பிட்காயின் ஒரு அறிமுகம்!

இணைய உலகில் கீக் என குறிப்பிடப்படும் தொழில்நுட்ப பித்தர்கள் மட்டுமே அறிந்திருந்த புதுயுக நாணயமான பிட்காயின் பற்றி இப்போது பலரும் பேசத்துவங்கியிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் இணைய உலகை உலுக்கிய ரான்சம்வேர் தாக்குதலுக்கு காரணமாக தாக்காளர்கள் (ஹேக்கர்கள்) பிணைத்தொகையாக பிட்காயினை கேட்டதும் இந்த டிஜிட்டல் நாணயம் மீது கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இணைய நிழல் உலகம் என சொல்லப்படும் இருண்ட வலையில் (டார்க் வெப்) பிட்காயின் பயன்பாடு அதிகம் இருப்பதும், இதன் முக்கிய அம்சமாக சொல்லப்படும் அனாமதேய தன்மையும் பிட்காயின் மீதான ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது.

இதனிடையே பிட்காயின் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை அரசு கோரியதும், அண்மையில் நிதி அமைச்சர் பிட்காயின் குறித்து ஆலோசனை நடத்தியதும், அதென்ன பிட்காயின் என பலரையும் கேட்க வைத்துள்ளது.

இணைய உலகின் அற்புதம் என அதன் ஆதாரவாளர்களாலும், இணைய பூதம் என அதன் எதிர்ப்பாளர்களாலும் கருதப்படும் பிட்காயின் என்றால் என்ன? அதன் பயன்பாடு என்ன? பிரச்சனைகள் என்ன? போன்றவை குறித்து பார்ப்போம்…

பிட்காயின் என்றால் என்ன? இந்த கேள்விக்கு பலவிதமாக பதில் அளிக்கலாம். பிட்காயின் என்பது ஒரு வகையான மெய்நிகர் பணம் அல்லது டிஜிட்டல் பணம். இணையத்திற்கான பணம் என்றும் குறிப்பிடப்படும் பிட்காயின் கொண்டு பொருட்களை வாங்கலாம், விற்கலாம். பிட்காயினில் முதலீடு செய்யலாம். ஆனால் இந்த பணத்தை கண்ணால் பார்க்க முடியாது, கையால் தொட முடியாது. ஏனெனில் இதற்கு உருவம் கிடையாது. பிட்காயின் எண்ம வடிவிலானது. இதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக் மென்பொருளால் அடையாளம் காணக்கூடிய கம்ப்யூட்டர் நிரல் துண்டுகளால் ஆனது என வைத்துக்கொள்ளலாம்.

ஆனால், இந்த பதில்களால் பிட்காயினை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாது. பிட்காயினை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதன் அடிப்படை கோட்பாட்டையும், அதற்கே உரிய தனிச்சிறப்பான அம்சங்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பிட்காயின் என்பது அடிப்படையில் மின்னணு முறையில் உருவாக்கப்பட்டு மின்னணு முறையில் வைத்திருந்து பரிவர்த்தனை செய்யப்படும் ஒரு வகையான டிஜிட்டல் பணம். பிட்காயின் என்பது டிஜிட்டல் பணம் மட்டும் அல்ல, அந்த பணம் செயல்படுவதற்கான பரிவர்த்தனை அமைப்பும் தான். இதையே வேறு விதமாக சொலவது என்றால், மற்ற பணம் போல் பிட்காயின் எந்த ஒரு நாட்டு அரசாலும் வெளியிடப்படுவதில்லை: எந்த மத்திய வங்கியாலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. அதனை அச்சிடவும் முடியாது. அதனால் தான் பிட்காயின் மையமில்லா பணம் என்று சொல்லபடுகிறது.

இந்த தன்மையால் தான் பிட்காயின் ஆர்வலர்கள் அதை நேசிக்கின்றனர். மத்திய வங்கிகளும், அரசாங்களும் இதை சந்தேகமாக பார்க்கின்றனர். தாக்காளர்களும், இணைய திருடர்களும் பிட்காயினை விரும்பி நாட இதுவே காரணம்.

பிட்காயின் தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், குழப்புகிறதா? அதன் பின்னே உள்ள நுணுக்கங்கள் அப்படி!

கொஞ்சம் பொறுமையாக பிட்காயினை புரிந்து கொள்ள முயற்சிப்போம். முதலில் பிட்காயின் தோற்றம் பற்றி சில தகவல்கள். பிட்காயின் டிஜிட்டல் பணம் என்று குறிப்பிடப்பட்டாலும் அது முற்றிலும் புதுவகையான நாணயம். டிஜிட்டில் வடிவிலான எல்லா பரிவர்த்தனைக்கும் அதை முறைப்படுத்தக்கூடிய ஒரு மூன்றாம் அமைப்பு தேவை. அது வங்கியாக இருக்கலாம் அல்லது கிரெடிட் கார்டு நிறுவனமாக இருக்கலாம். ஆனால் பிட்காயினை, இப்படி எந்த ஒரு மூன்றாம் அமைப்பும் இல்லாமலே வாங்குபவரும், பெறுபவரும் நேரடியாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இப்படி, இடைத்தரகர்கள் இல்லாத, பயணாளிகளுக்கு இடையிலான பரிவர்த்தனையே பிட்காயினின் ஆதாரம் அம்சங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது.

எல்லாம் சரி, நேரடியாக பரிவர்த்தனை செய்யலாம் என்றால், ஒரே பிட்காயினை பலருக்கு கொடுப்பது போன்ற ஏமாற்று வேலைகள் எல்லாம் நடக்காதா? என கேட்கலாம். அப்படி எதுவும் நடக்க முடியாத அளவுக்கு, பிட்காயின் பரிவர்த்தனைக்கான முறை பக்காவாக உருவாக்கப்பட்டுள்ளது. சமகால வங்கி அமைப்புகளே வியந்து போகும் பிளாக்செயின் எனப்படும் இந்த நுட்பம் பிட்காயினின் இன்னொரு தனிச்சிறப்பாக அமைகிறது. கள்ள நாணயம் அல்லது கருப்பு பிட்காயினுக்கு எல்லாம் வாய்ப்பு இல்லாத வகையில் பிட்காயினுக்கான ஆதார வலைப்பின்னல் அமைப்பு அமைந்துள்ளது.

இந்த அமைப்பு பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம். இப்போது பிட்காயின் தோற்றத்தை கவனிக்கலாம். பிட்காயினை விட அதன் தோற்றம், புதிரானது என்பது சுவாரஸ்யமான விஷயம். 2009 ல் சடோஷி நாகமோட்டோ என்பவர் முன்வைத்த இணைய அறிக்கையில் இருந்து தான் பிட்காயின் உருவானது. ஆனால் இன்று வரை யார் இந்த சடோஷி என்பது ஒருவருக்கும் தெரியாது. அவர் ஒருவரா? அல்லது பலரா? என்பதும் தெரியாது. யார் இந்த சடோஷி என்பதை கண்டுபிடிப்பதற்கான தேடல் ஒரு பக்கம் நடந்து கொண்டே இருக்கிறது.

விஷயம் என்னவெனில், 2009 ல் மூன்றாம் தரப்பு துணை இல்லாமலே இரு நபர்கள் நேரடியாக பரிவர்த்தனை செய்து கொள்வதற்கான கம்ப்யூட்டர் சார்ந்த முறையை பிட்காயின் ஒரு சகாக்களிடையேயான மின்னணு பண பரிவர்த்தனை முறை எனும் தலைப்பிலான கட்டுரை சடோஷி பெயரில் இணையத்தில் வெளியானது. இந்த பரிவர்த்தனையை உறுதி செய்வதற்கான அடிப்படையையும் அவர் வெளியிட்டிருந்தார். இணைய ஆர்வலர்கள் பலருக்கு இந்த முறையின் பின்னே இருந்த கோட்பாடு பிடித்துப்போகவே, இதற்கு செயல்வடிவம் கொடுக்க உதவும் மென்பொருளை உருவாக்கி வெளியிட்டனர். இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்தனர்.

இப்படி தான் பிட்காயின் புழக்கத்திற்கு வந்தது. மத்திய வங்கிகளால் கட்டுப்படுத்தப்படாத தன்மை மற்றும் பரிவர்த்தனைக்கு பின்னே உள்ளவர்கள் அடையாளம் காணப்படாமல் அனாமதேயமாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் இணைய ஆர்வலர்களை கவர்ந்திழுக்கவே இணைய உலகில் இந்த நாணயம் பிரபலமாகத்துவங்கியது.

கட்டுப்பாடில்லாத, மையமில்லா நாணயம் என்பது சரி. அப்படி எனில் பிட்காயினை வெளியிடுவது யார்? அது எப்படி புழக்கத்திற்கு வருகிறது? பிட்காயினை யாரும் வெளியிடுவதில்லை: மாறாக எல்லோரும் சேர்ந்து அதை உருவாக்கி புழக்கத்திற்கு கொண்டு வருகின்றனர். அதெப்படி?

பிட்காயின் என்றால், கண்ணுக்குத்தெரியாத கம்ப்யூட்டர் நிரல் துகள்களால் ஆனது அல்லவா? இந்த டிஜிட்டல் துகள்கள் பிட்காயின் மென்பொருளில் இருந்து, ஒரு வகையான கணித புதிரை விடுவிப்பது மூலம் உருவாக்கப்படுகிறது. மென்பொருளை தரவிறக்கம் செய்து, கணித புதிரை விடுவித்தால் அதற்கான பரிசாக புதிய பிட்காயினை பெறலாம். ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு ஒரு முறை குறிப்பிட்ட அளவு பிட்காயின் விடுவிக்கப்படும்.

பிட்காயின் உருவாக்கத்தில் சில முக்கியமான விதிகள் இருக்கின்றன. முதல் விஷயம் பிட்காயின் உருவாக்கத்திற்கு என்று ஒரு இறுதி வரம்பு இருக்கிறது. இஷ்டம் போல பிட்காயினை உருவாக்கி கொண்டிருக்க முடியாது. இன்றைய தேதிக்கு 11 மில்லியன் பிட்காயின் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆக மொத்தம் 21 மில்லியன் பிட்காயின் தான் உருவாக்கப்பட முடியும். இதற்கான கெடு 2140 என கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது வரை பிட்காயின் உருவாக்கம் கடினமாகி கொண்டே இருக்கும். அதாவது போகப்போக பிட்காயின் புதிரை விடுவித்து புதிய பிட்காயின்களை விடுவிப்பது மிகவும் கடினமாகும். இதற்கு இன்னும் கூடுதலான கம்ப்யூட்டர் ஆற்றல் தேவை. இதுவே பிட்காயின் உலகின் மைனிங் என சொல்லப்படுகிறது. பிட்காயினை டிஜிட்டல் முறையில் தோண்டியெடுப்பது என்றும் புரிந்து கொள்ளலாம்.

இதில் இன்னொரு விஷயமும் கவனிக்க வேண்டும். பிட்காயின் என்பது நாணயம் மற்றும் அது செயல்படுவதற்கான அமைப்பும் என்று பார்த்தோம் அல்லவா? அதாவது பிட்காயின் உருவாக்கம் மற்றும் அதன் பரிவர்த்தனை இரண்டையும் மைனிங் தான் நிறைவேற்றித்தருகிறது. பிட்காயின் புழக்கம் அதிகரிப்பதற்கு ஏற்ப அதை பராமரிப்பதற்கு தேவையான ஆற்றலும் அதிகரிக்கும் தானே. அதனால் தான் பிட்காயின் உருவாக்கத்திற்கு தேவையான கம்ப்யூட்டர் ஆற்றலும் அதிகரிக்கும் வகையில் இந்த முறை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆக, கூடுதல் பிட்காயின் தேவை எனில் சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர்களை அமைப்பில் இணைந்து பிட்காயினை உருவாக்க வேண்டும். இதன் மூலம் அதிகரிக்கும் பிட்காயின் புழக்கத்தை கையாளும் திறனும் அமைப்பிற்கு உண்டாகும்.

கம்ப்யூட்டர் ஆற்றலை அளித்து மைனிங்கில் ஈடுபட்டால் பிட்காயினை விடுவித்து அதற்கு பரிசாக பிட்காயின் பெறலாம் சரி, ஆனால் பிட்காயினை பயன்படுத்துவது எப்படி?  அதை வைத்திருப்பது எப்படி? அதன் கொடுக்கல் வாங்கலை கண்காணிப்பது எப்படி?

இந்த கேள்விகளுக்கான பதில் பிட்காயினுக்கான பிளாக்செயின் முறையில் உள்ளது. பிளாக்செயினை டிஜிட்டல் பதிவேடு என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஒவ்வொரு முறை பிட்காயின் பரிவர்த்தனை செய்யப்படும் போது அதற்கான குறிப்பு இந்த பதிவேட்டில் இடம்பெறும். இது தான் பரிவர்த்தனைக்கான ஆதாரம். இந்த பதிவேட்டை பராமரிக்க ஒருவர் இருக்க வேண்டும் அல்லவா? அப்போது தானே ஏமாற்று வேலைகள் நடக்காமல் இருக்கும். ஆனால் அப்படி எந்த பராமரிப்பாளரும் கிடையாது. மையம் என்பதே பிட்காயினில் கிடையாதே, என்ன செய்ய!

எனில், பிட்காயின் பரிவர்த்தனையை உறுதி செய்வது எப்படி? பிளாக்செயின் பதிவேட்டில் தான் இதற்கான பதில் அடங்கியிருக்கிறது. ஒவ்வொருவரிடமும் ஒரு பதிவேடு இருக்கும் என்பதும், ஒவ்வொரு பரிவர்த்தனையும் எல்லா பதிவேட்டிலும் பதிவாகும் என்பது தான் விஷயம். ஆக, ஒரு முறை பரிவர்த்தனை நிகழ்ந்தால் அதற்கான குறிப்பு எல்லா பதிவேட்டிலும் அப்டேட் செய்யப்படும். இதன் பொருள் இதுவரை நிகழ்ந்த பரிவர்த்தனைகள் மற்றும் இனி நிகழ்ப்போகும் பரிவர்த்தனைகள் என எல்லாவற்றுக்குமான குறிப்புகளுடம் பிளாக் செயின் பதிவேட்டில் அப்டேட்டாகி  கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு நடக்கும் பரிவர்த்தனைகள் ஒரு பிளாக்காக சேர்க்கப்பட்டு ஏற்கனவே பதிவேட்டில் உள்ள பிளாக்கில் சேர்க்க்கப்படும். ஒருங்கிணைந்த பிட்காயின் மென்பொருள் கொண்டு பிட்காயின் சமூகத்தினர் தங்கள் கம்ப்யூட்டரை இணைத்து இவற்றை செய்து வருகின்றனர்.

எனவே பிடிகாயின் பரிவர்த்தனையில் போலி செய்வது, ஏமாற்றுவது சாத்தியம் இல்லை. எல்லா விவரத்திற்கும் பிளாக்செயின் சாட்சி. இந்த நுட்பத்தை தான் வங்கி அமைப்புகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்த அம்சமே பிட்காயினை எதிர்கால நாணயமாக இருக்கும் என்றும் பேச வைக்கிறது.

பிட்காயினை தோண்டியெடுக்க பெரும் கம்ப்யூட்டர் ஆற்றல் தேவை என்பதால் எல்லோருக்கும் இது சாத்தியமில்லை. அதற்கான கவலைப்பட வேண்டாம், டாலர் அல்லது ரூபாய் போன்ற நாணயம் கொண்டு பிட்காயினை வாங்கிக்கொள்ளலாம். இதற்கான பிட்காயின் இணைப்பகங்கள் இணையத்தில் இருக்கின்றன. சில நாடுகளில் பிட்காயின் ஏ.டி.எம்கள் கூட இருக்கின்றன. நாணயம் வாங்குவது போல அன்றைய சந்தை விலையில் பிட்காயினை வாங்கலாம்.

சந்தையில் பிட்காயினுக்கான தேவைக்கு ஏற்ப அதன் மதிப்பு அமைகிறது. இன்றைய தேதிக்கு பிடிகாயினுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதால் ஒரு பிடிகாயினின் மதிப்பு 2,400 டாலருக்கு மேல். இந்திய மதிப்பை கேட்டால் தலைசுற்றும். ஒரு லட்சத்து ஐம்பத்தெட்டாயிரத்துக்கு மேல். கற்பனை செய்து பாருங்கள் சில ஆண்டுகளுக்கு முன் கொஞ்சம் பிட்காயின் வாங்கி வைத்திருந்தால் இப்போது எப்படி இருக்கும் என்று! பிட்காயின் ஒரு முதலீடாக கவர்வதற்கான காரணம் இந்த எகிரும் மதிப்பு தான். ஆனால் இடையே பிட்காயின் மதிப்பு சரிந்த காலங்களும் உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும். பங்குச்சந்தை போன்றது தான் அதுவும்.

இந்தியாவின் ஜெப்பே, காயின்செக்யூர் போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பிட்காயினை வாங்கி விற்க வழி செய்கின்றன.

பிட்காயின் மோகத்திற்கான பதில் இப்போது கிடைத்திருக்கும். சரி, பிட்காயினை எப்படி கையாள்வது? இதற்காக என்று பிட்காயின் வாலெட்கள் இருக்கின்றன. வாலெட்கள் என்றால், மின்னணு பர்ஸ் போன்றவை. இதில் தான் பிட்காயின் வீற்றிருக்கும். எண்ம நாணயம் என்பதால், இதை விடுவிக்கவும் வாங்கவும், மின்னணு பர்சிற்கான இரண்டு சாவிகள் உண்டு. ஒரு சாவி பொதுவானது. அதை பரிவர்த்தனையின் போது பகிரலாம். மற்றொரு சாவி தனிப்பட்டது. அதை ரகசியமாக வைத்திருந்து இயக்கலாம். இந்த ரகசிய சாவியே பிட்காயின் பரிவர்த்தனையை பாதுகாப்பானதாக்குகிறது.

இனி முக்கிய கேள்விகளுக்கு வருவோம். பிட்காயின் எதிர்காலம் என்ன? அது எந்த அளவு சட்டபூர்வமானது?

பிட்காயின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது சுவாரஸ்யமான கேள்வி. அதன் ஆதாரவாளர்கள் பிட்காயின் தான் எதிர்கால பணம் என்று கொண்டாடுகின்றனர். தொழில்நுட்ப ஆர்வலர்கள் பலரும் இதன் அம்சங்களால் கவரப்பட்டு பிட்காயினுக்கு தாவுகின்றனர். தடயம் இல்லாத பரிவர்த்தனை என்பதால் தாக்காளர்கள் பிணைத்தொகை கேட்டாலும் பிட்காயினாக கேட்கின்றனர்.

மையமில்லாத பணம் என்பதால் மத்திய வங்கிகள் பிட்காயினை சந்தேகத்துடனே நோக்குகின்றன. பிட்காயினுக்கான சட்டபூர்வ அந்தஸ்து நாட்டுக்கு நாடு மாறுகிறது. ஒருசில நாடுகள் பிட்காயின் பரிவர்த்தனையை சட்ட விரோதமானதாக அறிவித்துள்ளன ஆனால் பணமாக பிட்காயின் பரிவர்த்தனை தொடர்பான அணுகுமுறை மற்றும் கட்டுப்பாடுகளும் மாறுபடுகின்றன.

இந்தியாவை பொருத்தவரை பிட்காயின் பயன்பாட்டிற்கு அவரவரே பொறுப்பு என ரிசர்வ வங்கி சில மாதங்களுக்கு முன் எச்சரித்துள்ளது. அதன் பிறகு மத்திய நிதி அமைச்சகம் சார்பில் பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் நாணயங்கள் ( பிட்காயின் போலவே வேறு பல நாணயங்களும் உள்ளன) தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. மத்திய அரசும் டிஜிட்டல் நாணயங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை இணையம் மூலம் கோரியது. அண்மையில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டமும் நடைபெற்றுள்ளது.

பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்களை கட்டுப்படுத்துவது அல்லது முறைப்படுத்துவது தொடர்பான விவாதமும் தீவிரமாகி வரும் நிலையில் பிட்காயின் மீதான ஆர்வமும் அதிகரித்து வருகிறது.

 

இணைய உலகில் கீக் என குறிப்பிடப்படும் தொழில்நுட்ப பித்தர்கள் மட்டுமே அறிந்திருந்த புதுயுக நாணயமான பிட்காயின் பற்றி இப்போது பலரும் பேசத்துவங்கியிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் இணைய உலகை உலுக்கிய ரான்சம்வேர் தாக்குதலுக்கு காரணமாக தாக்காளர்கள் (ஹேக்கர்கள்) பிணைத்தொகையாக பிட்காயினை கேட்டதும் இந்த டிஜிட்டல் நாணயம் மீது கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இணைய நிழல் உலகம் என சொல்லப்படும் இருண்ட வலையில் (டார்க் வெப்) பிட்காயின் பயன்பாடு அதிகம் இருப்பதும், இதன் முக்கிய அம்சமாக சொல்லப்படும் அனாமதேய தன்மையும் பிட்காயின் மீதான ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது.

இதனிடையே பிட்காயின் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை அரசு கோரியதும், அண்மையில் நிதி அமைச்சர் பிட்காயின் குறித்து ஆலோசனை நடத்தியதும், அதென்ன பிட்காயின் என பலரையும் கேட்க வைத்துள்ளது.

இணைய உலகின் அற்புதம் என அதன் ஆதாரவாளர்களாலும், இணைய பூதம் என அதன் எதிர்ப்பாளர்களாலும் கருதப்படும் பிட்காயின் என்றால் என்ன? அதன் பயன்பாடு என்ன? பிரச்சனைகள் என்ன? போன்றவை குறித்து பார்ப்போம்…

பிட்காயின் என்றால் என்ன? இந்த கேள்விக்கு பலவிதமாக பதில் அளிக்கலாம். பிட்காயின் என்பது ஒரு வகையான மெய்நிகர் பணம் அல்லது டிஜிட்டல் பணம். இணையத்திற்கான பணம் என்றும் குறிப்பிடப்படும் பிட்காயின் கொண்டு பொருட்களை வாங்கலாம், விற்கலாம். பிட்காயினில் முதலீடு செய்யலாம். ஆனால் இந்த பணத்தை கண்ணால் பார்க்க முடியாது, கையால் தொட முடியாது. ஏனெனில் இதற்கு உருவம் கிடையாது. பிட்காயின் எண்ம வடிவிலானது. இதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக் மென்பொருளால் அடையாளம் காணக்கூடிய கம்ப்யூட்டர் நிரல் துண்டுகளால் ஆனது என வைத்துக்கொள்ளலாம்.

ஆனால், இந்த பதில்களால் பிட்காயினை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாது. பிட்காயினை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதன் அடிப்படை கோட்பாட்டையும், அதற்கே உரிய தனிச்சிறப்பான அம்சங்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பிட்காயின் என்பது அடிப்படையில் மின்னணு முறையில் உருவாக்கப்பட்டு மின்னணு முறையில் வைத்திருந்து பரிவர்த்தனை செய்யப்படும் ஒரு வகையான டிஜிட்டல் பணம். பிட்காயின் என்பது டிஜிட்டல் பணம் மட்டும் அல்ல, அந்த பணம் செயல்படுவதற்கான பரிவர்த்தனை அமைப்பும் தான். இதையே வேறு விதமாக சொலவது என்றால், மற்ற பணம் போல் பிட்காயின் எந்த ஒரு நாட்டு அரசாலும் வெளியிடப்படுவதில்லை: எந்த மத்திய வங்கியாலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. அதனை அச்சிடவும் முடியாது. அதனால் தான் பிட்காயின் மையமில்லா பணம் என்று சொல்லபடுகிறது.

இந்த தன்மையால் தான் பிட்காயின் ஆர்வலர்கள் அதை நேசிக்கின்றனர். மத்திய வங்கிகளும், அரசாங்களும் இதை சந்தேகமாக பார்க்கின்றனர். தாக்காளர்களும், இணைய திருடர்களும் பிட்காயினை விரும்பி நாட இதுவே காரணம்.

பிட்காயின் தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், குழப்புகிறதா? அதன் பின்னே உள்ள நுணுக்கங்கள் அப்படி!

கொஞ்சம் பொறுமையாக பிட்காயினை புரிந்து கொள்ள முயற்சிப்போம். முதலில் பிட்காயின் தோற்றம் பற்றி சில தகவல்கள். பிட்காயின் டிஜிட்டல் பணம் என்று குறிப்பிடப்பட்டாலும் அது முற்றிலும் புதுவகையான நாணயம். டிஜிட்டில் வடிவிலான எல்லா பரிவர்த்தனைக்கும் அதை முறைப்படுத்தக்கூடிய ஒரு மூன்றாம் அமைப்பு தேவை. அது வங்கியாக இருக்கலாம் அல்லது கிரெடிட் கார்டு நிறுவனமாக இருக்கலாம். ஆனால் பிட்காயினை, இப்படி எந்த ஒரு மூன்றாம் அமைப்பும் இல்லாமலே வாங்குபவரும், பெறுபவரும் நேரடியாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இப்படி, இடைத்தரகர்கள் இல்லாத, பயணாளிகளுக்கு இடையிலான பரிவர்த்தனையே பிட்காயினின் ஆதாரம் அம்சங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது.

எல்லாம் சரி, நேரடியாக பரிவர்த்தனை செய்யலாம் என்றால், ஒரே பிட்காயினை பலருக்கு கொடுப்பது போன்ற ஏமாற்று வேலைகள் எல்லாம் நடக்காதா? என கேட்கலாம். அப்படி எதுவும் நடக்க முடியாத அளவுக்கு, பிட்காயின் பரிவர்த்தனைக்கான முறை பக்காவாக உருவாக்கப்பட்டுள்ளது. சமகால வங்கி அமைப்புகளே வியந்து போகும் பிளாக்செயின் எனப்படும் இந்த நுட்பம் பிட்காயினின் இன்னொரு தனிச்சிறப்பாக அமைகிறது. கள்ள நாணயம் அல்லது கருப்பு பிட்காயினுக்கு எல்லாம் வாய்ப்பு இல்லாத வகையில் பிட்காயினுக்கான ஆதார வலைப்பின்னல் அமைப்பு அமைந்துள்ளது.

இந்த அமைப்பு பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம். இப்போது பிட்காயின் தோற்றத்தை கவனிக்கலாம். பிட்காயினை விட அதன் தோற்றம், புதிரானது என்பது சுவாரஸ்யமான விஷயம். 2009 ல் சடோஷி நாகமோட்டோ என்பவர் முன்வைத்த இணைய அறிக்கையில் இருந்து தான் பிட்காயின் உருவானது. ஆனால் இன்று வரை யார் இந்த சடோஷி என்பது ஒருவருக்கும் தெரியாது. அவர் ஒருவரா? அல்லது பலரா? என்பதும் தெரியாது. யார் இந்த சடோஷி என்பதை கண்டுபிடிப்பதற்கான தேடல் ஒரு பக்கம் நடந்து கொண்டே இருக்கிறது.

விஷயம் என்னவெனில், 2009 ல் மூன்றாம் தரப்பு துணை இல்லாமலே இரு நபர்கள் நேரடியாக பரிவர்த்தனை செய்து கொள்வதற்கான கம்ப்யூட்டர் சார்ந்த முறையை பிட்காயின் ஒரு சகாக்களிடையேயான மின்னணு பண பரிவர்த்தனை முறை எனும் தலைப்பிலான கட்டுரை சடோஷி பெயரில் இணையத்தில் வெளியானது. இந்த பரிவர்த்தனையை உறுதி செய்வதற்கான அடிப்படையையும் அவர் வெளியிட்டிருந்தார். இணைய ஆர்வலர்கள் பலருக்கு இந்த முறையின் பின்னே இருந்த கோட்பாடு பிடித்துப்போகவே, இதற்கு செயல்வடிவம் கொடுக்க உதவும் மென்பொருளை உருவாக்கி வெளியிட்டனர். இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்தனர்.

இப்படி தான் பிட்காயின் புழக்கத்திற்கு வந்தது. மத்திய வங்கிகளால் கட்டுப்படுத்தப்படாத தன்மை மற்றும் பரிவர்த்தனைக்கு பின்னே உள்ளவர்கள் அடையாளம் காணப்படாமல் அனாமதேயமாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் இணைய ஆர்வலர்களை கவர்ந்திழுக்கவே இணைய உலகில் இந்த நாணயம் பிரபலமாகத்துவங்கியது.

கட்டுப்பாடில்லாத, மையமில்லா நாணயம் என்பது சரி. அப்படி எனில் பிட்காயினை வெளியிடுவது யார்? அது எப்படி புழக்கத்திற்கு வருகிறது? பிட்காயினை யாரும் வெளியிடுவதில்லை: மாறாக எல்லோரும் சேர்ந்து அதை உருவாக்கி புழக்கத்திற்கு கொண்டு வருகின்றனர். அதெப்படி?

பிட்காயின் என்றால், கண்ணுக்குத்தெரியாத கம்ப்யூட்டர் நிரல் துகள்களால் ஆனது அல்லவா? இந்த டிஜிட்டல் துகள்கள் பிட்காயின் மென்பொருளில் இருந்து, ஒரு வகையான கணித புதிரை விடுவிப்பது மூலம் உருவாக்கப்படுகிறது. மென்பொருளை தரவிறக்கம் செய்து, கணித புதிரை விடுவித்தால் அதற்கான பரிசாக புதிய பிட்காயினை பெறலாம். ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு ஒரு முறை குறிப்பிட்ட அளவு பிட்காயின் விடுவிக்கப்படும்.

பிட்காயின் உருவாக்கத்தில் சில முக்கியமான விதிகள் இருக்கின்றன. முதல் விஷயம் பிட்காயின் உருவாக்கத்திற்கு என்று ஒரு இறுதி வரம்பு இருக்கிறது. இஷ்டம் போல பிட்காயினை உருவாக்கி கொண்டிருக்க முடியாது. இன்றைய தேதிக்கு 11 மில்லியன் பிட்காயின் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆக மொத்தம் 21 மில்லியன் பிட்காயின் தான் உருவாக்கப்பட முடியும். இதற்கான கெடு 2140 என கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது வரை பிட்காயின் உருவாக்கம் கடினமாகி கொண்டே இருக்கும். அதாவது போகப்போக பிட்காயின் புதிரை விடுவித்து புதிய பிட்காயின்களை விடுவிப்பது மிகவும் கடினமாகும். இதற்கு இன்னும் கூடுதலான கம்ப்யூட்டர் ஆற்றல் தேவை. இதுவே பிட்காயின் உலகின் மைனிங் என சொல்லப்படுகிறது. பிட்காயினை டிஜிட்டல் முறையில் தோண்டியெடுப்பது என்றும் புரிந்து கொள்ளலாம்.

இதில் இன்னொரு விஷயமும் கவனிக்க வேண்டும். பிட்காயின் என்பது நாணயம் மற்றும் அது செயல்படுவதற்கான அமைப்பும் என்று பார்த்தோம் அல்லவா? அதாவது பிட்காயின் உருவாக்கம் மற்றும் அதன் பரிவர்த்தனை இரண்டையும் மைனிங் தான் நிறைவேற்றித்தருகிறது. பிட்காயின் புழக்கம் அதிகரிப்பதற்கு ஏற்ப அதை பராமரிப்பதற்கு தேவையான ஆற்றலும் அதிகரிக்கும் தானே. அதனால் தான் பிட்காயின் உருவாக்கத்திற்கு தேவையான கம்ப்யூட்டர் ஆற்றலும் அதிகரிக்கும் வகையில் இந்த முறை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆக, கூடுதல் பிட்காயின் தேவை எனில் சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர்களை அமைப்பில் இணைந்து பிட்காயினை உருவாக்க வேண்டும். இதன் மூலம் அதிகரிக்கும் பிட்காயின் புழக்கத்தை கையாளும் திறனும் அமைப்பிற்கு உண்டாகும்.

கம்ப்யூட்டர் ஆற்றலை அளித்து மைனிங்கில் ஈடுபட்டால் பிட்காயினை விடுவித்து அதற்கு பரிசாக பிட்காயின் பெறலாம் சரி, ஆனால் பிட்காயினை பயன்படுத்துவது எப்படி?  அதை வைத்திருப்பது எப்படி? அதன் கொடுக்கல் வாங்கலை கண்காணிப்பது எப்படி?

இந்த கேள்விகளுக்கான பதில் பிட்காயினுக்கான பிளாக்செயின் முறையில் உள்ளது. பிளாக்செயினை டிஜிட்டல் பதிவேடு என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஒவ்வொரு முறை பிட்காயின் பரிவர்த்தனை செய்யப்படும் போது அதற்கான குறிப்பு இந்த பதிவேட்டில் இடம்பெறும். இது தான் பரிவர்த்தனைக்கான ஆதாரம். இந்த பதிவேட்டை பராமரிக்க ஒருவர் இருக்க வேண்டும் அல்லவா? அப்போது தானே ஏமாற்று வேலைகள் நடக்காமல் இருக்கும். ஆனால் அப்படி எந்த பராமரிப்பாளரும் கிடையாது. மையம் என்பதே பிட்காயினில் கிடையாதே, என்ன செய்ய!

எனில், பிட்காயின் பரிவர்த்தனையை உறுதி செய்வது எப்படி? பிளாக்செயின் பதிவேட்டில் தான் இதற்கான பதில் அடங்கியிருக்கிறது. ஒவ்வொருவரிடமும் ஒரு பதிவேடு இருக்கும் என்பதும், ஒவ்வொரு பரிவர்த்தனையும் எல்லா பதிவேட்டிலும் பதிவாகும் என்பது தான் விஷயம். ஆக, ஒரு முறை பரிவர்த்தனை நிகழ்ந்தால் அதற்கான குறிப்பு எல்லா பதிவேட்டிலும் அப்டேட் செய்யப்படும். இதன் பொருள் இதுவரை நிகழ்ந்த பரிவர்த்தனைகள் மற்றும் இனி நிகழ்ப்போகும் பரிவர்த்தனைகள் என எல்லாவற்றுக்குமான குறிப்புகளுடம் பிளாக் செயின் பதிவேட்டில் அப்டேட்டாகி  கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு நடக்கும் பரிவர்த்தனைகள் ஒரு பிளாக்காக சேர்க்கப்பட்டு ஏற்கனவே பதிவேட்டில் உள்ள பிளாக்கில் சேர்க்க்கப்படும். ஒருங்கிணைந்த பிட்காயின் மென்பொருள் கொண்டு பிட்காயின் சமூகத்தினர் தங்கள் கம்ப்யூட்டரை இணைத்து இவற்றை செய்து வருகின்றனர்.

எனவே பிடிகாயின் பரிவர்த்தனையில் போலி செய்வது, ஏமாற்றுவது சாத்தியம் இல்லை. எல்லா விவரத்திற்கும் பிளாக்செயின் சாட்சி. இந்த நுட்பத்தை தான் வங்கி அமைப்புகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்த அம்சமே பிட்காயினை எதிர்கால நாணயமாக இருக்கும் என்றும் பேச வைக்கிறது.

பிட்காயினை தோண்டியெடுக்க பெரும் கம்ப்யூட்டர் ஆற்றல் தேவை என்பதால் எல்லோருக்கும் இது சாத்தியமில்லை. அதற்கான கவலைப்பட வேண்டாம், டாலர் அல்லது ரூபாய் போன்ற நாணயம் கொண்டு பிட்காயினை வாங்கிக்கொள்ளலாம். இதற்கான பிட்காயின் இணைப்பகங்கள் இணையத்தில் இருக்கின்றன. சில நாடுகளில் பிட்காயின் ஏ.டி.எம்கள் கூட இருக்கின்றன. நாணயம் வாங்குவது போல அன்றைய சந்தை விலையில் பிட்காயினை வாங்கலாம்.

சந்தையில் பிட்காயினுக்கான தேவைக்கு ஏற்ப அதன் மதிப்பு அமைகிறது. இன்றைய தேதிக்கு பிடிகாயினுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதால் ஒரு பிடிகாயினின் மதிப்பு 2,400 டாலருக்கு மேல். இந்திய மதிப்பை கேட்டால் தலைசுற்றும். ஒரு லட்சத்து ஐம்பத்தெட்டாயிரத்துக்கு மேல். கற்பனை செய்து பாருங்கள் சில ஆண்டுகளுக்கு முன் கொஞ்சம் பிட்காயின் வாங்கி வைத்திருந்தால் இப்போது எப்படி இருக்கும் என்று! பிட்காயின் ஒரு முதலீடாக கவர்வதற்கான காரணம் இந்த எகிரும் மதிப்பு தான். ஆனால் இடையே பிட்காயின் மதிப்பு சரிந்த காலங்களும் உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும். பங்குச்சந்தை போன்றது தான் அதுவும்.

இந்தியாவின் ஜெப்பே, காயின்செக்யூர் போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பிட்காயினை வாங்கி விற்க வழி செய்கின்றன.

பிட்காயின் மோகத்திற்கான பதில் இப்போது கிடைத்திருக்கும். சரி, பிட்காயினை எப்படி கையாள்வது? இதற்காக என்று பிட்காயின் வாலெட்கள் இருக்கின்றன. வாலெட்கள் என்றால், மின்னணு பர்ஸ் போன்றவை. இதில் தான் பிட்காயின் வீற்றிருக்கும். எண்ம நாணயம் என்பதால், இதை விடுவிக்கவும் வாங்கவும், மின்னணு பர்சிற்கான இரண்டு சாவிகள் உண்டு. ஒரு சாவி பொதுவானது. அதை பரிவர்த்தனையின் போது பகிரலாம். மற்றொரு சாவி தனிப்பட்டது. அதை ரகசியமாக வைத்திருந்து இயக்கலாம். இந்த ரகசிய சாவியே பிட்காயின் பரிவர்த்தனையை பாதுகாப்பானதாக்குகிறது.

இனி முக்கிய கேள்விகளுக்கு வருவோம். பிட்காயின் எதிர்காலம் என்ன? அது எந்த அளவு சட்டபூர்வமானது?

பிட்காயின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது சுவாரஸ்யமான கேள்வி. அதன் ஆதாரவாளர்கள் பிட்காயின் தான் எதிர்கால பணம் என்று கொண்டாடுகின்றனர். தொழில்நுட்ப ஆர்வலர்கள் பலரும் இதன் அம்சங்களால் கவரப்பட்டு பிட்காயினுக்கு தாவுகின்றனர். தடயம் இல்லாத பரிவர்த்தனை என்பதால் தாக்காளர்கள் பிணைத்தொகை கேட்டாலும் பிட்காயினாக கேட்கின்றனர்.

மையமில்லாத பணம் என்பதால் மத்திய வங்கிகள் பிட்காயினை சந்தேகத்துடனே நோக்குகின்றன. பிட்காயினுக்கான சட்டபூர்வ அந்தஸ்து நாட்டுக்கு நாடு மாறுகிறது. ஒருசில நாடுகள் பிட்காயின் பரிவர்த்தனையை சட்ட விரோதமானதாக அறிவித்துள்ளன ஆனால் பணமாக பிட்காயின் பரிவர்த்தனை தொடர்பான அணுகுமுறை மற்றும் கட்டுப்பாடுகளும் மாறுபடுகின்றன.

இந்தியாவை பொருத்தவரை பிட்காயின் பயன்பாட்டிற்கு அவரவரே பொறுப்பு என ரிசர்வ வங்கி சில மாதங்களுக்கு முன் எச்சரித்துள்ளது. அதன் பிறகு மத்திய நிதி அமைச்சகம் சார்பில் பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் நாணயங்கள் ( பிட்காயின் போலவே வேறு பல நாணயங்களும் உள்ளன) தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. மத்திய அரசும் டிஜிட்டல் நாணயங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை இணையம் மூலம் கோரியது. அண்மையில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டமும் நடைபெற்றுள்ளது.

பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்களை கட்டுப்படுத்துவது அல்லது முறைப்படுத்துவது தொடர்பான விவாதமும் தீவிரமாகி வரும் நிலையில் பிட்காயின் மீதான ஆர்வமும் அதிகரித்து வருகிறது.

 

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.