டிஜிட்டல் தலைமுறைக்கு தனித்திறன் உண்டா?

GettyImages-150007692டிஜிட்டல் உலகிலும் மண்ணின் மைந்தர்கள் உண்டு. இவர்கள் டிஜிட்டல் பூர்வகுடிகள் என குறிப்பிடப்படுகின்றனர். ஆங்கிலத்தில் டிஜிட்டல் நேட்டிவஸ்!. பொதுவாக 1980 களுக்கு பிறகு பிறந்த தற்கால தலைமுறையினர் அனைவரும் இந்த பிரிவின் கீழ் வருகின்றனர். அதற்கு முந்தைய தலைமுறையினர் எல்லோரும் டிஜிட்டல் குடியேறிவர்கள் என கருதப்படுகின்றனர். இதை பாகுபாடு என கொள்வதா அல்லது வகைப்படுத்தல் என கொள்வதா என்பது கேள்விக்குறியது தான்.

இணையம் தொழில்நுட்பங்களையும், டிஜிட்டல் கருவிகளையும், சேவைகளையும் வெகு இயல்பாக பயன்படுத்தும் திறன் அடிப்படையில் இந்த வகைப்படுத்தல் அமைகிறது. இப்போது பிறக்கும் குழந்தைகள் ஐபேட் சாதனத்துடனும், ஸ்மார்ட்போனுடனும் பிறப்பதாக நாமே கூட பல முறை வியப்பதுண்டு அல்லவா! இப்படி வியக்க வைக்கும் பிள்ளைகள் தான் டிஜிட்டல் பூர்வகுடிகள். டிஜிட்டல் உலகம் அவர்களின் தாய் வீடு போல. எனவே அவர்களால் கம்ப்யூட்டரையும், ஸ்மார்ட்போனையும், பேஸ்புக்கையும், வாட்ஸ் அப்பையும் தானாகவே பழகிக்கொள்ள முடியும். டிஜிட்டல் சங்கதி என்று வரும் போது அவர்கள் பெற்றோர்களுக்கு மட்டும் அல்ல ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தக்கூடியவர்களாக இருப்பதாகவும் சொல்லலாம்.

இப்படி கம்ப்யூட்டரும், இணையமும் அவர்கள் உடன் பிறந்த நுட்பங்களாக இருப்பதால் கம்ப்யூட்டர் யுகத்திற்கு பிறந்தவர்கள் எல்லாம் டிஜிட்டல் மைந்தர்களாக அறியப்படுகின்றனர். முந்தைய தலைமுறையினர் இணைய பயன்பாட்டில் என்ன தான் கில்லாடிகளாக இருந்தாலும், அவர்கள் டிஜிட்டல் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு புதிய யுகத்திற்கு ஏற்ப மாறியவர்களாக கருதப்படுவதால், டிஜிட்டல் உலகில் குடியேறிவர்களாக குறிப்பிடப்படுகின்றனர். அதாவது டிஜிட்டல் இமிகிரண்ட்ஸ்!.

இந்த வகைப்படுத்தல் எந்த அளவுக்கு சரி என்பது இருக்கட்டும், இக்கால தலைமுறை டிஜிட்டல் தலைமுறையாக கருதப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே இருக்கிறது. இளம் பெண்களும், பையன்களும், கையில் போனை வைத்துக்கொண்டு குறுஞ்செய்தி தட்டச்சு செய்யும் வேகத்தையும், காதில் இயர்போனை மாட்டிக்கொண்டு தன்னை மறந்தவர்களாக உலாவுவதையும் பார்க்கும் போது இவர்கள் வேறு கிரகத்தில் இருந்து வந்தவர்கள் போல தான் தோன்றும். இந்த அளவுக்கு தொழில்நுட்ப உலகில் மூழ்கி விடுவது நமக்கெல்லாம் சாத்தியம் இல்லை என முந்தைய தலைமுறையினர் எண்ணலாம்.

ஆனால் விஷயம் என்னவெனில் இதெல்லாம் வெற்று மாயை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது தான். அதாவது முந்தைய தலைமுறையோ, இந்த தலைமுறையோ தொழில்நுட்ப பயன்பாடு என்று வரும் போது, யாருக்கும் தனித்திறன் எல்லாம் கிடையாது எனத்தெரிவித்துள்ளனர். டிஜிட்டல் பூர்வகுடிகள் எனும் கருத்தாக்க பலூனை ஊசியால் குத்தி காற்றுப்போக வைத்திருக்கும் இந்த ஆய்வை பற்றி பார்ப்பதற்கு முன், அமெரிக்க கல்வியாளரான மார்க் பிரென்ஸ்கை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. ஏனெனில் இவர் தான், டிஜிட்டல் பூர்வகுடிகள் எனும் கருத்தாக்கத்தை துவக்கி வைத்தவர்.

2001 ம் ஆண்டு அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் தான் டிஜிட்டல் பூர்வகுடிகள், டிஜிட்டல் குடியேறியேறிவர்கள் எனும் கருத்தாக்கத்தை முன்வைத்திருந்தார். கட்டுரையின் தலைப்பே ’டிஜிட்டல் பூர்வகுடிகள், டிஜிட்டல் குடியேறியேறிவர்கள்’ என அமைந்திருந்தது. அமெரிக்க கல்வித்தரத்தில் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் வீழ்ச்சி பற்றிய விவாதத்துடன் துவங்கிய இந்த கட்டுரையில், இதற்கான மூலக்காரணம் நம்முடைய மாணவர்கள் எல்லாம் மிகவும் மாறிவிட்டனர், இன்றைய மாணவர்கள் நம்முடைய கல்வி அமைப்பு கற்றுத்தரக்கூடியவர்களாக இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

கல்வி அமைப்பில் தேவையான மாற்றத்தை தொடர்ந்து வலியுறுத்தியவர், இன்றைய மாணவர்கள் புதிய மாணவர்களாக இருக்கின்றனர், அவர்கள் கம்ப்யூட்டர், வீடியோகேம், இணையத்தின் மொழியை இயல்பாக பேசும் டிஜிட்டல் பூர்வகுடிகளாக இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். மற்றவர்கள் எல்லாம், அதாவது டிஜிட்டல் உலகில் பிறக்காமல் புதிய தொழில்நுட்பத்தின் அம்சங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றை கற்றுக்கொண்டவர்களாகவே இருப்பதால் அவர்களை டிஜிட்டல் குடியேறியவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். கல்வியாளர்களும், வர்த்தக நிறுவனங்களும் பழைய வழிகளை தூக்கியெறிந்துவிட்டு, டிஜிட்டல் தலைமுறைக்கு ஏற்ற புதிய வழிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இந்த கட்டுரையில் வாதிட்டிருந்தார்.

இதன் பிறகு டிஜிட்டல் பூர்வகுடிகள் எனும் கருத்தாக்கம் மெல்ல வலுப்பெற்று பரவலாகி விட்டது. கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்நுட்பங்கள் நிறைந்த யுகத்தில் பிறந்து வளரும் தலைமுறை, டிஜிட்டல் நுட்பங்களை தாய்மொழி போல கற்றுக்கொண்டு விடுவதாகவும் கருதுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கருத்தாக்கம் அறிவியல் சார்ந்தது அல்ல என்பது மட்டும் அல்ல, இடைப்பட்ட காலத்தில் பல ஆய்வுகள் இந்த கருத்தாக்கத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன.

இந்த வரிசையில் தான் அண்மையில், நெதர்லாந்து ஆய்வாளர் பால் கிற்ச்னர் ( ) மற்றும் அவரது சகா பெட்ரோ டி புருக்கரே ( ) இணைந்து நடத்திய ஆய்வு அமைந்துள்ளது. ’டீச்சிங் அண்ட் டிச்சர் எஜுகேஷன்’ எனும் சஞ்சிகையில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, டிஜிட்டல் பூர்வகுடிகள் என இக்கால தலைமுறையினரை கருதுவதே ஒரு மாயை என தெரிவிக்கிறது. உயர் கல்வியில் நுழையும் புதிய இளம் மாணவர் தலைமுறைக்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், இணைய தலைமுறை மற்றும் டிஜிட்டல் பூர்வகுடிகள் என்று சொல்வதெல்லாம் இப்போது நிகழும் மாற்றத்தை பிரதிபலிப்பதாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் தலைமுறையைச்சேர்ந்த பலரும், முந்தைய தலைமுறை ;போல தான் தொழிநுட்பத்தை பயன்படுத்துவதாகவும் ஆய்வு தெரிவிப்பதாக இது தொடர்பான நேச்சர் பத்திரிகை கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

மக்களை வழக்கமான முறையில் கற்றுக்கொள்ளக்குடியவர்களாக தான் பார்க்க வேண்டுமேத்தவிர, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை விஷேச திறன் கொண்டவர்களாக பார்க்க முடியாது என்று ஆய்வை முன்னின்று நடத்திய பால் கிற்ச்னர் கூறியுள்ளார். அது மட்டும் அல்ல, இணைய தலைமுறை ஒரே நேரத்தில் பல வேலை பார்க்க கூடியவர்களாக இருப்பதாக கூறப்படுவதையும் இந்த ஆய்வு மறுத்துள்ளது. வகுப்பில் பாடம் கேட்டுக்கொண்டே, போனில் செய்தி அனுப்புவது ஒரே நேரத்தில் பலவற்றை செய்யும் மல்டிடாஸ்கிங் ஆற்றல் அல்ல, பாடத்தில் கவனம் செல்லாமல் இருப்பது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் யுகம் தொடர்பான பிரதான மாயை தகர்க்கும் வகையிலான இந்த ஆய்வு பலவிதங்களில் இது முக்கியமானது தான். ஏனெனில் டிஜிட்டல் பூர்வகுடிகள் என்று யாருமே கிடையாது என இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த மாயை கலைவது நல்லது தான்.

இந்த இடத்தில், டிஜிட்டல் பூர்வகுடிகள் கருத்தாக்கத்தை முதலில் தெரிவித்த மார்க் பெர்ன்ஸ்கையை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். பெர்ன்ஸ்கை, இந்த கருத்தாக்கம் ஏற்படுத்திய விவாதங்களையும், சர்ச்சையையும் அறியாமல் இல்லை. எனவே தான் இந்த கருத்தாக்கத்திற்கு ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். டிஜிட்டல் பூர்வகுடி எனும் பதத்தை பலரும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர், நம்மைச்சுற்றி நடக்கும் மாற்றத்தை குறிப்பதற்கான உருவகமே இந்த பதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பிறந்தவர்களுக்கு எல்லாம் தொழில்நுட்பம் பற்றி எல்லாம் தெரியும் எனும் அர்ததத்தில் இந்த பதம் அமையவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார். இந்த பதம் உண்மையில், தொழில்நுட்பம் தொடர்பான அணுகுமுறையை மட்டுமே குறிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அது மட்டும் அல்ல, இந்த பதத்திற்கு பதிலாக டிஜிட்டல் ஞானம் எனும் பதத்தை அவர் பயன்படுத்தி வருகிறார்.: http://marcprensky.com/digital-native/

 

 

தளம் புதிது: பிட்காயினால் என்ன பயன்?

எண்ம நாணயம், இணைய நாணயம் என்றெல்லாம் பலவிதமாக குறிப்பிடப்படும் மெய்நிகர் நாணயமான பிட்காயின் தொடர்பான ஆர்வம் பரவலாக அதிகரித்து வருவதோடு, அதன் மதிப்பும் அதிகரித்தபடி தான் இருக்கிறது. மையமில்லாத பணம், எதிர்கால பணம் போன்ற காரணங்களுக்காக பிட்காயினை ஆதரிப்பவர்கள் இருந்தாலும், பிட்காயினை ஒரு முதலீடாக பார்ப்பவர்களும் இருக்கின்றனர். அதற்கேற்பவே பிட்காயினுக்கு நிகரான மதிப்பும் எக்கச்சக்கமாக உயர்ந்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் கொஞ்சம் போல பிட்காயினை வாங்கி வைத்திருந்தால் இன்று அதன் மதிப்பு எங்கோ போயிருக்கும் என்றும் சொல்லப்படுவதுண்டு. இப்படி பிட்காயின் மதிப்பு எங்கே போயிருக்கும் என்பதை உணர்த்துவதற்காக என்றே ஒரு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. வாட் இப் பிட்காயின் எனும் அந்த தளத்தில் 2011 ம் ஆண்டு முதல் பிட்காயினில் முதலீடு செய்திருந்தால் அதற்கு இப்போது என்ன மதிப்பு இருக்கும் என கணக்கிட்டு சொல்லப்படுகிறது.

பிட்காயின் மதிப்பை தெரிந்து கொள்ள இந்த இணையதளம் உதவலாம். ஆனால் இந்த தளத்தைப்பார்த்துவிட்டு பிட்காயினை வாங்க தீர்மானிப்பது எல்லாம் ரிஸ்கானதாக இருக்கும். ஏனெனில் பிட்காயினை ஒரு முதலீடாக கருதலாம் தப்பில்லை. ஆனால் எல்லா முதலீடுகள் போலவே அதுவும் ரிஸ்கானது தான் என்பதை உணர வேண்டும்.

இணைய முகவரி: http://whatifbitcoin.com

 

செயலி புதிது; ஒளிப்படங்களை மேம்படுத்தும் செயலி

ஸ்மார்ட்போன்களில் ஒளிப்படங்களை எடுக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு உதவக்கூடிய பல்வேறு காமிரா செயலிகள் இருக்கின்றன. இந்த வரிசையில் ஓபம் காமிரா செயலியையும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஒளிப்படக்காட்சிகளை அசைவுகள் இல்லாமல் தானாக நிலைப்படுத்துவது உள்பட பல்வேறு அம்சங்களை இந்த செயலி கொண்டிருக்கிறது. குரல் வழி மூலுமும் இதில் படம் எடுக்கலாம். சுயபடங்கள் எடுப்பதற்கான விஷேச வசதியும் இருக்கிறது.

படங்களின் கோப்பு அளவு சிறியதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிப்புற மைக்ரோபோனை இணைக்கும் வசதியும் உள்ளது. படத்துடன் நாள் , நேரம் ஆகிய விவரங்களை சேர்ப்பதோடு, ஒளிப்பட குறிப்பையும் சேர்க்கலாம். பல வகையான காட்சி அமைப்பு மற்றும் வண்ணம் சேர்க்கும் வசதியும் உள்ளது.

மேலும் தகவல்களுக்கு: http://opencamera.org.uk/

GettyImages-150007692டிஜிட்டல் உலகிலும் மண்ணின் மைந்தர்கள் உண்டு. இவர்கள் டிஜிட்டல் பூர்வகுடிகள் என குறிப்பிடப்படுகின்றனர். ஆங்கிலத்தில் டிஜிட்டல் நேட்டிவஸ்!. பொதுவாக 1980 களுக்கு பிறகு பிறந்த தற்கால தலைமுறையினர் அனைவரும் இந்த பிரிவின் கீழ் வருகின்றனர். அதற்கு முந்தைய தலைமுறையினர் எல்லோரும் டிஜிட்டல் குடியேறிவர்கள் என கருதப்படுகின்றனர். இதை பாகுபாடு என கொள்வதா அல்லது வகைப்படுத்தல் என கொள்வதா என்பது கேள்விக்குறியது தான்.

இணையம் தொழில்நுட்பங்களையும், டிஜிட்டல் கருவிகளையும், சேவைகளையும் வெகு இயல்பாக பயன்படுத்தும் திறன் அடிப்படையில் இந்த வகைப்படுத்தல் அமைகிறது. இப்போது பிறக்கும் குழந்தைகள் ஐபேட் சாதனத்துடனும், ஸ்மார்ட்போனுடனும் பிறப்பதாக நாமே கூட பல முறை வியப்பதுண்டு அல்லவா! இப்படி வியக்க வைக்கும் பிள்ளைகள் தான் டிஜிட்டல் பூர்வகுடிகள். டிஜிட்டல் உலகம் அவர்களின் தாய் வீடு போல. எனவே அவர்களால் கம்ப்யூட்டரையும், ஸ்மார்ட்போனையும், பேஸ்புக்கையும், வாட்ஸ் அப்பையும் தானாகவே பழகிக்கொள்ள முடியும். டிஜிட்டல் சங்கதி என்று வரும் போது அவர்கள் பெற்றோர்களுக்கு மட்டும் அல்ல ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தக்கூடியவர்களாக இருப்பதாகவும் சொல்லலாம்.

இப்படி கம்ப்யூட்டரும், இணையமும் அவர்கள் உடன் பிறந்த நுட்பங்களாக இருப்பதால் கம்ப்யூட்டர் யுகத்திற்கு பிறந்தவர்கள் எல்லாம் டிஜிட்டல் மைந்தர்களாக அறியப்படுகின்றனர். முந்தைய தலைமுறையினர் இணைய பயன்பாட்டில் என்ன தான் கில்லாடிகளாக இருந்தாலும், அவர்கள் டிஜிட்டல் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு புதிய யுகத்திற்கு ஏற்ப மாறியவர்களாக கருதப்படுவதால், டிஜிட்டல் உலகில் குடியேறிவர்களாக குறிப்பிடப்படுகின்றனர். அதாவது டிஜிட்டல் இமிகிரண்ட்ஸ்!.

இந்த வகைப்படுத்தல் எந்த அளவுக்கு சரி என்பது இருக்கட்டும், இக்கால தலைமுறை டிஜிட்டல் தலைமுறையாக கருதப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே இருக்கிறது. இளம் பெண்களும், பையன்களும், கையில் போனை வைத்துக்கொண்டு குறுஞ்செய்தி தட்டச்சு செய்யும் வேகத்தையும், காதில் இயர்போனை மாட்டிக்கொண்டு தன்னை மறந்தவர்களாக உலாவுவதையும் பார்க்கும் போது இவர்கள் வேறு கிரகத்தில் இருந்து வந்தவர்கள் போல தான் தோன்றும். இந்த அளவுக்கு தொழில்நுட்ப உலகில் மூழ்கி விடுவது நமக்கெல்லாம் சாத்தியம் இல்லை என முந்தைய தலைமுறையினர் எண்ணலாம்.

ஆனால் விஷயம் என்னவெனில் இதெல்லாம் வெற்று மாயை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது தான். அதாவது முந்தைய தலைமுறையோ, இந்த தலைமுறையோ தொழில்நுட்ப பயன்பாடு என்று வரும் போது, யாருக்கும் தனித்திறன் எல்லாம் கிடையாது எனத்தெரிவித்துள்ளனர். டிஜிட்டல் பூர்வகுடிகள் எனும் கருத்தாக்க பலூனை ஊசியால் குத்தி காற்றுப்போக வைத்திருக்கும் இந்த ஆய்வை பற்றி பார்ப்பதற்கு முன், அமெரிக்க கல்வியாளரான மார்க் பிரென்ஸ்கை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. ஏனெனில் இவர் தான், டிஜிட்டல் பூர்வகுடிகள் எனும் கருத்தாக்கத்தை துவக்கி வைத்தவர்.

2001 ம் ஆண்டு அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் தான் டிஜிட்டல் பூர்வகுடிகள், டிஜிட்டல் குடியேறியேறிவர்கள் எனும் கருத்தாக்கத்தை முன்வைத்திருந்தார். கட்டுரையின் தலைப்பே ’டிஜிட்டல் பூர்வகுடிகள், டிஜிட்டல் குடியேறியேறிவர்கள்’ என அமைந்திருந்தது. அமெரிக்க கல்வித்தரத்தில் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் வீழ்ச்சி பற்றிய விவாதத்துடன் துவங்கிய இந்த கட்டுரையில், இதற்கான மூலக்காரணம் நம்முடைய மாணவர்கள் எல்லாம் மிகவும் மாறிவிட்டனர், இன்றைய மாணவர்கள் நம்முடைய கல்வி அமைப்பு கற்றுத்தரக்கூடியவர்களாக இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

கல்வி அமைப்பில் தேவையான மாற்றத்தை தொடர்ந்து வலியுறுத்தியவர், இன்றைய மாணவர்கள் புதிய மாணவர்களாக இருக்கின்றனர், அவர்கள் கம்ப்யூட்டர், வீடியோகேம், இணையத்தின் மொழியை இயல்பாக பேசும் டிஜிட்டல் பூர்வகுடிகளாக இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். மற்றவர்கள் எல்லாம், அதாவது டிஜிட்டல் உலகில் பிறக்காமல் புதிய தொழில்நுட்பத்தின் அம்சங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றை கற்றுக்கொண்டவர்களாகவே இருப்பதால் அவர்களை டிஜிட்டல் குடியேறியவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். கல்வியாளர்களும், வர்த்தக நிறுவனங்களும் பழைய வழிகளை தூக்கியெறிந்துவிட்டு, டிஜிட்டல் தலைமுறைக்கு ஏற்ற புதிய வழிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இந்த கட்டுரையில் வாதிட்டிருந்தார்.

இதன் பிறகு டிஜிட்டல் பூர்வகுடிகள் எனும் கருத்தாக்கம் மெல்ல வலுப்பெற்று பரவலாகி விட்டது. கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்நுட்பங்கள் நிறைந்த யுகத்தில் பிறந்து வளரும் தலைமுறை, டிஜிட்டல் நுட்பங்களை தாய்மொழி போல கற்றுக்கொண்டு விடுவதாகவும் கருதுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கருத்தாக்கம் அறிவியல் சார்ந்தது அல்ல என்பது மட்டும் அல்ல, இடைப்பட்ட காலத்தில் பல ஆய்வுகள் இந்த கருத்தாக்கத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன.

இந்த வரிசையில் தான் அண்மையில், நெதர்லாந்து ஆய்வாளர் பால் கிற்ச்னர் ( ) மற்றும் அவரது சகா பெட்ரோ டி புருக்கரே ( ) இணைந்து நடத்திய ஆய்வு அமைந்துள்ளது. ’டீச்சிங் அண்ட் டிச்சர் எஜுகேஷன்’ எனும் சஞ்சிகையில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, டிஜிட்டல் பூர்வகுடிகள் என இக்கால தலைமுறையினரை கருதுவதே ஒரு மாயை என தெரிவிக்கிறது. உயர் கல்வியில் நுழையும் புதிய இளம் மாணவர் தலைமுறைக்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், இணைய தலைமுறை மற்றும் டிஜிட்டல் பூர்வகுடிகள் என்று சொல்வதெல்லாம் இப்போது நிகழும் மாற்றத்தை பிரதிபலிப்பதாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் தலைமுறையைச்சேர்ந்த பலரும், முந்தைய தலைமுறை ;போல தான் தொழிநுட்பத்தை பயன்படுத்துவதாகவும் ஆய்வு தெரிவிப்பதாக இது தொடர்பான நேச்சர் பத்திரிகை கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

மக்களை வழக்கமான முறையில் கற்றுக்கொள்ளக்குடியவர்களாக தான் பார்க்க வேண்டுமேத்தவிர, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை விஷேச திறன் கொண்டவர்களாக பார்க்க முடியாது என்று ஆய்வை முன்னின்று நடத்திய பால் கிற்ச்னர் கூறியுள்ளார். அது மட்டும் அல்ல, இணைய தலைமுறை ஒரே நேரத்தில் பல வேலை பார்க்க கூடியவர்களாக இருப்பதாக கூறப்படுவதையும் இந்த ஆய்வு மறுத்துள்ளது. வகுப்பில் பாடம் கேட்டுக்கொண்டே, போனில் செய்தி அனுப்புவது ஒரே நேரத்தில் பலவற்றை செய்யும் மல்டிடாஸ்கிங் ஆற்றல் அல்ல, பாடத்தில் கவனம் செல்லாமல் இருப்பது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் யுகம் தொடர்பான பிரதான மாயை தகர்க்கும் வகையிலான இந்த ஆய்வு பலவிதங்களில் இது முக்கியமானது தான். ஏனெனில் டிஜிட்டல் பூர்வகுடிகள் என்று யாருமே கிடையாது என இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த மாயை கலைவது நல்லது தான்.

இந்த இடத்தில், டிஜிட்டல் பூர்வகுடிகள் கருத்தாக்கத்தை முதலில் தெரிவித்த மார்க் பெர்ன்ஸ்கையை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். பெர்ன்ஸ்கை, இந்த கருத்தாக்கம் ஏற்படுத்திய விவாதங்களையும், சர்ச்சையையும் அறியாமல் இல்லை. எனவே தான் இந்த கருத்தாக்கத்திற்கு ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். டிஜிட்டல் பூர்வகுடி எனும் பதத்தை பலரும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர், நம்மைச்சுற்றி நடக்கும் மாற்றத்தை குறிப்பதற்கான உருவகமே இந்த பதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பிறந்தவர்களுக்கு எல்லாம் தொழில்நுட்பம் பற்றி எல்லாம் தெரியும் எனும் அர்ததத்தில் இந்த பதம் அமையவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார். இந்த பதம் உண்மையில், தொழில்நுட்பம் தொடர்பான அணுகுமுறையை மட்டுமே குறிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அது மட்டும் அல்ல, இந்த பதத்திற்கு பதிலாக டிஜிட்டல் ஞானம் எனும் பதத்தை அவர் பயன்படுத்தி வருகிறார்.: http://marcprensky.com/digital-native/

 

 

தளம் புதிது: பிட்காயினால் என்ன பயன்?

எண்ம நாணயம், இணைய நாணயம் என்றெல்லாம் பலவிதமாக குறிப்பிடப்படும் மெய்நிகர் நாணயமான பிட்காயின் தொடர்பான ஆர்வம் பரவலாக அதிகரித்து வருவதோடு, அதன் மதிப்பும் அதிகரித்தபடி தான் இருக்கிறது. மையமில்லாத பணம், எதிர்கால பணம் போன்ற காரணங்களுக்காக பிட்காயினை ஆதரிப்பவர்கள் இருந்தாலும், பிட்காயினை ஒரு முதலீடாக பார்ப்பவர்களும் இருக்கின்றனர். அதற்கேற்பவே பிட்காயினுக்கு நிகரான மதிப்பும் எக்கச்சக்கமாக உயர்ந்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் கொஞ்சம் போல பிட்காயினை வாங்கி வைத்திருந்தால் இன்று அதன் மதிப்பு எங்கோ போயிருக்கும் என்றும் சொல்லப்படுவதுண்டு. இப்படி பிட்காயின் மதிப்பு எங்கே போயிருக்கும் என்பதை உணர்த்துவதற்காக என்றே ஒரு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. வாட் இப் பிட்காயின் எனும் அந்த தளத்தில் 2011 ம் ஆண்டு முதல் பிட்காயினில் முதலீடு செய்திருந்தால் அதற்கு இப்போது என்ன மதிப்பு இருக்கும் என கணக்கிட்டு சொல்லப்படுகிறது.

பிட்காயின் மதிப்பை தெரிந்து கொள்ள இந்த இணையதளம் உதவலாம். ஆனால் இந்த தளத்தைப்பார்த்துவிட்டு பிட்காயினை வாங்க தீர்மானிப்பது எல்லாம் ரிஸ்கானதாக இருக்கும். ஏனெனில் பிட்காயினை ஒரு முதலீடாக கருதலாம் தப்பில்லை. ஆனால் எல்லா முதலீடுகள் போலவே அதுவும் ரிஸ்கானது தான் என்பதை உணர வேண்டும்.

இணைய முகவரி: http://whatifbitcoin.com

 

செயலி புதிது; ஒளிப்படங்களை மேம்படுத்தும் செயலி

ஸ்மார்ட்போன்களில் ஒளிப்படங்களை எடுக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு உதவக்கூடிய பல்வேறு காமிரா செயலிகள் இருக்கின்றன. இந்த வரிசையில் ஓபம் காமிரா செயலியையும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஒளிப்படக்காட்சிகளை அசைவுகள் இல்லாமல் தானாக நிலைப்படுத்துவது உள்பட பல்வேறு அம்சங்களை இந்த செயலி கொண்டிருக்கிறது. குரல் வழி மூலுமும் இதில் படம் எடுக்கலாம். சுயபடங்கள் எடுப்பதற்கான விஷேச வசதியும் இருக்கிறது.

படங்களின் கோப்பு அளவு சிறியதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிப்புற மைக்ரோபோனை இணைக்கும் வசதியும் உள்ளது. படத்துடன் நாள் , நேரம் ஆகிய விவரங்களை சேர்ப்பதோடு, ஒளிப்பட குறிப்பையும் சேர்க்கலாம். பல வகையான காட்சி அமைப்பு மற்றும் வண்ணம் சேர்க்கும் வசதியும் உள்ளது.

மேலும் தகவல்களுக்கு: http://opencamera.org.uk/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.