பேஸ்புக்கின் புதிய வசதி

safetycheckmobielcarouselபுயல் ,பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் நலமாக இருக்கிறேன் என நெருக்கமானவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் புதிய வசதியை சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. சேப்டி செக் எனும் பெயரில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது.
பூகம்பம் ,புயல்,சுனாமி போன்ற இயற்கை பேரிடர் நிகழ்வுகளின் போது எல்லோருக்கும் உறவினர்களும் நண்பர்களும் நலமாக இருக்கின்றரா? என அறிந்து கொள்ளும் துடிப்பு இயல்பாக ஏற்படும். பேரிடர் காலங்களில் பலர் சமூக ஊடகம் மூலம் இந்த கேள்வியை கேட்பதையும் , பலரும் சமூக ஊடகம் வாயிலாக தாங்கள் நலமுடன் இருப்பதை தெரிவிப்பதையும் பார்க்கலாம்.
இப்போது இந்த தகவலை சுலபமான முறையில் நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ளும் புதிய வசதியை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. சேப்டி செக் எனும் பெயரில் பேஸ்புக் இதை அறிமுகம் செய்துள்ளது.
இந்த வசதியின் மூலம் இயற்கை பேரிடர் தாக்கும் போது, நலமாக இருக்கும் தகவலை பேஸ்புக் மூலம் எளிதாக பகிரலாம். பாதிக்கப்பட்ட பகுதியில்; உள்ள நண்பர்கள் நலமுடன் இருப்பதையும் இதன் மூலம் அறியலாம்.
சேப்டி செக் வசதியை இயக்கி வைத்தால், உங்கள் நகரில் புயலோ, பூகம்பமோ தாக்கும் போது , பேஸ்புக் உங்களுக்கு ஒரு நோட்டிபிகேஷன் அனுப்பி தகவல் கோரும். அதில் நலமாக இருக்கிறேன் எனும் வாய்ப்பை தேர்வு செய்தால் அந்த செய்தி உங்கள் டைம்லைனில் தோன்றும். நண்பர்களும் உறவினர்களும் நீங்கள் நலமாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம். இதே போல உங்கள் நண்பர்கள் நிலையையும் நீங்கள் அறியலாம். உங்கள் நண்பர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் அதையும் பகிரலாம். ( ஆனால் இதற்கு அவர்கள் அனுமதி தேவை).
பேஸ்புக்கில் நீங்கள் சம்பர்பித்துள்ள நகரின் அடிப்படையில் இந்த சேவை இயங்குகிறது. நீங்கள் அந்த நகரில் இல்லை அல்லது உங்களுக்கு பாதிப்பு இல்லை என்றால் அதையும் தெரிவிக்கலாம்.

ஜப்பான் சுனாமிக்கு பிறகு பரிதவித்தவர்கள் தங்கள் நிலையை உறவினர்களுக்கு தெரிவிக்க் பேஸ்புக் பேரிடர் தகவல் பலகையின் மேம்பாடாக இந்த வசதியை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. நிச்சயம் பேஸ்புக்கின் ஸ்டேடஸ் அப்டேட்களில் இது தான் பயனுள்ளதாக இருக்கும்.
உலக அளவில் இந்த சேவை அறிமுகமாக உள்ளது. செல்போன் செயலிகளிலும் செயல்படும்.

பேஸ்புக் சேப்டி செக் வசதி பற்றி அறிய: https://www.facebook.com/about/safetycheck/

safetycheckmobielcarouselபுயல் ,பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் நலமாக இருக்கிறேன் என நெருக்கமானவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் புதிய வசதியை சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. சேப்டி செக் எனும் பெயரில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது.
பூகம்பம் ,புயல்,சுனாமி போன்ற இயற்கை பேரிடர் நிகழ்வுகளின் போது எல்லோருக்கும் உறவினர்களும் நண்பர்களும் நலமாக இருக்கின்றரா? என அறிந்து கொள்ளும் துடிப்பு இயல்பாக ஏற்படும். பேரிடர் காலங்களில் பலர் சமூக ஊடகம் மூலம் இந்த கேள்வியை கேட்பதையும் , பலரும் சமூக ஊடகம் வாயிலாக தாங்கள் நலமுடன் இருப்பதை தெரிவிப்பதையும் பார்க்கலாம்.
இப்போது இந்த தகவலை சுலபமான முறையில் நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ளும் புதிய வசதியை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. சேப்டி செக் எனும் பெயரில் பேஸ்புக் இதை அறிமுகம் செய்துள்ளது.
இந்த வசதியின் மூலம் இயற்கை பேரிடர் தாக்கும் போது, நலமாக இருக்கும் தகவலை பேஸ்புக் மூலம் எளிதாக பகிரலாம். பாதிக்கப்பட்ட பகுதியில்; உள்ள நண்பர்கள் நலமுடன் இருப்பதையும் இதன் மூலம் அறியலாம்.
சேப்டி செக் வசதியை இயக்கி வைத்தால், உங்கள் நகரில் புயலோ, பூகம்பமோ தாக்கும் போது , பேஸ்புக் உங்களுக்கு ஒரு நோட்டிபிகேஷன் அனுப்பி தகவல் கோரும். அதில் நலமாக இருக்கிறேன் எனும் வாய்ப்பை தேர்வு செய்தால் அந்த செய்தி உங்கள் டைம்லைனில் தோன்றும். நண்பர்களும் உறவினர்களும் நீங்கள் நலமாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம். இதே போல உங்கள் நண்பர்கள் நிலையையும் நீங்கள் அறியலாம். உங்கள் நண்பர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் அதையும் பகிரலாம். ( ஆனால் இதற்கு அவர்கள் அனுமதி தேவை).
பேஸ்புக்கில் நீங்கள் சம்பர்பித்துள்ள நகரின் அடிப்படையில் இந்த சேவை இயங்குகிறது. நீங்கள் அந்த நகரில் இல்லை அல்லது உங்களுக்கு பாதிப்பு இல்லை என்றால் அதையும் தெரிவிக்கலாம்.

ஜப்பான் சுனாமிக்கு பிறகு பரிதவித்தவர்கள் தங்கள் நிலையை உறவினர்களுக்கு தெரிவிக்க் பேஸ்புக் பேரிடர் தகவல் பலகையின் மேம்பாடாக இந்த வசதியை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. நிச்சயம் பேஸ்புக்கின் ஸ்டேடஸ் அப்டேட்களில் இது தான் பயனுள்ளதாக இருக்கும்.
உலக அளவில் இந்த சேவை அறிமுகமாக உள்ளது. செல்போன் செயலிகளிலும் செயல்படும்.

பேஸ்புக் சேப்டி செக் வசதி பற்றி அறிய: https://www.facebook.com/about/safetycheck/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

2 Comments on “பேஸ்புக்கின் புதிய வசதி

  1. சிறந்த பகிர்வு
    தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    Reply
    1. cybersimman

      Thank u very much. Wish u the same. Anbudan simman

      Reply

Leave a Comment

Your email address will not be published.