இணையத்தின் முதல் வைரல் வீடியோவின் பூர்வ கதை

FirstViralVideo-TopArt-200371117-003ஒரு படமோ, வீடியோவோ, ஒரு நிகழ்வோ இணையத்தில் வைரலாக பரவுவது புதிய விஷயமல்ல. இவ்வளவு ஏன் மனிதர்களும் கூட இணையத்தில் வைரல் நிகழ்வுகளின் மையமாகி புகழ் பெற்றிருக்கின்றனர். இதற்கு பெரிய பட்டியலே இருக்கிறது. வைரல் தன்மை என்பது இணையத்தில் சகஜமாகி இருப்பதோடு, ஒரு விஷயம் எவ்வாறு வைரலாகிறது என்பது ஆய்வுக்குறிய விஷயமாகிறது. வைரலாகும் நிகழ்வுகளையும், செய்திகளையும் அடையாளம் காண்பதற்கு என்றே பிரத்யேக இணையதளங்களும் உருவாகி இருக்கின்றன.
அடுத்த சூப்பர் ஹிட் படத்திற்கான எதிர்பார்ப்பு போலவே, இணைய உலகிலும் அடுத்து வைரல் நிகழ்வு எது எனும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்போது கூட, சீனாவில் பள்ளி மாணவர் ஒருவர் பனிபடந்த பகுதியை கடந்து பள்ளிக்கு படிக்க வரும் புகைப்படம் வைரலாகி இருக்கிறது. துருக்கியில், சிரியா நாட்டு அகதி மாணவர் ஒருவர், ஷூ பாலிஷ் சாதனத்தை தனது தோளில் சுமந்தபடி, உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெறுபவர்களை ஏக்கத்துடன் நோக்கும் காட்சி வைரலாக பரவி, அந்த மாணவருக்கு ஆயுட்கால இலவச உறுப்பினர் சந்தா கிடைக்க வழி செய்திருக்கிறது.
எல்லாம் சரி, ஒரு நிகழ்வு எப்படி? ஏன்? வைரலாகிறது. இந்த கேள்விக்கான பதிலை ஆய்வு செய்வதற்கு முன், இணையத்தில் முதலில் வைரலான வீடியோ எதுவென தெரிந்து கொள்ளலாமா? ஏனெனில், இதற்கான பதில் சுவாரஸ்யமும், ஆச்சர்யங்களும் நிறைந்தது என்பதோடு, வைரல் தன்மைக்கான இலக்கண கூறுகளையும் கொண்டிருக்கிறது.
முதல் வைரல் வீடியோ எது என்பதை தெரிந்து கொள்ள இணையத்தின் கற்காலத்திற்கு செல்ல வேண்டும். அதாவது, வைரல் நிகழ்வின் பிரதான வாகனமான யூடியூப் சேவை உருவாக்கப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன் பின்னோக்கி செல்ல வேண்டும். அப்போது பிராட்பேண்ட் எனும் அதிவேக இணைய வசதியும் கிடையாது. இணையத்தில் வீடியோ கோப்பை பதிவேற்றுவதும், தரவிறக்கம் செய்து பார்ப்பதும் பொறுமையை சோதிக்கும் விஷயமாக இருந்த காலம் அது. தகவல் பரிமாற்றத்திற்கு இமெயிலே முக்கிய சாதனமாக இருந்த காலம் என்பது மட்டும் அல்ல, இமெயிலுடன் இணைப்புகளை அனுப்பி வைக்க கோப்புகளின் அளவு பெரும் தடையாகவும் இருந்த காலம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இத்தகைய சூழலில் தான் 1997 ல் கோபக்கார மனிதர் தோன்றும் அந்த வீடியோ காட்சி வெளியானது. ’பேட்டே.ஜெபெக்’ எனும் தலைப்பிலான அந்த வீடியோ காட்சியின் பல்வேறு வடிவங்களை நீங்களும் கூட பார்த்திருக்கலாம். ஏனெனில் அந்த வீடியோ வைரலாக பரவி புகழ் பெற்ற பிறகு ஏதாவது ஒரு வடிவில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இன்றளவும் பகிரப்பட்டு வருகிறது. இது ஆச்சர்யம் அளிக்க கூடியது என்றாலும், இதற்கு காரணம் அந்த வீடியோவின் உள்ளடக்கம் தான்.
அலுவலக அறையில் அமர்ந்திருக்கும் ஊழியர் ஒருவர் பொறுமையில்லாமல் கம்ப்யூட்டர் கீபோர்டை விரல்களால் இயக்கி கொண்டிருக்கிறார். சில நொடிகளில் அதிருப்தி ஆவேசமாக மாற அந்த கீபோர்டை எடுத்து கம்ப்யூட்டர் மானிட்டர் மீது போட்டு உடைக்கிறார். அருகே இருந்த ஊழியர் அதிர்ச்சியில் எட்டிப்பார்க்க அந்த கோபக்கார மனிதர் எழுந்து கொண்டு, மானிட்டரை காலால் உதைத்து தள்ளுவதோடு, அந்த வீடியோ முடிவடைகிறது.
தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய அதிருப்தியை கச்சிதமாக வெளிப்படுத்தியதாக கருதப்படும் அந்த வீடியோ காட்சி அந்த காலத்தில் பெரும்பாலானோரின் இமெயில் பெட்டியில் எட்டிப்பார்த்து, அனைவராலும் ரசிக்கப்பட்டது. வீடியோ கோப்புகளை இமெயிலில் பகிர்வது கடினம் என்பதை மீறி அந்த வீடியோ பலரால் ஆர்வத்தோடு பகிரப்பட்டது. இதன் விளைவாக இந்த வீடியோ காட்சி தொடர்பான செய்தி நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியானது.
இப்படி தான் அந்த வீடியோ வைரலாக பரவியது. இணையம் இன்னமும் வைரல் யுகத்தில் அடியெடுத்து வைக்கவில்லை என்பதால் அப்போது அதை யாரும் உணரவில்லை. அதற்கு முன்னர் இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றதில்லை என்பதால், வைரல் வீடியோ எனும் கருத்தாக்கமும் அப்போது உருவாகியிருக்கவில்ல. ஆனால் இவற்றை எல்லாம் மீறி, வைரல் நிகழ்வுக்கான அடிப்படை கூறுகள் அந்த வீடியோவில் இருப்பதை இப்போது புரிந்து கொள்ளலாம்.
முதலில் அந்த வீடியோ தொழில்நுட்பத்தின் போதாமையை உணரும் போது வெளிப்படக்கூடிய போதாமைக்கான வடிகாலாக கருதப்பட்டது. அதிருப்தியை வெளிப்படுத்த ஒரு பொருளை போட்டு உடைப்பது தவறில்லை எனும் எண்ணத்தையும் உறுதிப்படுத்தியது. இணையத்தில் பகிரவும், பார்த்து ரசிக்கவும் ஏற்ற வகையில் 30 நொடிகளுக்கும் குறைவாக இருந்தது.
ரசிக்கத்தக்க இந்த அம்சங்கள் தவிர, அந்த வீடியோவில் சந்தேகிக்க கூடிய அம்சமும் இருந்தது. வீடியோவை நன்றாக பாருங்கள், அதில் கம்ப்யூட்டரை அடித்து நொறுக்கும் மனிதர் லேசாக புன்னகைக்கிறார் என்பதை ஒருவர் கண்டறிந்து கூறினார். ஆக, இணையத்தின் முதல் வைரல் வீடியோவாக மட்டும் அல்ல, ஒருவிதத்தில் முதல் ஏமாற்று வீடியோவாகவும் அது அமைந்ததிருந்தது. ஆனால் எதுவுமே திட்டமிடப்படாமல், எல்லாமே தற்செயலாக நடந்தது என்பது தான் விஷயம்.
வீடியோவில் இருந்த கோபக்கார மனிதர் வின்னி லிக்கியார்டி (Vinny Licciardi ) என்பவர் அமெரிக்காவின் கோலோரோடாவில் இருந்த லோரோனிக்ஸ் எனும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நிறுவன அலுவலத்தில் இருந்து அந்த வீடியோ படமாக்கப்பட்டது. ஆனால் அவருக்கு நிறுவனம் மீது எந்த கோபமும் இல்லை. அப்போது நிறுவனம் பாதுகாப்பு காமிரா சாதனம் ஒன்றை உருவாக்கி இருந்தது. அந்த காமிராவின் படம் பிடிக்கும் திறமையை விளக்கி காட்டுவதற்காக வீடியோ படம் ஒன்ற நிறுவன தலைவர் பீட்டர் ஜான்கோவ்ஸ்கி எடுக்க விரும்பியிருந்தார்.
அந்த விளம்பர வீடியோவுக்காக தான் லிக்கியார்டி நடித்துக்கொண்டிருந்தார். முதல் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து அவர் பணம் எடுத்துவிட்டு, நிறுவன குடோனில் திருடும் போது பிடிபடுவது போல காட்சியை படமாக்கினர். இதனிடையே லிக்கியார்டி தான், கோபக்கார ஊழியராக நடிக்கிறேன் என கூறியிருக்கிறார். உடனே நிறுவனத்தில் இருந்த பழைய கம்ப்யூட்டர்களை கொண்டு அவர் கீபோர்டால் கம்ப்யூட்டரை அடித்து நொறுக்கும் காட்சியை படம் பிடித்தனர். இந்த காட்சியை நிறுவன தலைவர் தான் படமாக்கினார். முதல் முறை நடிக்கும் போது லிக்கியார்டிக்கு சிரிப்பை அடக்க முடியததால் மீண்டும் ஒருமுறை அந்த காட்சியை எடுத்துள்ளனர். அதன் பிறகு அந்த வீடியோவை சிடியாக மாற்றி நிறுவன விற்பனை கையேடுகளுடன் அனுப்பி வைத்தனர். இந்த விஷயத்தை மறந்தும் விட்டனார்.
சில மாதங்கள் கழித்து, அந்த வீடியோ காட்சி இமெயில் உலா வரத்துவங்கியது. கம்ப்யூட்டரை ஒருவர் போட்டு உடைக்கும் அந்த வீடியோ பலரை கவர்ந்ததால் முதலில் நிறுவனங்களுக்கு இடையே பகிரப்பட்டது. அப்போது வீடியோ காட்சிகளை பார்ப்பதில் பிரச்சனை இருந்ததால், அதன் அளவு சுருக்கப்பட்டு, 30 நொடிக்கும் குறைவான கோப்பாக மாற்றப்பட்டது. இதன் பிறகே அதை இமெயிலில் பகிர்வது சாத்தியமானது. இப்படி பகிரப்பட்ட வீடியோ கோப்பு ஒரு கட்டத்தில் லிக்கியார்டியின் இமெயிலிலும் எட்டிப்பார்த்தது.
இதனிடையே பெனாட் ரிகாட் (Benoit Rigaut) என்பவர் இந்த வீடியோவால் கவரப்பட்டு அதற்காக என்றே ஒரு இணையதளத்தையும் உருவாக்கினார். அந்த தளத்தில் வீடியோவை தரவிறக்கம் செய்ய வழி செய்தவர், அந்த வீடியோவின் உள்ளடக்கம் குறித்த கேள்விகளையும் எழுப்பியிருந்தார். வீடியோவிள்ள உள்ள மனிதர் லேசாக சிரித்துக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டியவர்,இந்த வீடியோ உருவாக்கப்பட்டதற்கான உண்மையான நோக்கமே வேறு என்றும் குறிப்பிட்டிருந்தார். கம்ப்யூட்டர் உலகின் கூட்டணியான விண்டெல் (விண்டோஸ் மற்றும் இண்டெல்), தங்கள் சேவையின் போதாமையால் பயனாளிகள் கடுப்பாகி பொங்கி எழுவதை தடுப்பதற்காக இத்தகைய வீடியோவை உருவாக்கியுள்ளது என அவர் தெரிவித்திருந்தார்.
இது கற்பனையான குற்றச்சாட்டாக அமைந்தாலும், ஒரு இணைய நிகழ்வை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து அதன் பின்னணியில் உள்ள உண்மையை கண்டறிவதற்கான முயற்சியின் துவக்க புள்ளியாக இது கருதப்படுகிறது. இதே பாணியில் பல இணையதளங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, கோபக்கார மனிதர் வீடியோ யூடியூப்பிலும் பதிவேற்றுப்பட்டுள்ளது. மேலும் இதே பாணியில் தொழில்நுட்ப சாதனங்களை போட்டி உடைக்கும் வீடியோக்களும் தொடர்ந்து உருவாக்கப்படுகின்றன.

வயர்டு தொழில்நுட்ப இதழில் இந்த முதல் வைரல் வீடியோ பற்றிய சுவாரஸ்யமான அலசல் கட்டுரை வெளியாகியுள்ளது: https://www.wired.com/story/history-of-the-first-viral-video/

நன்றி தமிழ் இந்துவில் எழுதியது

FirstViralVideo-TopArt-200371117-003ஒரு படமோ, வீடியோவோ, ஒரு நிகழ்வோ இணையத்தில் வைரலாக பரவுவது புதிய விஷயமல்ல. இவ்வளவு ஏன் மனிதர்களும் கூட இணையத்தில் வைரல் நிகழ்வுகளின் மையமாகி புகழ் பெற்றிருக்கின்றனர். இதற்கு பெரிய பட்டியலே இருக்கிறது. வைரல் தன்மை என்பது இணையத்தில் சகஜமாகி இருப்பதோடு, ஒரு விஷயம் எவ்வாறு வைரலாகிறது என்பது ஆய்வுக்குறிய விஷயமாகிறது. வைரலாகும் நிகழ்வுகளையும், செய்திகளையும் அடையாளம் காண்பதற்கு என்றே பிரத்யேக இணையதளங்களும் உருவாகி இருக்கின்றன.
அடுத்த சூப்பர் ஹிட் படத்திற்கான எதிர்பார்ப்பு போலவே, இணைய உலகிலும் அடுத்து வைரல் நிகழ்வு எது எனும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்போது கூட, சீனாவில் பள்ளி மாணவர் ஒருவர் பனிபடந்த பகுதியை கடந்து பள்ளிக்கு படிக்க வரும் புகைப்படம் வைரலாகி இருக்கிறது. துருக்கியில், சிரியா நாட்டு அகதி மாணவர் ஒருவர், ஷூ பாலிஷ் சாதனத்தை தனது தோளில் சுமந்தபடி, உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெறுபவர்களை ஏக்கத்துடன் நோக்கும் காட்சி வைரலாக பரவி, அந்த மாணவருக்கு ஆயுட்கால இலவச உறுப்பினர் சந்தா கிடைக்க வழி செய்திருக்கிறது.
எல்லாம் சரி, ஒரு நிகழ்வு எப்படி? ஏன்? வைரலாகிறது. இந்த கேள்விக்கான பதிலை ஆய்வு செய்வதற்கு முன், இணையத்தில் முதலில் வைரலான வீடியோ எதுவென தெரிந்து கொள்ளலாமா? ஏனெனில், இதற்கான பதில் சுவாரஸ்யமும், ஆச்சர்யங்களும் நிறைந்தது என்பதோடு, வைரல் தன்மைக்கான இலக்கண கூறுகளையும் கொண்டிருக்கிறது.
முதல் வைரல் வீடியோ எது என்பதை தெரிந்து கொள்ள இணையத்தின் கற்காலத்திற்கு செல்ல வேண்டும். அதாவது, வைரல் நிகழ்வின் பிரதான வாகனமான யூடியூப் சேவை உருவாக்கப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன் பின்னோக்கி செல்ல வேண்டும். அப்போது பிராட்பேண்ட் எனும் அதிவேக இணைய வசதியும் கிடையாது. இணையத்தில் வீடியோ கோப்பை பதிவேற்றுவதும், தரவிறக்கம் செய்து பார்ப்பதும் பொறுமையை சோதிக்கும் விஷயமாக இருந்த காலம் அது. தகவல் பரிமாற்றத்திற்கு இமெயிலே முக்கிய சாதனமாக இருந்த காலம் என்பது மட்டும் அல்ல, இமெயிலுடன் இணைப்புகளை அனுப்பி வைக்க கோப்புகளின் அளவு பெரும் தடையாகவும் இருந்த காலம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இத்தகைய சூழலில் தான் 1997 ல் கோபக்கார மனிதர் தோன்றும் அந்த வீடியோ காட்சி வெளியானது. ’பேட்டே.ஜெபெக்’ எனும் தலைப்பிலான அந்த வீடியோ காட்சியின் பல்வேறு வடிவங்களை நீங்களும் கூட பார்த்திருக்கலாம். ஏனெனில் அந்த வீடியோ வைரலாக பரவி புகழ் பெற்ற பிறகு ஏதாவது ஒரு வடிவில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இன்றளவும் பகிரப்பட்டு வருகிறது. இது ஆச்சர்யம் அளிக்க கூடியது என்றாலும், இதற்கு காரணம் அந்த வீடியோவின் உள்ளடக்கம் தான்.
அலுவலக அறையில் அமர்ந்திருக்கும் ஊழியர் ஒருவர் பொறுமையில்லாமல் கம்ப்யூட்டர் கீபோர்டை விரல்களால் இயக்கி கொண்டிருக்கிறார். சில நொடிகளில் அதிருப்தி ஆவேசமாக மாற அந்த கீபோர்டை எடுத்து கம்ப்யூட்டர் மானிட்டர் மீது போட்டு உடைக்கிறார். அருகே இருந்த ஊழியர் அதிர்ச்சியில் எட்டிப்பார்க்க அந்த கோபக்கார மனிதர் எழுந்து கொண்டு, மானிட்டரை காலால் உதைத்து தள்ளுவதோடு, அந்த வீடியோ முடிவடைகிறது.
தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய அதிருப்தியை கச்சிதமாக வெளிப்படுத்தியதாக கருதப்படும் அந்த வீடியோ காட்சி அந்த காலத்தில் பெரும்பாலானோரின் இமெயில் பெட்டியில் எட்டிப்பார்த்து, அனைவராலும் ரசிக்கப்பட்டது. வீடியோ கோப்புகளை இமெயிலில் பகிர்வது கடினம் என்பதை மீறி அந்த வீடியோ பலரால் ஆர்வத்தோடு பகிரப்பட்டது. இதன் விளைவாக இந்த வீடியோ காட்சி தொடர்பான செய்தி நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியானது.
இப்படி தான் அந்த வீடியோ வைரலாக பரவியது. இணையம் இன்னமும் வைரல் யுகத்தில் அடியெடுத்து வைக்கவில்லை என்பதால் அப்போது அதை யாரும் உணரவில்லை. அதற்கு முன்னர் இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றதில்லை என்பதால், வைரல் வீடியோ எனும் கருத்தாக்கமும் அப்போது உருவாகியிருக்கவில்ல. ஆனால் இவற்றை எல்லாம் மீறி, வைரல் நிகழ்வுக்கான அடிப்படை கூறுகள் அந்த வீடியோவில் இருப்பதை இப்போது புரிந்து கொள்ளலாம்.
முதலில் அந்த வீடியோ தொழில்நுட்பத்தின் போதாமையை உணரும் போது வெளிப்படக்கூடிய போதாமைக்கான வடிகாலாக கருதப்பட்டது. அதிருப்தியை வெளிப்படுத்த ஒரு பொருளை போட்டு உடைப்பது தவறில்லை எனும் எண்ணத்தையும் உறுதிப்படுத்தியது. இணையத்தில் பகிரவும், பார்த்து ரசிக்கவும் ஏற்ற வகையில் 30 நொடிகளுக்கும் குறைவாக இருந்தது.
ரசிக்கத்தக்க இந்த அம்சங்கள் தவிர, அந்த வீடியோவில் சந்தேகிக்க கூடிய அம்சமும் இருந்தது. வீடியோவை நன்றாக பாருங்கள், அதில் கம்ப்யூட்டரை அடித்து நொறுக்கும் மனிதர் லேசாக புன்னகைக்கிறார் என்பதை ஒருவர் கண்டறிந்து கூறினார். ஆக, இணையத்தின் முதல் வைரல் வீடியோவாக மட்டும் அல்ல, ஒருவிதத்தில் முதல் ஏமாற்று வீடியோவாகவும் அது அமைந்ததிருந்தது. ஆனால் எதுவுமே திட்டமிடப்படாமல், எல்லாமே தற்செயலாக நடந்தது என்பது தான் விஷயம்.
வீடியோவில் இருந்த கோபக்கார மனிதர் வின்னி லிக்கியார்டி (Vinny Licciardi ) என்பவர் அமெரிக்காவின் கோலோரோடாவில் இருந்த லோரோனிக்ஸ் எனும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நிறுவன அலுவலத்தில் இருந்து அந்த வீடியோ படமாக்கப்பட்டது. ஆனால் அவருக்கு நிறுவனம் மீது எந்த கோபமும் இல்லை. அப்போது நிறுவனம் பாதுகாப்பு காமிரா சாதனம் ஒன்றை உருவாக்கி இருந்தது. அந்த காமிராவின் படம் பிடிக்கும் திறமையை விளக்கி காட்டுவதற்காக வீடியோ படம் ஒன்ற நிறுவன தலைவர் பீட்டர் ஜான்கோவ்ஸ்கி எடுக்க விரும்பியிருந்தார்.
அந்த விளம்பர வீடியோவுக்காக தான் லிக்கியார்டி நடித்துக்கொண்டிருந்தார். முதல் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து அவர் பணம் எடுத்துவிட்டு, நிறுவன குடோனில் திருடும் போது பிடிபடுவது போல காட்சியை படமாக்கினர். இதனிடையே லிக்கியார்டி தான், கோபக்கார ஊழியராக நடிக்கிறேன் என கூறியிருக்கிறார். உடனே நிறுவனத்தில் இருந்த பழைய கம்ப்யூட்டர்களை கொண்டு அவர் கீபோர்டால் கம்ப்யூட்டரை அடித்து நொறுக்கும் காட்சியை படம் பிடித்தனர். இந்த காட்சியை நிறுவன தலைவர் தான் படமாக்கினார். முதல் முறை நடிக்கும் போது லிக்கியார்டிக்கு சிரிப்பை அடக்க முடியததால் மீண்டும் ஒருமுறை அந்த காட்சியை எடுத்துள்ளனர். அதன் பிறகு அந்த வீடியோவை சிடியாக மாற்றி நிறுவன விற்பனை கையேடுகளுடன் அனுப்பி வைத்தனர். இந்த விஷயத்தை மறந்தும் விட்டனார்.
சில மாதங்கள் கழித்து, அந்த வீடியோ காட்சி இமெயில் உலா வரத்துவங்கியது. கம்ப்யூட்டரை ஒருவர் போட்டு உடைக்கும் அந்த வீடியோ பலரை கவர்ந்ததால் முதலில் நிறுவனங்களுக்கு இடையே பகிரப்பட்டது. அப்போது வீடியோ காட்சிகளை பார்ப்பதில் பிரச்சனை இருந்ததால், அதன் அளவு சுருக்கப்பட்டு, 30 நொடிக்கும் குறைவான கோப்பாக மாற்றப்பட்டது. இதன் பிறகே அதை இமெயிலில் பகிர்வது சாத்தியமானது. இப்படி பகிரப்பட்ட வீடியோ கோப்பு ஒரு கட்டத்தில் லிக்கியார்டியின் இமெயிலிலும் எட்டிப்பார்த்தது.
இதனிடையே பெனாட் ரிகாட் (Benoit Rigaut) என்பவர் இந்த வீடியோவால் கவரப்பட்டு அதற்காக என்றே ஒரு இணையதளத்தையும் உருவாக்கினார். அந்த தளத்தில் வீடியோவை தரவிறக்கம் செய்ய வழி செய்தவர், அந்த வீடியோவின் உள்ளடக்கம் குறித்த கேள்விகளையும் எழுப்பியிருந்தார். வீடியோவிள்ள உள்ள மனிதர் லேசாக சிரித்துக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டியவர்,இந்த வீடியோ உருவாக்கப்பட்டதற்கான உண்மையான நோக்கமே வேறு என்றும் குறிப்பிட்டிருந்தார். கம்ப்யூட்டர் உலகின் கூட்டணியான விண்டெல் (விண்டோஸ் மற்றும் இண்டெல்), தங்கள் சேவையின் போதாமையால் பயனாளிகள் கடுப்பாகி பொங்கி எழுவதை தடுப்பதற்காக இத்தகைய வீடியோவை உருவாக்கியுள்ளது என அவர் தெரிவித்திருந்தார்.
இது கற்பனையான குற்றச்சாட்டாக அமைந்தாலும், ஒரு இணைய நிகழ்வை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து அதன் பின்னணியில் உள்ள உண்மையை கண்டறிவதற்கான முயற்சியின் துவக்க புள்ளியாக இது கருதப்படுகிறது. இதே பாணியில் பல இணையதளங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, கோபக்கார மனிதர் வீடியோ யூடியூப்பிலும் பதிவேற்றுப்பட்டுள்ளது. மேலும் இதே பாணியில் தொழில்நுட்ப சாதனங்களை போட்டி உடைக்கும் வீடியோக்களும் தொடர்ந்து உருவாக்கப்படுகின்றன.

வயர்டு தொழில்நுட்ப இதழில் இந்த முதல் வைரல் வீடியோ பற்றிய சுவாரஸ்யமான அலசல் கட்டுரை வெளியாகியுள்ளது: https://www.wired.com/story/history-of-the-first-viral-video/

நன்றி தமிழ் இந்துவில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.