ஸ்மார்ட் போனால் ஆன பயன்!

ஸ்மார்ட்போன்கள் வெறும் அந்தஸ்தின் அடையாளமோ அல்லது கவனச்சிதறலோ அல்ல, அவை செயல்திறனை மேம்படுத்துபவை. உற்பத்தியை பெருக்குபவை. இப்படி சொல்லப்படுவதில் சந்தேகமோ ஆச்சர்யமோ இருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள், ஏனெனில் சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் ஸ்மார்ட்போன்கள் பணியிடத்தில் செயல்திறனை மேம்படுத்த உதவுவதுடன், சக ஊழியர்களுடனான தகவல் தொடர்பிலும் கைகொடுப்பதாக தெரியவந்துள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பிளாக்பெரி சார்பில் ஜிஎப்கே எனும் ஆய்வு நிறுவனம் சர்வதேச அளவில் இந்த கணிப்பை மேற்கொண்டது. இந்தியா உள்ளிட்ட பத்து நாடுகளில் சுமார் 9,500 பங்கேற்பாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் தான், பெரும்பாலான இந்திய ஸ்மார்ட்ப்யனாளிகள் , ஸ்மாட்போன்கள் நேரத்தை மிச்சமாக்கி, செயல்திறனை மேம்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். எந்த நேரத்திலும் பணியை மேற்கொள்ள வழி செய்வதன் மூலம் வாழ்க்கையையும் எளிதாக்கு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில், 67 சதவீதம் பேர் ,தங்கள் செயல்திறனை மேம்படுத்துவதில் குறியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். 69 சதவீதம் பேர் ஏற்கனவே செய்து கொண்டுள்ள வேலைகளை மேலும் சிறப்பாக செய்ய புதிய வழிகளை தேடிக்கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.
இனியும் வேலையை செய்து முடிப்பது மட்டுமே முக்கியமல்ல, அதை தாக்கம் ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக செய்வது தான் முக்கியம் என்றும் கூறியுள்ளனர்.
ஸ்மார்ட்போன்கள் நேரத்தை மிச்சமாக்குவதாகவும், ஒரு வாரத்தில் சராசரியாக 5 மணி நேரம் மிச்சமாவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆக, ஸ்மார்ட்போன் வாங்க இன்னொரு கூடுதல் காரணம் கிடைத்திருக்கிறது. அப்படியே ஸ்மார்ட்போன் பயனாளிகள் உங்கள் செயல்திறனையும் சோதித்துப்பார்த்துக்கொள்ளுங்கள்.

————-

லேப்டாப் கையேடு

லேப்டாப்பில் தான் எத்தனை பிராண்ட்கள்,எத்தனை ரகங்கள். புதிய லேப்டாப் வாங்க விரும்பினால் இவற்றில் சிலவற்றின் அம்சங்களையும் விலையையும் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியாது. இப்படி லேப்டாப்களை ஒப்பிட்டு பார்க்க விரும்பினால் இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடவும் வேண்டாம், ஒப்பீட்டு இணையதளங்கள் பக்கமும் போக வேண்டாம். அமெரிக்கரான மரேக் கிப்னே (Marek Gibney ) அருமையான வழியை இதற்காக உருவாக்கி இருக்கிறார். மனிதர் லேப்டாப்களுக்கான சுற்றுலா வரைபடம் மூலம் லேப்டாப் தொடர்பான எல்லா விவரங்களையும் ஒரே சார்ட்டில் கொண்டுவந்து விட்டார். இந்த வரைபடத்தில் லேப்டாப்கள் சின்ன சின்ன ஐகான்களாக இடம்பெற்றுள்ளன. எந்த ஐகான் அருகே மவுஸ் சுட்டியை கொண்டு சென்றாலும் அந்த லேப்டாபின் படம் மற்றும் விலை உள்ளிட்ட அம்சங்கள் தோன்றுகின்றன.( விலை டாலரில் கொடுக்கப்பட்டுள்ளது). திரை அளவு ,நினைவுத்திறன் உள்ளிட்ட அம்சங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஒரு சில நிமிடங்களில் ஒரு லேப்டாப் ஷோரூமிற்கு சென்று வந்தது போன்ற உணர்வை பெறலாம். கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளவும் வழி இருக்கிறது.
லேப்டாப்களை ஒப்பிட்டு பார்க்க இதைவிட சிறந்த வழி இருக்கலாம், ஆனால் சுலபமான வழி இருக்க வாய்ப்பில்லை.
அட லேப்டாப் வரைபடம் ( http://things.gnod.com/laptops/) நன்றாக இருக்கிறதே என்று தோன்றினால் இதன் மூல இணையதளத்திற்கும் (http://www.gnod.com/ ) சென்று பாருங்கள். எம்பி3 பிளேயர்கள் போன்றவற்றுக்கும் இதே போன்ற வசதி இருப்பதுடன், இசை,இலக்கியம் மற்றும் திரைப்ப்டங்களுக்கான இதே போன்ற ஒப்பீட்டு வசதி உள்ளன. உங்கள் ரசனை அடிப்படையில் புதிய விஷயங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான அருமையான வழியாக இவை இருக்கின்றன.

—————

ஆப்பிள் வாட்ச் அழகி

ஆப்பிள் வாட்ச் எப்படி இருக்கும்? இந்த கேள்விக்கு விடை காண இன்னும் சில மாதங்களாவது காத்திருக்க வேண்டும். சரை, ஆப்பில் வாட்சியை அணிந்து கொண்டால் எப்படி இருக்கும்? இதற்கான பதிலைப்பெற பிரபல பேஷன் இதழான வோக் ( Vogue ) பத்திரிகையின் சீன பதிப்பின் பக்கங்களை புரட்டினாலே போதும். இதன் நவம்பர் இதழில் சீன சூப்பர் மாடல் அழகி லியூ வென் ஆப்பிள் வாட்சி அணிந்து அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். முகப்பு பக்க்த்திலும் இந்த ஆப்பிள் வாட்ச் அழகி தான் அலங்கரிக்கிறார். இதழின் ஆசிரியர் ஆப்பிள் வாட்சுடனான இந்த கூட்டு முயற்சி பற்றி விரிவாக குறிப்பிட்டிருக்கிறார்.
ஆப்பில் வாட்ச் பேஷன் சந்தையை முக்கிய இலக்காக கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் அறிமுக நிகழ்ச்சிக்கே முன்னணி பேஷன் கலைஞர்க்ள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வோக் சீன இதழில் முகப்பு பக்கத்தில் ஆப்பில் வாட்ச் அலங்கரிப்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. சும்மா இல்லை சீன வோக் இதழுக்கு 13 லட்சம் வாசகர் இருப்பதாக சொல்லப்படுகிறது.
’மற்ற நாடுகளை விட சீன மக்கள் தான் புதிய தொழில்நுப்டம் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை ஏற்றுக்கொள்வதில் முன்னிலை வகிக்கின்றனர் . புதிய மற்றும் நவீனமான எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதில் சீனர்கள் மிகுந்த விருப்பம் கொண்டவர்கள்’- ஆப்பிள் சீன வோக் இதழை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கு அதன் எடிட்டர் இன் சீஃப் ஏஞ்சலிசியா செயூங் அளித்துள்ள பதில் இது.
இதனிடையே ஆப்பிளின் வடிவமைப்பு நுப்டங்களை நக்லெடுப்பதாக அதன் வடிவமைப்பு பிரிவு துணைத்தலைவர் ஜோனாத்தன் ஐவி கூறியுள்ள புகாருக்கு , சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோமி ( Xiaomi ) தலைவர் லின் பின் மறுப்பு தெரிவித்துள்ளார். எங்கள் தயாரிப்பை பயன்படுத்தி பார்த்தால் தான் தெரியும், வேண்டுமானாலு ஐவிக்கு ஒரு ஜியோமி போனை பரிசாக அனுப்பி வைக்கத்தயார் என்று கூறியுள்ளார். அவர் பயன்படுத்த பின் சொல்லும் கருத்துகளை அறிய ஆவலாக இருப்பதாகவும் கூறியுள்ளார். சபாஷ் சரியான சவால் தான் .

———–
நான்காவது பயர்பாக்ஸ் போன்

ஸ்பைஸ், இண்டெக்ஸ் மற்றும் அல்காடெல் என பயர்பாக்ஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ள நிறுவனங்களின் வரிசையில் ஜென் மொபைலும் சேர உள்ளது. மொசில்லாவுடன் இணைந்து ஜென் மொபைல் நிறுவனமும் குறைந்த விலையிலான பயர்பாக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது இந்திய சந்தையில் அறிமுகமாகும் நான்காவது பயர்பாக்ஸ் போனாக இருக்கும். ஸ்மார்ட்போன் அனுபவத்தை முதலில் பெற விரும்புகிறவர்களுக்கு பயர்பாக்ஸ் போன்ற குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் உதவும் என்று கருதப்படுகிறது. பெரும்பாலான இந்திய பயனாளிகள் விலையை முக்கியமாக கருதுவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே மொசில்லா மேலும் பல கூட்டு திட்டங்களுடன் பயர்பாக்ஸ் ஓஎஸ் பயன்பாட்டை விரிவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. பயர்பாக்ஸ் சந்தையை மேம்படுத்தும் வகையில் இபே இந்தியா, ஜோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயலிகளை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.

——-

இந்த காமிரா எப்படி?

ஸ்மார்ட்போன்கள் முன்பக்க காமிரா, பின்பக்க காமிரா என இரட்டை காமிராக்களுடன் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஸ்மார்ட் போன் நிறுவனமான எச்டிசி தனியே ஒரு காமிராவை அறிமுகம் செய்துள்ளது. எசிடிசி ரீ (HTC Re ) எனும் பெயர் கொண்ட அந்த காமிரா சற்றே விநோதமானது. காமிரா போலவே தோற்றம் அளிக்காத அந்த காமிரா ஒரு சின்ன குழாய் போல தான் இருக்கிறது. இதில் திரையும் கிடையாது. அதனால் என்ன கையில் எடுத்ததுமே படம் பிடிக்கதுவங்கி விடலாம் என்கிறது எச்டிசி. இதில் மொத்தமே இரண்டு பட்டன்கள் தான். பின் பக்கம் உள்ள வெள்ளி நிற பட்டனை அழுத்தினால் போதும் படம் எடுக்கத்துவங்கிவிடும். புகைப்பம் எடுக்க ஒரு அழுத்து. இன்னொரு முறை அழுத்தினால் வீடியோ. இதில் என்ன விஷேசம் என்றால் இதை ஆன் செய்ய தனியே ஸ்விட்ச் கிடையாது . கையில் எடுத்ததுமே , இயக்கத்தை உணர்ந்து ஆன் செய்து கொள்ளும் தன்மை கொண்டிருக்கிறது.
படம் படிக்கும் தருணம் வந்துதும், ஸ்மார்போனை கையில் எடுத்து காமிராவை இயக்கி, காட்சியை நோக்கி மையம் கொள்வது எல்லாம் எதற்கு, உடனே காமிராவை எடுத்து கிளிக் செய்ய முடிந்தால் தான், நிஜவாழ்க்கை தருணங்களை அப்படியே படம் பிடிக்க முடியும் என்கிறது எச்டிசி. புகைப்படத்தை சேமிக்கும் மற்றும் மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது. ஸ்மார்ட்போனுடன் செயல்படும் செயலி ஒன்றும் இருக்கிறது. செயலி மூலம் புகைப்படம் மற்றும் வீடியோவை பார்த்துக்கொள்ளலாம்.
காமிரா பிரிவில் கவனத்தை ஈர்த்திருக்கும் ஆக்‌ஷன் காமிராவான கோப்ரோவுக்கு போட்டியாக அறிமுகமாகி இருக்கிறது. நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. விலை; 199 டாலர்.
எச்டிசி அறிமுகம் செய்துள்ள டிசைன் ஐ போனிலும் செல்ஃபீ காமிரா தான் விஷேசம் என்கின்றனர்.

————–

ஆண்ட்ராய்டு ஒன் சவால்

ஆண்ட்ராய்ட் ஒன் மீது கூகிள் மிகுந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கிறது. குறைந்த விலையிலான இந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் இந்தியா உள்ளிட்ட ஆசிய சந்தையில் முதல் முறை ஸ்மார்ட்போன் பயனாளிகளை சென்றடைய திட்டமிட்டுள்ளது.
ஆனால் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடும் போட்டி நிலவும் நிலையில் ஆண்ட்ராய்டு ஒன் சவாலான நிலையை எதிர்கொள்ள இருப்பதாக ஐடிசி (International Data Corporation ) ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. மார்கெட்டிங் மற்றும் விளம்பரத்தில் அதிகமாக செலவிட்டு வரும் நிலையிலும் இந்திய சந்தையை கைப்பற்றுபது கடினமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன சந்தை அடைக்கப்பட்டிருதால் கூகிள் இந்தியாவில் தான் அடுத்த பில்லியன் வாடிக்கையாளர்கள் பிரிவில் கவனம் செலுத்தியாக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்ட்ராய்டு ஒன் கூகிளுக்கு முக்கியமானது என்றும் இந்தியாவில் வாங்ககூடிய விலையில் ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் திறன் கொண்டது என்றும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
ஆண்ட்ராய்டு ஒன் ஏற்கனவே கார்பன், மைக்ரோமேக்ஸ் மற்ற்உம் ஸ்பைஸ் நிறுவனங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . அடுத்த கட்டமாக மற்ற நிறுவனங்களுடன் இணைந்தும் அறிமுகாமக உள்ளது.
———-

நன்றி; தமிழ் இந்து

ஸ்மார்ட்போன்கள் வெறும் அந்தஸ்தின் அடையாளமோ அல்லது கவனச்சிதறலோ அல்ல, அவை செயல்திறனை மேம்படுத்துபவை. உற்பத்தியை பெருக்குபவை. இப்படி சொல்லப்படுவதில் சந்தேகமோ ஆச்சர்யமோ இருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள், ஏனெனில் சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் ஸ்மார்ட்போன்கள் பணியிடத்தில் செயல்திறனை மேம்படுத்த உதவுவதுடன், சக ஊழியர்களுடனான தகவல் தொடர்பிலும் கைகொடுப்பதாக தெரியவந்துள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பிளாக்பெரி சார்பில் ஜிஎப்கே எனும் ஆய்வு நிறுவனம் சர்வதேச அளவில் இந்த கணிப்பை மேற்கொண்டது. இந்தியா உள்ளிட்ட பத்து நாடுகளில் சுமார் 9,500 பங்கேற்பாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் தான், பெரும்பாலான இந்திய ஸ்மார்ட்ப்யனாளிகள் , ஸ்மாட்போன்கள் நேரத்தை மிச்சமாக்கி, செயல்திறனை மேம்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். எந்த நேரத்திலும் பணியை மேற்கொள்ள வழி செய்வதன் மூலம் வாழ்க்கையையும் எளிதாக்கு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில், 67 சதவீதம் பேர் ,தங்கள் செயல்திறனை மேம்படுத்துவதில் குறியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். 69 சதவீதம் பேர் ஏற்கனவே செய்து கொண்டுள்ள வேலைகளை மேலும் சிறப்பாக செய்ய புதிய வழிகளை தேடிக்கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.
இனியும் வேலையை செய்து முடிப்பது மட்டுமே முக்கியமல்ல, அதை தாக்கம் ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக செய்வது தான் முக்கியம் என்றும் கூறியுள்ளனர்.
ஸ்மார்ட்போன்கள் நேரத்தை மிச்சமாக்குவதாகவும், ஒரு வாரத்தில் சராசரியாக 5 மணி நேரம் மிச்சமாவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆக, ஸ்மார்ட்போன் வாங்க இன்னொரு கூடுதல் காரணம் கிடைத்திருக்கிறது. அப்படியே ஸ்மார்ட்போன் பயனாளிகள் உங்கள் செயல்திறனையும் சோதித்துப்பார்த்துக்கொள்ளுங்கள்.

————-

லேப்டாப் கையேடு

லேப்டாப்பில் தான் எத்தனை பிராண்ட்கள்,எத்தனை ரகங்கள். புதிய லேப்டாப் வாங்க விரும்பினால் இவற்றில் சிலவற்றின் அம்சங்களையும் விலையையும் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியாது. இப்படி லேப்டாப்களை ஒப்பிட்டு பார்க்க விரும்பினால் இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடவும் வேண்டாம், ஒப்பீட்டு இணையதளங்கள் பக்கமும் போக வேண்டாம். அமெரிக்கரான மரேக் கிப்னே (Marek Gibney ) அருமையான வழியை இதற்காக உருவாக்கி இருக்கிறார். மனிதர் லேப்டாப்களுக்கான சுற்றுலா வரைபடம் மூலம் லேப்டாப் தொடர்பான எல்லா விவரங்களையும் ஒரே சார்ட்டில் கொண்டுவந்து விட்டார். இந்த வரைபடத்தில் லேப்டாப்கள் சின்ன சின்ன ஐகான்களாக இடம்பெற்றுள்ளன. எந்த ஐகான் அருகே மவுஸ் சுட்டியை கொண்டு சென்றாலும் அந்த லேப்டாபின் படம் மற்றும் விலை உள்ளிட்ட அம்சங்கள் தோன்றுகின்றன.( விலை டாலரில் கொடுக்கப்பட்டுள்ளது). திரை அளவு ,நினைவுத்திறன் உள்ளிட்ட அம்சங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஒரு சில நிமிடங்களில் ஒரு லேப்டாப் ஷோரூமிற்கு சென்று வந்தது போன்ற உணர்வை பெறலாம். கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளவும் வழி இருக்கிறது.
லேப்டாப்களை ஒப்பிட்டு பார்க்க இதைவிட சிறந்த வழி இருக்கலாம், ஆனால் சுலபமான வழி இருக்க வாய்ப்பில்லை.
அட லேப்டாப் வரைபடம் ( http://things.gnod.com/laptops/) நன்றாக இருக்கிறதே என்று தோன்றினால் இதன் மூல இணையதளத்திற்கும் (http://www.gnod.com/ ) சென்று பாருங்கள். எம்பி3 பிளேயர்கள் போன்றவற்றுக்கும் இதே போன்ற வசதி இருப்பதுடன், இசை,இலக்கியம் மற்றும் திரைப்ப்டங்களுக்கான இதே போன்ற ஒப்பீட்டு வசதி உள்ளன. உங்கள் ரசனை அடிப்படையில் புதிய விஷயங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான அருமையான வழியாக இவை இருக்கின்றன.

—————

ஆப்பிள் வாட்ச் அழகி

ஆப்பிள் வாட்ச் எப்படி இருக்கும்? இந்த கேள்விக்கு விடை காண இன்னும் சில மாதங்களாவது காத்திருக்க வேண்டும். சரை, ஆப்பில் வாட்சியை அணிந்து கொண்டால் எப்படி இருக்கும்? இதற்கான பதிலைப்பெற பிரபல பேஷன் இதழான வோக் ( Vogue ) பத்திரிகையின் சீன பதிப்பின் பக்கங்களை புரட்டினாலே போதும். இதன் நவம்பர் இதழில் சீன சூப்பர் மாடல் அழகி லியூ வென் ஆப்பிள் வாட்சி அணிந்து அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். முகப்பு பக்க்த்திலும் இந்த ஆப்பிள் வாட்ச் அழகி தான் அலங்கரிக்கிறார். இதழின் ஆசிரியர் ஆப்பிள் வாட்சுடனான இந்த கூட்டு முயற்சி பற்றி விரிவாக குறிப்பிட்டிருக்கிறார்.
ஆப்பில் வாட்ச் பேஷன் சந்தையை முக்கிய இலக்காக கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் அறிமுக நிகழ்ச்சிக்கே முன்னணி பேஷன் கலைஞர்க்ள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வோக் சீன இதழில் முகப்பு பக்கத்தில் ஆப்பில் வாட்ச் அலங்கரிப்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. சும்மா இல்லை சீன வோக் இதழுக்கு 13 லட்சம் வாசகர் இருப்பதாக சொல்லப்படுகிறது.
’மற்ற நாடுகளை விட சீன மக்கள் தான் புதிய தொழில்நுப்டம் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை ஏற்றுக்கொள்வதில் முன்னிலை வகிக்கின்றனர் . புதிய மற்றும் நவீனமான எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதில் சீனர்கள் மிகுந்த விருப்பம் கொண்டவர்கள்’- ஆப்பிள் சீன வோக் இதழை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கு அதன் எடிட்டர் இன் சீஃப் ஏஞ்சலிசியா செயூங் அளித்துள்ள பதில் இது.
இதனிடையே ஆப்பிளின் வடிவமைப்பு நுப்டங்களை நக்லெடுப்பதாக அதன் வடிவமைப்பு பிரிவு துணைத்தலைவர் ஜோனாத்தன் ஐவி கூறியுள்ள புகாருக்கு , சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோமி ( Xiaomi ) தலைவர் லின் பின் மறுப்பு தெரிவித்துள்ளார். எங்கள் தயாரிப்பை பயன்படுத்தி பார்த்தால் தான் தெரியும், வேண்டுமானாலு ஐவிக்கு ஒரு ஜியோமி போனை பரிசாக அனுப்பி வைக்கத்தயார் என்று கூறியுள்ளார். அவர் பயன்படுத்த பின் சொல்லும் கருத்துகளை அறிய ஆவலாக இருப்பதாகவும் கூறியுள்ளார். சபாஷ் சரியான சவால் தான் .

———–
நான்காவது பயர்பாக்ஸ் போன்

ஸ்பைஸ், இண்டெக்ஸ் மற்றும் அல்காடெல் என பயர்பாக்ஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ள நிறுவனங்களின் வரிசையில் ஜென் மொபைலும் சேர உள்ளது. மொசில்லாவுடன் இணைந்து ஜென் மொபைல் நிறுவனமும் குறைந்த விலையிலான பயர்பாக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது இந்திய சந்தையில் அறிமுகமாகும் நான்காவது பயர்பாக்ஸ் போனாக இருக்கும். ஸ்மார்ட்போன் அனுபவத்தை முதலில் பெற விரும்புகிறவர்களுக்கு பயர்பாக்ஸ் போன்ற குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் உதவும் என்று கருதப்படுகிறது. பெரும்பாலான இந்திய பயனாளிகள் விலையை முக்கியமாக கருதுவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே மொசில்லா மேலும் பல கூட்டு திட்டங்களுடன் பயர்பாக்ஸ் ஓஎஸ் பயன்பாட்டை விரிவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. பயர்பாக்ஸ் சந்தையை மேம்படுத்தும் வகையில் இபே இந்தியா, ஜோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயலிகளை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.

——-

இந்த காமிரா எப்படி?

ஸ்மார்ட்போன்கள் முன்பக்க காமிரா, பின்பக்க காமிரா என இரட்டை காமிராக்களுடன் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஸ்மார்ட் போன் நிறுவனமான எச்டிசி தனியே ஒரு காமிராவை அறிமுகம் செய்துள்ளது. எசிடிசி ரீ (HTC Re ) எனும் பெயர் கொண்ட அந்த காமிரா சற்றே விநோதமானது. காமிரா போலவே தோற்றம் அளிக்காத அந்த காமிரா ஒரு சின்ன குழாய் போல தான் இருக்கிறது. இதில் திரையும் கிடையாது. அதனால் என்ன கையில் எடுத்ததுமே படம் பிடிக்கதுவங்கி விடலாம் என்கிறது எச்டிசி. இதில் மொத்தமே இரண்டு பட்டன்கள் தான். பின் பக்கம் உள்ள வெள்ளி நிற பட்டனை அழுத்தினால் போதும் படம் எடுக்கத்துவங்கிவிடும். புகைப்பம் எடுக்க ஒரு அழுத்து. இன்னொரு முறை அழுத்தினால் வீடியோ. இதில் என்ன விஷேசம் என்றால் இதை ஆன் செய்ய தனியே ஸ்விட்ச் கிடையாது . கையில் எடுத்ததுமே , இயக்கத்தை உணர்ந்து ஆன் செய்து கொள்ளும் தன்மை கொண்டிருக்கிறது.
படம் படிக்கும் தருணம் வந்துதும், ஸ்மார்போனை கையில் எடுத்து காமிராவை இயக்கி, காட்சியை நோக்கி மையம் கொள்வது எல்லாம் எதற்கு, உடனே காமிராவை எடுத்து கிளிக் செய்ய முடிந்தால் தான், நிஜவாழ்க்கை தருணங்களை அப்படியே படம் பிடிக்க முடியும் என்கிறது எச்டிசி. புகைப்படத்தை சேமிக்கும் மற்றும் மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது. ஸ்மார்ட்போனுடன் செயல்படும் செயலி ஒன்றும் இருக்கிறது. செயலி மூலம் புகைப்படம் மற்றும் வீடியோவை பார்த்துக்கொள்ளலாம்.
காமிரா பிரிவில் கவனத்தை ஈர்த்திருக்கும் ஆக்‌ஷன் காமிராவான கோப்ரோவுக்கு போட்டியாக அறிமுகமாகி இருக்கிறது. நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. விலை; 199 டாலர்.
எச்டிசி அறிமுகம் செய்துள்ள டிசைன் ஐ போனிலும் செல்ஃபீ காமிரா தான் விஷேசம் என்கின்றனர்.

————–

ஆண்ட்ராய்டு ஒன் சவால்

ஆண்ட்ராய்ட் ஒன் மீது கூகிள் மிகுந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கிறது. குறைந்த விலையிலான இந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் இந்தியா உள்ளிட்ட ஆசிய சந்தையில் முதல் முறை ஸ்மார்ட்போன் பயனாளிகளை சென்றடைய திட்டமிட்டுள்ளது.
ஆனால் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடும் போட்டி நிலவும் நிலையில் ஆண்ட்ராய்டு ஒன் சவாலான நிலையை எதிர்கொள்ள இருப்பதாக ஐடிசி (International Data Corporation ) ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. மார்கெட்டிங் மற்றும் விளம்பரத்தில் அதிகமாக செலவிட்டு வரும் நிலையிலும் இந்திய சந்தையை கைப்பற்றுபது கடினமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன சந்தை அடைக்கப்பட்டிருதால் கூகிள் இந்தியாவில் தான் அடுத்த பில்லியன் வாடிக்கையாளர்கள் பிரிவில் கவனம் செலுத்தியாக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்ட்ராய்டு ஒன் கூகிளுக்கு முக்கியமானது என்றும் இந்தியாவில் வாங்ககூடிய விலையில் ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் திறன் கொண்டது என்றும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
ஆண்ட்ராய்டு ஒன் ஏற்கனவே கார்பன், மைக்ரோமேக்ஸ் மற்ற்உம் ஸ்பைஸ் நிறுவனங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . அடுத்த கட்டமாக மற்ற நிறுவனங்களுடன் இணைந்தும் அறிமுகாமக உள்ளது.
———-

நன்றி; தமிழ் இந்து

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.