கூகுல் நிறுவனர்கள் பற்றி எழுதாது ஏன்?

img005நம் காலத்து நாயகர்கள் புத்தகம் தொடர்பான எதிர்வினை என்று எதிர்பார்க்க கூடியவற்றில், இந்த பட்டியலில் ஏன் கூகுள் நிறுவனர்கள் இல்லை எனும் கேள்வியை யாரேனும்  கேட்கலாம் என நினைக்கிறேன்.

நம் காலத்து நாயகர்கள் புத்தகம் இணையத்தின் இளம் முன்னோடிகளை அறிமுகம் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. பயணங்களின் போது தங்குமிட வசதியில் புதுமை படைத்த ஏர்பிஎன்பி தளத்தின் நிறுவனர் பிரைன் செஸ்கியில் துவங்கி, வாடகை கார் பிரிவை தலைகீழாக மாற்றிய உபெர் நிறுவனர் கலானிக் வரையான முன்னோடிகள் வாழ்க்கை பற்றியும், அவர்கள் மனதில் இந்த சேவைக்கான எண்ணம் உண்டான விதம் மற்றும் ஒரு வர்த்தகமாக அதை அவர்கள் வளர்த்தெடுத்த முறையையும் இதில் உள்ள கட்டுரைகள் விவரிக்கின்றன.

இந்த இளம் முன்னோடிகள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்ஜ் ஜக்கர்பர்க், வாட்ஸ் அப் நிறுவனர்களில் ஒருவரான ஜேன் கவும் உள்ளிட்ட தெரிந்த ஆளுமைகளையும் பார்க்கலாம். செய்தி சேவையை ஜனநாயகமயமாக்கிய டிக் நிறுவனர் கெவின் ரோஸ், இணையதள புகமார்கிங் சேவையை சமுக மயமாக்கிய டெலிஷியஸ் நிறுவனர் ஜோஷுவா ஷேகடர் என அதிகம் அறியப்படாத ஆளுகளையும் பார்க்கலாம்.

ஆனால், அனைவருமே அறிந்து கொள்ள வேண்டிய நபர்கள். ஏனெனில் இவர்கள் உருவாக்கிய சேவைகள் தான் நவீன இணையத்தின் அடையாளமாக இருக்கின்றன.

நிற்க, இந்த பட்டியலில் ஏன் கூகுள் நிறுவனர்கள் சேர்க்கப்படவில்லை எனும் கேள்விக்கான பதில், இதில் உள்ள சேவைகள் அனைத்தும், 2000 மாவது ஆண்டுக்கு பிறகு உருவாக்கப்பட்டவை என்பது தான். 2000 என்பது இங்கு வெறும் கால வரம்பு மட்டும் அல்ல. இந்த புத்தகத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட முன்னோடிகள் அனைவருமே இரண்டாம் அலை இணைய சேவைகளை உருவாக்கியவர்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

இரண்டாம் அலை, அதாவது வெப்.2.0 என்பது இணையவாசிகளின் பங்கேற்பு அம்சத்தையும் பிரதானமாக கொண்ட இணைய சேவைகளை குறிக்கிறது. இத்தகையை இணைய சேவைகளை உருவாக்கிய இளம் ஆளுமைகளை தேடிப்பிடித்து தொகுத்திருப்பதால், கூகுள் நிறுவனர்கள் இடம்பெறவில்லை.

நோக்கம் மற்றும் செயல்பாட்டில் கூகுள் கொஞ்சம் பழைய நிறுவனம். ஆனால் புதிய இணைய அலையிலும் அது தாக்குப்பிடித்திருப்பது சாதனை.

 

 

img005நம் காலத்து நாயகர்கள் புத்தகம் தொடர்பான எதிர்வினை என்று எதிர்பார்க்க கூடியவற்றில், இந்த பட்டியலில் ஏன் கூகுள் நிறுவனர்கள் இல்லை எனும் கேள்வியை யாரேனும்  கேட்கலாம் என நினைக்கிறேன்.

நம் காலத்து நாயகர்கள் புத்தகம் இணையத்தின் இளம் முன்னோடிகளை அறிமுகம் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. பயணங்களின் போது தங்குமிட வசதியில் புதுமை படைத்த ஏர்பிஎன்பி தளத்தின் நிறுவனர் பிரைன் செஸ்கியில் துவங்கி, வாடகை கார் பிரிவை தலைகீழாக மாற்றிய உபெர் நிறுவனர் கலானிக் வரையான முன்னோடிகள் வாழ்க்கை பற்றியும், அவர்கள் மனதில் இந்த சேவைக்கான எண்ணம் உண்டான விதம் மற்றும் ஒரு வர்த்தகமாக அதை அவர்கள் வளர்த்தெடுத்த முறையையும் இதில் உள்ள கட்டுரைகள் விவரிக்கின்றன.

இந்த இளம் முன்னோடிகள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்ஜ் ஜக்கர்பர்க், வாட்ஸ் அப் நிறுவனர்களில் ஒருவரான ஜேன் கவும் உள்ளிட்ட தெரிந்த ஆளுமைகளையும் பார்க்கலாம். செய்தி சேவையை ஜனநாயகமயமாக்கிய டிக் நிறுவனர் கெவின் ரோஸ், இணையதள புகமார்கிங் சேவையை சமுக மயமாக்கிய டெலிஷியஸ் நிறுவனர் ஜோஷுவா ஷேகடர் என அதிகம் அறியப்படாத ஆளுகளையும் பார்க்கலாம்.

ஆனால், அனைவருமே அறிந்து கொள்ள வேண்டிய நபர்கள். ஏனெனில் இவர்கள் உருவாக்கிய சேவைகள் தான் நவீன இணையத்தின் அடையாளமாக இருக்கின்றன.

நிற்க, இந்த பட்டியலில் ஏன் கூகுள் நிறுவனர்கள் சேர்க்கப்படவில்லை எனும் கேள்விக்கான பதில், இதில் உள்ள சேவைகள் அனைத்தும், 2000 மாவது ஆண்டுக்கு பிறகு உருவாக்கப்பட்டவை என்பது தான். 2000 என்பது இங்கு வெறும் கால வரம்பு மட்டும் அல்ல. இந்த புத்தகத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட முன்னோடிகள் அனைவருமே இரண்டாம் அலை இணைய சேவைகளை உருவாக்கியவர்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

இரண்டாம் அலை, அதாவது வெப்.2.0 என்பது இணையவாசிகளின் பங்கேற்பு அம்சத்தையும் பிரதானமாக கொண்ட இணைய சேவைகளை குறிக்கிறது. இத்தகையை இணைய சேவைகளை உருவாக்கிய இளம் ஆளுமைகளை தேடிப்பிடித்து தொகுத்திருப்பதால், கூகுள் நிறுவனர்கள் இடம்பெறவில்லை.

நோக்கம் மற்றும் செயல்பாட்டில் கூகுள் கொஞ்சம் பழைய நிறுவனம். ஆனால் புதிய இணைய அலையிலும் அது தாக்குப்பிடித்திருப்பது சாதனை.

 

 

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.