கலைவண்ண காய்கனிகள்; ஆன்லைனில் அசத்தும் பெண்மணி

பிரிட்டன் பெண்மணி ஆம்பர் லாக்கேவின் இணையதளத்தை பார்த்தால் அசந்து போய் விடுவீர்கள். அத்தனை கலைநயம் மிக்க படைப்புகள் அவரது இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த கலை படைப்புகளை பார்த்து ஆச்சர்யமும் கொள்வீர்கள்! ஏனெனில் அவரது கலைப்படைப்புகள் ஓவியமோ, சிற்பமோ அல்ல; அவை காய்கறிகளாலும் கனிகளாலும் உருவானவை.
ஆம், லாக்கே பல வண்ண காய்கனிகளை அழகாக அடுக்கி வைத்து அதன் அமைப்பையே ஒரு அழகான கலைபடைப்பாக ஆக்கிவிடுகிறார். காய்கறிகளையும் கனிகளையும் அடுக்கி வைப்பது என்ன அத்தனை பெரிய விஷயமா? அது அத்தனை அழகாக தான் இருக்குமா? என்று நினைப்பவர்கள் முதலில் அவரது படைப்புகளை பார்க்க வேண்டும்.
லாக்கே காய் கனிகளை அலங்காரமாக அமைப்பது வழக்கமாக பார்க்ககூடிய காட்சி போல் இருக்காது. மாறாக கெலைடாஸ்கோப் கருவியில் பார்க்கும் போது வித விதமான வண்ணங்களில், பலவித அமைப்புகளில் ஒவ்வொரு நொடிக்கும் ஒரு அலங்கார வடிவில் தோன்றும் அல்லவா? அதே போல தான் ஆம்பர் லாக்கேவின் காய்கனி அமைப்புகள் தோற்றம் தருகின்றன.

1-veg3
முதல் பார்வைக்கு ஏதோ சேலை அல்லது துணி ரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படமோ என்று நினைக்க வைக்கும் இந்த படைப்புகளை உற்று பார்த்தால் அவற்றில் இருப்பது எல்லாம் காய்கனிகள் என்ற விஷயம் புரிந்து வியக்க வைக்கும். இப்படி கூட காய்கறி மற்றும் கனி வகைகளை அழகாக தோற்றம் கொள்ள வைக்க முடியுமா? என்ற வியப்பும் உண்டாகும்.
காய்கனிகளை இப்படி வண்ண படைப்புகளாக அமைத்து அவற்றை புகைப்படம் எடுத்து தனது இணைட்யதளம் மூலம் வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களை அவர் குறைந்த எண்ணிக்கையிலான அச்சுகளாக விற்பனையும் செய்து வருகிறார். இந்த அச்சுகளை பலரும் ஆர்வத்துடன் ஆன்லைனில் வாங்கி வருவதுடன் , அவரது காய்கறி கலைக்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

1-veg2
பிரபல நிறுவனங்கள் மற்றும் ஆண்ட்ராய்டு செயலிகளுக்காக அவர் பிரத்யேகமாக காய்கறி கலையை உருவாக்கித்தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். அவரது செல்வாக்கும் அதிகரித்திருக்கிறது.
எல்லாம் சரி, அவருக்கு இந்த காய்கறி கலையில் ஆர்வம் எப்படி வந்தது ? இந்த ஆர்வத்தின் பின் உள்ள கதையை கேட்டால் இன்னும் உற்சாகமாக இருக்கும்.
ஆம்பர் கடந்த ஒன்னறை ஆண்டுகளுக்கு முன்னர் முழுக்க முழுக்க சைவ உணவுக்கு மாறினார். சைவ உண்வு என்றால் சமைத்த உணவு கூட இல்லை. பச்சை காய்கறிகளையும் ,கனிகளையும் சாப்பிடுவது. இவ்வாறு காய்கறிகளை மட்டுமே உணவாக சாப்பிட துவங்கிய பின் தன்னளவில் உற்சாகமான மாற்றத்தை உணர முடிந்ததாக அவர் சொல்கிறார். மிகவும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணரத்துவங்கியதாகவும் சொல்கிறார்.
அப்படியே காய்கறி உணவு பழக்கம் தொடரந்தது. ஒரு நாள் ஆசையோடு வாங்கிவந்த காய்கறிகளை தரையில் பரப்பி வைத்திருந்தார். அப்போது காற்றின் போக்கில் அடித்த வந்த சில இலைகளும் சேர்ந்து கொள்ள அந்த அமைப்பே ஒரு ஓவியம் போல் தோன்ற லாக்கே அதை கிளிக் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் சொக்கிப்போய் பாராட்டாக பின்னூட்டம் மூலம் கருத்து தெரிவிக்கவே அவர் உற்சாகமாகி தொடர்ந்து காய்கறிகளை அலக்கார சித்திரங்களாக்கி புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொள்ளத்துவங்கினார். இன்று இதுவே இவரை ஒரு கலைஞராக்கியுள்ளது.
இந்த படைப்புகள் தன்னை பிரபலமாக்கி இருப்பதால் மட்டும் அவர் மகிழவில்லை. இதன் மூலம் ஆரோக்கியமான உணவு முறை மீது பரவலான ஆர்வத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறார். இவை அழகை மட்டும் முன்வைக்கவில்லை,காய்கறிகள் ஆரோக்கியமானவை என்ற கருத்தையும் வலியுறுத்துகின்றன என்கிறார்.
பல நோய்களை பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவத்ன் மூலமே சரி செய்துவிடலாம் என்று சொல்பவர் காய்கனிகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்பது தான் எனது படைப்புகளின் நோக்கம் என்கிறார்.

ஆம்பர் லாக்கேவின் கலைவண்ண இணையதளம்: http://www.ambaliving.com/
——-

 

பிரிட்டன் பெண்மணி ஆம்பர் லாக்கேவின் இணையதளத்தை பார்த்தால் அசந்து போய் விடுவீர்கள். அத்தனை கலைநயம் மிக்க படைப்புகள் அவரது இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த கலை படைப்புகளை பார்த்து ஆச்சர்யமும் கொள்வீர்கள்! ஏனெனில் அவரது கலைப்படைப்புகள் ஓவியமோ, சிற்பமோ அல்ல; அவை காய்கறிகளாலும் கனிகளாலும் உருவானவை.
ஆம், லாக்கே பல வண்ண காய்கனிகளை அழகாக அடுக்கி வைத்து அதன் அமைப்பையே ஒரு அழகான கலைபடைப்பாக ஆக்கிவிடுகிறார். காய்கறிகளையும் கனிகளையும் அடுக்கி வைப்பது என்ன அத்தனை பெரிய விஷயமா? அது அத்தனை அழகாக தான் இருக்குமா? என்று நினைப்பவர்கள் முதலில் அவரது படைப்புகளை பார்க்க வேண்டும்.
லாக்கே காய் கனிகளை அலங்காரமாக அமைப்பது வழக்கமாக பார்க்ககூடிய காட்சி போல் இருக்காது. மாறாக கெலைடாஸ்கோப் கருவியில் பார்க்கும் போது வித விதமான வண்ணங்களில், பலவித அமைப்புகளில் ஒவ்வொரு நொடிக்கும் ஒரு அலங்கார வடிவில் தோன்றும் அல்லவா? அதே போல தான் ஆம்பர் லாக்கேவின் காய்கனி அமைப்புகள் தோற்றம் தருகின்றன.

1-veg3
முதல் பார்வைக்கு ஏதோ சேலை அல்லது துணி ரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படமோ என்று நினைக்க வைக்கும் இந்த படைப்புகளை உற்று பார்த்தால் அவற்றில் இருப்பது எல்லாம் காய்கனிகள் என்ற விஷயம் புரிந்து வியக்க வைக்கும். இப்படி கூட காய்கறி மற்றும் கனி வகைகளை அழகாக தோற்றம் கொள்ள வைக்க முடியுமா? என்ற வியப்பும் உண்டாகும்.
காய்கனிகளை இப்படி வண்ண படைப்புகளாக அமைத்து அவற்றை புகைப்படம் எடுத்து தனது இணைட்யதளம் மூலம் வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களை அவர் குறைந்த எண்ணிக்கையிலான அச்சுகளாக விற்பனையும் செய்து வருகிறார். இந்த அச்சுகளை பலரும் ஆர்வத்துடன் ஆன்லைனில் வாங்கி வருவதுடன் , அவரது காய்கறி கலைக்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

1-veg2
பிரபல நிறுவனங்கள் மற்றும் ஆண்ட்ராய்டு செயலிகளுக்காக அவர் பிரத்யேகமாக காய்கறி கலையை உருவாக்கித்தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். அவரது செல்வாக்கும் அதிகரித்திருக்கிறது.
எல்லாம் சரி, அவருக்கு இந்த காய்கறி கலையில் ஆர்வம் எப்படி வந்தது ? இந்த ஆர்வத்தின் பின் உள்ள கதையை கேட்டால் இன்னும் உற்சாகமாக இருக்கும்.
ஆம்பர் கடந்த ஒன்னறை ஆண்டுகளுக்கு முன்னர் முழுக்க முழுக்க சைவ உணவுக்கு மாறினார். சைவ உண்வு என்றால் சமைத்த உணவு கூட இல்லை. பச்சை காய்கறிகளையும் ,கனிகளையும் சாப்பிடுவது. இவ்வாறு காய்கறிகளை மட்டுமே உணவாக சாப்பிட துவங்கிய பின் தன்னளவில் உற்சாகமான மாற்றத்தை உணர முடிந்ததாக அவர் சொல்கிறார். மிகவும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணரத்துவங்கியதாகவும் சொல்கிறார்.
அப்படியே காய்கறி உணவு பழக்கம் தொடரந்தது. ஒரு நாள் ஆசையோடு வாங்கிவந்த காய்கறிகளை தரையில் பரப்பி வைத்திருந்தார். அப்போது காற்றின் போக்கில் அடித்த வந்த சில இலைகளும் சேர்ந்து கொள்ள அந்த அமைப்பே ஒரு ஓவியம் போல் தோன்ற லாக்கே அதை கிளிக் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் சொக்கிப்போய் பாராட்டாக பின்னூட்டம் மூலம் கருத்து தெரிவிக்கவே அவர் உற்சாகமாகி தொடர்ந்து காய்கறிகளை அலக்கார சித்திரங்களாக்கி புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொள்ளத்துவங்கினார். இன்று இதுவே இவரை ஒரு கலைஞராக்கியுள்ளது.
இந்த படைப்புகள் தன்னை பிரபலமாக்கி இருப்பதால் மட்டும் அவர் மகிழவில்லை. இதன் மூலம் ஆரோக்கியமான உணவு முறை மீது பரவலான ஆர்வத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறார். இவை அழகை மட்டும் முன்வைக்கவில்லை,காய்கறிகள் ஆரோக்கியமானவை என்ற கருத்தையும் வலியுறுத்துகின்றன என்கிறார்.
பல நோய்களை பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவத்ன் மூலமே சரி செய்துவிடலாம் என்று சொல்பவர் காய்கனிகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்பது தான் எனது படைப்புகளின் நோக்கம் என்கிறார்.

ஆம்பர் லாக்கேவின் கலைவண்ண இணையதளம்: http://www.ambaliving.com/
——-

 

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *