வாட்ஸ் அப் சேவையில் காத்திருக்கும் மாற்றங்கள்!

தொழில்நுட்ப உலகில் மாற்றம் ஏற்பட்டு வரும் வேகத்தை பார்த்தால் மலைப்பாக தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்போன் சார்ந்து நிகழும் மாற்றங்கள் இன்னும் வேகமாக, இன்னும் மலைப்பாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்வரை, செல்போன் என்றால் நோக்கியா என்றிருந்தது. உயர்ரக பிரிவில் பிளாக்பெரி ஆதிக்கம் செலுத்தியது. இன்றோ நோக்கியா இருந்த இடம் தெரியவில்லை. பிளாக்பெரி ஸ்மார்ட்போன் தயாரிப்பை நிறுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஸ்மார்ட்போன்களுக்கான இயங்குதளம் என்றால் ஆண்ட்ராய்டும், ஐஓஎஸ்-ம் என்றாகி இருக்கிறது.

இந்த பின்னணியில் தான் வாட்ஸ் அப் சேவையில் நிகழ காத்திருக்கும் மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் வசதியை தொடர்ந்து பெற வேண்டும் என்றால், உங்கள் போனை மாற்றிக்கொள்ளுங்கள் என சொல்லும் அளவுக்கு வாட்ஸ் அப் செல்வாக்கு மிக்கதாக மாறியிருப்பதும் இந்த மாற்றங்களின் முக்கிய அம்சமாக இருக்கிறது.

பழைய போன் மாதிரிகள் மற்றும் பழைய இயங்குதளங்களை கொண்ட போன்களில் எல்லாம் வாட்ஸ் அப் சேவை 2016 ம் ஆண்டுக்குப்பிறகு செயல்படாது எனும் தகவலை நீங்கள் அறிந்திருக்கலாம். கடந்த பிப்ரவரி மாதம் வாட்ஸ் அப் தனது வலைப்பதிவில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன் பிறகு நவம்பர் மாதம் மீண்டும் ஒரு அறிவிப்பை இதை உறுதி செய்தது. இதன்படி, நோக்கியா, பிளாக்பெரி, விண்டோஸ், ஆண்ட்ராய்டு ஆகியவற்றின் பழைய மாடல்களில் வாட்ஸ் அப் சேவை செயல்படாது என தெரிவிக்கப்பட்டது. ஐ.ஒ.எஸ் இயங்குதளத்தின் பழைய வடிவங்களுக்கும் இது பொருந்தும். எனினும் இந்த முதல் கட்ட பட்டியலில் இருந்து பிளாக்பெரி மற்றும் நோக்கியா சிம்பயான் போன்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நீட்டிப்பும் கூட 2017 ஜுன் மாதம் வரை தான். அதன் பிறகு வாட்ஸ் அப் செயல்படக்கூடிய புதிய போன் அல்லது இயங்குதளத்திற்கு மாறியாக வேண்டும்.  ஆண்ட்ராய்டு 2.2, ஐ.ஓ.எஸ் 6 மற்றும் விண்டோஸ் போன்7 உள்ளிட்ட பழைய ரகங்களில் இந்த ஆண்டிற்கு பிறகு வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்த இயலாது. வாட்ஸ் அப் விஷயத்தில் இப்படி காலாவதியாகும் பழைய போன் மாதிரிகளை வைத்திருப்பவர்கள் தங்கள் செல்போன்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஒரு செயலிக்காக போனை மாற்ற வேண்டும் என்பது கொஞ்சம் விநோதமானது தான். வாட்ஸ் அப்பின் செல்வாக்கு அப்படி என்றாலும், இந்த மாற்றத்திற்கான காரணம் அதுவல்ல. வாட்ஸ் அப் புதிய தொடர்ச்சியாக புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஒரு சேவையாக தனது பயன்பாட்டுதன்மையை தக்க வைத்துக்கொள்ள வாட்ஸ் அப்பிற்கு இந்த புதுப்பித்தல் அவசியம்.

இதன் பக்கவிளைவு தான், பழைய இயங்குதளங்கள் மீது கவனம் செலுத்த முடியாத நிலை.

இதற்கு வாட்ஸ் அப்பை குற்றம் சொல்லவும் முடியாது. ஏனெனில் வாட்ஸ் அப் அறிமுகமான காலத்தில், பிளாக்பெரியும், ஐபோனும், நோக்கியா சிம்பயான் போன்களுமே ஸ்மார்ட்போன் பரப்பில் பரவலாக பயன்பாட்டில் இருந்தன. ஆனால் அதன் பிறகு ஆண்ட்ராய்டு அலை வீசத்துவங்கி, ஐபோன் ஆதிக்கமும் வலுப்பெற்றது. இந்த போக்குகளுக்கு ஈடு கொடுத்து வளர்ச்சி அடைந்த வாட்ஸ் அப், முன்னணி செயலிகளில் ஒன்றாக இருப்பதோடு, வீடியோ காலிங் உள்ளிட்ட வசதிகளை அறிமுகம் செய்திருக்கிறது. மேலும் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்நிலையில், புதிய வசதிகளுக்கு ஈடு கொடுக்க ஏற்றதாக இல்லாத பழைய இயங்குதளங்களுக்கான ஆதரவை நிறுத்துக்கொள்வது தவிர வேறுவழியில்லை என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் உறவு கொள்வதற்கான மேம்பட்ட வழிகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க இது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது. எதற்கும் பழைய போன் வைத்திருப்பவர்கள் வாட்ஸ் அப் சேவை செயல்படக்கூடிய போன்களின் பட்டியலை பார்த்துக்கொள்வது நல்லது. இந்த முழு பட்டியலும் இந்த இணைப்பில் காணலாம்:

நிற்க, வரும் காலத்தில் வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உத்தேசிள்ளதாக கூறப்படும் புதிய அம்சங்களில் சிலவற்றை பார்க்கலாம். செய்திகளை பகிர்ந்து கொண்ட பின் திரும்ப பெறும் வசதி மற்றும் திருத்தம் செய்யும் வசதிகள் அறிமுகம் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போதைக்கு வாட்ஸ் அப்பில் ஒரு செய்தியை அனுப்பிவிட்டு, பின்னர் அதை விலக்கி கொள்ள நினைத்தால் அதற்கான வழியில்லை. ஆனால், ஜிமெயிலில் இருப்பது போலவே, அனுப்பியவுடன், அந்த செய்தியை திரும்ப பெற விரும்பினால் அதை சாத்தியமாக்கும் வசதி அறிமுகமாக உள்ளது. இதன் படி, செய்தியின் மீது, கிளிக் செய்தால், அதை திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு தோன்றும். அதை கிளிக் செய்து அந்த செய்தியை அழித்துவிடலாம். ஆனால் இதற்கு கால வரையறை இருக்கிறது. தற்போது சோதனை வடிவில் ஒரு சில போன் மாதிரிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சேவை முழு வீச்சில் அறிமுகம் ஆகும் போது தான் இதன் செயல்பாடு பற்றி தெளிவு கிடைக்கும். இப்போதுள்ள செய்திகளை டெலிட் செய்யும் வசதியில் இருந்து இது மாறுபட்டது.ஏனெனில் செய்திகளை டெலிட் செய்தாலும் அது அனுப்பியவர் போனில் இருந்து தான் மறையும். மற்றவர்கள் போனில் இருந்து நீக்க முடியாது. ஆனால் புதிய சேவையில் இது சாத்தியம்.

இதே போலவே செய்திகளை திருத்தும் வசதியும் அறிமுகம் ஆக உள்ளது. எல்லாம் சரி, அப்படியே வதந்திகளை கட்டுப்படுத்தும் நோக்கிலும் ஒரு வசதி அறிமுகமானால் நன்றாக இருக்கும் அல்லவா!

 

 

தொழில்நுட்ப உலகில் மாற்றம் ஏற்பட்டு வரும் வேகத்தை பார்த்தால் மலைப்பாக தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்போன் சார்ந்து நிகழும் மாற்றங்கள் இன்னும் வேகமாக, இன்னும் மலைப்பாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்வரை, செல்போன் என்றால் நோக்கியா என்றிருந்தது. உயர்ரக பிரிவில் பிளாக்பெரி ஆதிக்கம் செலுத்தியது. இன்றோ நோக்கியா இருந்த இடம் தெரியவில்லை. பிளாக்பெரி ஸ்மார்ட்போன் தயாரிப்பை நிறுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஸ்மார்ட்போன்களுக்கான இயங்குதளம் என்றால் ஆண்ட்ராய்டும், ஐஓஎஸ்-ம் என்றாகி இருக்கிறது.

இந்த பின்னணியில் தான் வாட்ஸ் அப் சேவையில் நிகழ காத்திருக்கும் மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் வசதியை தொடர்ந்து பெற வேண்டும் என்றால், உங்கள் போனை மாற்றிக்கொள்ளுங்கள் என சொல்லும் அளவுக்கு வாட்ஸ் அப் செல்வாக்கு மிக்கதாக மாறியிருப்பதும் இந்த மாற்றங்களின் முக்கிய அம்சமாக இருக்கிறது.

பழைய போன் மாதிரிகள் மற்றும் பழைய இயங்குதளங்களை கொண்ட போன்களில் எல்லாம் வாட்ஸ் அப் சேவை 2016 ம் ஆண்டுக்குப்பிறகு செயல்படாது எனும் தகவலை நீங்கள் அறிந்திருக்கலாம். கடந்த பிப்ரவரி மாதம் வாட்ஸ் அப் தனது வலைப்பதிவில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன் பிறகு நவம்பர் மாதம் மீண்டும் ஒரு அறிவிப்பை இதை உறுதி செய்தது. இதன்படி, நோக்கியா, பிளாக்பெரி, விண்டோஸ், ஆண்ட்ராய்டு ஆகியவற்றின் பழைய மாடல்களில் வாட்ஸ் அப் சேவை செயல்படாது என தெரிவிக்கப்பட்டது. ஐ.ஒ.எஸ் இயங்குதளத்தின் பழைய வடிவங்களுக்கும் இது பொருந்தும். எனினும் இந்த முதல் கட்ட பட்டியலில் இருந்து பிளாக்பெரி மற்றும் நோக்கியா சிம்பயான் போன்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நீட்டிப்பும் கூட 2017 ஜுன் மாதம் வரை தான். அதன் பிறகு வாட்ஸ் அப் செயல்படக்கூடிய புதிய போன் அல்லது இயங்குதளத்திற்கு மாறியாக வேண்டும்.  ஆண்ட்ராய்டு 2.2, ஐ.ஓ.எஸ் 6 மற்றும் விண்டோஸ் போன்7 உள்ளிட்ட பழைய ரகங்களில் இந்த ஆண்டிற்கு பிறகு வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்த இயலாது. வாட்ஸ் அப் விஷயத்தில் இப்படி காலாவதியாகும் பழைய போன் மாதிரிகளை வைத்திருப்பவர்கள் தங்கள் செல்போன்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஒரு செயலிக்காக போனை மாற்ற வேண்டும் என்பது கொஞ்சம் விநோதமானது தான். வாட்ஸ் அப்பின் செல்வாக்கு அப்படி என்றாலும், இந்த மாற்றத்திற்கான காரணம் அதுவல்ல. வாட்ஸ் அப் புதிய தொடர்ச்சியாக புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஒரு சேவையாக தனது பயன்பாட்டுதன்மையை தக்க வைத்துக்கொள்ள வாட்ஸ் அப்பிற்கு இந்த புதுப்பித்தல் அவசியம்.

இதன் பக்கவிளைவு தான், பழைய இயங்குதளங்கள் மீது கவனம் செலுத்த முடியாத நிலை.

இதற்கு வாட்ஸ் அப்பை குற்றம் சொல்லவும் முடியாது. ஏனெனில் வாட்ஸ் அப் அறிமுகமான காலத்தில், பிளாக்பெரியும், ஐபோனும், நோக்கியா சிம்பயான் போன்களுமே ஸ்மார்ட்போன் பரப்பில் பரவலாக பயன்பாட்டில் இருந்தன. ஆனால் அதன் பிறகு ஆண்ட்ராய்டு அலை வீசத்துவங்கி, ஐபோன் ஆதிக்கமும் வலுப்பெற்றது. இந்த போக்குகளுக்கு ஈடு கொடுத்து வளர்ச்சி அடைந்த வாட்ஸ் அப், முன்னணி செயலிகளில் ஒன்றாக இருப்பதோடு, வீடியோ காலிங் உள்ளிட்ட வசதிகளை அறிமுகம் செய்திருக்கிறது. மேலும் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்நிலையில், புதிய வசதிகளுக்கு ஈடு கொடுக்க ஏற்றதாக இல்லாத பழைய இயங்குதளங்களுக்கான ஆதரவை நிறுத்துக்கொள்வது தவிர வேறுவழியில்லை என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் உறவு கொள்வதற்கான மேம்பட்ட வழிகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க இது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது. எதற்கும் பழைய போன் வைத்திருப்பவர்கள் வாட்ஸ் அப் சேவை செயல்படக்கூடிய போன்களின் பட்டியலை பார்த்துக்கொள்வது நல்லது. இந்த முழு பட்டியலும் இந்த இணைப்பில் காணலாம்:

நிற்க, வரும் காலத்தில் வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உத்தேசிள்ளதாக கூறப்படும் புதிய அம்சங்களில் சிலவற்றை பார்க்கலாம். செய்திகளை பகிர்ந்து கொண்ட பின் திரும்ப பெறும் வசதி மற்றும் திருத்தம் செய்யும் வசதிகள் அறிமுகம் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போதைக்கு வாட்ஸ் அப்பில் ஒரு செய்தியை அனுப்பிவிட்டு, பின்னர் அதை விலக்கி கொள்ள நினைத்தால் அதற்கான வழியில்லை. ஆனால், ஜிமெயிலில் இருப்பது போலவே, அனுப்பியவுடன், அந்த செய்தியை திரும்ப பெற விரும்பினால் அதை சாத்தியமாக்கும் வசதி அறிமுகமாக உள்ளது. இதன் படி, செய்தியின் மீது, கிளிக் செய்தால், அதை திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு தோன்றும். அதை கிளிக் செய்து அந்த செய்தியை அழித்துவிடலாம். ஆனால் இதற்கு கால வரையறை இருக்கிறது. தற்போது சோதனை வடிவில் ஒரு சில போன் மாதிரிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சேவை முழு வீச்சில் அறிமுகம் ஆகும் போது தான் இதன் செயல்பாடு பற்றி தெளிவு கிடைக்கும். இப்போதுள்ள செய்திகளை டெலிட் செய்யும் வசதியில் இருந்து இது மாறுபட்டது.ஏனெனில் செய்திகளை டெலிட் செய்தாலும் அது அனுப்பியவர் போனில் இருந்து தான் மறையும். மற்றவர்கள் போனில் இருந்து நீக்க முடியாது. ஆனால் புதிய சேவையில் இது சாத்தியம்.

இதே போலவே செய்திகளை திருத்தும் வசதியும் அறிமுகம் ஆக உள்ளது. எல்லாம் சரி, அப்படியே வதந்திகளை கட்டுப்படுத்தும் நோக்கிலும் ஒரு வசதி அறிமுகமானால் நன்றாக இருக்கும் அல்லவா!

 

 

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.