டிரால்கள் பிரச்சனைக்கு புதுமையான தீர்வு!

linkmoji-readyexamples-left-p-500x500இணையத்தின் டாப் டென் பிரச்சனைகளை பட்டியலிட்டால், டிரால்களின் தாக்குதல் அதில் நிச்சயம் முன்னணியில் இடம் பெறும். ஃபேக் நியூஸ் போன்ற புதிய பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், டிரால்கள் எனப்படும் இணைய விஷமிகளின் தாக்குதல் இணையத்தின் தீராத தலைவலியாக தொடர்கிறது.

இணையத்தின் ஆதிகால பிரச்சனையான இதற்கு பலவித தீர்வுகள் முயற்சிக்கப்பட்டு, எதுவும் முழு பலன் தராத நிலையில் நார்வே நாட்டு இணையதளம் ஒன்று புதிய தீர்வை முன்வைத்துள்ளது. இந்த தீர்வு புதுமையாக மட்டும் அல்ல புதிர் வடிவிலும் அமைந்துள்ளது. அதாவது கேள்வி பதில் வடிவில் அமைந்துள்ளது.

டிரால்களுக்கு பலவிதமான விளக்கம் சொல்லப்படுகிறது. அதற்கேற்ப டிரால்களும் பலவிதமான வடிவில் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், டிரால்களின் பொதுத்தன்மை என்று பார்த்தால் இணைய விவாதம் போன்றவற்றில் சம்மன் இல்லாமல் ஆஜராகி துவேஷம் நிறைந்த கருத்துக்களை பதிவு செய்வது என புரிந்து கொள்ளலாம். விவாதத்தின் நோக்கத்தை பாதிப்பதில் துவங்கி, தொடர்புடையவர்கள் மனதை நோகடிப்பது வரை இது அமையலாம். இத்தைய தாக்குதலுக்கு இலக்காகி இணைய பக்கமே இனி வரமாட்டேன் என கண்ணீர் மல்க விலகிய பிரபலங்கள் உண்டு. அன்மை காலமாக இணைய சாமானியர்களும் இந்த வகை தாக்குதலுக்கு இலக்காகி அவதிப்பட்டு வருகின்றனர்.

சுருக்கமாக சொலவதானால் இணைய விஷமிகள் இணையத்தை பாதுகாப்பற்ற இடமாக மாற்றி வருகின்றனர். இவ்வளவு ஏன் செய்தி தளங்களிலும் கூட டிரால்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகின்றனர். செய்தி கட்டுரைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் பின்னூட்ட வசதியை தவறாக பயன்படுத்தி மனம் போன போக்கில் கருத்துக்களை பதிவு செய்து வெறுத்துப்போக வைப்பதில் விஷமிகள் ஆனந்தம் காண்கின்றனர். சிலர் வம்புக்காகவேனும் தேவையில்லாத கருத்துகளை தெரிவித்து கோபம் கொள்ள வைப்பதும் உண்டு. ஏதேனும் ஒரு விதத்தில் தூண்டிவிடுவது தானே அவர்களின் நோக்கம்!

பின்னூட்டங்களில் இப்படி காழ்ப்புணர்ச்சி கொண்ட கருத்துக்கள் பதிவு செய்யப்படுவதை தவிர்க்க கண்காணிப்பு, கட்டுப்பாடு போன்ற உத்திகள் எல்லாம் பலன் தராமல் போகவே, பல இணையதளங்கள் பின்னூட்ட வசதியையே ரத்து செய்துவிட்டன. ஆனால், பின்னூட்டம் என்பது இணையம் சாத்தியமாக்கும் பங்கேற்பு ஜனநாயகத்தின் முக்கிய அம்சம் என்பதால் இந்த உத்தியையும் அப்படியே ஏற்றுக்கொள்வதற்கில்லை. மேலும் பின்னூட்ட வசதி அர்த்தமுள்ள விவாதம் மூலம் கருத்து பரிமாற்றம் மற்றும் கூடுதல் புரிதலுக்கு வழிவகுக்கும்.

எனவே தான் பின்னூட்ட வசதியை இயன்ற வரை ஆரோக்கியமான முறையிலேயே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது எப்படி என பலரும் யோசித்து வருகின்றனர். இந்த வரிசையில் தான் நார்வே நாட்டு பொதுத்துறை ஒளிபரப்பு ஊடகமான என்.ஆர்.கேவின் தொழில்நுட்ப பிரிவான என்.ஆர்.கே. பீட்டா பின்னூட்டங்களை நெறிப்படுத்த புதிய தீர்வை அறிமுகம் செய்துள்ளது. இந்த தீர்வு கேள்வி பதில் பாணியில் அமைந்துள்ளது.

அதாவது, குறிப்பிட்ட செய்தி அல்லது கட்டுரை தொடர்பாக யாரேனும் பின்னூட்டம் வெளியிட விரும்பினால் முதலில், சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். அவர்கள் பின்னூட்டம் அளிக்க விரும்பும் கட்டுரை தொடர்பாக அந்த கேள்விகள் அமைந்திருக்கும். அவற்றுக்கு சரியான பதில் அளித்தால் மட்டுமே பின்னூட்டம் பதிவு செய்ய முடியும்.

பெரும்பாலும் இணைய விஷமிகள் செய்திகளை படிக்காமலேயே பின்னூட்டத்தில் துவேஷ கருத்துக்களை கூறி கசப்புணர்வு அளிக்கின்றனர் என கருதப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், முதலில் கருத்து சொல்ல விரும்புகிறவர்கள் அது தொடர்பான கட்டுரையை படித்திருப்பதை உறுதி செய்ய இந்த கேள்வி பதில் உத்தி முயற்சிக்கிறது.

” கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா? எனில் இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளியுங்கள். கருத்துக்களின் தரம் குறித்து கவலைப்படுவதால், பின்னூட்டம் அளிப்பவர்கள் அது தொடர்பான செய்தியை வாசித்திருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்” என இதற்கான காரணம் அந்த இணையதளம் சார்பாக விளக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிப்பதற்கு முன், எல்லோரும் கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டார்கள் எனில், அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அர்த்தமுள்ளதாக அமைய வாய்ப்புள்ளது என என்.ஆர்.கே பீட்டா தளத்தில் பணியாற்றும் செய்தியாளர் ஒருவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

நிச்சயம், பின்னூட்ட வசதி தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் போராட்டத்தில் இது சுவாரஸ்யமான முயற்சி தான். பின்னூட்டம் மூலம் விஷம் கக்குவதை இது தடுக்குமா? என்று தெரியவில்லை. ஆனால், கருத்து தெரிவிக்கவுள்ள ஒரு கட்டுரையை முழுவதும் படித்து, அதன் சாரம்சத்தை புரிந்து கொண்டு பதில் அளிக்க நிர்பந்திக்கப்படுவது போகிற போக்கில் கருத்துக்களை வீசி எறிவதில் இன்பம் காண்பவர்களை யோசிக்க வைக்கலாம். அல்லது குறைந்தபட்சம் விலக்கி வைக்கலாம். மேலும் இடைப்பட்ட நேரம் அவர்களின் ஆவேசத்தையும் தணித்துவிடலாம்.

ஆனால், கட்டுரையின் உண்மையான வாசகர்கள் இப்படி கேள்வி கேட்கப்படுவதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் எனத்தெரியவில்லை. கட்டுரை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பதை அவர்கள் ரசிக்கவும் செய்யலாம். எனில் இது, இணைய யுகத்தில் செய்திகள் தொடர்பான உரையாடல் தன்மையில் கூடுதல் அம்சமாகலாம். வாசித்த பிறகே பின்னூட்டம் தெரிவிக்க வழி செய்யும் இந்த உத்தி அர்த்தமுள்ள இணைய விவாதத்திற்கு வழி செய்யலாம் என்று இணைய வல்லுனர்கள் தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தளம் புதிது: இமோஜி வடிவில் இணையதள இணைப்புகள்!

இணையதளங்களின் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் பழக்கமும்,தேவையும் இணையவாசிகளில் பலருக்கு இருக்கலாம். இணையதள முகவரிகள் நீளமாக வால் போல தோன்றமால், கச்சிதமான இருக்க வேண்டுமானால் அதற்காக முகவரி சுருக்க சேவைகள் இருக்கின்றன. அதே போல இணையதள முகவரிகளை கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் பகிர்ந்து கொள்ள விரும்பினால், லிங்க்மோஜி இணையதளம் அதற்கு உதவுகிறது.

இந்த இணையதளம் இணைய முகவரிகளை எல்லோருக்கும் பிடித்தமான இமோஜிகள் வடிவில் பகிர்ந்து கொள்ள வைக்கிறது. இதற்கு, முதலில் பகிர விரும்பும் இணைய முகவரிகளை இந்த தளத்தில் சமர்பிக்க வேண்டும். உடனே அந்த இணைப்பை இமோஜி எழுத்துக்கள் கொண்டதாக மாற்றித்தருகிறது.

இந்த இணைப்பை பேஸ்புக், டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். இமோஜி இணைப்பை கிளிக் செய்தால் அதன் பின்னே உள்ள இணையதளத்திற்கு செல்லலாம்.

லிங்க்மோஜி தளம் உருவாக்கித்தரும் இமோஜி இணைப்பு பிடிக்கவில்லை எனில், பயனாளிகள் தாங்கள் விரும்பிய இமோஜி உருவங்களை தேர்வு செய்து இணைப்பை உருவாக்கி கொள்ளலாம். இணைய பயன்பாட்டில் கொஞ்சம் சுவாரஸ்யமும் தேவை என நினைப்பவர்கள் முயன்று பார்க்கலாம். ஆனால் இமோஜி இணைப்பை கிளிக் செய்ததும், இணையதளம் தோன்றும் வரை காத்திருக்க நேரலாம்.

இணைய முகவரி: http://www.linkmoji.co/

 

செயலி புதிது; பிரிஸ்மா செயலியில் புதிய வசதி

ஸ்மார்ட்போன் பிரியர்களின் மனம் கவர்ந்த பிரிஸ்மா செயலி புதிய அம்சங்களோடு தொடர்ந்து மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்போது இந்த செயலி புதிய பில்டர் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

பிரிஸ்மா செயலி, பயனாளிகளின் ஒளிப்படங்களை நவீன ஓவியம் போன்ற தோற்றமாக மாற்றி பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை பிரிஸ்மா செயலியின் பில்டர்கள் மூலம் கலைபடைப்பாக மாற்றிக்கொள்ளலாம். செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் இதன் பின்னே இயங்குகிறது.

இந்த புதுமையான அம்சத்திற்காக அறிமுகமான வேகத்திலேயே பிரிஸ்மா, ஸ்மார்ட்போன் பயனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான 2016 ம் ஆண்டுக்கான சிறந்த செயலி விருதையும் வென்றது.

பிரிஸ்மா தொடர்ந்து பயனாளிகளை கவரும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. பயனாளிகள் புரபைல் மற்றும் பீட்களை பராமரிக்கும் வசதியை அறிமுகம் செய்தது. தற்போது, பயனாளிகள் புதிய பில்டர்களை உருவாக்கி கொள்ளும் வசதி அறிமுகம் ஆகியுள்ளது.

இதுவரை, அடிப்படையான பில்டர்களை மட்டுமே பயன்படுத்த முடியும். இப்போது பிரிஸ்மா ஸ்டோர் மூலம் அதில் உள்ள ஸ்டைல்களை அணுகி, புதிய பில்டர்களை உருவாக்கி கொள்ளலாம். முதல் கட்டமாக இலவசமாக அறிமுகமாகியுள்ளது. ஆனால் இது கட்டணச்சேவையாகும் வாய்ப்பு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு: https://prisma-ai.com/

 

ஊக்கம் பெற 16 வழிகாட்டும் இன்போகிராபிக்

எப்போதும் சுறுசுறுப்பாக பம்பரம் போல சுற்றிச்சுழன்று செயல்பட்டுக்கொண்டிருக்கவே எல்லோரும் விரும்புகின்றனர் என்றாலும், பல நேரங்களில் சோம்பலும், சோர்வும் நம்மை முடக்கி விடுவதுண்டு. இன்னும் சில நேரங்களில் இலக்கில்லாமல் செயல்பட்டு நேரத்தை வீணடித்துக்கொண்டிருப்பும் அனுபவமும் ஏற்படலாம்.

இந்த நிலையில் இருந்து மீண்டு செயல்திறன் பெற்று ஊக்கமுடன் செயல்படுவதற்கான 16 எளிய வழிகளை ரைக்.காம் (wrike.com/ ) இன்போகிராபிக் எனப்படும் தகவல் வரைபடமாக உருவாக்கியுள்ளது.

5 நிமிடங்கள் கவனம் செலுத்துவதன் மூலம் ஊக்கம் பெறலாம், சிரித்தபடி அலுவலகத்தில் இருக்கையில் இருந்து எழுந்து நடை பயிலுங்கள், நாளைய செயல்களை இன்று இரவே குறித்து வைத்துக்கொள்ளுங்கள், ஊக்கம் தரும் வாசகங்களை படியுங்கள் என்பது உட்பட எளிய வழிகளை இந்த தகவல் வரைபடம் விவரிக்கிறது. உங்கள் இலக்குகளை நினைவில் கொள்ளுங்கள், மனதுக்கு பிடித்த இசையை கேளுங்கள் உள்ளிட்ட வழிகளோடு, முழுமைவாதியாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணைப்பு: http://bit.ly/2lRMBd2

 

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது

 

linkmoji-readyexamples-left-p-500x500இணையத்தின் டாப் டென் பிரச்சனைகளை பட்டியலிட்டால், டிரால்களின் தாக்குதல் அதில் நிச்சயம் முன்னணியில் இடம் பெறும். ஃபேக் நியூஸ் போன்ற புதிய பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், டிரால்கள் எனப்படும் இணைய விஷமிகளின் தாக்குதல் இணையத்தின் தீராத தலைவலியாக தொடர்கிறது.

இணையத்தின் ஆதிகால பிரச்சனையான இதற்கு பலவித தீர்வுகள் முயற்சிக்கப்பட்டு, எதுவும் முழு பலன் தராத நிலையில் நார்வே நாட்டு இணையதளம் ஒன்று புதிய தீர்வை முன்வைத்துள்ளது. இந்த தீர்வு புதுமையாக மட்டும் அல்ல புதிர் வடிவிலும் அமைந்துள்ளது. அதாவது கேள்வி பதில் வடிவில் அமைந்துள்ளது.

டிரால்களுக்கு பலவிதமான விளக்கம் சொல்லப்படுகிறது. அதற்கேற்ப டிரால்களும் பலவிதமான வடிவில் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், டிரால்களின் பொதுத்தன்மை என்று பார்த்தால் இணைய விவாதம் போன்றவற்றில் சம்மன் இல்லாமல் ஆஜராகி துவேஷம் நிறைந்த கருத்துக்களை பதிவு செய்வது என புரிந்து கொள்ளலாம். விவாதத்தின் நோக்கத்தை பாதிப்பதில் துவங்கி, தொடர்புடையவர்கள் மனதை நோகடிப்பது வரை இது அமையலாம். இத்தைய தாக்குதலுக்கு இலக்காகி இணைய பக்கமே இனி வரமாட்டேன் என கண்ணீர் மல்க விலகிய பிரபலங்கள் உண்டு. அன்மை காலமாக இணைய சாமானியர்களும் இந்த வகை தாக்குதலுக்கு இலக்காகி அவதிப்பட்டு வருகின்றனர்.

சுருக்கமாக சொலவதானால் இணைய விஷமிகள் இணையத்தை பாதுகாப்பற்ற இடமாக மாற்றி வருகின்றனர். இவ்வளவு ஏன் செய்தி தளங்களிலும் கூட டிரால்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகின்றனர். செய்தி கட்டுரைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் பின்னூட்ட வசதியை தவறாக பயன்படுத்தி மனம் போன போக்கில் கருத்துக்களை பதிவு செய்து வெறுத்துப்போக வைப்பதில் விஷமிகள் ஆனந்தம் காண்கின்றனர். சிலர் வம்புக்காகவேனும் தேவையில்லாத கருத்துகளை தெரிவித்து கோபம் கொள்ள வைப்பதும் உண்டு. ஏதேனும் ஒரு விதத்தில் தூண்டிவிடுவது தானே அவர்களின் நோக்கம்!

பின்னூட்டங்களில் இப்படி காழ்ப்புணர்ச்சி கொண்ட கருத்துக்கள் பதிவு செய்யப்படுவதை தவிர்க்க கண்காணிப்பு, கட்டுப்பாடு போன்ற உத்திகள் எல்லாம் பலன் தராமல் போகவே, பல இணையதளங்கள் பின்னூட்ட வசதியையே ரத்து செய்துவிட்டன. ஆனால், பின்னூட்டம் என்பது இணையம் சாத்தியமாக்கும் பங்கேற்பு ஜனநாயகத்தின் முக்கிய அம்சம் என்பதால் இந்த உத்தியையும் அப்படியே ஏற்றுக்கொள்வதற்கில்லை. மேலும் பின்னூட்ட வசதி அர்த்தமுள்ள விவாதம் மூலம் கருத்து பரிமாற்றம் மற்றும் கூடுதல் புரிதலுக்கு வழிவகுக்கும்.

எனவே தான் பின்னூட்ட வசதியை இயன்ற வரை ஆரோக்கியமான முறையிலேயே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது எப்படி என பலரும் யோசித்து வருகின்றனர். இந்த வரிசையில் தான் நார்வே நாட்டு பொதுத்துறை ஒளிபரப்பு ஊடகமான என்.ஆர்.கேவின் தொழில்நுட்ப பிரிவான என்.ஆர்.கே. பீட்டா பின்னூட்டங்களை நெறிப்படுத்த புதிய தீர்வை அறிமுகம் செய்துள்ளது. இந்த தீர்வு கேள்வி பதில் பாணியில் அமைந்துள்ளது.

அதாவது, குறிப்பிட்ட செய்தி அல்லது கட்டுரை தொடர்பாக யாரேனும் பின்னூட்டம் வெளியிட விரும்பினால் முதலில், சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். அவர்கள் பின்னூட்டம் அளிக்க விரும்பும் கட்டுரை தொடர்பாக அந்த கேள்விகள் அமைந்திருக்கும். அவற்றுக்கு சரியான பதில் அளித்தால் மட்டுமே பின்னூட்டம் பதிவு செய்ய முடியும்.

பெரும்பாலும் இணைய விஷமிகள் செய்திகளை படிக்காமலேயே பின்னூட்டத்தில் துவேஷ கருத்துக்களை கூறி கசப்புணர்வு அளிக்கின்றனர் என கருதப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், முதலில் கருத்து சொல்ல விரும்புகிறவர்கள் அது தொடர்பான கட்டுரையை படித்திருப்பதை உறுதி செய்ய இந்த கேள்வி பதில் உத்தி முயற்சிக்கிறது.

” கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா? எனில் இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளியுங்கள். கருத்துக்களின் தரம் குறித்து கவலைப்படுவதால், பின்னூட்டம் அளிப்பவர்கள் அது தொடர்பான செய்தியை வாசித்திருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்” என இதற்கான காரணம் அந்த இணையதளம் சார்பாக விளக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிப்பதற்கு முன், எல்லோரும் கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டார்கள் எனில், அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அர்த்தமுள்ளதாக அமைய வாய்ப்புள்ளது என என்.ஆர்.கே பீட்டா தளத்தில் பணியாற்றும் செய்தியாளர் ஒருவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

நிச்சயம், பின்னூட்ட வசதி தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் போராட்டத்தில் இது சுவாரஸ்யமான முயற்சி தான். பின்னூட்டம் மூலம் விஷம் கக்குவதை இது தடுக்குமா? என்று தெரியவில்லை. ஆனால், கருத்து தெரிவிக்கவுள்ள ஒரு கட்டுரையை முழுவதும் படித்து, அதன் சாரம்சத்தை புரிந்து கொண்டு பதில் அளிக்க நிர்பந்திக்கப்படுவது போகிற போக்கில் கருத்துக்களை வீசி எறிவதில் இன்பம் காண்பவர்களை யோசிக்க வைக்கலாம். அல்லது குறைந்தபட்சம் விலக்கி வைக்கலாம். மேலும் இடைப்பட்ட நேரம் அவர்களின் ஆவேசத்தையும் தணித்துவிடலாம்.

ஆனால், கட்டுரையின் உண்மையான வாசகர்கள் இப்படி கேள்வி கேட்கப்படுவதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் எனத்தெரியவில்லை. கட்டுரை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பதை அவர்கள் ரசிக்கவும் செய்யலாம். எனில் இது, இணைய யுகத்தில் செய்திகள் தொடர்பான உரையாடல் தன்மையில் கூடுதல் அம்சமாகலாம். வாசித்த பிறகே பின்னூட்டம் தெரிவிக்க வழி செய்யும் இந்த உத்தி அர்த்தமுள்ள இணைய விவாதத்திற்கு வழி செய்யலாம் என்று இணைய வல்லுனர்கள் தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தளம் புதிது: இமோஜி வடிவில் இணையதள இணைப்புகள்!

இணையதளங்களின் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் பழக்கமும்,தேவையும் இணையவாசிகளில் பலருக்கு இருக்கலாம். இணையதள முகவரிகள் நீளமாக வால் போல தோன்றமால், கச்சிதமான இருக்க வேண்டுமானால் அதற்காக முகவரி சுருக்க சேவைகள் இருக்கின்றன. அதே போல இணையதள முகவரிகளை கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் பகிர்ந்து கொள்ள விரும்பினால், லிங்க்மோஜி இணையதளம் அதற்கு உதவுகிறது.

இந்த இணையதளம் இணைய முகவரிகளை எல்லோருக்கும் பிடித்தமான இமோஜிகள் வடிவில் பகிர்ந்து கொள்ள வைக்கிறது. இதற்கு, முதலில் பகிர விரும்பும் இணைய முகவரிகளை இந்த தளத்தில் சமர்பிக்க வேண்டும். உடனே அந்த இணைப்பை இமோஜி எழுத்துக்கள் கொண்டதாக மாற்றித்தருகிறது.

இந்த இணைப்பை பேஸ்புக், டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். இமோஜி இணைப்பை கிளிக் செய்தால் அதன் பின்னே உள்ள இணையதளத்திற்கு செல்லலாம்.

லிங்க்மோஜி தளம் உருவாக்கித்தரும் இமோஜி இணைப்பு பிடிக்கவில்லை எனில், பயனாளிகள் தாங்கள் விரும்பிய இமோஜி உருவங்களை தேர்வு செய்து இணைப்பை உருவாக்கி கொள்ளலாம். இணைய பயன்பாட்டில் கொஞ்சம் சுவாரஸ்யமும் தேவை என நினைப்பவர்கள் முயன்று பார்க்கலாம். ஆனால் இமோஜி இணைப்பை கிளிக் செய்ததும், இணையதளம் தோன்றும் வரை காத்திருக்க நேரலாம்.

இணைய முகவரி: http://www.linkmoji.co/

 

செயலி புதிது; பிரிஸ்மா செயலியில் புதிய வசதி

ஸ்மார்ட்போன் பிரியர்களின் மனம் கவர்ந்த பிரிஸ்மா செயலி புதிய அம்சங்களோடு தொடர்ந்து மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்போது இந்த செயலி புதிய பில்டர் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

பிரிஸ்மா செயலி, பயனாளிகளின் ஒளிப்படங்களை நவீன ஓவியம் போன்ற தோற்றமாக மாற்றி பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை பிரிஸ்மா செயலியின் பில்டர்கள் மூலம் கலைபடைப்பாக மாற்றிக்கொள்ளலாம். செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் இதன் பின்னே இயங்குகிறது.

இந்த புதுமையான அம்சத்திற்காக அறிமுகமான வேகத்திலேயே பிரிஸ்மா, ஸ்மார்ட்போன் பயனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான 2016 ம் ஆண்டுக்கான சிறந்த செயலி விருதையும் வென்றது.

பிரிஸ்மா தொடர்ந்து பயனாளிகளை கவரும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. பயனாளிகள் புரபைல் மற்றும் பீட்களை பராமரிக்கும் வசதியை அறிமுகம் செய்தது. தற்போது, பயனாளிகள் புதிய பில்டர்களை உருவாக்கி கொள்ளும் வசதி அறிமுகம் ஆகியுள்ளது.

இதுவரை, அடிப்படையான பில்டர்களை மட்டுமே பயன்படுத்த முடியும். இப்போது பிரிஸ்மா ஸ்டோர் மூலம் அதில் உள்ள ஸ்டைல்களை அணுகி, புதிய பில்டர்களை உருவாக்கி கொள்ளலாம். முதல் கட்டமாக இலவசமாக அறிமுகமாகியுள்ளது. ஆனால் இது கட்டணச்சேவையாகும் வாய்ப்பு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு: https://prisma-ai.com/

 

ஊக்கம் பெற 16 வழிகாட்டும் இன்போகிராபிக்

எப்போதும் சுறுசுறுப்பாக பம்பரம் போல சுற்றிச்சுழன்று செயல்பட்டுக்கொண்டிருக்கவே எல்லோரும் விரும்புகின்றனர் என்றாலும், பல நேரங்களில் சோம்பலும், சோர்வும் நம்மை முடக்கி விடுவதுண்டு. இன்னும் சில நேரங்களில் இலக்கில்லாமல் செயல்பட்டு நேரத்தை வீணடித்துக்கொண்டிருப்பும் அனுபவமும் ஏற்படலாம்.

இந்த நிலையில் இருந்து மீண்டு செயல்திறன் பெற்று ஊக்கமுடன் செயல்படுவதற்கான 16 எளிய வழிகளை ரைக்.காம் (wrike.com/ ) இன்போகிராபிக் எனப்படும் தகவல் வரைபடமாக உருவாக்கியுள்ளது.

5 நிமிடங்கள் கவனம் செலுத்துவதன் மூலம் ஊக்கம் பெறலாம், சிரித்தபடி அலுவலகத்தில் இருக்கையில் இருந்து எழுந்து நடை பயிலுங்கள், நாளைய செயல்களை இன்று இரவே குறித்து வைத்துக்கொள்ளுங்கள், ஊக்கம் தரும் வாசகங்களை படியுங்கள் என்பது உட்பட எளிய வழிகளை இந்த தகவல் வரைபடம் விவரிக்கிறது. உங்கள் இலக்குகளை நினைவில் கொள்ளுங்கள், மனதுக்கு பிடித்த இசையை கேளுங்கள் உள்ளிட்ட வழிகளோடு, முழுமைவாதியாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணைப்பு: http://bit.ly/2lRMBd2

 

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது

 

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.