தொழில்நுட்ப உலகின் சுவடுகளும், புதிய போக்குகளும்!

2016 ல் தொழில்நுட்ப உலகை திரும்பி பார்க்கும் போது சைபர் தாக்குதல்கள், பொய் செய்தி பிரச்சனை, தாக்காளர்கள் கைவரிசை ஆகிய நிகழ்வுகள் ஆதிக்கம் செலுத்தியதை பார்க்க முடிகிறது. பாட்கள் எனப்படும் தானியங்கி மென்பொருள்களின் எழுச்சி, செயற்கை நுண்ணறிவு தொடர்பான விவாதம், இணைய சமநிலைக்கான குரல் ஆகிய போக்குகளும் கவனத்தை ஈர்க்கின்றன. கூகுளின் பிக்சல் போன் அறிமுகம், ஸ்மார்ட்போன் பிரியர்களை பித்து பிடித்து அலைய வைத்த போக்கேமான் கோ விளையாட்டு, ஐஸ் பக்கெட் சாலெஞ்ச் போல பிரபலமாகி வரும் மேனிக்வன் சாலன்ஞ் ஆகிய போக்குகளும் முக்கியமாக திகழ்கின்றன. விடைபெறும் ஆண்டில் தொழில்நுட்ப உலகில் கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள் பற்றி ஒரு பார்வை:

பிரிபேசிக்சிற்கு தடை

இணைய சேவைகளை பயன்படுத்துவதில் பாரபட்சமான கட்டண முறையை கடைபிடிக்க கூடாது என தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பிறப்பித்த தடையாணை இணைய சமநிலைக்கு ஆதரவான உத்தரவாக அமைந்தது. இந்த உத்தரவை அடுத்து பேஸ்புக் நிறுவனம் தனது சர்ச்சைக்குறிய பிரிபேசிக்ஸ் திட்டத்தை இந்தியாவில் விலக்கி கொள்வதாக அறிவித்தது. இணையதளங்களை இலவசமாக பயன்படுத்த வழி செய்வதாக பேஸ்புக் கூறினாலும், ஒரு பகுதி இணையத்தை மட்டுமே அணுக வழி செய்வதால் இந்த திட்டம் இணைய சமநிலைக்கு எதிரானது என கடும் விமர்சனத்திற்கு இலக்கானது.

வாட்ஸ் அப் என்கிரிப்ஷன்

முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப், செய்திகள், ஒளிப்படங்கள், வீடியோக்கள் என அனைத்துவிதமான பரிவர்த்தனைகளும் என்கிரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்படுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இது இணைய உலகில் இன்கிர்பிஷன் தொடர்பான முக்கியத்துவத்தையும் உண்டாக்கியது. தரவுகள் பரிமாற்றத்தை சங்கேத குறியீடுகள் மூலம் பாதுகாக்கும் இந்த முறையால் அனுப்புகிறவர் மற்றும் பெறுபவர் மட்டுமே உரிய செய்தியை வாசிக்க முடியும்.

வாட்ஸ் அப் தனது தனியுரிமை கொள்கையை மாற்றி அமைத்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் படி பயனாளிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாக வாட்ஸ் அப் அறிவித்தது விவாத்ததையும் ஏற்படுத்தியது.

போக்கேமான் கோ மோகம்

ஸ்மார்ட்போன்களில் அறிமுகமான போக்கேமான் கோ விளையாட்டு, பெரும் வரவேற்பை பெற்று புதிய மோகமாக உருவானது. ஆக்மெண்டட் ரியாலிட்டி எனப்படும் மேம்படுத்தப்பட்ட யதார்தத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு, போக்கேமான் ஜீவராசிகளை தேடிப்பிடிப்பதற்காக ஸ்மார்ட்போன் பிரியர்களை வீடு, அலுவலகங்களை விட்டு வெளியேறி பொது இடங்களில் அலைய வைத்தது. குறிப்பிட்ட சில நாடுகளில் தான் முதல் கட்டத்தில் அறிமுகமானாலும் இந்த விளையாட்டு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வரவேற்பை பெற்றது.

பொய் செய்தி பிரச்னை

சமூக ஊடகங்களின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் மூலம் பகிரப்படும் பொய்ச்செய்தி பிரச்சனை கவலையை ஏற்படுத்தியது. குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டிரம்பிற்கு ஆதாரவாக ரஷ்யாவை மையமாக கொண்ட போலி இணையதளங்கள் சார்பில் உருவாக்கி உலாவிடப்பட்ட பொய்ச்செய்திகள் கவனத்தை ஈர்த்து விவாத்ததை ஏற்படுத்தின. பொய்ச்செய்திகளை கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டுவதாக பேஸ்புக், கூகுள் அறிவித்தன.

சைபர் தாக்குதல்

2016 ல் ஏதேனும் ஒரு வகையில் சைபர் தாக்குதல்கள் தலைப்புச்செய்தியில் இடம் பெற்றுக்கொண்டே இருந்தன. யாஹு நிறுவனம் தனது லட்சக்கணக்கான பயனாளிகள் தொடர்பான தகவல்கள் தாக்காளர்கள் கைவரிசைக்கு இலக்கானது தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்க தேர்தல் செயல்முறையை பலவீனப்படுத்தும் வகையிலான செயலில் ரஷ்யவைச்சேர்ந்த தாக்காளர்கள் குழு ஈடுபட்டதாக செய்திகள் வெளியாயின. ஜனநாயக கட்சியின் பிரச்சார வலைப்பின்னல் தாக்குதலுக்கு இலக்கானது.

ராகுலுக்கு குறி

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க், கூகுள் சி.இ.ஒ சுந்தர்பிச்சை உள்ளிட்டோரும் தாக்காளர்களின் கைவரிசைக்கு இலக்கானார்கள். இந்தியாவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் பக்கம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கம் தாக்குதலுக்கு இலக்கானது.

பாட்களின் எழுச்சி

பாட்கள் என குறிப்பிடப்படும் தானியங்கி மென்பொருள்கள் தொடர்பான செய்திகள் பெருமளவு கவனத்தை ஈர்த்தன. அரட்டைக்கான பாட்கள், வர்த்தக நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டும் பாட்கள் உள்ளிட்டவை வருங்காலத்தில் புதிய போக்காக அமையும் என வல்லுனர்கள் தெரிவித்தனர். வங்கிச்சேவை உள்ளிட்டவற்றில் இந்த வகை மென்பொருகளே வழிகாட்டும் நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேஸ்புக்,கூகுள், மைக்ரோசாப்ட் ,ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதே போலவே செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆய்வுகளும் தீவிரமாகியுள்ளன. தானியங்கி மயமாக்களின் விளைவாக வேலை இழப்பு ஏற்படும் அபாயம் பற்றியும் ஆய்வுகள் வெளியாகின.

யு.பி.ஐ செயலி அறிமுகம்

தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் உருவாக்கிய யு.பி.ஐ செயலி அறிமுகமானது. ஸ்மார்ட்போன் மூலம் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணம் அனுப்ப, பெற உதவும் இந்த செயலியை முன்னணி வங்கிகள் அறிமுகம் செய்தன. டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான விவாதமும், விழிப்புணர்வும் அதிகரித்து வரும் நிலையில், பண பரிவர்த்தனைக்காக முக்கிய வழிகாக யு.பி.ஐ கவனத்தை ஈர்க்கிறது.

கபாலி தி பாஸ்

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் ரஜினி காந்தின் கபாலி திரைப்படம் இணையத்தில் அதிர்வலைகளை எழுப்பியது. இந்த படத்தின் முன்னோட்டம் வெளியான போது இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் கபாலிடா எனும் பதம் டிரெண்டானது. முன்னோட்ட காணொலி யூடியூப்பில் பெரும் வரவேற்பை பெற்றது. படம் வெளியான போதும் டிவிட்டரில் ரஜினியின் திரை செல்வாக்கை வெளிப்படுத்தும் குறும்பதிவுகள் அதிக அளவில் பகிரப்பட்டன.

சுஷ்மாவின் சுறுசுறுப்பு’

வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், டிவிட்டர் மூலம் தொடர்பு கொண்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் சுறுசுறுப்பாக செயல்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்றார். டிவிட்டர் பயன்பாட்டில் முன்னுதாரணமாக திகழும் ஸ்வராஜ், நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலையும் டிவிட்டர் மூலம் தானே பகிர்ந்து கொண்டார். இணையவாசிகள் அவர் நலம்பெற விரும்பி குறும்பதிவுகளை வெளியிட்டனர்.

கலைநயமான செயலி

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்காக எண்ணற்ற செயலி அறிமுகமானாலும், பிரிஸ்மா செயலி பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது. பயனாளிகள் தங்கள் ஒளிப்படங்களை நவீன ஓவியம் போல மாற்றிக்கொள்ள வழி செய்யும் இந்த செயலி வாயிலாக பகிரப்பட்ட படங்கள் அவற்றின் கலைநயமான தோற்றத்திற்காக வரவேற்பை பெற்றன.

கூகுள் பிக்சல் போன்

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த பிக்சல் ஸ்மார்ட்போன்கள் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட் அறிமுகங்களில் ஒன்றாக திகழ்கிறது. கூகுள் நிறுவனத்தால் நேரடியாக அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் எனும் அந்தஸ்து மற்றும் இதன் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் பரவலாக பேசப்பட்டன. புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு அறிமுகமானது. ஐபோன் 7பிளஸ், சாம்சங் காலெக்ஸி எஸ் 7, மோட்டோ இசட், ஜியோமி ரெட்மி 3எஸ் பிரைம், எச்டிசி 10 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் குறிப்பிடத்தக்கதாக அமைந்தன. இவற்றில் காலெக்ஸி 7 போன்கள் அவற்றின் தீப்பிடித்துக்கொள்ளும் தன்மைக்காக சர்ச்சைக்கு இலக்காயின.

ஸ்னேப்சேட் கண்ணாடி’

தானாக மறையும் ஒளிப்படங்களை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் ஸ்னேப்சேட் நிறுவனம், புதிய முக்கு கண்ணாடியை அறிமுகம் செய்தது. ஸ்னேப்சேட் ஸ்பெக்டகல் எனும் இந்த சாதனம் அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றை நேரடி ஒளிபரப்பு செய்ய உதவி வருகிறது. அணிகணிணி உலகில் புதிய போக்காக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாய்வாலா புகழ்

இணையம் மூலம் பல படங்களும், வீடியோக்களும் வைரலாக பரவி புகழ் பெற்றன என்றாலும், பாகிஸ்தானில் டீக்கடை ஒன்றில் பணியாற்றிய வாலிபர் ஒரு ஒளிப்படத்தால் ஒரே நாளில் இணையம் முழுவதும் அறிந்தவரானார். அர்ஷ்த் கான் எனும் அந்த வாலிபர் டீக்கடை ஒன்றில் டீ ஆற்றிக்கொண்டிருக்கும் காட்சியை ஒளிப்படக்கலைஞர் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அந்த வாலிபரின் அழகான தோற்றமும், பச்சை நிற கண்களும் கவர்ந்திழுத்தி அவரது ஒளிப்படத்தை லட்சகணக்கானோர் பகிர வைத்தது. அவரது பாகிஸ்தானை சேர்ந்தவராக இருந்தது இந்தியர்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியது. இணைய புகழ் காரணமாக இந்த வாலிபருக்கு விளம்பர பட வாய்ப்பும் தேடி வந்தது. இதே போல அமெரிக்காவில் டேம் டேனியல் எனும் வாலிபர் தனது அழகான தோற்றத்திற்காக இணைய புகழ் பெற்றார்.

இணைய மயக்கம்

பெண்மணி ஒருவரின் கால்களின் தோற்றமும் இணையதத்தை குழப்பத்தில் ஆழ்த்தியது. அந்த படத்தில் உள்ள கால்களின் தோற்றம் பளபளப்பாக இருக்கிறதா? அல்லது அவற்றின் மீது வெள்ளை பெயிண்ட் பூசப்பட்டிருக்கிறதா? எனும் கேள்விக்கு தெளிவாக பதில் சொல்ல முடியதாதே இந்த படத்தை பற்றி பேச வைத்தது. இணையம் இதற்கு பதில் அளிப்பதில் சரி பாதியாக பிரிந்து நின்றது. அதே போல பள்ளி மாணவர்களுக்கான் குதிரை படங்களை கொண்ட அல்ஜீப்ரா புதிரும் இணையத்தை கவர்ததது.

வைரல் வீடியோ

சில ஆண்டுகளுக்கு முன்னர் குளிரிந்த நீரை மேலே கொட்டிக்கொள்ளும் ஐஸ் பக்கெட் சாலெஞ் வீடியோ வைரலானது போல 2016 இறுதியில் சிலையாக நிற்கும் மானிக்குவன் சாலஞ்ச வைரலானது. பின்னணியில் இசை ஒலிக்க, ஒரு செயலை செய்து கொண்டிருக்கும் போதே இடையே சிலையாக நிற்பது போல காட்சி தரும் வகையிலான வீடியோவை பகிர்வது புதிய போக்காக உருவாகி இருக்கிறது.

 

 

நன்றி. தமிழ் இந்துவுக்காக எழுதியது

 

 

2016 ல் தொழில்நுட்ப உலகை திரும்பி பார்க்கும் போது சைபர் தாக்குதல்கள், பொய் செய்தி பிரச்சனை, தாக்காளர்கள் கைவரிசை ஆகிய நிகழ்வுகள் ஆதிக்கம் செலுத்தியதை பார்க்க முடிகிறது. பாட்கள் எனப்படும் தானியங்கி மென்பொருள்களின் எழுச்சி, செயற்கை நுண்ணறிவு தொடர்பான விவாதம், இணைய சமநிலைக்கான குரல் ஆகிய போக்குகளும் கவனத்தை ஈர்க்கின்றன. கூகுளின் பிக்சல் போன் அறிமுகம், ஸ்மார்ட்போன் பிரியர்களை பித்து பிடித்து அலைய வைத்த போக்கேமான் கோ விளையாட்டு, ஐஸ் பக்கெட் சாலெஞ்ச் போல பிரபலமாகி வரும் மேனிக்வன் சாலன்ஞ் ஆகிய போக்குகளும் முக்கியமாக திகழ்கின்றன. விடைபெறும் ஆண்டில் தொழில்நுட்ப உலகில் கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள் பற்றி ஒரு பார்வை:

பிரிபேசிக்சிற்கு தடை

இணைய சேவைகளை பயன்படுத்துவதில் பாரபட்சமான கட்டண முறையை கடைபிடிக்க கூடாது என தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பிறப்பித்த தடையாணை இணைய சமநிலைக்கு ஆதரவான உத்தரவாக அமைந்தது. இந்த உத்தரவை அடுத்து பேஸ்புக் நிறுவனம் தனது சர்ச்சைக்குறிய பிரிபேசிக்ஸ் திட்டத்தை இந்தியாவில் விலக்கி கொள்வதாக அறிவித்தது. இணையதளங்களை இலவசமாக பயன்படுத்த வழி செய்வதாக பேஸ்புக் கூறினாலும், ஒரு பகுதி இணையத்தை மட்டுமே அணுக வழி செய்வதால் இந்த திட்டம் இணைய சமநிலைக்கு எதிரானது என கடும் விமர்சனத்திற்கு இலக்கானது.

வாட்ஸ் அப் என்கிரிப்ஷன்

முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப், செய்திகள், ஒளிப்படங்கள், வீடியோக்கள் என அனைத்துவிதமான பரிவர்த்தனைகளும் என்கிரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்படுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இது இணைய உலகில் இன்கிர்பிஷன் தொடர்பான முக்கியத்துவத்தையும் உண்டாக்கியது. தரவுகள் பரிமாற்றத்தை சங்கேத குறியீடுகள் மூலம் பாதுகாக்கும் இந்த முறையால் அனுப்புகிறவர் மற்றும் பெறுபவர் மட்டுமே உரிய செய்தியை வாசிக்க முடியும்.

வாட்ஸ் அப் தனது தனியுரிமை கொள்கையை மாற்றி அமைத்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் படி பயனாளிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாக வாட்ஸ் அப் அறிவித்தது விவாத்ததையும் ஏற்படுத்தியது.

போக்கேமான் கோ மோகம்

ஸ்மார்ட்போன்களில் அறிமுகமான போக்கேமான் கோ விளையாட்டு, பெரும் வரவேற்பை பெற்று புதிய மோகமாக உருவானது. ஆக்மெண்டட் ரியாலிட்டி எனப்படும் மேம்படுத்தப்பட்ட யதார்தத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு, போக்கேமான் ஜீவராசிகளை தேடிப்பிடிப்பதற்காக ஸ்மார்ட்போன் பிரியர்களை வீடு, அலுவலகங்களை விட்டு வெளியேறி பொது இடங்களில் அலைய வைத்தது. குறிப்பிட்ட சில நாடுகளில் தான் முதல் கட்டத்தில் அறிமுகமானாலும் இந்த விளையாட்டு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வரவேற்பை பெற்றது.

பொய் செய்தி பிரச்னை

சமூக ஊடகங்களின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் மூலம் பகிரப்படும் பொய்ச்செய்தி பிரச்சனை கவலையை ஏற்படுத்தியது. குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டிரம்பிற்கு ஆதாரவாக ரஷ்யாவை மையமாக கொண்ட போலி இணையதளங்கள் சார்பில் உருவாக்கி உலாவிடப்பட்ட பொய்ச்செய்திகள் கவனத்தை ஈர்த்து விவாத்ததை ஏற்படுத்தின. பொய்ச்செய்திகளை கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டுவதாக பேஸ்புக், கூகுள் அறிவித்தன.

சைபர் தாக்குதல்

2016 ல் ஏதேனும் ஒரு வகையில் சைபர் தாக்குதல்கள் தலைப்புச்செய்தியில் இடம் பெற்றுக்கொண்டே இருந்தன. யாஹு நிறுவனம் தனது லட்சக்கணக்கான பயனாளிகள் தொடர்பான தகவல்கள் தாக்காளர்கள் கைவரிசைக்கு இலக்கானது தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்க தேர்தல் செயல்முறையை பலவீனப்படுத்தும் வகையிலான செயலில் ரஷ்யவைச்சேர்ந்த தாக்காளர்கள் குழு ஈடுபட்டதாக செய்திகள் வெளியாயின. ஜனநாயக கட்சியின் பிரச்சார வலைப்பின்னல் தாக்குதலுக்கு இலக்கானது.

ராகுலுக்கு குறி

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க், கூகுள் சி.இ.ஒ சுந்தர்பிச்சை உள்ளிட்டோரும் தாக்காளர்களின் கைவரிசைக்கு இலக்கானார்கள். இந்தியாவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் பக்கம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கம் தாக்குதலுக்கு இலக்கானது.

பாட்களின் எழுச்சி

பாட்கள் என குறிப்பிடப்படும் தானியங்கி மென்பொருள்கள் தொடர்பான செய்திகள் பெருமளவு கவனத்தை ஈர்த்தன. அரட்டைக்கான பாட்கள், வர்த்தக நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டும் பாட்கள் உள்ளிட்டவை வருங்காலத்தில் புதிய போக்காக அமையும் என வல்லுனர்கள் தெரிவித்தனர். வங்கிச்சேவை உள்ளிட்டவற்றில் இந்த வகை மென்பொருகளே வழிகாட்டும் நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேஸ்புக்,கூகுள், மைக்ரோசாப்ட் ,ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதே போலவே செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆய்வுகளும் தீவிரமாகியுள்ளன. தானியங்கி மயமாக்களின் விளைவாக வேலை இழப்பு ஏற்படும் அபாயம் பற்றியும் ஆய்வுகள் வெளியாகின.

யு.பி.ஐ செயலி அறிமுகம்

தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் உருவாக்கிய யு.பி.ஐ செயலி அறிமுகமானது. ஸ்மார்ட்போன் மூலம் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணம் அனுப்ப, பெற உதவும் இந்த செயலியை முன்னணி வங்கிகள் அறிமுகம் செய்தன. டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான விவாதமும், விழிப்புணர்வும் அதிகரித்து வரும் நிலையில், பண பரிவர்த்தனைக்காக முக்கிய வழிகாக யு.பி.ஐ கவனத்தை ஈர்க்கிறது.

கபாலி தி பாஸ்

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் ரஜினி காந்தின் கபாலி திரைப்படம் இணையத்தில் அதிர்வலைகளை எழுப்பியது. இந்த படத்தின் முன்னோட்டம் வெளியான போது இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் கபாலிடா எனும் பதம் டிரெண்டானது. முன்னோட்ட காணொலி யூடியூப்பில் பெரும் வரவேற்பை பெற்றது. படம் வெளியான போதும் டிவிட்டரில் ரஜினியின் திரை செல்வாக்கை வெளிப்படுத்தும் குறும்பதிவுகள் அதிக அளவில் பகிரப்பட்டன.

சுஷ்மாவின் சுறுசுறுப்பு’

வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், டிவிட்டர் மூலம் தொடர்பு கொண்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் சுறுசுறுப்பாக செயல்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்றார். டிவிட்டர் பயன்பாட்டில் முன்னுதாரணமாக திகழும் ஸ்வராஜ், நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலையும் டிவிட்டர் மூலம் தானே பகிர்ந்து கொண்டார். இணையவாசிகள் அவர் நலம்பெற விரும்பி குறும்பதிவுகளை வெளியிட்டனர்.

கலைநயமான செயலி

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்காக எண்ணற்ற செயலி அறிமுகமானாலும், பிரிஸ்மா செயலி பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது. பயனாளிகள் தங்கள் ஒளிப்படங்களை நவீன ஓவியம் போல மாற்றிக்கொள்ள வழி செய்யும் இந்த செயலி வாயிலாக பகிரப்பட்ட படங்கள் அவற்றின் கலைநயமான தோற்றத்திற்காக வரவேற்பை பெற்றன.

கூகுள் பிக்சல் போன்

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த பிக்சல் ஸ்மார்ட்போன்கள் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட் அறிமுகங்களில் ஒன்றாக திகழ்கிறது. கூகுள் நிறுவனத்தால் நேரடியாக அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் எனும் அந்தஸ்து மற்றும் இதன் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் பரவலாக பேசப்பட்டன. புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு அறிமுகமானது. ஐபோன் 7பிளஸ், சாம்சங் காலெக்ஸி எஸ் 7, மோட்டோ இசட், ஜியோமி ரெட்மி 3எஸ் பிரைம், எச்டிசி 10 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் குறிப்பிடத்தக்கதாக அமைந்தன. இவற்றில் காலெக்ஸி 7 போன்கள் அவற்றின் தீப்பிடித்துக்கொள்ளும் தன்மைக்காக சர்ச்சைக்கு இலக்காயின.

ஸ்னேப்சேட் கண்ணாடி’

தானாக மறையும் ஒளிப்படங்களை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் ஸ்னேப்சேட் நிறுவனம், புதிய முக்கு கண்ணாடியை அறிமுகம் செய்தது. ஸ்னேப்சேட் ஸ்பெக்டகல் எனும் இந்த சாதனம் அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றை நேரடி ஒளிபரப்பு செய்ய உதவி வருகிறது. அணிகணிணி உலகில் புதிய போக்காக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாய்வாலா புகழ்

இணையம் மூலம் பல படங்களும், வீடியோக்களும் வைரலாக பரவி புகழ் பெற்றன என்றாலும், பாகிஸ்தானில் டீக்கடை ஒன்றில் பணியாற்றிய வாலிபர் ஒரு ஒளிப்படத்தால் ஒரே நாளில் இணையம் முழுவதும் அறிந்தவரானார். அர்ஷ்த் கான் எனும் அந்த வாலிபர் டீக்கடை ஒன்றில் டீ ஆற்றிக்கொண்டிருக்கும் காட்சியை ஒளிப்படக்கலைஞர் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அந்த வாலிபரின் அழகான தோற்றமும், பச்சை நிற கண்களும் கவர்ந்திழுத்தி அவரது ஒளிப்படத்தை லட்சகணக்கானோர் பகிர வைத்தது. அவரது பாகிஸ்தானை சேர்ந்தவராக இருந்தது இந்தியர்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியது. இணைய புகழ் காரணமாக இந்த வாலிபருக்கு விளம்பர பட வாய்ப்பும் தேடி வந்தது. இதே போல அமெரிக்காவில் டேம் டேனியல் எனும் வாலிபர் தனது அழகான தோற்றத்திற்காக இணைய புகழ் பெற்றார்.

இணைய மயக்கம்

பெண்மணி ஒருவரின் கால்களின் தோற்றமும் இணையதத்தை குழப்பத்தில் ஆழ்த்தியது. அந்த படத்தில் உள்ள கால்களின் தோற்றம் பளபளப்பாக இருக்கிறதா? அல்லது அவற்றின் மீது வெள்ளை பெயிண்ட் பூசப்பட்டிருக்கிறதா? எனும் கேள்விக்கு தெளிவாக பதில் சொல்ல முடியதாதே இந்த படத்தை பற்றி பேச வைத்தது. இணையம் இதற்கு பதில் அளிப்பதில் சரி பாதியாக பிரிந்து நின்றது. அதே போல பள்ளி மாணவர்களுக்கான் குதிரை படங்களை கொண்ட அல்ஜீப்ரா புதிரும் இணையத்தை கவர்ததது.

வைரல் வீடியோ

சில ஆண்டுகளுக்கு முன்னர் குளிரிந்த நீரை மேலே கொட்டிக்கொள்ளும் ஐஸ் பக்கெட் சாலெஞ் வீடியோ வைரலானது போல 2016 இறுதியில் சிலையாக நிற்கும் மானிக்குவன் சாலஞ்ச வைரலானது. பின்னணியில் இசை ஒலிக்க, ஒரு செயலை செய்து கொண்டிருக்கும் போதே இடையே சிலையாக நிற்பது போல காட்சி தரும் வகையிலான வீடியோவை பகிர்வது புதிய போக்காக உருவாகி இருக்கிறது.

 

 

நன்றி. தமிழ் இந்துவுக்காக எழுதியது

 

 

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.