பேஸ்புக்கில் நீங்கள் யார்?

People are seen as silhouettes as they check mobile devices whilst standing against an illuminated wall bearing Facebook Inc.s logo in this arranged photograph in London, U.K., on Wednesday, Dec. 23, 2015. Facebook Inc.s WhatsApp messaging service, with more than 100 million local users, is the most-used app in Brazil, according to an Ibope poll published on Dec. 15. Photographer: Chris Ratcliffe/Bloomberg via Getty Images

People are seen as silhouettes as they check mobile devices whilst standing against an illuminated wall bearing Facebook Inc.s logo in this arranged photograph in London, U.K., on Wednesday, Dec. 23, 2015. Facebook Inc.s WhatsApp messaging service, with more than 100 million local users, is the most-used app in Brazil, according to an Ibope poll published on Dec. 15. Photographer: Chris Ratcliffe/Bloomberg via Getty Images

சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கை நீங்கள் பயன்படுத்தும் முறை குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதாவது பேஸ்புக்கை எதற்காக, எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று நினைத்துப்பார்த்தது உண்டா? இதுவரை இப்படி யோசித்ததில்லை எனில், இப்போது, உங்கள் பேஸ்புக் பயன்பாடு குறித்து யோசியுங்கள். ஏனெனில், பேஸ்புக்கில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் எனும் கேள்விக்கான விடையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அது உங்களுக்கு பொருந்துகிறதா என பார்க்க, பேஸ்புக்கை நீங்கள் எப்படி எல்லாம் பயன்படுத்துகிறீர்கள் என்பதை கொஞ்சம் சுய ஆய்வுக்கு உள்ளாக்கி கொள்வது நல்லது தானே.

இனி பேஸ்புக் தொடர்பான ஆய்வை பார்ப்போம்.

பேஸ்புக்கின் தாக்கமும், வீச்சும் அதன் பயனாளிகள் அறிந்தது தான். அண்மை புள்ளிவிவரப்படி பேஸ்புக் 200 கோடி பேர் பயனாளிகளுக்கு மேல் பெற்றுள்ளது. சராசரியாக ஒவ்வொரு நாளுன் 128 கோடி பேர் அதை பயன்படுத்துகின்றனர். பேஸ்புக் பயனாளி சராசரியாக தினமும் 35 நிமிடம் இந்த தளத்தில் செல்வு செய்கிறார்.  இவர்கள் ஒவ்வொருவரும் பேஸ்புக்கை ஒவ்வொரு விதமாக பயன்படுத்தலாம். நோக்கங்களும் மாறுபடலாம். ஆனால் இந்த இரண்டிலுமே பரவலான பொதுத்தன்மைகளை காணலாம்.

இந்த பொதுத்தன்மையை தான் அமெரிக்க ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு மூலம் கண்டறிந்து அறிக்கையாக தந்துள்ளனர். பிரிகாம் யங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்த ஆய்வாளர்கள் முன்வைக்கும் கண்டுபிடிப்பு என்னவெனில் பேஸ்புக் பயனாளிகளை அடிப்படையில் நான்கு வகையாக பிரிக்கலாம் என்பது தான். அதாவது பேஸ்புக் பயனாளிகளில் நான்கு வகை இருப்பதாக இந்த ஆய்வு சொல்கிறது.

உறவுகளை வலுப்படுத்துபவர்கள், தண்டோரா போடுபவர்கள், சுயபுராணம் பாடுபவர்கள் மற்றும் வேடிக்கை பார்ப்பவர்கள் என இந்த நான்கு வகையான பயனாளிகளை அமைகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையினருக்கான பேஸ்புக் குணங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

முதல் வகையான உறவுகளை மேம்படுத்துபவர்கள், பேஸ்புக்கை தங்கள் நிஜ வாழ்க்கையின் நீட்டிப்பாக, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பயன்படுத்திக்கொள்கின்றனர். இவர்கள் நிலைத்தகவல்களை வெளியிடுவதற்கு பின்னே உறவுக்கு கைகொடுப்போம் என்ற நோக்கம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது பேஸ்புக்கிற்கு வெளியே உள்ள உறவுகளை வலுப்படுத்திக்கொள்வதற்காக தான் நிலைத்தகவல்களை வெளியிடுவதிலும், பதிவுகளுக்கு பதில் சொல்வதிலும் இவர்கள் கவனம் செலுத்துகின்றனர். கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கிறது என்றாலும், குடும்பத்தின் மீதான அன்பை வெளிப்படுத்தவும், அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தவும் பேஸ்புக் உதவுவதாக இந்த பிரிவினர் கூறியிருக்கின்றனர். இந்த பிரிவினர் ஒளிப்படங்களையும், காணொலிகளையும் அதிகம் பகிர்கின்றனர்.

இரண்டாவது பிரிவினர் தண்டோரா போடுபவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு தங்களை வெளிப்படுத்திக்கொள்வதைவிட உலகில் என்ன நடக்கிறது என்பதையும், நாட்டு நடப்புகளை பதிவு செய்வதிலும் தான் ஆர்வம் அதிகம். இவர்கள் பெரும்பாலும் செய்திகளையும் நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்கின்றனர். அதே நேரத்தில் தங்கள் அறிமுக பக்கத்தை அப்டேட் செய்வதில் அதிக ஆர்வம் காட்டாதவர்களாக இருக்கின்றனர்.

மூன்றாவது பிரிவினர் சுயநல செல்பீக்கள். அதாவது தங்களை முன்னிறுத்திக்கொள்ளவும், விளம்பரப்படுத்திக்கொள்ளவும் பேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள். முதல் பிரிவினரைப்போலவே இவர்களும் ஒளிப்படங்கள் மற்றும் காணொலிகளை அதிகம் பகிர்ந்தாலும் நோக்கம் எல்லாம், இவற்றுக்கு எத்த்தனை லைக்குகள் குவிகின்றன என்பதிலேயே இருக்கின்றன. எந்த அளவுக்கு லைக் தொடர்பான அறிவிப்புகள் வருகின்றனவோ அந்த அளவு சக மனிதர்களால் அங்கீகரிக்கப்படுவதாக நினைக்கின்றனர்.

சரியோ தவறோ தங்களைப்பற்றிய ஒரு பிம்பத்தை பேஸ்புக் மூலம் உருவாக்குவது தான் செல்பி பிரிவினரின் நோக்கமாக அமைகிறது.

நான்காவது பிரிவினர், ஷாப்பிங் மால்களில் எதையும் வாங்காமல் அப்படியே உலா வந்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கு நிகரானவர்கள். இவர்கள் பேஸ்புக்கிலும் இப்படி தான் செய்து கொண்டிருக்கின்றனர். தங்களைப்பற்றி தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டாமல், மற்றவர்கள் என்ன செய்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள முற்படும் கில்லாடிகளாக இருக்கின்றனர். பேஸ்புக்கில் யாரது பக்கத்தை வேண்டுமானாலும் எட்டிப்பார்த்து அவர்கள் விருப்பு வெறுப்புகளை தெரிந்து கொள்வேன் என்று கூறுபவர்களாக இந்த பிரிவினர் இருக்கின்றனர்.

இந்த நான்கு வகை பேஸ்புக் பயனாளிகளில் தண்டோரா போடுபவர்களும், வேடிக்கை பார்ப்பவர்களும் புதிதாக வெளிச்சத்திற்கு வந்து இருப்பவர்கள் என ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் டாம் ராபின்சன் வியப்புடன் கூறியுள்ளார். ஏனெனில், இதற்கு முன்னரும் பேஸ்புக் பயன்பாடு தொடர்பாக பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் பேஸ்புக் பயனாளிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையினருடன் பொருத்திப்பார்க்கும் போது, உறவுகளை மேம்படுத்துபவர்களும், சுய புராணம் பார்ப்பவர்களும் எற்கனவே அறியப்பட்டுள்ளனர். ஆனால் மற்ற இரு பிரிவினரும் புதிதாக உள்ளனர் என ராபின்சன் கூறுகிறார்.

இந்த இரு பிரிவினர் குறித்து இதுவரை யாரும் அதிகம் பேசியதில்லை என்று கூறுபவ தங்கள் ஆய்வில் இவர்கள் மிகவும் பொருத்தமானவர்களாக தெரிகின்றனர் என்கிறார்.

ராபின்சனும் குழுவினரும் இந்த ஆய்வை மிக விரிவாகவே நடத்தியுள்ளனர். பேஸ்புக்குடனான தொடர்பு குறித்து 48 விதமான வாசகங்களை கொடுத்து அதற்கான கருத்துக்களை பயனாளிகளிடம் இருந்து பெற்று அதன் பிறகு தனிப்பட்ட கேள்விகளை கேட்டு ஆய்வை நடத்தியுள்ளனர். மக்கள் ஏன் பேஸ்புக்கில் தங்கள் வாழ்க்கையை வெளிப்படுத்திக்கொள்ள முற்படுகின்றனர் என்பதை ஆதார கேள்வியாக கொண்டு ஆய்வு நடந்திருக்கிறது.

ஆய்வு முடிவுகள் சுவாரஸ்யம் தருபவையாக இருப்பதோடு சிந்திக்கவும் வைக்கின்றனர். எல்லாம் சரி, இந்த நான்கு ரகத்தில் நீங்கள் எந்த ரகம் என நினைக்கிறீர்கள்? அந்த ரகம், இந்த ரகம் என தீர்மானிக்கும் முன் ஆய்வாளர்கள் சொல்லும் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நினைவில் கொள்ளுங்கள். பேஸ்புக் பயனாளிகளில் பலர், இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட வகையினருடன் தங்களை தொடர்பு படுத்துக்கொள்ளலாம் என்பது தான் அது. ஒன்றுக்கும் மேற்பட்ட வகையினரின் குணத்தை பார்க்க முடிந்தாலும், குறிப்பிட்ட ஒரு வகையின் தாக்கம் தூக்கலாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆய்வில் பங்கேற்றவர்களே கூட, இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என பதில் கூறினாலும், பெரும்பாலும் பார்த்தால் இது தான் என குறிப்பிட்ட ஒரு பிரிவின் பக்கம் சாய்ந்துள்ளனர். இனி, ஆய்வின் படி நீங்கள் எந்த வகை பேஸ்புக் பயனாளி என ஆய்வு செய்து கொள்ளுங்கள்!

 

 

தளம் புதிது: இணைய குலுக்கல் நடத்த உதவும் தளம்

நடைமுறை வாழ்க்கையில் செய்யும் பல விஷயங்களை இணையம் மூலம் இன்னும் எளிதாக செய்ய உதவும் இணையதளங்கள் பட்டியலில் நேம்பிக்கர்நிஞ்சா தளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த தளம், பல பெயர்களை கொண்ட பட்டியலில் இருந்து ஏதேனும் ஒரு பெயரை தேர்வு செய்ய உதவுகிறது. அதாவது பெயர்களை எல்லாம் துண்டு சீட்டுகளில் எழுதிப்போட்டு குலுக்கல் நடத்தி ஒரு பெயரை தேர்வு செய்வோம் அல்லவா? இது போன்ற நேரங்களில் இந்த தளத்தை பயன்படுத்தலாம்.

இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பட்டியலில் பெயர்களை எல்லாம் வரிசையாக தட்டச்சு செய்து, கோ எனும் கட்டளையை கிளிக் செய்தால், பட்டியலில் உள்ள பெயர்கள் வரிசையாக ஓடி, இறுதியில் ஒரு பெயர் மட்டும் முன்வைக்கப்படுகிறது.

சீட்டு குலுக்குப்போட பயன்படுத்தலாம். அதைவிட பள்ளி ஆசரியர்கள் மாணவர்கள் பெயர்களை எழுதி, அடுத்த கேள்வி யாரிடம் கேட்பது என தீர்மானிக்க பயன்படுத்தலாம். அடுத்த முறை அந்த பெயரை மட்டும் நீக்கவிட்டு புதிதாக பயன்படுத்தலாம். அல்லது, அந்த பெயரையும் வைத்துக்கொண்டு மீண்டும் ஒரு முறை பட்டியலை சுழலவிடலாம். கேள்விக்கு பதில் சொல்ல மட்டும், வகுப்பில் மாணவர் தலைவரை தேர்வு செய்யுவும் கூட இந்த முறையை பயன்படுத்தலாம்.

எளிமையான இணையதளம் தான். ஆனால் சுவாரஸ்யமானது.

இணைய முகவரி: http://namepickerninja.com/index.html

 

 

செயலிபுதிது; வானிலை அறிய உதவும் செயலி

வானிலை அறிவதற்கு இன்னொரு செயலியை தரவிறக்கம் செய்ய நான் தயாரில்லை என நினைப்பவர்கள் கூட, ட்பிள்யூடிஎச்.ஆர் எனும் வானிலை செயலியை பார்த்தால் மனம் மாறும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் இந்த செயலி, அத்தனை எளிமையான முறையில் வானிலை தகவல்களை அளித்து கவர்கிறது.

ஐபோனுக்கான உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி, வானிலை தகவல்களை அழகாக சுட்டிக்காட்டுகிறது. ஆனால் அதைத்தவிர வேறு எதையும் செய்வதில்லை. திரையில் அன்றைய தினத்திற்கான வானிலை தகவல் இடம்பெறுகிறது, அவ்வளவு தான். கூடுதலாக வேறு எந்த தகவலும் கிடையாது.

மினிமலிசம் என்று சொல்லப்படும், தேவையான குறைந்த பட்ச தகவல்களை மட்டுமே அளிக்கும் கோட்பாட்டிற்கு ஏற்ப இந்த செயலி வானியை விவரங்களை கச்சிதமாக அளிக்கிறது. இந்த தகவல்களும் கையால் வரையப்பட்ட மேகச்சித்திரத்துடன், கையான் எழுதிய எழுத்துக்கள் மூலம் தெரிவிக்கப்படுவது இன்னும் சிறப்பு.

 

மேலும் தகவல்களுக்கு: https://itunes.apple.com/app/id1252405260

 

 

 

People are seen as silhouettes as they check mobile devices whilst standing against an illuminated wall bearing Facebook Inc.s logo in this arranged photograph in London, U.K., on Wednesday, Dec. 23, 2015. Facebook Inc.s WhatsApp messaging service, with more than 100 million local users, is the most-used app in Brazil, according to an Ibope poll published on Dec. 15. Photographer: Chris Ratcliffe/Bloomberg via Getty Images

People are seen as silhouettes as they check mobile devices whilst standing against an illuminated wall bearing Facebook Inc.s logo in this arranged photograph in London, U.K., on Wednesday, Dec. 23, 2015. Facebook Inc.s WhatsApp messaging service, with more than 100 million local users, is the most-used app in Brazil, according to an Ibope poll published on Dec. 15. Photographer: Chris Ratcliffe/Bloomberg via Getty Images

சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கை நீங்கள் பயன்படுத்தும் முறை குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதாவது பேஸ்புக்கை எதற்காக, எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று நினைத்துப்பார்த்தது உண்டா? இதுவரை இப்படி யோசித்ததில்லை எனில், இப்போது, உங்கள் பேஸ்புக் பயன்பாடு குறித்து யோசியுங்கள். ஏனெனில், பேஸ்புக்கில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் எனும் கேள்விக்கான விடையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அது உங்களுக்கு பொருந்துகிறதா என பார்க்க, பேஸ்புக்கை நீங்கள் எப்படி எல்லாம் பயன்படுத்துகிறீர்கள் என்பதை கொஞ்சம் சுய ஆய்வுக்கு உள்ளாக்கி கொள்வது நல்லது தானே.

இனி பேஸ்புக் தொடர்பான ஆய்வை பார்ப்போம்.

பேஸ்புக்கின் தாக்கமும், வீச்சும் அதன் பயனாளிகள் அறிந்தது தான். அண்மை புள்ளிவிவரப்படி பேஸ்புக் 200 கோடி பேர் பயனாளிகளுக்கு மேல் பெற்றுள்ளது. சராசரியாக ஒவ்வொரு நாளுன் 128 கோடி பேர் அதை பயன்படுத்துகின்றனர். பேஸ்புக் பயனாளி சராசரியாக தினமும் 35 நிமிடம் இந்த தளத்தில் செல்வு செய்கிறார்.  இவர்கள் ஒவ்வொருவரும் பேஸ்புக்கை ஒவ்வொரு விதமாக பயன்படுத்தலாம். நோக்கங்களும் மாறுபடலாம். ஆனால் இந்த இரண்டிலுமே பரவலான பொதுத்தன்மைகளை காணலாம்.

இந்த பொதுத்தன்மையை தான் அமெரிக்க ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு மூலம் கண்டறிந்து அறிக்கையாக தந்துள்ளனர். பிரிகாம் யங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்த ஆய்வாளர்கள் முன்வைக்கும் கண்டுபிடிப்பு என்னவெனில் பேஸ்புக் பயனாளிகளை அடிப்படையில் நான்கு வகையாக பிரிக்கலாம் என்பது தான். அதாவது பேஸ்புக் பயனாளிகளில் நான்கு வகை இருப்பதாக இந்த ஆய்வு சொல்கிறது.

உறவுகளை வலுப்படுத்துபவர்கள், தண்டோரா போடுபவர்கள், சுயபுராணம் பாடுபவர்கள் மற்றும் வேடிக்கை பார்ப்பவர்கள் என இந்த நான்கு வகையான பயனாளிகளை அமைகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையினருக்கான பேஸ்புக் குணங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

முதல் வகையான உறவுகளை மேம்படுத்துபவர்கள், பேஸ்புக்கை தங்கள் நிஜ வாழ்க்கையின் நீட்டிப்பாக, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பயன்படுத்திக்கொள்கின்றனர். இவர்கள் நிலைத்தகவல்களை வெளியிடுவதற்கு பின்னே உறவுக்கு கைகொடுப்போம் என்ற நோக்கம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது பேஸ்புக்கிற்கு வெளியே உள்ள உறவுகளை வலுப்படுத்திக்கொள்வதற்காக தான் நிலைத்தகவல்களை வெளியிடுவதிலும், பதிவுகளுக்கு பதில் சொல்வதிலும் இவர்கள் கவனம் செலுத்துகின்றனர். கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கிறது என்றாலும், குடும்பத்தின் மீதான அன்பை வெளிப்படுத்தவும், அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தவும் பேஸ்புக் உதவுவதாக இந்த பிரிவினர் கூறியிருக்கின்றனர். இந்த பிரிவினர் ஒளிப்படங்களையும், காணொலிகளையும் அதிகம் பகிர்கின்றனர்.

இரண்டாவது பிரிவினர் தண்டோரா போடுபவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு தங்களை வெளிப்படுத்திக்கொள்வதைவிட உலகில் என்ன நடக்கிறது என்பதையும், நாட்டு நடப்புகளை பதிவு செய்வதிலும் தான் ஆர்வம் அதிகம். இவர்கள் பெரும்பாலும் செய்திகளையும் நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்கின்றனர். அதே நேரத்தில் தங்கள் அறிமுக பக்கத்தை அப்டேட் செய்வதில் அதிக ஆர்வம் காட்டாதவர்களாக இருக்கின்றனர்.

மூன்றாவது பிரிவினர் சுயநல செல்பீக்கள். அதாவது தங்களை முன்னிறுத்திக்கொள்ளவும், விளம்பரப்படுத்திக்கொள்ளவும் பேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள். முதல் பிரிவினரைப்போலவே இவர்களும் ஒளிப்படங்கள் மற்றும் காணொலிகளை அதிகம் பகிர்ந்தாலும் நோக்கம் எல்லாம், இவற்றுக்கு எத்த்தனை லைக்குகள் குவிகின்றன என்பதிலேயே இருக்கின்றன. எந்த அளவுக்கு லைக் தொடர்பான அறிவிப்புகள் வருகின்றனவோ அந்த அளவு சக மனிதர்களால் அங்கீகரிக்கப்படுவதாக நினைக்கின்றனர்.

சரியோ தவறோ தங்களைப்பற்றிய ஒரு பிம்பத்தை பேஸ்புக் மூலம் உருவாக்குவது தான் செல்பி பிரிவினரின் நோக்கமாக அமைகிறது.

நான்காவது பிரிவினர், ஷாப்பிங் மால்களில் எதையும் வாங்காமல் அப்படியே உலா வந்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கு நிகரானவர்கள். இவர்கள் பேஸ்புக்கிலும் இப்படி தான் செய்து கொண்டிருக்கின்றனர். தங்களைப்பற்றி தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டாமல், மற்றவர்கள் என்ன செய்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள முற்படும் கில்லாடிகளாக இருக்கின்றனர். பேஸ்புக்கில் யாரது பக்கத்தை வேண்டுமானாலும் எட்டிப்பார்த்து அவர்கள் விருப்பு வெறுப்புகளை தெரிந்து கொள்வேன் என்று கூறுபவர்களாக இந்த பிரிவினர் இருக்கின்றனர்.

இந்த நான்கு வகை பேஸ்புக் பயனாளிகளில் தண்டோரா போடுபவர்களும், வேடிக்கை பார்ப்பவர்களும் புதிதாக வெளிச்சத்திற்கு வந்து இருப்பவர்கள் என ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் டாம் ராபின்சன் வியப்புடன் கூறியுள்ளார். ஏனெனில், இதற்கு முன்னரும் பேஸ்புக் பயன்பாடு தொடர்பாக பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் பேஸ்புக் பயனாளிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையினருடன் பொருத்திப்பார்க்கும் போது, உறவுகளை மேம்படுத்துபவர்களும், சுய புராணம் பார்ப்பவர்களும் எற்கனவே அறியப்பட்டுள்ளனர். ஆனால் மற்ற இரு பிரிவினரும் புதிதாக உள்ளனர் என ராபின்சன் கூறுகிறார்.

இந்த இரு பிரிவினர் குறித்து இதுவரை யாரும் அதிகம் பேசியதில்லை என்று கூறுபவ தங்கள் ஆய்வில் இவர்கள் மிகவும் பொருத்தமானவர்களாக தெரிகின்றனர் என்கிறார்.

ராபின்சனும் குழுவினரும் இந்த ஆய்வை மிக விரிவாகவே நடத்தியுள்ளனர். பேஸ்புக்குடனான தொடர்பு குறித்து 48 விதமான வாசகங்களை கொடுத்து அதற்கான கருத்துக்களை பயனாளிகளிடம் இருந்து பெற்று அதன் பிறகு தனிப்பட்ட கேள்விகளை கேட்டு ஆய்வை நடத்தியுள்ளனர். மக்கள் ஏன் பேஸ்புக்கில் தங்கள் வாழ்க்கையை வெளிப்படுத்திக்கொள்ள முற்படுகின்றனர் என்பதை ஆதார கேள்வியாக கொண்டு ஆய்வு நடந்திருக்கிறது.

ஆய்வு முடிவுகள் சுவாரஸ்யம் தருபவையாக இருப்பதோடு சிந்திக்கவும் வைக்கின்றனர். எல்லாம் சரி, இந்த நான்கு ரகத்தில் நீங்கள் எந்த ரகம் என நினைக்கிறீர்கள்? அந்த ரகம், இந்த ரகம் என தீர்மானிக்கும் முன் ஆய்வாளர்கள் சொல்லும் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நினைவில் கொள்ளுங்கள். பேஸ்புக் பயனாளிகளில் பலர், இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட வகையினருடன் தங்களை தொடர்பு படுத்துக்கொள்ளலாம் என்பது தான் அது. ஒன்றுக்கும் மேற்பட்ட வகையினரின் குணத்தை பார்க்க முடிந்தாலும், குறிப்பிட்ட ஒரு வகையின் தாக்கம் தூக்கலாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆய்வில் பங்கேற்றவர்களே கூட, இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என பதில் கூறினாலும், பெரும்பாலும் பார்த்தால் இது தான் என குறிப்பிட்ட ஒரு பிரிவின் பக்கம் சாய்ந்துள்ளனர். இனி, ஆய்வின் படி நீங்கள் எந்த வகை பேஸ்புக் பயனாளி என ஆய்வு செய்து கொள்ளுங்கள்!

 

 

தளம் புதிது: இணைய குலுக்கல் நடத்த உதவும் தளம்

நடைமுறை வாழ்க்கையில் செய்யும் பல விஷயங்களை இணையம் மூலம் இன்னும் எளிதாக செய்ய உதவும் இணையதளங்கள் பட்டியலில் நேம்பிக்கர்நிஞ்சா தளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த தளம், பல பெயர்களை கொண்ட பட்டியலில் இருந்து ஏதேனும் ஒரு பெயரை தேர்வு செய்ய உதவுகிறது. அதாவது பெயர்களை எல்லாம் துண்டு சீட்டுகளில் எழுதிப்போட்டு குலுக்கல் நடத்தி ஒரு பெயரை தேர்வு செய்வோம் அல்லவா? இது போன்ற நேரங்களில் இந்த தளத்தை பயன்படுத்தலாம்.

இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பட்டியலில் பெயர்களை எல்லாம் வரிசையாக தட்டச்சு செய்து, கோ எனும் கட்டளையை கிளிக் செய்தால், பட்டியலில் உள்ள பெயர்கள் வரிசையாக ஓடி, இறுதியில் ஒரு பெயர் மட்டும் முன்வைக்கப்படுகிறது.

சீட்டு குலுக்குப்போட பயன்படுத்தலாம். அதைவிட பள்ளி ஆசரியர்கள் மாணவர்கள் பெயர்களை எழுதி, அடுத்த கேள்வி யாரிடம் கேட்பது என தீர்மானிக்க பயன்படுத்தலாம். அடுத்த முறை அந்த பெயரை மட்டும் நீக்கவிட்டு புதிதாக பயன்படுத்தலாம். அல்லது, அந்த பெயரையும் வைத்துக்கொண்டு மீண்டும் ஒரு முறை பட்டியலை சுழலவிடலாம். கேள்விக்கு பதில் சொல்ல மட்டும், வகுப்பில் மாணவர் தலைவரை தேர்வு செய்யுவும் கூட இந்த முறையை பயன்படுத்தலாம்.

எளிமையான இணையதளம் தான். ஆனால் சுவாரஸ்யமானது.

இணைய முகவரி: http://namepickerninja.com/index.html

 

 

செயலிபுதிது; வானிலை அறிய உதவும் செயலி

வானிலை அறிவதற்கு இன்னொரு செயலியை தரவிறக்கம் செய்ய நான் தயாரில்லை என நினைப்பவர்கள் கூட, ட்பிள்யூடிஎச்.ஆர் எனும் வானிலை செயலியை பார்த்தால் மனம் மாறும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் இந்த செயலி, அத்தனை எளிமையான முறையில் வானிலை தகவல்களை அளித்து கவர்கிறது.

ஐபோனுக்கான உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி, வானிலை தகவல்களை அழகாக சுட்டிக்காட்டுகிறது. ஆனால் அதைத்தவிர வேறு எதையும் செய்வதில்லை. திரையில் அன்றைய தினத்திற்கான வானிலை தகவல் இடம்பெறுகிறது, அவ்வளவு தான். கூடுதலாக வேறு எந்த தகவலும் கிடையாது.

மினிமலிசம் என்று சொல்லப்படும், தேவையான குறைந்த பட்ச தகவல்களை மட்டுமே அளிக்கும் கோட்பாட்டிற்கு ஏற்ப இந்த செயலி வானியை விவரங்களை கச்சிதமாக அளிக்கிறது. இந்த தகவல்களும் கையால் வரையப்பட்ட மேகச்சித்திரத்துடன், கையான் எழுதிய எழுத்துக்கள் மூலம் தெரிவிக்கப்படுவது இன்னும் சிறப்பு.

 

மேலும் தகவல்களுக்கு: https://itunes.apple.com/app/id1252405260

 

 

 

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.