ரொக்கமில்லா சமூகம் சாத்தியமா? அலசும் ‘டிஜிட்டல் பணம்” புத்தகம்

vanigaபணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான சர்ச்சையும், விவாதமும் தீவிரமடைந்து சற்று ஓய்ந்திருக்கிறது. இந்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை மையமாக கொண்டு டிஜிட்டல் பணம் புத்தகம் வெளியாகி இருக்கிறது. பத்திரிகையாளரும், தொழில்நுட்ப வலைப்பதிவாளருமான சைபர்சிம்மன் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். கிழக்கு பதிப்பக வெளியீடாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது.

கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை பொதுமக்களுக்கு ஒரு பக்கம் பெரும் இன்னலை ஏற்படுத்தினாலும், டிஜிட்டல் பரிவர்த்தனையை சார்ந்த ரொக்கமில்லா சமூகம் தொடர்பான விவாதத்தையும் ஏற்படுத்தியது. இந்தியா போன்ற நாட்டில் முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவது சாத்தியம் தானா? எனும் கேள்வியும் பலரால் கேட்கப்பட்டது. இதற்கான பதில்கள் மாறுபட்ட நிலையில், எல்லாமே டிஜிட்டலுக்கு மாறிவரும் உலகில் பணமும் டிஜிட்டல்மயமாவது தவிக்க இயலாதது என வாதிடுகிறது ‘டிஜிட்டல் பணம்’ புத்தகம்.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகம் ரொக்கமில்லா சமூகத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருப்பதை விவரிக்கும் இந்த புத்தகம், இந்தியா போன்ற நாடுகளில், இதற்கு கைகொடுக்க கூடிய மொபைல் பணம் தொடர்பான விரிவாக பேசுகிறது.

சாதாரண செல்போன் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை சாத்தியமாக்கும் மொபைல் பணம் சார்ந்த முன்னோடி முயற்சிகள் பற்றி விரிவான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மொபைல் பணம் சார்ந்த முன்னோடி முயற்சிகள் இந்தியாவில் நடைபெற்று வருவதை அடையாளம் கட்டுரைகள் நிச்சயம் வியப்பில் ஆழ்த்தும்.

 

இந்த புத்தகம் தொடர்பான கேள்விகளுக்கு சைபர்சிம்மன் அளித்த பதில்கள் வருமாறு:

டிஜிட்டல் பணம் புத்தகம் எழுதியது ஏன்?

பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பின், ரொக்க பணத்திற்கான தட்டுப்பாடு நிலவிய நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவது தொடர்பான அவசியத்தை வலியுறுத்தி இந்த புத்தகத்தை எழுதுவதற்கான எண்ணம் உண்டானது. ஏடிஎம் வாயில்களில் நீண்ட வரிசையில் மக்கள் கால் கடுக்க காத்திருந்த நிலையில், பொது கருத்து டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு எதிராக அமைந்த நிலையில் இந்த புத்தகத்திற்கான தகவல் சேகரிப்பு மற்றும் ஆய்வில் ஈடுபட்டிருந்தேன்.

டிஜிட்டல் பணம் இந்தியாவுக்கு எல்லாம் சரிபட்டு வராது என பரவலாக கருதப்பட்ட சூழலில் இந்த புத்தகத்தை எழுத தீர்மானித்ததற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. அவற்றில் முதன்மையானது கென்யாவில் எம்-பெசா எனும் மொபைல் பணம் பெரும் வெற்றி பெற்று ஒரு முன்னோடி முயற்சியாக இருந்ததை அறிந்திருந்தது தான். ஆப்பிரிக்க நாடான கென்யாவில் மொபைல் மூலமான பண பரிவர்த்தனை சரியாக வரும் எனில் இந்தியாவிலும் இந்த சிக்கலுக்கான பதில் மொபைல் பணமாக தான் இருக்க வேண்டும் என நம்பினேன்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், மொபைல் பணம் என்பது பரவலாக அறியப்பட்ட மொபைல் வாலெட்டில் இருந்து வேறுபட்டது. இது சாதாரணா செல்போனிலேயே செயல்படக்கூடியது. அதனால் தான் எம்-பெசா கென்யாவில் வெற்றி பெற்று மற்ற ஏழை நாடுகளிலும் பரவலானது . உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியாவிலும் மொபைல் பணம் செயல்படுத்தப்படுவதை கட்டுரைகள் வாயிலாக அறிய முடிந்தது.

எம்-பெசா பற்றிய புரிதலே இந்த புத்தகம் எழுத மூலக்காரணம். அதே போலவே தொழில்நுட்பத்தின் மீது எனக்கிருந்த ஆர்வமும், நம்பிக்கையும் மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தது. டிஜிட்டல்மயமாக்கலின் முக்கியத்துவம் மற்றும் தவிர்க்க இயலா தன்மையை அறிந்திருப்பதால் பணமும் டிஜிட்டல்மயமாக வேண்டும் என நினைத்தேன். அதுவே இந்த புத்தகத்தை எழுத மூலக்காரணம்.

moneyரொக்கமில்லா சமூகம் ஏன் தேவை என நினைக்கிறீர்கள்?

பண பரிவர்த்தனை தொடர்பான வரலாற்று செய்திகளை தேடிப்படித்த போது இன்னும் கூடுதல் புரிதல் கிடைத்தது. ரொக்கமில்லா சமூகம் எனும் கருத்தாக்கத்தின் துவக்கப்புள்ளி காசோலை இல்லா சமூகம் எனும் புள்ளியிலிருந்து துவங்குவதையும், கம்ப்யூட்டர்களின் வருகை மற்றும் பயன்பாடு இதற்கு முக்கிய காரணம் என்பதையும் அறிய முடிந்தது. இந்த வரலாறு பற்றிய கட்டுரைகள் புத்தகத்தின் துவக்கமாக அமைந்துள்ளன.

உண்மையில், தந்தி மூலமான தகவல் பரிமாற்றம் பண பரிவர்த்தனைக்கு உதவிய காலத்திலேயே பணம் டிஜிட்டல் மயமாவது துவங்கிவிட்டது. இப்போது நவீன தொழில்நுட்பம் இதை மேலும் செழுமையாக்கியுள்ளது.

இவைத்தவிர ஸ்வீடன் போன்ற நாடுகள் ரொக்கமில்லா சமூகத்திற்கு மாறியுள்ள தகவலும் என்னை ஈர்த்தன. ஸ்விடனில் ரொக்கமில்லா சமூகத்திற்கான கருத்தாக்கம் வேரூன்றிய விதமும், செயல்படுததப்படும் விதமும் தனிக்கட்டுரைகளாக அமைந்துள்ளன.

ஸ்வீடன் சரி, இந்தியாவுக்கு எப்படி பொருந்தும் என கேட்பர்வர்களுக்கு பதிலாக நம் நாட்டிலேயே விளிம்பு நிலை மக்களுக்கு மொபைல் பணம் மூலம் நிதிச்சேவைகளை கொண்டு சேர்க்கும் எகோ மணி, பீம் மணி போன்ற முயற்சிகள் அமைந்துள்ளன. இவை பற்றிய தனிக்கட்டுரைகள் உள்ளன. இது தவிர வங்கதேசத்தில் மொபைல் போனை ஏழைகளுக்கு கொண்டு சென்ற முன்னோடி தொழில்முனைவோரான இக்பால் காதீர் பற்றியும் எழுதியுள்ளேன்.

உண்மையில் ரொக்கமில்லா சமூகத்தின் சாத்தியம் பற்றிய வல்லுனர்கள் விவாதம் மற்றும் சந்தேகங்களை மீறி, மொபைல் பணம் சார்ந்த முன்னோடி முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தொலைநோக்கு மிக்க மனிதர்களின் முயற்சியே இந்த புத்தகத்தை எழுதும் உத்வேகத்தை தீவிரமாக்கியது.

அதென்ன மொபைல் பணம்?

இந்த புத்தகத்தை எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது,  ரொக்கமில்லா சமூகத்தில் வாழந்து பார்த்த மனிதர்களின் பரிசோதனை முயற்சியும் அறிந்து கொள்ள முடிந்தது. முக்கியமாக பணத்தின் வரலாற்றை ஆய்வு செய்து எழுதிய பத்திரிகையாளர் டேவிட் வால்மனின் புத்தகம் பற்றி படித்தது கண்களை திறந்துவிட்டது போல இருந்தது. வால்மன் புத்தகம் மூலமே இந்தியாவில் மொபைல் பணம் முயற்சிகள் பற்றி அறிய முடிந்தது.

மொபைல் பணம் என்பது செல்போன் மூலமான டிஜிட்டல் பணவர்த்தனை. மொபைல் பணம் என்பது செல்போன் ரீசார்ஜ் செய்வது போலதான். சாதாரண செல்போனே இதற்கு போதும். இந்த வகை பரிவர்த்தனை வசதி மூலம் குக்கிராமங்களுக்கு கூட டிஜிட்டல் பரிவர்த்தனையை கொண்டு செல்லலாம். இதற்கு உதாரணமாக திகழும் இந்திய கிராமம் பற்றியும் புத்தகத்தில் தனிக்கட்டுரை இடம்பெற்றுள்ளது.

ரொக்கமில்லா சமூகத்தின் சாத்தியம் குறித்த அனைத்து அம்சங்களை எழுத விரும்பினாலும், அதன் மீதான சந்தேகங்களுக்கு பதிலாக அமையக்கூடிய மொபைல் பணம் பற்றிய முக்கிய கவனம் செலுத்தியுள்ளேன்.

இந்த புத்தகம் எழுதும் போக்கில், மொபைல் பணம் மூலம் ஏழை மக்களுக்கு நிதிச்சேவைகளை கொண்டு செல்லும் முயற்சிகள் பற்றியும், வங்கியில்லா வங்கிச்சேவைகள் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. ஏழைகளுக்கு டிஜிட்டல் பணம் எல்லாம் சரிபட்டு வருமா என்பது தவறான கேள்வி. உண்மையில் டிஜிட்டல் பணம் மூலம் தான் ஏழைகளுக்கு அடிப்படை நிதிச்சேவைகளை அளிக்க முடியும் என்பது தான் இந்த புத்தகம் சொல்லும் சேதி.

இந்த புத்தகம் ரொக்கமில்லா சமூகத்திற்கு ஆதாரவானதா?

ஆம்.

இந்தியா போன்ற நாடுகளில் ரொக்கமில்லா சமூகம் எப்படி சாத்தியம்?

இதற்கான பதில் மொபைல் பணம் எனும் கருத்தாக்கத்தில் உள்ளது. அதை மையமாக கொண்ட முயற்சிகளை தான் இந்த புத்தகம் பேசுகிறது.

  • கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு எல்லோரிடமும் இல்லையே?

கார்டு தேவையில்லை. மொபைல் போதுமானது என்பதே இந்த புத்தகத்தின் அடிநாதம்.

 

  • ஸ்மார்ட்போனும் எல்லோரிடமும் இல்லையே?

தேவையில்லை. சாதாரண போனே போதும்.

  • எப்படி ?

கென்யாவின் மொபைல் பணமான எம்-பெசா இதற்கான உதாரணம்.

  • இந்தியாவில் யதார்த்தம் என்ன?

இந்தியாவிலும் எகோ மணி, பீம் மணி போன்ற முன்னோடி உதாரணங்கள் உள்ளன. இந்தியா மட்டும் அல்ல ஆப்கானிஸ்தான் , சோமாலிலாந்தில் முன்னோடி முயற்சிகள் மேற்கொள்ளபடுகின்றன.

  • ரொக்கமில்லா பரிவர்த்தனை ஏழைகளுக்கு பாதகமாக அமையாதா?

பரவலாக கருதப்படுவதற்கு மாறாக ரொகமில்லா பரிவர்த்தனை ஏழைகளுக்கு உதவக்கூடியது. மொபைல் பணம் என்பது ஏழைகளுக்கான வங்கிச்சேவைக்கான அடிப்படையாக பார்க்கபடுகிறது.

  • வங்கி சேவையை இன்னும் பரவலாகவில்லையே?

வங்கிச்சேவையை ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு கொண்டு செல்ல செல்போன் உதவும். செல்போன் மாற்றத்திற்கான சாதமாக பார்க்கப்படுக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் இதற்கான முன்னோடி முயற்சிகள் இருக்கின்றன.

  • இந்த புத்தகத்திற்கான அவசியம் என்ன?

உலகில் எல்லாம் டிஜிட்டல்மயமாகி வருகிறது. பணமும் டிஜிட்டல் மயமாவது தொழில்நுட்ப நோக்கில் தவிர்க்க இயலாதது. அதற்கு நாம் தயாராக வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் இந்த முயற்சி துவங்கிவிட்டது. நாமும் பின் தங்கியிருக்க முடியாது. அது மட்டும் அல்ல, பண பரிவர்த்தனையை டிஜிட்டல் மயமாக்க தொழில்நுட்பம் சார்ந்த பல முன்னோடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமும் அதில் இணைவதே சரி . இல்லை எனிம் தொழில்புரட்சி பேருந்தை தவறவிட்டது போல டிஜிட்டல் பண பேரூந்தை தவறவிட்டு பின்னால் ஓட வேண்டியிருக்கும்.

  • பணமதிப்பு நீக்க நடவடிக்கை பற்றி?

இந்த புத்தகம் அது பற்றி பேசவில்லை.

  • ஏன்?

இதன் மைய நோக்கம் அதுவல்ல. பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது அதிக கவனத்தையும், சர்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்திய ரொக்கமில்லா பரிவர்த்தனையின் சார்பு அம்சங்களை தொழில்நுட்ப நோக்கில் இந்த புத்தகம் பேசுகிறது.

  • பண மதிப்பு நீக்க நடவடிக்கை சரியானதா?

தெரியாது. ஆனால் அது மிக மோசமாக செயல்படுத்தப்பட்டது.

  • டிஜிட்டல் பணத்தில் வேறு என்ன சாதகம் உண்டு?

டிஜிட்டல் பணம் டிஜிட்டல் கடன், அனைவரிக்குமான வங்கி- நிதிச்சேவைகள் பற்றி எல்லாம் சிந்திக்க வைக்கிறது. நடைமுறையிலும் செயல்பட வைக்கிறது.

  • கருப்புபணம் ஒழியுமா?

ஓரளவு உதவலாம். ஆனால் கருப்பு பணம் வேறு பிரச்சனை.

  • டிஜிட்டல் பணம் பாதுகாப்பானதா?

பாதுகாப்பாக ஆக்குவதற்கான எல்லா வழிமுறைகளும் உள்ளன. ஆனால் சைபர் தாக்குதல், இணைய களவு உள்ளிட்ட ஆபத்துகள் உள்ளனை. அவற்றை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் இது டிஜிட்டல் யுகத்தின் பிரச்சனை. டிஜிட்டல் பணத்திற்கு மட்டும் உரியது அல்ல. டிஜிட்டல் பணம் இல்லாவிட்டாலும் கூட இத்தகைய ஆபத்துகள் உண்டு.

  • இந்த புத்தகத்தை படித்தால் டிஜிட்டல் பணத்திற்கு மாற முடியுமா?

இல்லை. டிஜிட்டல் பணம் தொடர்பாக உலகில், குறிப்பாக தொழில்நுட்ப உலகில் நடைபெறும் முன்னோடி முயற்சிகளை தெரிந்து கொண்டு நீங்களாக அதை நோக்கி முன்னேறலாம்.

 

 

’டிஜிட்டல் பணம்’

சைபர்சிம்மன்

கிழக்கு பதிப்பக வெளியீடு

விலை.ரூ150

 

—-

நன்றி; வணிகமணி இதழ் 

 

vanigaபணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான சர்ச்சையும், விவாதமும் தீவிரமடைந்து சற்று ஓய்ந்திருக்கிறது. இந்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை மையமாக கொண்டு டிஜிட்டல் பணம் புத்தகம் வெளியாகி இருக்கிறது. பத்திரிகையாளரும், தொழில்நுட்ப வலைப்பதிவாளருமான சைபர்சிம்மன் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். கிழக்கு பதிப்பக வெளியீடாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது.

கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை பொதுமக்களுக்கு ஒரு பக்கம் பெரும் இன்னலை ஏற்படுத்தினாலும், டிஜிட்டல் பரிவர்த்தனையை சார்ந்த ரொக்கமில்லா சமூகம் தொடர்பான விவாதத்தையும் ஏற்படுத்தியது. இந்தியா போன்ற நாட்டில் முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவது சாத்தியம் தானா? எனும் கேள்வியும் பலரால் கேட்கப்பட்டது. இதற்கான பதில்கள் மாறுபட்ட நிலையில், எல்லாமே டிஜிட்டலுக்கு மாறிவரும் உலகில் பணமும் டிஜிட்டல்மயமாவது தவிக்க இயலாதது என வாதிடுகிறது ‘டிஜிட்டல் பணம்’ புத்தகம்.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகம் ரொக்கமில்லா சமூகத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருப்பதை விவரிக்கும் இந்த புத்தகம், இந்தியா போன்ற நாடுகளில், இதற்கு கைகொடுக்க கூடிய மொபைல் பணம் தொடர்பான விரிவாக பேசுகிறது.

சாதாரண செல்போன் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை சாத்தியமாக்கும் மொபைல் பணம் சார்ந்த முன்னோடி முயற்சிகள் பற்றி விரிவான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மொபைல் பணம் சார்ந்த முன்னோடி முயற்சிகள் இந்தியாவில் நடைபெற்று வருவதை அடையாளம் கட்டுரைகள் நிச்சயம் வியப்பில் ஆழ்த்தும்.

 

இந்த புத்தகம் தொடர்பான கேள்விகளுக்கு சைபர்சிம்மன் அளித்த பதில்கள் வருமாறு:

டிஜிட்டல் பணம் புத்தகம் எழுதியது ஏன்?

பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பின், ரொக்க பணத்திற்கான தட்டுப்பாடு நிலவிய நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவது தொடர்பான அவசியத்தை வலியுறுத்தி இந்த புத்தகத்தை எழுதுவதற்கான எண்ணம் உண்டானது. ஏடிஎம் வாயில்களில் நீண்ட வரிசையில் மக்கள் கால் கடுக்க காத்திருந்த நிலையில், பொது கருத்து டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு எதிராக அமைந்த நிலையில் இந்த புத்தகத்திற்கான தகவல் சேகரிப்பு மற்றும் ஆய்வில் ஈடுபட்டிருந்தேன்.

டிஜிட்டல் பணம் இந்தியாவுக்கு எல்லாம் சரிபட்டு வராது என பரவலாக கருதப்பட்ட சூழலில் இந்த புத்தகத்தை எழுத தீர்மானித்ததற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. அவற்றில் முதன்மையானது கென்யாவில் எம்-பெசா எனும் மொபைல் பணம் பெரும் வெற்றி பெற்று ஒரு முன்னோடி முயற்சியாக இருந்ததை அறிந்திருந்தது தான். ஆப்பிரிக்க நாடான கென்யாவில் மொபைல் மூலமான பண பரிவர்த்தனை சரியாக வரும் எனில் இந்தியாவிலும் இந்த சிக்கலுக்கான பதில் மொபைல் பணமாக தான் இருக்க வேண்டும் என நம்பினேன்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், மொபைல் பணம் என்பது பரவலாக அறியப்பட்ட மொபைல் வாலெட்டில் இருந்து வேறுபட்டது. இது சாதாரணா செல்போனிலேயே செயல்படக்கூடியது. அதனால் தான் எம்-பெசா கென்யாவில் வெற்றி பெற்று மற்ற ஏழை நாடுகளிலும் பரவலானது . உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியாவிலும் மொபைல் பணம் செயல்படுத்தப்படுவதை கட்டுரைகள் வாயிலாக அறிய முடிந்தது.

எம்-பெசா பற்றிய புரிதலே இந்த புத்தகம் எழுத மூலக்காரணம். அதே போலவே தொழில்நுட்பத்தின் மீது எனக்கிருந்த ஆர்வமும், நம்பிக்கையும் மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தது. டிஜிட்டல்மயமாக்கலின் முக்கியத்துவம் மற்றும் தவிர்க்க இயலா தன்மையை அறிந்திருப்பதால் பணமும் டிஜிட்டல்மயமாக வேண்டும் என நினைத்தேன். அதுவே இந்த புத்தகத்தை எழுத மூலக்காரணம்.

moneyரொக்கமில்லா சமூகம் ஏன் தேவை என நினைக்கிறீர்கள்?

பண பரிவர்த்தனை தொடர்பான வரலாற்று செய்திகளை தேடிப்படித்த போது இன்னும் கூடுதல் புரிதல் கிடைத்தது. ரொக்கமில்லா சமூகம் எனும் கருத்தாக்கத்தின் துவக்கப்புள்ளி காசோலை இல்லா சமூகம் எனும் புள்ளியிலிருந்து துவங்குவதையும், கம்ப்யூட்டர்களின் வருகை மற்றும் பயன்பாடு இதற்கு முக்கிய காரணம் என்பதையும் அறிய முடிந்தது. இந்த வரலாறு பற்றிய கட்டுரைகள் புத்தகத்தின் துவக்கமாக அமைந்துள்ளன.

உண்மையில், தந்தி மூலமான தகவல் பரிமாற்றம் பண பரிவர்த்தனைக்கு உதவிய காலத்திலேயே பணம் டிஜிட்டல் மயமாவது துவங்கிவிட்டது. இப்போது நவீன தொழில்நுட்பம் இதை மேலும் செழுமையாக்கியுள்ளது.

இவைத்தவிர ஸ்வீடன் போன்ற நாடுகள் ரொக்கமில்லா சமூகத்திற்கு மாறியுள்ள தகவலும் என்னை ஈர்த்தன. ஸ்விடனில் ரொக்கமில்லா சமூகத்திற்கான கருத்தாக்கம் வேரூன்றிய விதமும், செயல்படுததப்படும் விதமும் தனிக்கட்டுரைகளாக அமைந்துள்ளன.

ஸ்வீடன் சரி, இந்தியாவுக்கு எப்படி பொருந்தும் என கேட்பர்வர்களுக்கு பதிலாக நம் நாட்டிலேயே விளிம்பு நிலை மக்களுக்கு மொபைல் பணம் மூலம் நிதிச்சேவைகளை கொண்டு சேர்க்கும் எகோ மணி, பீம் மணி போன்ற முயற்சிகள் அமைந்துள்ளன. இவை பற்றிய தனிக்கட்டுரைகள் உள்ளன. இது தவிர வங்கதேசத்தில் மொபைல் போனை ஏழைகளுக்கு கொண்டு சென்ற முன்னோடி தொழில்முனைவோரான இக்பால் காதீர் பற்றியும் எழுதியுள்ளேன்.

உண்மையில் ரொக்கமில்லா சமூகத்தின் சாத்தியம் பற்றிய வல்லுனர்கள் விவாதம் மற்றும் சந்தேகங்களை மீறி, மொபைல் பணம் சார்ந்த முன்னோடி முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தொலைநோக்கு மிக்க மனிதர்களின் முயற்சியே இந்த புத்தகத்தை எழுதும் உத்வேகத்தை தீவிரமாக்கியது.

அதென்ன மொபைல் பணம்?

இந்த புத்தகத்தை எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது,  ரொக்கமில்லா சமூகத்தில் வாழந்து பார்த்த மனிதர்களின் பரிசோதனை முயற்சியும் அறிந்து கொள்ள முடிந்தது. முக்கியமாக பணத்தின் வரலாற்றை ஆய்வு செய்து எழுதிய பத்திரிகையாளர் டேவிட் வால்மனின் புத்தகம் பற்றி படித்தது கண்களை திறந்துவிட்டது போல இருந்தது. வால்மன் புத்தகம் மூலமே இந்தியாவில் மொபைல் பணம் முயற்சிகள் பற்றி அறிய முடிந்தது.

மொபைல் பணம் என்பது செல்போன் மூலமான டிஜிட்டல் பணவர்த்தனை. மொபைல் பணம் என்பது செல்போன் ரீசார்ஜ் செய்வது போலதான். சாதாரண செல்போனே இதற்கு போதும். இந்த வகை பரிவர்த்தனை வசதி மூலம் குக்கிராமங்களுக்கு கூட டிஜிட்டல் பரிவர்த்தனையை கொண்டு செல்லலாம். இதற்கு உதாரணமாக திகழும் இந்திய கிராமம் பற்றியும் புத்தகத்தில் தனிக்கட்டுரை இடம்பெற்றுள்ளது.

ரொக்கமில்லா சமூகத்தின் சாத்தியம் குறித்த அனைத்து அம்சங்களை எழுத விரும்பினாலும், அதன் மீதான சந்தேகங்களுக்கு பதிலாக அமையக்கூடிய மொபைல் பணம் பற்றிய முக்கிய கவனம் செலுத்தியுள்ளேன்.

இந்த புத்தகம் எழுதும் போக்கில், மொபைல் பணம் மூலம் ஏழை மக்களுக்கு நிதிச்சேவைகளை கொண்டு செல்லும் முயற்சிகள் பற்றியும், வங்கியில்லா வங்கிச்சேவைகள் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. ஏழைகளுக்கு டிஜிட்டல் பணம் எல்லாம் சரிபட்டு வருமா என்பது தவறான கேள்வி. உண்மையில் டிஜிட்டல் பணம் மூலம் தான் ஏழைகளுக்கு அடிப்படை நிதிச்சேவைகளை அளிக்க முடியும் என்பது தான் இந்த புத்தகம் சொல்லும் சேதி.

இந்த புத்தகம் ரொக்கமில்லா சமூகத்திற்கு ஆதாரவானதா?

ஆம்.

இந்தியா போன்ற நாடுகளில் ரொக்கமில்லா சமூகம் எப்படி சாத்தியம்?

இதற்கான பதில் மொபைல் பணம் எனும் கருத்தாக்கத்தில் உள்ளது. அதை மையமாக கொண்ட முயற்சிகளை தான் இந்த புத்தகம் பேசுகிறது.

  • கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு எல்லோரிடமும் இல்லையே?

கார்டு தேவையில்லை. மொபைல் போதுமானது என்பதே இந்த புத்தகத்தின் அடிநாதம்.

 

  • ஸ்மார்ட்போனும் எல்லோரிடமும் இல்லையே?

தேவையில்லை. சாதாரண போனே போதும்.

  • எப்படி ?

கென்யாவின் மொபைல் பணமான எம்-பெசா இதற்கான உதாரணம்.

  • இந்தியாவில் யதார்த்தம் என்ன?

இந்தியாவிலும் எகோ மணி, பீம் மணி போன்ற முன்னோடி உதாரணங்கள் உள்ளன. இந்தியா மட்டும் அல்ல ஆப்கானிஸ்தான் , சோமாலிலாந்தில் முன்னோடி முயற்சிகள் மேற்கொள்ளபடுகின்றன.

  • ரொக்கமில்லா பரிவர்த்தனை ஏழைகளுக்கு பாதகமாக அமையாதா?

பரவலாக கருதப்படுவதற்கு மாறாக ரொகமில்லா பரிவர்த்தனை ஏழைகளுக்கு உதவக்கூடியது. மொபைல் பணம் என்பது ஏழைகளுக்கான வங்கிச்சேவைக்கான அடிப்படையாக பார்க்கபடுகிறது.

  • வங்கி சேவையை இன்னும் பரவலாகவில்லையே?

வங்கிச்சேவையை ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு கொண்டு செல்ல செல்போன் உதவும். செல்போன் மாற்றத்திற்கான சாதமாக பார்க்கப்படுக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் இதற்கான முன்னோடி முயற்சிகள் இருக்கின்றன.

  • இந்த புத்தகத்திற்கான அவசியம் என்ன?

உலகில் எல்லாம் டிஜிட்டல்மயமாகி வருகிறது. பணமும் டிஜிட்டல் மயமாவது தொழில்நுட்ப நோக்கில் தவிர்க்க இயலாதது. அதற்கு நாம் தயாராக வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் இந்த முயற்சி துவங்கிவிட்டது. நாமும் பின் தங்கியிருக்க முடியாது. அது மட்டும் அல்ல, பண பரிவர்த்தனையை டிஜிட்டல் மயமாக்க தொழில்நுட்பம் சார்ந்த பல முன்னோடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமும் அதில் இணைவதே சரி . இல்லை எனிம் தொழில்புரட்சி பேருந்தை தவறவிட்டது போல டிஜிட்டல் பண பேரூந்தை தவறவிட்டு பின்னால் ஓட வேண்டியிருக்கும்.

  • பணமதிப்பு நீக்க நடவடிக்கை பற்றி?

இந்த புத்தகம் அது பற்றி பேசவில்லை.

  • ஏன்?

இதன் மைய நோக்கம் அதுவல்ல. பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது அதிக கவனத்தையும், சர்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்திய ரொக்கமில்லா பரிவர்த்தனையின் சார்பு அம்சங்களை தொழில்நுட்ப நோக்கில் இந்த புத்தகம் பேசுகிறது.

  • பண மதிப்பு நீக்க நடவடிக்கை சரியானதா?

தெரியாது. ஆனால் அது மிக மோசமாக செயல்படுத்தப்பட்டது.

  • டிஜிட்டல் பணத்தில் வேறு என்ன சாதகம் உண்டு?

டிஜிட்டல் பணம் டிஜிட்டல் கடன், அனைவரிக்குமான வங்கி- நிதிச்சேவைகள் பற்றி எல்லாம் சிந்திக்க வைக்கிறது. நடைமுறையிலும் செயல்பட வைக்கிறது.

  • கருப்புபணம் ஒழியுமா?

ஓரளவு உதவலாம். ஆனால் கருப்பு பணம் வேறு பிரச்சனை.

  • டிஜிட்டல் பணம் பாதுகாப்பானதா?

பாதுகாப்பாக ஆக்குவதற்கான எல்லா வழிமுறைகளும் உள்ளன. ஆனால் சைபர் தாக்குதல், இணைய களவு உள்ளிட்ட ஆபத்துகள் உள்ளனை. அவற்றை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் இது டிஜிட்டல் யுகத்தின் பிரச்சனை. டிஜிட்டல் பணத்திற்கு மட்டும் உரியது அல்ல. டிஜிட்டல் பணம் இல்லாவிட்டாலும் கூட இத்தகைய ஆபத்துகள் உண்டு.

  • இந்த புத்தகத்தை படித்தால் டிஜிட்டல் பணத்திற்கு மாற முடியுமா?

இல்லை. டிஜிட்டல் பணம் தொடர்பாக உலகில், குறிப்பாக தொழில்நுட்ப உலகில் நடைபெறும் முன்னோடி முயற்சிகளை தெரிந்து கொண்டு நீங்களாக அதை நோக்கி முன்னேறலாம்.

 

 

’டிஜிட்டல் பணம்’

சைபர்சிம்மன்

கிழக்கு பதிப்பக வெளியீடு

விலை.ரூ150

 

—-

நன்றி; வணிகமணி இதழ் 

 

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.