இன்னல் இல்லாமல் இன்னிசை கேட்கலாம்: பிளாக்செயின் தரும் புதுமைத்தீர்வு!

muஇணையத்தில் இசையை கேட்டு ரசிக்க புதிய வழி உருவாகி கொண்டிருக்கிறது. இந்த புதிய வழி நேர்மையானதாகவும், நியாயமானதாகவும் இருக்கிறது. அதில் காப்புரிமை சிக்கல் இல்லை. அதே நேரத்தில் அந்த வழி சமத்துவம் மிக்கதாகவும் இருக்கிறது. அனைத்து பங்கேற்பார்களுக்கும் அது சம விகிதத்தில் பயன் தருவதாக இருக்கிறது. அதாவது இசையை உருவாக்குபவர்களுக்கு மட்டும் அல்லாமல், அதை கேட்டு ரசிப்பவர்களுக்கும் பரிசளிக்கும் வகையில் இந்த முறை அமைந்துள்ளது. எதிர்காலத்தில் இசைத்துறையே மாற்றி அமைக்க கூடியதாக இது அமையலாம் என்கின்றனர்.

பிளாக்செயின் வாயிலாக இசையை கேட்டு ரசிப்பக்கும் வழியை தான் இவ்வாறு வர்ணிக்கின்றனர். கலைஞர்கள் நோக்கில் பார்த்தாலும் சரி, ரசிகர்கள் நோக்கில் பார்த்தாலும் சரி, இசைத்துறையை வாட்டி வதைக்குக்கொண்டிருக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் இது தீர்வாகும் என்கின்றனர். அதனால் தான் புதுயுக இசைக்கலைஞர்கள் பலர் ஆர்வத்துடன் இந்த முயற்சியில் பங்கெடுத்து வருகின்றனர். இசைப்பிரியர்கள் பற்றி கேட்கவே வேண்டாம், அவர்கள் இரட்டை உற்சாகத்தோடு இதை அரவணைக்க காத்திருக்கின்றனர்.

காப்புரிமை உள்ளிட்ட இசைத்துறை சிக்கல்களுக்கு பிளாக்செயின் எப்படி தீர்வாகும் என்று பார்ப்பதற்கு முன் முதலில் பிளாக்செயின் தொழில்நுட்பம் பற்றி சுருக்கமாக தெரிந்து கொண்டுவிடலாம். பிளாக்செயின் என்பது இன்று இணைய உலகில் பரபரப்பாக பேசப்படும் பிட்காயின் போன்ற எண்ம நாணயங்களுக்கு அடிப்படையாக இருக்கும் தொழில்நுட்பமாகும். பிட்காயின் கண்ணால் பார்க்க முடியாத, கையால் தொட முடியாத டிஜிட்டல் நாணயமாக இருக்கலாம், ஆனால் அதன் ஆதார அம்சமாக இருப்பது பிளாக்செயின் தொழில்நுட்பம் தான். அதன் மையமில்லா தன்மைக்கும், தனிநபரோ, அமைப்போ கட்டுப்படுத்தப்படாத நாணயமாக அது இருப்பதற்கும் மூலக்காரணம் பிளாக்செயின் தான்.

பிளாக்செயின் என்பதை பரவலாக்கப்பட்ட டிஜிட்டல் பதிவேடு என புரிந்து கொள்ளலாம். எந்த பரிவர்த்தனையை நிர்வகிக்கவும் பதிவேடு அவசியம். பிளாக்செயினும் இத்தகைய பதிவேடு தான். இது டிஜிட்டல் வடிவிலானது என்பது மட்டும் அல்ல, மையமில்லாதது என்பதும் முக்கியமானது. வழக்கமாக, பரிவர்த்தனை தகவல்களை ஒரு மைய பதிவேட்டில் பதிவு செய்து அதையை அனைத்து சரிபார்த்தலுக்கும் அடிப்படையாக கொள்கிறோம். இதற்கு மாறாக, ஒவ்வொருவர் கையிலும் ஒரு பதிவேடு இருந்து அவை அனைத்திலும் ஒவ்வொரு பரிவர்த்தனைகளும் பதிவு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். இதன் காரணமாக, மைய பதிவேட்டை சார்ந்திருக்கும் நிலை ஏற்படாது என்பதோடு, எந்த ஒரு பரிவர்த்தனையும் எல்லோருக்கும் தெரிந்ததாக, எல்லோராலும் அங்கீகரக்கப்படுவதாக அமையும். முக்கியமாக, இதில் நகலெடுப்பது, ஏமாற்றுவது எல்லாம் சாத்தியம் இல்லை. பிட்காயின் இப்படி தான் செயல்படுகிறது.

பிட்காயினின் இந்த குணாதிசயங்கள் எல்லாம் பிளாக்செயினால் சாத்தியமாகிறது. பிளாக்செயினில் ஒவ்வொரு புதிய பரிவர்த்தனையும், அதன் அனைத்து உறுப்பினர்களாலும் வெளிப்படையான முறையில் சரி பார்க்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. எனவே இது டிஜிட்டல் நாணயங்களை பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்ய உதவுகிறது.

டிஜிட்டல் நாணயம் என்றில்லை, பிளாக்செயினின் ஆதார தொழில்நுட்பத்தை எந்தவிதமான டிஜிட்டல் மதிப்பு அல்லது டிஜிட்டல் பொருட்களின் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தலாம் என்கின்றனர். இருதரப்பினரிடையிலான ஒப்பந்தங்களுக்கும் இதை பயன்படுத்தலாம் என்கின்றனர். உதாரணத்திற்கு நில விற்பனை பதிவுகளை பிளாக்செயினில் மேற்கொள்வது பாதுகாப்பாக அமையும் என்கின்றனர். பிளாக்செயினில் பதிவு செய்யும் போது, யார் யாருக்கு விற்றது எனும் விவரம் எத்தனை பேர் கைகளுக்கு மாறினாலும் தெளிவாக தெரியும் என்பதால் நில மோசடிகளுக்கு வழியில்லாமல் போகும் என்கின்றனர்.

நில பதிவு மட்டும் அல்ல, மருத்துவ பதிவுகள் துவங்கி, வங்கி பரிவர்த்தனைகள் வரை எல்லா விதமான தகவல்களையும் பிளாக்செயினில் பதிவேற்றி பாதுகாப்பாகவும், மோசடிக்கு வழியில்லாமலும் பயன்படுத்தலாம் என்கின்றனர்.

இந்த வகையில் தான் இசையை விநியோகிக்கவும் பிளாக்செயின் நுட்பம் அருமையான கட்டமைப்பாக இருக்கும் என இசைத்துறையினர் நம்புகின்றனர்.

இசைத்துறையை பொருத்தவரை, நவீன தொழில்நுட்பம் ஏற்கனவே தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இசைத்தட்டு மற்றும் கேசட் வடிவில் பாடல்களை கேட்டு ரசித்த நிலை மாறி எம்.பி-3 கோப்பு வடிவில் இசையை கேட்டு ரசிக்க முடிகிறது. இந்த பாய்ச்சலில் சிடிக்கள் கூட அறிமுகமான வேகத்தில் காலாவதியாகி விட்டன. இசையை விநியோகிப்பதும், கேட்டு ரசிப்பதும் எளிதாகி இருக்கும் அதே நேரத்தில் அனுமதி இல்லாமல் இசையை கேட்டு ரசிப்பதற்கான சாத்தியம் காப்புரிமை சிக்கல் மற்றும் இசைத்திருட்டு புகார்களுக்கு வித்திட்டிருக்கின்றன.

இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம், ஸ்டிரீமிங் எனப்படும் நேரடி ஒலிபரப்பு முறை ஒரளவு தீர்வாகியிருக்கிறது. ஸ்டிரீமிங்கில் இசையை தரவிறக்கம் செய்யும் அவசியம் இல்லை என்பதால், திருட்டோ, அனுமதி இல்லாத விநியோகமோ சாத்தியம் இல்லை. கட்டணம் செலுத்தி அல்லது விளம்பரங்களை பொறுத்துக்கொண்டு பாடல்களை ஸ்டிரீமிங்கில் கேட்டு ரசிக்கலாம். அதற்கேற்ப படைப்பாளிகளுக்கு உரிய தொகை அளிக்கப்பட்டுவிடும். ரசிகர்களுக்கும் தாங்கள் விரும்பிய இசையை கேட்டு ரசிக்க வழி இருக்கிறது.

இசைத்திருட்டுக்கு ஸ்டிரீமிங் நல்ல பதிலாக அமைந்தாலும், இசைத்துறையில் இன்னமும் காப்புரிமை பிரச்சனைக்கு முழுத்தீர்வு கிடைத்துவிடவில்லை. காப்புரிமை என்பது படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், இதர பங்கேற்பாளர்கள் என பலருடன் பல அடுக்களில் தொடர்பு கொண்டதாக இருப்பதால் மிகவும் சிக்கலானதாக அமைகிறது. இந்த சங்கிலி பின்னலில் உள்ளவர்கள் அனைவருக்கும் சம விகிதத்தில் பலன் கிடைப்பதில்லை. பலருக்கு கிடைப்பதே இல்லை. கிடைப்பவர்களுக்கும் தாமதமாகவும், மிக சொற்பமானதாகவும் கிடைக்கிறது.

இசைஞானி பாடல்களை மையமாக கொண்டு வெடித்த காப்புரிமை பிரச்சனை இதற்கு சரியான உதாரணம். இசையை உருவாக்கியவர் என்ற முறையில், அவரது அனுமதி இல்லாமல் பலரும் வர்த்தக நோக்கில் அவரது பாடல்களை பாடி அல்லது ஒலிபரப்பி ஆதாயம் தேடும் போது பிரச்சனையாகிறது. இதை தடுக்க அவரது தரப்பில் இருந்து வழக்கு ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் விஷயம் இத்துடன் முடியவில்லை. இந்த இசையில் பங்கேற்ற மற்றவர்களின் பங்கு என்னவாகிறது எனும் கேள்வி எழுகிறது. பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் போன்றவர்களுக்கான இழப்பீடு என்ன எனும் கேள்வியும் கேட்கப்படுகிறது.

காப்புரிமையில் யாருக்கு யாருக்கு என்ன பங்கு என்பதும், அதன் மூலம் கிடைக்கும் பலனில் இவர்களுக்கான பங்கு எப்படி இருக்க வேண்டும், அதை நிர்வகிப்பது யார்? கண்காணிப்பது யார்? போன்ற கேள்விகள் எல்லாம் எழுகின்றன. இந்த அளவுக்கான தகவல்களை கையாள்வதும் இன்னும் பெரிய சிக்கல் அல்லவா?

இந்த பிரச்சனைக்கு தான் பிளாக்செயின் சார்ந்த விநியோகம் தீர்வாக அமையும் என்கின்றனர். பிளாக்செயின் பரவலாக்கப்பட்ட பதிவேடாக இருப்பதோடு, அதன் மூலம் ஸ்மார்ட் ஒப்பந்தங்களையும் உருவாக்கி கொள்ள முடியும். ஒரு பாடல் தொடர்பான அனைத்து பங்கேற்பாளர்களின் உரிமையையும் பிளாக்செயினில் வெளிப்படையான முறையில் பதிவேற்றலாம். இதை அனைவரும் பார்க்க முடியும். ஆனால் யார் ஒருவரும் கைவைத்து மாற்ற முடியாது. அது மட்டும் அல்ல, ஒரு பாடல் தொடர்பான காப்புரிமை யாரிடம் எல்லாம் இருக்கிறது என கண்டறிந்து அவர்கள் அனைவரையும் எளிதாக தொடர்பு கொண்டு ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். அதற்கேற்ப பலனும் பிரித்தளிக்கப்படும். யாரும் வஞ்சிக்கப்பட போவதில்லை.

இதை தான் இசைத்துறையின் எதிர்காலம் என்கின்றனர். ஏற்கனவே பல முன்னோடி முயற்சிகள் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மியூசிகாயின் (Musicoin ) இதற்கான உதாரணமாக அமைகிறது. மியூசிகாயின் தனக்கான சொந்த விநியோக மேடையை பெற்றிருப்பதோடு அதில் பாடல்களை கேட்டு ரசிப்பதற்கான பரிவர்த்தனை நாணயத்தையும் ($MUSIC ) கொண்டிருக்கிறது. https://musicoin.org/

இசைக்கலைஞர்கள் இதில் தங்கள் இசையை விநியோகிக்கலாம். ரசிகர்கள் அதை ஸ்டிரீமிங் முறையில் கேட்டு ரசிக்கலாம். பாடல் கேட்கப்படும் அளவிற்கு ஏற்ப கலைஞர்களுக்கான உரிமத்தொகை கிடைக்கும். மற்ற தரப்பினருக்கும் அவர்கள் உரிம விகிதத்திற்கு ஏற்ப பலன் கிடைக்கும். இதைவிட முக்கியமாக இந்த முறையில் ரசிகர்களுக்கும் பலன் கிடைக்கும் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம். ரசிகர்கள் இலவசமாகவே பாடல்களை கேட்கலாம். ஆனால் அதை நண்பர்களுக்கு பரிந்துரைப்பதன் மூலம் டிஜிட்டல் நாணயத்தை பரிசாக பெறலாம். எல்லாம் இலவசமானது என்றால் எப்படி வருவாய் கிடைக்கும் என கேட்கலாம். இந்த மேடை அடிப்படையில், இசையை அறிமுகம் செய்து அதை பிரபலமாக்குவதற்கானது.

இப்படி ரசிகர்கள் சேரும் போது, கச்சேரி டிக்கெட் விற்பனை, இதர பொருட்கள் விற்பனை மூலம் வருவாய் குவியும். இந்த பொருட்களை டிஜிட்டல் நாணயம் கொண்டு வாங்கலாம். கலைஞர்களுக்கும் டிஜிட்டல் நாணயம் வழங்கப்படும். இதை டாலராக மாற்றிக்கொள்ளலாம். ரசிகர்களை பொருத்தவரை புதிய இசையை கண்டறிந்து அதை பிரபலமாக்குவது பலன் அளிப்பதாக அமையும். மனதுக்கு பிடித்த இசையை கேட்டு ரசிக்கும் வாய்ப்பை தவிர இது போனசாக அமையும். இசை கலைஞர்களை பொருத்தவரை வர்த்தக நிறுவனம் மற்றும் இடைத்தரகர்கள் சிக்கல் இல்லாமல் நேரடியாக ரசிகர்களை சென்றடைந்து தங்கள் இசையின் வீச்சிற்கு ஏற்ப பலன் பெறலாம்.

சோதனை முறையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை பிரபலமாகும் போது இசைத்துறைக்கான புதிய பாதை பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. புதிய இசை உருவாக்கத்திற்கு மட்டும் அல்லாமல், ஏற்கனவே உருவாக்கப்பட்ட இசைக்கான காப்புரிமை சிக்கல்களுக்கும் இந்த முறை தீர்வாக அமையும் என நம்பப்படுகிறது.

தமிழ் இந்துவில் எழுதியது

muஇணையத்தில் இசையை கேட்டு ரசிக்க புதிய வழி உருவாகி கொண்டிருக்கிறது. இந்த புதிய வழி நேர்மையானதாகவும், நியாயமானதாகவும் இருக்கிறது. அதில் காப்புரிமை சிக்கல் இல்லை. அதே நேரத்தில் அந்த வழி சமத்துவம் மிக்கதாகவும் இருக்கிறது. அனைத்து பங்கேற்பார்களுக்கும் அது சம விகிதத்தில் பயன் தருவதாக இருக்கிறது. அதாவது இசையை உருவாக்குபவர்களுக்கு மட்டும் அல்லாமல், அதை கேட்டு ரசிப்பவர்களுக்கும் பரிசளிக்கும் வகையில் இந்த முறை அமைந்துள்ளது. எதிர்காலத்தில் இசைத்துறையே மாற்றி அமைக்க கூடியதாக இது அமையலாம் என்கின்றனர்.

பிளாக்செயின் வாயிலாக இசையை கேட்டு ரசிப்பக்கும் வழியை தான் இவ்வாறு வர்ணிக்கின்றனர். கலைஞர்கள் நோக்கில் பார்த்தாலும் சரி, ரசிகர்கள் நோக்கில் பார்த்தாலும் சரி, இசைத்துறையை வாட்டி வதைக்குக்கொண்டிருக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் இது தீர்வாகும் என்கின்றனர். அதனால் தான் புதுயுக இசைக்கலைஞர்கள் பலர் ஆர்வத்துடன் இந்த முயற்சியில் பங்கெடுத்து வருகின்றனர். இசைப்பிரியர்கள் பற்றி கேட்கவே வேண்டாம், அவர்கள் இரட்டை உற்சாகத்தோடு இதை அரவணைக்க காத்திருக்கின்றனர்.

காப்புரிமை உள்ளிட்ட இசைத்துறை சிக்கல்களுக்கு பிளாக்செயின் எப்படி தீர்வாகும் என்று பார்ப்பதற்கு முன் முதலில் பிளாக்செயின் தொழில்நுட்பம் பற்றி சுருக்கமாக தெரிந்து கொண்டுவிடலாம். பிளாக்செயின் என்பது இன்று இணைய உலகில் பரபரப்பாக பேசப்படும் பிட்காயின் போன்ற எண்ம நாணயங்களுக்கு அடிப்படையாக இருக்கும் தொழில்நுட்பமாகும். பிட்காயின் கண்ணால் பார்க்க முடியாத, கையால் தொட முடியாத டிஜிட்டல் நாணயமாக இருக்கலாம், ஆனால் அதன் ஆதார அம்சமாக இருப்பது பிளாக்செயின் தொழில்நுட்பம் தான். அதன் மையமில்லா தன்மைக்கும், தனிநபரோ, அமைப்போ கட்டுப்படுத்தப்படாத நாணயமாக அது இருப்பதற்கும் மூலக்காரணம் பிளாக்செயின் தான்.

பிளாக்செயின் என்பதை பரவலாக்கப்பட்ட டிஜிட்டல் பதிவேடு என புரிந்து கொள்ளலாம். எந்த பரிவர்த்தனையை நிர்வகிக்கவும் பதிவேடு அவசியம். பிளாக்செயினும் இத்தகைய பதிவேடு தான். இது டிஜிட்டல் வடிவிலானது என்பது மட்டும் அல்ல, மையமில்லாதது என்பதும் முக்கியமானது. வழக்கமாக, பரிவர்த்தனை தகவல்களை ஒரு மைய பதிவேட்டில் பதிவு செய்து அதையை அனைத்து சரிபார்த்தலுக்கும் அடிப்படையாக கொள்கிறோம். இதற்கு மாறாக, ஒவ்வொருவர் கையிலும் ஒரு பதிவேடு இருந்து அவை அனைத்திலும் ஒவ்வொரு பரிவர்த்தனைகளும் பதிவு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். இதன் காரணமாக, மைய பதிவேட்டை சார்ந்திருக்கும் நிலை ஏற்படாது என்பதோடு, எந்த ஒரு பரிவர்த்தனையும் எல்லோருக்கும் தெரிந்ததாக, எல்லோராலும் அங்கீகரக்கப்படுவதாக அமையும். முக்கியமாக, இதில் நகலெடுப்பது, ஏமாற்றுவது எல்லாம் சாத்தியம் இல்லை. பிட்காயின் இப்படி தான் செயல்படுகிறது.

பிட்காயினின் இந்த குணாதிசயங்கள் எல்லாம் பிளாக்செயினால் சாத்தியமாகிறது. பிளாக்செயினில் ஒவ்வொரு புதிய பரிவர்த்தனையும், அதன் அனைத்து உறுப்பினர்களாலும் வெளிப்படையான முறையில் சரி பார்க்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. எனவே இது டிஜிட்டல் நாணயங்களை பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்ய உதவுகிறது.

டிஜிட்டல் நாணயம் என்றில்லை, பிளாக்செயினின் ஆதார தொழில்நுட்பத்தை எந்தவிதமான டிஜிட்டல் மதிப்பு அல்லது டிஜிட்டல் பொருட்களின் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தலாம் என்கின்றனர். இருதரப்பினரிடையிலான ஒப்பந்தங்களுக்கும் இதை பயன்படுத்தலாம் என்கின்றனர். உதாரணத்திற்கு நில விற்பனை பதிவுகளை பிளாக்செயினில் மேற்கொள்வது பாதுகாப்பாக அமையும் என்கின்றனர். பிளாக்செயினில் பதிவு செய்யும் போது, யார் யாருக்கு விற்றது எனும் விவரம் எத்தனை பேர் கைகளுக்கு மாறினாலும் தெளிவாக தெரியும் என்பதால் நில மோசடிகளுக்கு வழியில்லாமல் போகும் என்கின்றனர்.

நில பதிவு மட்டும் அல்ல, மருத்துவ பதிவுகள் துவங்கி, வங்கி பரிவர்த்தனைகள் வரை எல்லா விதமான தகவல்களையும் பிளாக்செயினில் பதிவேற்றி பாதுகாப்பாகவும், மோசடிக்கு வழியில்லாமலும் பயன்படுத்தலாம் என்கின்றனர்.

இந்த வகையில் தான் இசையை விநியோகிக்கவும் பிளாக்செயின் நுட்பம் அருமையான கட்டமைப்பாக இருக்கும் என இசைத்துறையினர் நம்புகின்றனர்.

இசைத்துறையை பொருத்தவரை, நவீன தொழில்நுட்பம் ஏற்கனவே தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இசைத்தட்டு மற்றும் கேசட் வடிவில் பாடல்களை கேட்டு ரசித்த நிலை மாறி எம்.பி-3 கோப்பு வடிவில் இசையை கேட்டு ரசிக்க முடிகிறது. இந்த பாய்ச்சலில் சிடிக்கள் கூட அறிமுகமான வேகத்தில் காலாவதியாகி விட்டன. இசையை விநியோகிப்பதும், கேட்டு ரசிப்பதும் எளிதாகி இருக்கும் அதே நேரத்தில் அனுமதி இல்லாமல் இசையை கேட்டு ரசிப்பதற்கான சாத்தியம் காப்புரிமை சிக்கல் மற்றும் இசைத்திருட்டு புகார்களுக்கு வித்திட்டிருக்கின்றன.

இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம், ஸ்டிரீமிங் எனப்படும் நேரடி ஒலிபரப்பு முறை ஒரளவு தீர்வாகியிருக்கிறது. ஸ்டிரீமிங்கில் இசையை தரவிறக்கம் செய்யும் அவசியம் இல்லை என்பதால், திருட்டோ, அனுமதி இல்லாத விநியோகமோ சாத்தியம் இல்லை. கட்டணம் செலுத்தி அல்லது விளம்பரங்களை பொறுத்துக்கொண்டு பாடல்களை ஸ்டிரீமிங்கில் கேட்டு ரசிக்கலாம். அதற்கேற்ப படைப்பாளிகளுக்கு உரிய தொகை அளிக்கப்பட்டுவிடும். ரசிகர்களுக்கும் தாங்கள் விரும்பிய இசையை கேட்டு ரசிக்க வழி இருக்கிறது.

இசைத்திருட்டுக்கு ஸ்டிரீமிங் நல்ல பதிலாக அமைந்தாலும், இசைத்துறையில் இன்னமும் காப்புரிமை பிரச்சனைக்கு முழுத்தீர்வு கிடைத்துவிடவில்லை. காப்புரிமை என்பது படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், இதர பங்கேற்பாளர்கள் என பலருடன் பல அடுக்களில் தொடர்பு கொண்டதாக இருப்பதால் மிகவும் சிக்கலானதாக அமைகிறது. இந்த சங்கிலி பின்னலில் உள்ளவர்கள் அனைவருக்கும் சம விகிதத்தில் பலன் கிடைப்பதில்லை. பலருக்கு கிடைப்பதே இல்லை. கிடைப்பவர்களுக்கும் தாமதமாகவும், மிக சொற்பமானதாகவும் கிடைக்கிறது.

இசைஞானி பாடல்களை மையமாக கொண்டு வெடித்த காப்புரிமை பிரச்சனை இதற்கு சரியான உதாரணம். இசையை உருவாக்கியவர் என்ற முறையில், அவரது அனுமதி இல்லாமல் பலரும் வர்த்தக நோக்கில் அவரது பாடல்களை பாடி அல்லது ஒலிபரப்பி ஆதாயம் தேடும் போது பிரச்சனையாகிறது. இதை தடுக்க அவரது தரப்பில் இருந்து வழக்கு ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் விஷயம் இத்துடன் முடியவில்லை. இந்த இசையில் பங்கேற்ற மற்றவர்களின் பங்கு என்னவாகிறது எனும் கேள்வி எழுகிறது. பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் போன்றவர்களுக்கான இழப்பீடு என்ன எனும் கேள்வியும் கேட்கப்படுகிறது.

காப்புரிமையில் யாருக்கு யாருக்கு என்ன பங்கு என்பதும், அதன் மூலம் கிடைக்கும் பலனில் இவர்களுக்கான பங்கு எப்படி இருக்க வேண்டும், அதை நிர்வகிப்பது யார்? கண்காணிப்பது யார்? போன்ற கேள்விகள் எல்லாம் எழுகின்றன. இந்த அளவுக்கான தகவல்களை கையாள்வதும் இன்னும் பெரிய சிக்கல் அல்லவா?

இந்த பிரச்சனைக்கு தான் பிளாக்செயின் சார்ந்த விநியோகம் தீர்வாக அமையும் என்கின்றனர். பிளாக்செயின் பரவலாக்கப்பட்ட பதிவேடாக இருப்பதோடு, அதன் மூலம் ஸ்மார்ட் ஒப்பந்தங்களையும் உருவாக்கி கொள்ள முடியும். ஒரு பாடல் தொடர்பான அனைத்து பங்கேற்பாளர்களின் உரிமையையும் பிளாக்செயினில் வெளிப்படையான முறையில் பதிவேற்றலாம். இதை அனைவரும் பார்க்க முடியும். ஆனால் யார் ஒருவரும் கைவைத்து மாற்ற முடியாது. அது மட்டும் அல்ல, ஒரு பாடல் தொடர்பான காப்புரிமை யாரிடம் எல்லாம் இருக்கிறது என கண்டறிந்து அவர்கள் அனைவரையும் எளிதாக தொடர்பு கொண்டு ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். அதற்கேற்ப பலனும் பிரித்தளிக்கப்படும். யாரும் வஞ்சிக்கப்பட போவதில்லை.

இதை தான் இசைத்துறையின் எதிர்காலம் என்கின்றனர். ஏற்கனவே பல முன்னோடி முயற்சிகள் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மியூசிகாயின் (Musicoin ) இதற்கான உதாரணமாக அமைகிறது. மியூசிகாயின் தனக்கான சொந்த விநியோக மேடையை பெற்றிருப்பதோடு அதில் பாடல்களை கேட்டு ரசிப்பதற்கான பரிவர்த்தனை நாணயத்தையும் ($MUSIC ) கொண்டிருக்கிறது. https://musicoin.org/

இசைக்கலைஞர்கள் இதில் தங்கள் இசையை விநியோகிக்கலாம். ரசிகர்கள் அதை ஸ்டிரீமிங் முறையில் கேட்டு ரசிக்கலாம். பாடல் கேட்கப்படும் அளவிற்கு ஏற்ப கலைஞர்களுக்கான உரிமத்தொகை கிடைக்கும். மற்ற தரப்பினருக்கும் அவர்கள் உரிம விகிதத்திற்கு ஏற்ப பலன் கிடைக்கும். இதைவிட முக்கியமாக இந்த முறையில் ரசிகர்களுக்கும் பலன் கிடைக்கும் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம். ரசிகர்கள் இலவசமாகவே பாடல்களை கேட்கலாம். ஆனால் அதை நண்பர்களுக்கு பரிந்துரைப்பதன் மூலம் டிஜிட்டல் நாணயத்தை பரிசாக பெறலாம். எல்லாம் இலவசமானது என்றால் எப்படி வருவாய் கிடைக்கும் என கேட்கலாம். இந்த மேடை அடிப்படையில், இசையை அறிமுகம் செய்து அதை பிரபலமாக்குவதற்கானது.

இப்படி ரசிகர்கள் சேரும் போது, கச்சேரி டிக்கெட் விற்பனை, இதர பொருட்கள் விற்பனை மூலம் வருவாய் குவியும். இந்த பொருட்களை டிஜிட்டல் நாணயம் கொண்டு வாங்கலாம். கலைஞர்களுக்கும் டிஜிட்டல் நாணயம் வழங்கப்படும். இதை டாலராக மாற்றிக்கொள்ளலாம். ரசிகர்களை பொருத்தவரை புதிய இசையை கண்டறிந்து அதை பிரபலமாக்குவது பலன் அளிப்பதாக அமையும். மனதுக்கு பிடித்த இசையை கேட்டு ரசிக்கும் வாய்ப்பை தவிர இது போனசாக அமையும். இசை கலைஞர்களை பொருத்தவரை வர்த்தக நிறுவனம் மற்றும் இடைத்தரகர்கள் சிக்கல் இல்லாமல் நேரடியாக ரசிகர்களை சென்றடைந்து தங்கள் இசையின் வீச்சிற்கு ஏற்ப பலன் பெறலாம்.

சோதனை முறையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை பிரபலமாகும் போது இசைத்துறைக்கான புதிய பாதை பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. புதிய இசை உருவாக்கத்திற்கு மட்டும் அல்லாமல், ஏற்கனவே உருவாக்கப்பட்ட இசைக்கான காப்புரிமை சிக்கல்களுக்கும் இந்த முறை தீர்வாக அமையும் என நம்பப்படுகிறது.

தமிழ் இந்துவில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

One Comment on “இன்னல் இல்லாமல் இன்னிசை கேட்கலாம்: பிளாக்செயின் தரும் புதுமைத்தீர்வு!

  1. RAVICHANDRAN R

    அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி …… பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களையும் சார்ந்தது! பொறுத்திருந்து பார்ப்போம்!

    Reply

Leave a Comment

Your email address will not be published.