இமெயில் வாசிக்கப்பட்டதா என அறிவது எப்படி? சில வழிகள்! பல கேள்விகள்!

bananatag_01-100612056-large.idgeநான் அனுப்பிய இமெயில் திறக்கப்பட்டு, படிக்கப்பட்டதா என்பதை அறிவது எப்படி?
இமெயில் பயனாளிகள் பலருக்கும் கேட்கக்கூடிய கேள்வி தான் இது. இந்த கேள்விக்கான தேவையை எளிதாக புரிந்து கொள்ளலாம். மிகவும் முக்கியமான மெயிலை அனுப்பும் நிலையில் ஒருவர் அது வாசிக்கப்பட்டதா? என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டலாம். அந்த மெயிலுக்கான பதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிலையிலும் இவ்வாறு ஆர்வம் ஏற்படலாம். பொதுவாகவே, ஒருவர் படிக்கப்பட வேண்டும் என்பதற்காக தானே மெனக்கெட்டு மெயில் அனுப்புகிறார். எனவே அது வாசிக்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இயல்பானதே!

இமெயில் பயனாளிகளில் எத்தனை பேருக்கு இந்த கேள்வி எழுகிறது? எப்போது எழுகிறது என்பவை சுவாரஸ்யமான துணை கேள்விகள்!

இப்போது, இமெயில் வாசிக்கப்பட்டதா என்பதை அறியும் வழி இருக்கிறதா? எனும் ஆரம்ப கேள்விக்கான பதிலை பார்க்கலாம். இந்த கேள்விக்கான பதில் எளிமையானது மற்றும் சிக்கலானது. எளிமையான பதில், இமெயில் வாசிக்கப்பட்டதை அறிய வழி இருக்கிறது. ஆனால் அது உங்கள் இமெயில் சேவையில் இல்லை; தனியே நாடப்பட வேண்டும். அதாவது இந்த வசதியை அளிப்பதற்கு என்றே தனியே இணையதளங்கள் இருக்கின்றன.

இத்தகைய சேவைகளை பட்டியலிட்டு அவை செயல்படும் விதம் பற்றி விளக்குவதற்கு முன் அடிப்படையான சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இமெயில் வாசிக்கப்பட்டதா? என்பதை அறியும் வசதி இமெயில் கண்காணிப்பு என்றே குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் இமெயில் டிராக்கிங் என்று சொல்லப்படுகிறது. கண்காணிப்பு என்றவுடன் ஒற்று அறிவது அல்லது உளவு பார்ப்பதுடன் ஒப்பிட முடியாது என்றாலும் கூட, இமெயில் வாசிக்கப்பட்டதா என்பதை அறிவதற்கான வழிகள் அனைத்தும் ஒருவிதத்தில் கண்காணிப்பு என்று சொல்லக்கூடிய உத்தியையே பின்பற்றுகின்றன. அதனால் தான் இந்த பதில் சிக்கலானதாகவும் அமைகிறது.
வழக்கமாக யார் இமெயில் அனுப்பி வைத்தாலும் சரி, பெறுபவர் அதை உடனடியாக படித்துப்பார்கலாம், அல்லது தாமதமாக படிக்கலாம். இல்லை படிக்காமலே டெலிட் செய்து விடலாம். இது அவரது விருப்பம் மற்றும் உரிமை. அனுப்புகிறவர் இமெயில் பெறும் போதும் இது பொருந்தும்.

பொதுவான இமெயில் அமைப்பில், மெயில் வாசிக்கப்பட்டதா என்பதை உணரும் வழி இல்லை. அவுட்லுக் போன்ற இமெயில் சேவையில், இதை உறுதி செய்து கொள்வதற்காக, பெறப்பட்டது என்பதை தெரிவிக்கும் வசதி இருக்கிறது. ஆனால் இந்த வசதியை ஏற்று பதில் தெரிவிப்பது மறுமுனையில் இருப்பவரின் விருப்பம் சார்ந்தது. இந்த வசதியை பிளாக் செய்வதற்கான வழியும் இருக்கிறது. எனவே, இதற்கான நேரடி வழி இல்லை.
இந்த இடத்தில் தான் இமெயில் டிராக்கிங் சேவைகள் வருகின்றன். பனானாடேக், பூமாரங், ட்டிதேரீட் இட் ஸ்டீரிக், காண்டாக்ட் மன்கி மற்றும் இன்னும் பிற பல சேவைகள் இந்த வசதியை அளிக்கின்றன. குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு மூலம் இந்த வசதியை அளிக்கும் சேவைகளும் கூட இருக்கின்றன.

இந்த சேவைகளை பயன்படுத்தும் போது அவை ஒருவர் அனுப்பும் இமெயிலில் சின்னதாக ஒரு புகைப்பட குறியீட்டை இடம்பெறச்செய்கின்றன. கண்ணுக்குத்தெரியாத புள்ளியாக கூட அது இருக்கலாம். அதில் இருக்கும் எச்.டி.எம்.எல் குறியீடு மூலம் மெயில் பிரிக்கப்பட்டதும், சர்வருக்கு தகவல் தெரிவிக்கப்படும். இந்த தகவல் பயனாளிக்கும் தெரிவிக்கப்படும்.

இதே முறையில் இமெயிலில் அனுப்பும் இணைப்புகள் கிளிக் செய்யப்பட்டதா என்பதை அறியவும் தனியே ஒரு குறியீடு இணைக்கப்படுகிறது. இந்த சேவைகளின் மூலம் இமெயில் எப்போது பிரிக்கப்பட்டது என்பதையும், அதன் இணைப்புகள் கிளிக் செய்யப்பட்டதா என்பதையும் அறியலாம். பொதுவாக மார்க்கெட்டிங் நோக்கில் இமெயில்களை கூட்டம், கூட்டமாக அனுப்பி வைப்பவர்கள் தங்கள் முயற்சியின் பலனை அறிய இந்த சேவைகளை பயன்படுத்துகின்றன. தனி நபர்களும் கூட இந்த சேவையை பயன்படுத்தலாம். இவற்றில் இலவச சேவைகளும் இருக்கின்றன, கட்டண சேவைகளும் இருக்கின்றன. இது தொடர்பான இணைப்பு: http://www.computerworld.com/article/2979569/web-browsers/review-6-chrome-extensions-let-you-track-your-gmail.html

ஆனால் இதை கூட நூறு சதவீதம் உத்திரவாதமானது என்று சொல்வதற்கில்லை. டிராக்கிங் சேவைகள் அதிகபட்சமாக இமெயில் திறக்கப்பட்ட தகவலை தெரிவிக்கின்றன. ஆனால் அது வாசிக்கப்பட்டதன் அடையாளமாக அமையுமா என்பது கேள்விக்குறி தான். அதை மெயில் பெற்றவர் மட்டும் தான் உறுதி செய்ய முடியும்.

இமெயிலின் அத்தனை வசதிகளையும் மீறி இது நிச்சயம் இமெயிலின் குறை தான். இல்லை அப்படியும் சொல்வதற்கில்லை. உண்மையில் இது இமெயில் பயன்படுத்தப்படும் விதத்தின் பக்கவிளைவாக உண்டான பிரச்சனை. இமெயில் அடிப்படையில் இலவசமாக இருப்பதால், அதை தகவல் தொடர்புக்காக மட்டும் அல்லாமல், மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர நோக்கிலும் பயன்படுத்தி வருகின்றனர். காசா, பணமா, ஒரு இமெயில் தானே என வர்த்தக நிறுவனங்கள் கூட்டமாக மெயில்களை அனுப்பி வைக்கின்றன. இவை த்தவிர மோசடி மெயில்கள், வில்லங்க மெயில்கள், மால்வேர் வாகன மெயில்கள் என பல ரகங்கள் இருக்கின்றன. இவை எல்லாமுமாக சேர்ந்து ஸ்பேம் எனப்படும் குப்பை மெயில்களாக வகைப்படுத்தப்படுகின்றன.

இத்தகைய குப்பை மெயில்களில் இருந்து பயனாளிகளுக்கு பாதுகாப்பு தேவைப்படவே செய்கிறது. இதன் விளைவாகவே மெயில்களை படித்துவிட்டோம் என தெரிவிக்கும் வசதி செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவை உண்மையான அக்கரையோடு தங்கள் மெயிலுக்கான எதிர்வினையை தெரிந்து கொள்ள நினைப்பவர்களும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

இதற்கான மூன்றாம் தரப்பு தீர்வாகனே மெயில் டிராக்கிங் சேவைகள் அமைகின்றன. ஆனால் அதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. இது போன்ற சேவைகள் மூலம் மெயில் பிரிக்கட்ட நேரத்தை அறிவதோடு, அவை பிரிக்கப்பட்ட இடத்தை கூட அறியலாம். இது தனியுரிமை மீறலுக்கு வழிவகுக்கலாம். மேலும் இணைய விஷமிகள் இதை தவறான நோக்கத்தில் பயன்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே இமெயில் டிராக்கிங் சேவையை பயன்படுத்தும் எண்ணம் இருந்தால், அதை மெயில் அனுப்பும் போது தெரிவித்துவிடுவது சிறந்த இணைய அறமாக இருக்கும். அதிலும் வர்த்தக நிறுவனத்தில் இருந்து கொண்டு இதை செய்யும் நிலையில் நிச்சயம் இது தொடர்பான நிறுவன கொள்கையை அறிந்திருப்பது நல்லது.

பயனாளிகள் நோக்கில் பார்த்தால், இன்பாக்ஸ் தேடி வரும் இமெயிலுக்குள் இப்படி ஒரு வசதி இருப்பதும் அதை அறியாமல் இருப்பதும் திடுக்கிட வைக்கலாம். ஆனால் நல்லவேளையாக இதை தடுக்கும் வசதியும் இல்லாமல் இல்லை. ஜிமெயில் உள்ளிட்ட பெரும்பாலான மெயில் சேவைகளில் செட்டிங் பகுதிக்கு சென்று , புகைப்படம் போன்றவை இணைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவை தானாக திறக்கப்படாமல், புகைப்பட இணைப்பை திறக்கலாமா என அனுமதி கேட்டு அதன் பிறகே செயல்படும் வகையில் அமைத்துக்கொள்ளலாம். இது தொடர்பான இணைப்பு: http://bgr.com/2015/11/19/how-to-stop-email-tracking/

bananatag_01-100612056-large.idgeநான் அனுப்பிய இமெயில் திறக்கப்பட்டு, படிக்கப்பட்டதா என்பதை அறிவது எப்படி?
இமெயில் பயனாளிகள் பலருக்கும் கேட்கக்கூடிய கேள்வி தான் இது. இந்த கேள்விக்கான தேவையை எளிதாக புரிந்து கொள்ளலாம். மிகவும் முக்கியமான மெயிலை அனுப்பும் நிலையில் ஒருவர் அது வாசிக்கப்பட்டதா? என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டலாம். அந்த மெயிலுக்கான பதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிலையிலும் இவ்வாறு ஆர்வம் ஏற்படலாம். பொதுவாகவே, ஒருவர் படிக்கப்பட வேண்டும் என்பதற்காக தானே மெனக்கெட்டு மெயில் அனுப்புகிறார். எனவே அது வாசிக்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இயல்பானதே!

இமெயில் பயனாளிகளில் எத்தனை பேருக்கு இந்த கேள்வி எழுகிறது? எப்போது எழுகிறது என்பவை சுவாரஸ்யமான துணை கேள்விகள்!

இப்போது, இமெயில் வாசிக்கப்பட்டதா என்பதை அறியும் வழி இருக்கிறதா? எனும் ஆரம்ப கேள்விக்கான பதிலை பார்க்கலாம். இந்த கேள்விக்கான பதில் எளிமையானது மற்றும் சிக்கலானது. எளிமையான பதில், இமெயில் வாசிக்கப்பட்டதை அறிய வழி இருக்கிறது. ஆனால் அது உங்கள் இமெயில் சேவையில் இல்லை; தனியே நாடப்பட வேண்டும். அதாவது இந்த வசதியை அளிப்பதற்கு என்றே தனியே இணையதளங்கள் இருக்கின்றன.

இத்தகைய சேவைகளை பட்டியலிட்டு அவை செயல்படும் விதம் பற்றி விளக்குவதற்கு முன் அடிப்படையான சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இமெயில் வாசிக்கப்பட்டதா? என்பதை அறியும் வசதி இமெயில் கண்காணிப்பு என்றே குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் இமெயில் டிராக்கிங் என்று சொல்லப்படுகிறது. கண்காணிப்பு என்றவுடன் ஒற்று அறிவது அல்லது உளவு பார்ப்பதுடன் ஒப்பிட முடியாது என்றாலும் கூட, இமெயில் வாசிக்கப்பட்டதா என்பதை அறிவதற்கான வழிகள் அனைத்தும் ஒருவிதத்தில் கண்காணிப்பு என்று சொல்லக்கூடிய உத்தியையே பின்பற்றுகின்றன. அதனால் தான் இந்த பதில் சிக்கலானதாகவும் அமைகிறது.
வழக்கமாக யார் இமெயில் அனுப்பி வைத்தாலும் சரி, பெறுபவர் அதை உடனடியாக படித்துப்பார்கலாம், அல்லது தாமதமாக படிக்கலாம். இல்லை படிக்காமலே டெலிட் செய்து விடலாம். இது அவரது விருப்பம் மற்றும் உரிமை. அனுப்புகிறவர் இமெயில் பெறும் போதும் இது பொருந்தும்.

பொதுவான இமெயில் அமைப்பில், மெயில் வாசிக்கப்பட்டதா என்பதை உணரும் வழி இல்லை. அவுட்லுக் போன்ற இமெயில் சேவையில், இதை உறுதி செய்து கொள்வதற்காக, பெறப்பட்டது என்பதை தெரிவிக்கும் வசதி இருக்கிறது. ஆனால் இந்த வசதியை ஏற்று பதில் தெரிவிப்பது மறுமுனையில் இருப்பவரின் விருப்பம் சார்ந்தது. இந்த வசதியை பிளாக் செய்வதற்கான வழியும் இருக்கிறது. எனவே, இதற்கான நேரடி வழி இல்லை.
இந்த இடத்தில் தான் இமெயில் டிராக்கிங் சேவைகள் வருகின்றன். பனானாடேக், பூமாரங், ட்டிதேரீட் இட் ஸ்டீரிக், காண்டாக்ட் மன்கி மற்றும் இன்னும் பிற பல சேவைகள் இந்த வசதியை அளிக்கின்றன. குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு மூலம் இந்த வசதியை அளிக்கும் சேவைகளும் கூட இருக்கின்றன.

இந்த சேவைகளை பயன்படுத்தும் போது அவை ஒருவர் அனுப்பும் இமெயிலில் சின்னதாக ஒரு புகைப்பட குறியீட்டை இடம்பெறச்செய்கின்றன. கண்ணுக்குத்தெரியாத புள்ளியாக கூட அது இருக்கலாம். அதில் இருக்கும் எச்.டி.எம்.எல் குறியீடு மூலம் மெயில் பிரிக்கப்பட்டதும், சர்வருக்கு தகவல் தெரிவிக்கப்படும். இந்த தகவல் பயனாளிக்கும் தெரிவிக்கப்படும்.

இதே முறையில் இமெயிலில் அனுப்பும் இணைப்புகள் கிளிக் செய்யப்பட்டதா என்பதை அறியவும் தனியே ஒரு குறியீடு இணைக்கப்படுகிறது. இந்த சேவைகளின் மூலம் இமெயில் எப்போது பிரிக்கப்பட்டது என்பதையும், அதன் இணைப்புகள் கிளிக் செய்யப்பட்டதா என்பதையும் அறியலாம். பொதுவாக மார்க்கெட்டிங் நோக்கில் இமெயில்களை கூட்டம், கூட்டமாக அனுப்பி வைப்பவர்கள் தங்கள் முயற்சியின் பலனை அறிய இந்த சேவைகளை பயன்படுத்துகின்றன. தனி நபர்களும் கூட இந்த சேவையை பயன்படுத்தலாம். இவற்றில் இலவச சேவைகளும் இருக்கின்றன, கட்டண சேவைகளும் இருக்கின்றன. இது தொடர்பான இணைப்பு: http://www.computerworld.com/article/2979569/web-browsers/review-6-chrome-extensions-let-you-track-your-gmail.html

ஆனால் இதை கூட நூறு சதவீதம் உத்திரவாதமானது என்று சொல்வதற்கில்லை. டிராக்கிங் சேவைகள் அதிகபட்சமாக இமெயில் திறக்கப்பட்ட தகவலை தெரிவிக்கின்றன. ஆனால் அது வாசிக்கப்பட்டதன் அடையாளமாக அமையுமா என்பது கேள்விக்குறி தான். அதை மெயில் பெற்றவர் மட்டும் தான் உறுதி செய்ய முடியும்.

இமெயிலின் அத்தனை வசதிகளையும் மீறி இது நிச்சயம் இமெயிலின் குறை தான். இல்லை அப்படியும் சொல்வதற்கில்லை. உண்மையில் இது இமெயில் பயன்படுத்தப்படும் விதத்தின் பக்கவிளைவாக உண்டான பிரச்சனை. இமெயில் அடிப்படையில் இலவசமாக இருப்பதால், அதை தகவல் தொடர்புக்காக மட்டும் அல்லாமல், மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர நோக்கிலும் பயன்படுத்தி வருகின்றனர். காசா, பணமா, ஒரு இமெயில் தானே என வர்த்தக நிறுவனங்கள் கூட்டமாக மெயில்களை அனுப்பி வைக்கின்றன. இவை த்தவிர மோசடி மெயில்கள், வில்லங்க மெயில்கள், மால்வேர் வாகன மெயில்கள் என பல ரகங்கள் இருக்கின்றன. இவை எல்லாமுமாக சேர்ந்து ஸ்பேம் எனப்படும் குப்பை மெயில்களாக வகைப்படுத்தப்படுகின்றன.

இத்தகைய குப்பை மெயில்களில் இருந்து பயனாளிகளுக்கு பாதுகாப்பு தேவைப்படவே செய்கிறது. இதன் விளைவாகவே மெயில்களை படித்துவிட்டோம் என தெரிவிக்கும் வசதி செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவை உண்மையான அக்கரையோடு தங்கள் மெயிலுக்கான எதிர்வினையை தெரிந்து கொள்ள நினைப்பவர்களும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

இதற்கான மூன்றாம் தரப்பு தீர்வாகனே மெயில் டிராக்கிங் சேவைகள் அமைகின்றன. ஆனால் அதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. இது போன்ற சேவைகள் மூலம் மெயில் பிரிக்கட்ட நேரத்தை அறிவதோடு, அவை பிரிக்கப்பட்ட இடத்தை கூட அறியலாம். இது தனியுரிமை மீறலுக்கு வழிவகுக்கலாம். மேலும் இணைய விஷமிகள் இதை தவறான நோக்கத்தில் பயன்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே இமெயில் டிராக்கிங் சேவையை பயன்படுத்தும் எண்ணம் இருந்தால், அதை மெயில் அனுப்பும் போது தெரிவித்துவிடுவது சிறந்த இணைய அறமாக இருக்கும். அதிலும் வர்த்தக நிறுவனத்தில் இருந்து கொண்டு இதை செய்யும் நிலையில் நிச்சயம் இது தொடர்பான நிறுவன கொள்கையை அறிந்திருப்பது நல்லது.

பயனாளிகள் நோக்கில் பார்த்தால், இன்பாக்ஸ் தேடி வரும் இமெயிலுக்குள் இப்படி ஒரு வசதி இருப்பதும் அதை அறியாமல் இருப்பதும் திடுக்கிட வைக்கலாம். ஆனால் நல்லவேளையாக இதை தடுக்கும் வசதியும் இல்லாமல் இல்லை. ஜிமெயில் உள்ளிட்ட பெரும்பாலான மெயில் சேவைகளில் செட்டிங் பகுதிக்கு சென்று , புகைப்படம் போன்றவை இணைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவை தானாக திறக்கப்படாமல், புகைப்பட இணைப்பை திறக்கலாமா என அனுமதி கேட்டு அதன் பிறகே செயல்படும் வகையில் அமைத்துக்கொள்ளலாம். இது தொடர்பான இணைப்பு: http://bgr.com/2015/11/19/how-to-stop-email-tracking/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.