளுக்கான பட்டியலும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பிரிவை கிள்க் செய்தவுடன், அதற்கான விளக்கத்தை காணலாம். சட்டப்பிரிவுகள் எனில் இடப்பக்கம் மூல ஷரத்துகளும், அருகே அவற்றுக்கான எளிய ஆங்கில விளக்கமும் இடம்பெறுகின்றன. முக்கியமான சொற்களுக்கான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன.

வழிகாட்டி பகுதியில், அனைவருக்கும் கல்வி உரிமை, குடும்ப வன்முறை, பாலியல் தொல்லை, ஊழலுக்கு எதிரான பிரிவு உள்ளிட்டவற்றுக்கான விரிவான விளக்கத்தை காணலாம். சட்டம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களும் இடம்பெற்றுள்ளன.

இணைய உலகில் எல்லாமே பயனர் நோக்கிலேயே அமையும் போது சட்ட்த்திற்கான விளக்கத்தையும் பயனர் நோக்கில் அளிக்கிறது இந்த தளம். சட்டங்கள் பயனர்களை மனதில் கொண்டு எழுதப்படவில்லை, அந்தக்குறையை போக்கவே இந்த முயற்சி என்கிறார் இந்த தளத்தை உருவாக்கிய குழுவில் முக்கிய பங்கு வகிக்கும் தில்லியை சேர்ந்த வழக்கறிஞரான ஸ்ரீஜோனி சென். பெங்களூரு மற்றும் அமெரிக்காவில் சட்டம்க் பயின்ற சென், மெக்கின்ஸி நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். கடந்த ஆண்டு தில்லியில் சட்டம் தொடர்பான் ஆய்வு மையமான விதி செண்டரில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, சட்ட்த்தை எளிமையாக புரிய வைக்க உதவும் இணையதளத்தை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்ட்தாக ஸ்க்ரோல்.இன் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். நீர் தொடர்பான முக்கிய தகவல்களை அளிக்கும் இந்தியா வாட்டர் போர்ட்டல் தளத்தை நடத்தி வரும் ரோகினி நிலேகனியுடன் இது பற்றி விவாதித்து போது, சட்டத்துறைக்கான இதே போன்ற இணையதளம் தேவை எனும் உணர்வு வலுப்பட்டது.  அதன் பிறகு 3 வழக்கறிஞர்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் இணைந்து தளத்தை அமைத்துள்ளார். நாடு முழுவதும் உள்ள சட்ட மாணவர்கள், சட்ட வல்லுனர்கள் இதன் உருவாக்கத்தில் உதவியுள்ளதாக சென் குறிப்பிடுகிறார்.

இந்திய சட்டங்களுக்கான இணைய களஞ்சியமாக இந்த தளம் உருவாக வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்கிறார் அவர். இந்த தளத்தில் இணையவாசிகளும் பங்கேற்கலாம். இதில் உள்ள விளக்கத்தை மேம்படுத்த அல்லது திருத்தும் முயற்சியில் பங்களிப்பு செலுத்தலாம். இவை தளத்தின் குழுவால் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். இந்த தளத்தில் இன்னமும் முழுமையாக எல்லா சட்டங்களும் இடம்பெறவில்லை. அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆங்கிலத்தில் அமைந்திருந்தாலும் எதிர்காலத்தில் மாநில மொழிகளிலும் சேவை வழங்கும் திட்டம் இருகிறது என்கிறார் சென். அதே போல மாநில சட்டங்கள் குறித்து தனி கவனம் செலுத்த இருப்பதாகவும், சட்டம் தொடர்பான அறிவிக்கைகள், சுற்றறிக்கைகள் போன்றவையும் இதில் இடம்பெறும் என்கிறார் அவர்.

சட்டம் தொடர்பான அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ள இந்த தளம் உதவியாக இருக்கும். ஒரு குற்றத்தை புகார் செய்வதுடன் என்ன நடக்கிறது, கைது செய்யப்படும் போது ஒருவரின் உரிமைகள் என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களையும் அறியலாம். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து பொதுவாக மக்கள் மனதில் எழக்கூடிய கேள்விகளை தேர்வு செய்துள்ளனர்.

ஆனால் இதில் உள்ள விளக்கங்கள் சட்ட ஆலோசனையும் அல்ல, அவற்றுக்கு மாற்றும் அல்ல, இவை தகவல் நோக்கிலானது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

இணையதள முகவரி: http://nyaaya.in/

 

 

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.