இரண்டு குறும்பதிவுகளின் கதை

cia]அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு வந்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். சி.ஐ.ஏ டிவிட்டருக்கு வந்திருப்பது (@CIA
) ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த ஒன்று தான். ரகசியங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்ற சி.ஐ.ஏ டிவிட்டரில் என்ன விதமான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ? அதிலும் வெளிப்படையானத்தன்மை மற்றும் உரையாடல் குணம் டிவிட்டரில் ஆதார குணம் எனும் போது சி.ஐ.ஏ வின் டிவிட்டர் வருகை எப்படி இருக்கும்?
இந்த கேள்விகள் ஒருபுறம் இருக்க, சி.ஐ.ஏ வில் முதல் குறும்பதிவு குறிப்பிட்த்தக்க வகையில் அமைந்து கவனத்தை ஈர்க்கவே செய்தது.

‘ இது தான் எங்கள் முதல் குறும்பதிவு என்பதை நாங்கள் மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை’
இது தான் அந்த முதல் குறும்பதிவு. பதிவான நாள் ஜூன் 6,2014.

சி.ஐ.வுக்கே உரிய தன்மையுடன் அமைந்த இந்த குறும்பதிவு , சி.ஐ.ஏவின் டிவிட்டர் வருகையை விட அதிக பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குறும்பதிவில் இருந்த கேலியும் கிண்டலும் கலந்த நகைச்சுவை டிவிட்டருக்கு உகந்தது என்றால் , இந்த நகைச்சுவை திரை விலக்கிப்பார்த்தால் புரியக்கூடிய சி.ஐ.ஏத்தனம் குரூரமாக புன்னகைக்கும்.

உண்மையில் இது சி.ஐ.ஏ தன்னையே பகடி செய்து கொள்ளும் வகையிலான குறும்பதிவு.
ஒரு உளவு அமைப்பிடம் இருந்து வெளிப்படையான தன்மையை எதிர்பார்க்க முடியாது என்றாலும் ,சி.ஐ.வின் செயல்பாடுகள் ரகசியத்தின் உச்சம் தொட்டவை. 1970 களில் அமெரிக்காவில் , ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் மூழ்க அடிக்கப்பட்ட்து தொடர்பாக ஒரு சர்ச்சை வெடித்த போது சி.ஐ.ஏ தன் மீதான குற்றசாட்டுகளுக்கு பதில் அளிக்காமல் மவுனம் சாதித்த்து. அப்போது இந்த பிரச்ச்னை பற்றி விடாமல் கேட்ட நிருபருக்கு சி.ஐ.ஏ அளித்த பதில் மிகவும் பிரபலமானது.

‘ இந்த குற்றச்சாட்டை நாங்கள் மறுக்கவும் இல்லை, ஏற்கவும் இல்லை”
இப்படி அளிக்கப்படும் பதிலை எப்படி புரிந்து கொள்வது. அரசு அமைப்பின் மூர்கத்தனம் என்றா? அல்லது சர்ச்சையில் இருந்து நழுவும் சாமர்த்தியம் என்றா?
இதே பதிலை நினைவுப்படுத்தும் வகையில் டிவிட்டருக்கு சற்றே மாற்றம் செய்து சி.ஐ.ஏ தனது முதல் குறும்பதிவை வெளியிட்டு கவனத்தை ஈர்த்தது.

இந்த குறும்பதிவு உடனடியாக மறுகுறும்பதிவிடப்பட்டு( ரிடிவீட்) , அபிமானமும் தெரிவிக்கப்பட்ட்து( பேவரைட்). இரண்டின் எண்ணிக்கையுமே பல்லாயிரக்கணக்கில் பெருகி சில லட்சங்களை தொட்டது.
ஆக, இப்படியாக சி.ஐ.ஏவின் முதல் குறும்பதிவு உலகை கவர்ந்த முதல் குறும்பதிவானது.
ஆனால் சி.ஐ.ஏவின் டிவிட்டர் வருகையை எல்லோருமே கைத்தட்டி வரவேற்கவில்லை. பல பதில் குறும்பதிவுகள் அதன் செயல்பாடுகள் மீதான கடுமையான விமர்சனமாக அமைந்திருந்தன. இவற்றில் பல நேரடி தாக்குதலாக இல்லாமல் சி.ஐ.ஏவின் முதல் குறும்பதிவு பாணியிலேயே நக்கலும் நையாண்டியுமாக, ஆனால் அதன் செயலபாடுகளை நச்சென சுட்டிக்காட்டும் வகையில் இருந்தன.

“ இனி சி.ஐ.ஏ டிவிட்டர் கணக்கில் இருந்து உலகில் எங்கோ உள்ள பகுதிகளில் இருந்தெல்லாம் அருமையான சித்தரவதை படங்களை எதிர்பார்க்கலாம்’ என்று ஒரு டிவிட்டர் பயனாளி (@madmanweb ) குறிப்பிட்டிருந்தார்.
சி.ஐ.ஏ என்னை எல்லாம் பின் தொடர பாடுபட வேண்டாம், அவர்களின் சகோதர அமைப்பான என்.எஸ்.ஏ அதை செய்து கொண்டிருக்கிறது’என இன்னொருவர் (@AKBakota ) குறிப்பிட்டிருந்தார்.
இன்னும் சில குறும்பதிவுகள் ஈரான் புரட்சி மற்றும் சிலியின் ஆட்சி கவிழ்ப்பு ஆகியவற்றில் சி.ஐ.ஏ க்கு இருப்பதாக சொல்லப்படும் பங்குகளை இடித்துக்காட்டின.

இந்த விமர்சனங்களை மீற
ி சில நாட்களில் எல்லாம் சி.ஐ.ஏ வின் பின் தொடர்பாளர் எண்ணிக்கை சில லட்சங்களை தொட்டது.
ஒரு மக்கள் தொடர்பு முயற்சியாக தான் சி.ஐ.ஏ டிவிட்டருக்கு வந்துள்ளது. இதே காலத்தில் பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களும் சி.ஐ.ஏ சார்பில் அமைக்கப்பட்டன.
ஆனால், சி.ஐ.ஏவை பின் தொடர்பவர்கள் அதனிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றனர்?
நிற்க, சி.ஐ.ஏவின் முதல் குறும்பதிவு மட்டும் அல்ல ,அதன் டிவிட்டர் பயோவும் கூட கவனிக்கத்தக்கதாக தான் இருக்கிறது.
“ நாங்கள் தேசத்தின் முதல் பாதுகாப்பு அறன். மற்றவர்களால் செய்யமுடியாததை செய்கிறோம். மற்றவர்கள் செல்ல முடியாத இடங்களுக்கு செல்கிறோம்’
உள்ளடக்கத்தில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ அருமையான டிவிட்டர் பயோ இல்லையா!

இது இன்னொரு முதல்குறும்பதிவு

சி.ஐ.ஏ பற்றி குறிப்பிட்டு விட்டு, எழுத்தாளர் ஜார்ஜ் .ஆர்.ஆர் .மார்டின் பற்றி பேசுவது பொருத்தமாக இருக்காது தான். ஆனால் சி.ஐ.ஏ வருகை தந்த அதே காலத்தில் டிவிட்டரில் நுழைந்ததாலும் , மார்டினுடைய முதல் குறும்பதிவும் கவனத்திற்குரியதாக இருந்தாதாலும் இங்கே மார்டின் டிவிட்டர் வருகை பற்றி குறிப்பிடலாம். அமெரிக்க தொலைக்காட்சிகளில் கலக்கி கொண்டிருக்கும் கேம் ஆப் த்ரொன்ஸ் தொடருக்கான மூலக்கதை வடிவை தந்தவரும் ,லயித்து மகிழக்கூடிய கற்பனை உலகை தனது நாவல்களில் சிருஷ்டிப்பவராக பாராட்ட்டப்படும் எழுத்தாளரான மார்டினின் முதல் குறும்பதிவும் மகத்தானதாகவே இருந்தது. ஜிஆர்.எம் ஸ்பீகிங் (@GRRMspeaking
) எனும் முகவரியில் அமைந்திருந்த தனது டிவிட்டர் பக்கத்தில் மார்டினின் முதல் குறும்பதிவு இப்படி இருந்தது:
‘நான் அடிக்கடி டிவீட் செய்யமாட்டேன். தயவுசெய்து எனது லைவ்ஜர்னல் (வலைப்பதிவு) பக்கத்தை பாருங்கள்’ .
எழுத்தாளர்கள் டிவிட்டருக்கு வரும் போது வாசகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அதற்கு நேர்மாறாக பெரும்பாலான எழுத்தாளர்கள் குறும்பதிவுகளாக தங்கள் எண்ணங்களை அருவி போல் எல்லாம் பகிர்வதில்லை.

இந்த ஏமாற்றத்தை அளிக்காமல் இருக்கும் வகையில் மார்டின் முதல் குறும்பதிவிலேயே அதிகம் குறும்பதிவு செய்யமாட்டேன் என கூறிவிட்டார். அதிகம் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்காக தனது வலைப்பதிவையும் குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் உண்மையிலேயே அருமையான முதல் குறும்பதிவு தான். அவரது பயோவும் கூட , தயவுசெய்து லைவ்ஜர்னலில் என்னை தொடருங்கள் என்றே அமைந்திருந்தது.
ஆனால் , அடிக்கடி குறும்பதிவிட மாட்டேன் எனும் அறிமுகத்தை மீறி , எழுத்தாளர் மார்டினுக்கு டிவிட்டரில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பின் தொடர்பாளர்கள் சில நாட்களில் கிடைத்தனர்.

ஆக, ஒரே குறும்பதிவில் லட்சக்கணக்கான பின் தொடர்பாளர்களை அள்ளியவர்கள் பட்டியலில் திரைப்ப நட்சத்திரங்களுக்கு மட்டும் தான் இடம் கிடைக்கவேண்டுமா என்ன? மார்டின் போன்ற நட்சத்திர எழுத்தாளர்களுக்கும் அந்த பெருமை உண்டு என டிவிட்டர் உலகம் காட்டியிருக்கிறது.

cia]அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு வந்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். சி.ஐ.ஏ டிவிட்டருக்கு வந்திருப்பது (@CIA
) ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த ஒன்று தான். ரகசியங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்ற சி.ஐ.ஏ டிவிட்டரில் என்ன விதமான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ? அதிலும் வெளிப்படையானத்தன்மை மற்றும் உரையாடல் குணம் டிவிட்டரில் ஆதார குணம் எனும் போது சி.ஐ.ஏ வின் டிவிட்டர் வருகை எப்படி இருக்கும்?
இந்த கேள்விகள் ஒருபுறம் இருக்க, சி.ஐ.ஏ வில் முதல் குறும்பதிவு குறிப்பிட்த்தக்க வகையில் அமைந்து கவனத்தை ஈர்க்கவே செய்தது.

‘ இது தான் எங்கள் முதல் குறும்பதிவு என்பதை நாங்கள் மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை’
இது தான் அந்த முதல் குறும்பதிவு. பதிவான நாள் ஜூன் 6,2014.

சி.ஐ.வுக்கே உரிய தன்மையுடன் அமைந்த இந்த குறும்பதிவு , சி.ஐ.ஏவின் டிவிட்டர் வருகையை விட அதிக பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குறும்பதிவில் இருந்த கேலியும் கிண்டலும் கலந்த நகைச்சுவை டிவிட்டருக்கு உகந்தது என்றால் , இந்த நகைச்சுவை திரை விலக்கிப்பார்த்தால் புரியக்கூடிய சி.ஐ.ஏத்தனம் குரூரமாக புன்னகைக்கும்.

உண்மையில் இது சி.ஐ.ஏ தன்னையே பகடி செய்து கொள்ளும் வகையிலான குறும்பதிவு.
ஒரு உளவு அமைப்பிடம் இருந்து வெளிப்படையான தன்மையை எதிர்பார்க்க முடியாது என்றாலும் ,சி.ஐ.வின் செயல்பாடுகள் ரகசியத்தின் உச்சம் தொட்டவை. 1970 களில் அமெரிக்காவில் , ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் மூழ்க அடிக்கப்பட்ட்து தொடர்பாக ஒரு சர்ச்சை வெடித்த போது சி.ஐ.ஏ தன் மீதான குற்றசாட்டுகளுக்கு பதில் அளிக்காமல் மவுனம் சாதித்த்து. அப்போது இந்த பிரச்ச்னை பற்றி விடாமல் கேட்ட நிருபருக்கு சி.ஐ.ஏ அளித்த பதில் மிகவும் பிரபலமானது.

‘ இந்த குற்றச்சாட்டை நாங்கள் மறுக்கவும் இல்லை, ஏற்கவும் இல்லை”
இப்படி அளிக்கப்படும் பதிலை எப்படி புரிந்து கொள்வது. அரசு அமைப்பின் மூர்கத்தனம் என்றா? அல்லது சர்ச்சையில் இருந்து நழுவும் சாமர்த்தியம் என்றா?
இதே பதிலை நினைவுப்படுத்தும் வகையில் டிவிட்டருக்கு சற்றே மாற்றம் செய்து சி.ஐ.ஏ தனது முதல் குறும்பதிவை வெளியிட்டு கவனத்தை ஈர்த்தது.

இந்த குறும்பதிவு உடனடியாக மறுகுறும்பதிவிடப்பட்டு( ரிடிவீட்) , அபிமானமும் தெரிவிக்கப்பட்ட்து( பேவரைட்). இரண்டின் எண்ணிக்கையுமே பல்லாயிரக்கணக்கில் பெருகி சில லட்சங்களை தொட்டது.
ஆக, இப்படியாக சி.ஐ.ஏவின் முதல் குறும்பதிவு உலகை கவர்ந்த முதல் குறும்பதிவானது.
ஆனால் சி.ஐ.ஏவின் டிவிட்டர் வருகையை எல்லோருமே கைத்தட்டி வரவேற்கவில்லை. பல பதில் குறும்பதிவுகள் அதன் செயல்பாடுகள் மீதான கடுமையான விமர்சனமாக அமைந்திருந்தன. இவற்றில் பல நேரடி தாக்குதலாக இல்லாமல் சி.ஐ.ஏவின் முதல் குறும்பதிவு பாணியிலேயே நக்கலும் நையாண்டியுமாக, ஆனால் அதன் செயலபாடுகளை நச்சென சுட்டிக்காட்டும் வகையில் இருந்தன.

“ இனி சி.ஐ.ஏ டிவிட்டர் கணக்கில் இருந்து உலகில் எங்கோ உள்ள பகுதிகளில் இருந்தெல்லாம் அருமையான சித்தரவதை படங்களை எதிர்பார்க்கலாம்’ என்று ஒரு டிவிட்டர் பயனாளி (@madmanweb ) குறிப்பிட்டிருந்தார்.
சி.ஐ.ஏ என்னை எல்லாம் பின் தொடர பாடுபட வேண்டாம், அவர்களின் சகோதர அமைப்பான என்.எஸ்.ஏ அதை செய்து கொண்டிருக்கிறது’என இன்னொருவர் (@AKBakota ) குறிப்பிட்டிருந்தார்.
இன்னும் சில குறும்பதிவுகள் ஈரான் புரட்சி மற்றும் சிலியின் ஆட்சி கவிழ்ப்பு ஆகியவற்றில் சி.ஐ.ஏ க்கு இருப்பதாக சொல்லப்படும் பங்குகளை இடித்துக்காட்டின.

இந்த விமர்சனங்களை மீற
ி சில நாட்களில் எல்லாம் சி.ஐ.ஏ வின் பின் தொடர்பாளர் எண்ணிக்கை சில லட்சங்களை தொட்டது.
ஒரு மக்கள் தொடர்பு முயற்சியாக தான் சி.ஐ.ஏ டிவிட்டருக்கு வந்துள்ளது. இதே காலத்தில் பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களும் சி.ஐ.ஏ சார்பில் அமைக்கப்பட்டன.
ஆனால், சி.ஐ.ஏவை பின் தொடர்பவர்கள் அதனிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றனர்?
நிற்க, சி.ஐ.ஏவின் முதல் குறும்பதிவு மட்டும் அல்ல ,அதன் டிவிட்டர் பயோவும் கூட கவனிக்கத்தக்கதாக தான் இருக்கிறது.
“ நாங்கள் தேசத்தின் முதல் பாதுகாப்பு அறன். மற்றவர்களால் செய்யமுடியாததை செய்கிறோம். மற்றவர்கள் செல்ல முடியாத இடங்களுக்கு செல்கிறோம்’
உள்ளடக்கத்தில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ அருமையான டிவிட்டர் பயோ இல்லையா!

இது இன்னொரு முதல்குறும்பதிவு

சி.ஐ.ஏ பற்றி குறிப்பிட்டு விட்டு, எழுத்தாளர் ஜார்ஜ் .ஆர்.ஆர் .மார்டின் பற்றி பேசுவது பொருத்தமாக இருக்காது தான். ஆனால் சி.ஐ.ஏ வருகை தந்த அதே காலத்தில் டிவிட்டரில் நுழைந்ததாலும் , மார்டினுடைய முதல் குறும்பதிவும் கவனத்திற்குரியதாக இருந்தாதாலும் இங்கே மார்டின் டிவிட்டர் வருகை பற்றி குறிப்பிடலாம். அமெரிக்க தொலைக்காட்சிகளில் கலக்கி கொண்டிருக்கும் கேம் ஆப் த்ரொன்ஸ் தொடருக்கான மூலக்கதை வடிவை தந்தவரும் ,லயித்து மகிழக்கூடிய கற்பனை உலகை தனது நாவல்களில் சிருஷ்டிப்பவராக பாராட்ட்டப்படும் எழுத்தாளரான மார்டினின் முதல் குறும்பதிவும் மகத்தானதாகவே இருந்தது. ஜிஆர்.எம் ஸ்பீகிங் (@GRRMspeaking
) எனும் முகவரியில் அமைந்திருந்த தனது டிவிட்டர் பக்கத்தில் மார்டினின் முதல் குறும்பதிவு இப்படி இருந்தது:
‘நான் அடிக்கடி டிவீட் செய்யமாட்டேன். தயவுசெய்து எனது லைவ்ஜர்னல் (வலைப்பதிவு) பக்கத்தை பாருங்கள்’ .
எழுத்தாளர்கள் டிவிட்டருக்கு வரும் போது வாசகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அதற்கு நேர்மாறாக பெரும்பாலான எழுத்தாளர்கள் குறும்பதிவுகளாக தங்கள் எண்ணங்களை அருவி போல் எல்லாம் பகிர்வதில்லை.

இந்த ஏமாற்றத்தை அளிக்காமல் இருக்கும் வகையில் மார்டின் முதல் குறும்பதிவிலேயே அதிகம் குறும்பதிவு செய்யமாட்டேன் என கூறிவிட்டார். அதிகம் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்காக தனது வலைப்பதிவையும் குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் உண்மையிலேயே அருமையான முதல் குறும்பதிவு தான். அவரது பயோவும் கூட , தயவுசெய்து லைவ்ஜர்னலில் என்னை தொடருங்கள் என்றே அமைந்திருந்தது.
ஆனால் , அடிக்கடி குறும்பதிவிட மாட்டேன் எனும் அறிமுகத்தை மீறி , எழுத்தாளர் மார்டினுக்கு டிவிட்டரில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பின் தொடர்பாளர்கள் சில நாட்களில் கிடைத்தனர்.

ஆக, ஒரே குறும்பதிவில் லட்சக்கணக்கான பின் தொடர்பாளர்களை அள்ளியவர்கள் பட்டியலில் திரைப்ப நட்சத்திரங்களுக்கு மட்டும் தான் இடம் கிடைக்கவேண்டுமா என்ன? மார்டின் போன்ற நட்சத்திர எழுத்தாளர்களுக்கும் அந்த பெருமை உண்டு என டிவிட்டர் உலகம் காட்டியிருக்கிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.