ஒரு கைதியின் “மைஸ்பேஸ்’

knight1ஒரு கைதி நம்மிடம் இருந்து நகைச்சுவை உணர்வை எதிர்பார்க்க வாய்ப்பில்லை.அதிலும் அந்தக் கைதி மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளவராக இருக்கும் பட்சத்தில் மற்றவர்களிடம் இருந்து அவர் வேண்டுவது பரிவும், பட்சாதாபமுமாக தான் இருக்க வேண்டும். இப்படி நினைக்கத் தோன்றுவது இயல்பானதுதான்.
ஆனால் அமெரிக்க கைதி ஒருவரோ முற்றிலும் மாறுபட்ட வேண்டு கோளை முன் வைத்திருக்கிறார். “எல்லோரும் எனக்கொரு ஜோக் அனுப்பி வையுங்கள்’ என்னும் வேண்டுகோளை விடுத்திருக்கிறார். இதற்காக ஒரு போட்டியையும் அறிவித்திருக்கிறார்.
நிச்சயமாக மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள கைதியிடம் இருந்து எதிர்பார்க்க கூடியது அல்லதான் இது!
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் நீதியின் கால்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்பதை (அ) குற்றத்துக்கு மனம் வருந்தி தங்கள் கதையை டைரியாக எழுதுவதை தான் இதுவரை அறிந்திருக்கிறோம். டெக்சாஸ் சிறையில் தனது வாழ்க்கையின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் “பேட்ரிக் நைட்’ மன்னிப்பும் கோரவில்லை. டைரியும் எழுதவில்லை. அவர் மைஸ்பேஸ் பக்கத்தை அமைத்து சிறந்த ஜோக்கை தேர்வு செய்வதற்கான போட்டியை நடத்திக்கொண்டிருக்கிறார்.
பேட்ரிக்கின் கதையை கேட்டால் உள்ளம் கொதித்துப்போகும். தொடர் கொலைகளை செய்த ஈவு இரக்கமற்ற மனிதர்அவர். 1991ல் வால்டர் மற்றும் மேரி ஆன் வெர்னர் ஆகியோரை தூக்கிலிடுவது போல அவர் கொலை செய்து திடுக்கிட வைத்தார். விசாரணையின் போது குற்றவாளி என்பது நிரூபணமாகி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதிலிருந்து அவர் டெக்சாஸ் சிறையில் கழித்து வருகிறார்.
அமெரிக்கா முழுவதும் மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், நைட்டின் வழக்கு தேசத்தின் கவனத்தை பெரிதாக கவர்ந்து விடவில்லை. இதனிடையே அவரைப்பற்றி கவனிக்க வைத்தது. சிறையில் சக கைதிகளோடு நைட் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம்தான்.
மரண தண்டனை கைதிகளுக்கான வசதிகள் மிக மோசமாக இருப்பதை கண்டித்து நைட் உள்ளிட்ட பத்து கைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த போராட்டம் ஜனவரியில் நடந்தது. இந்த போராட்டம் எதனையும் மாற்றிவிடவில்லை. நைட்டுக்கு மரண தண்டனை நிறை வேற்றப்படும் நாள் நெருங்கிக் கொண்டு வந்த நிலையில் தான் அவர் அந்த விநோதமான வேண்டுகோளை வெளியிட்டார்.
சிறந்த ஜோக்கை அனுப்பி வைத்தால் அவற்றில் மிகச்சிறந்த ஜோக்கை தேர்வு செய்யப்போவதாக அவர் தெரிவித்தார்.
மரண தண்டனை கைதிகளிடம் கடைசி ஆசை கேட்கப்படும் அல்லவா, அப்போது இந்த ஜோக்கை தெரிவிப்பேன் என்று நைட் அறிவித்துள்ளார்.
மரண தண்டனை உறுதியாகி விட்டது. மறுபரிசீலனை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன. இந் நிலையில் நான் கோருவது கருணை யையோ அனுதாபத்தையோ அல்ல என்று கூறும் நைட், இறுதி நாட்களை லேசான மனத்துடன் கழித்து விடை பெறவே விரும்புகிறேன். அதற்காகவே ஜோக்குகளை அனுப்பி வைக்க கேட்கிறேன் என்று தனது செயலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
வெளி உலகுடன் தொடர்பு இல்லாமல் இருக்கும் கைதியான அவரது இந்த விருப்பம் பரவலாக மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக அவர் மைஸ்பேஸ் வழியை நாடியிருக்கிறார்.
இளைஞர்களின் இணைய இருப்பிடமாக விளங்கும் மைஸ்பேஸ் கருத்து பரிமாற்றத்திற்கும், நண்பர்களை தேடிக்கொள்வதற்கும் ஏற்ற இடமாக திகழ்கிறது. மைஸ் பேசில் ஒரு பக்கத்தை அமைத்துக் கொண்டால் மன உணர்வுகளை எளிதாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு பரிந்துரையின் அடிப்படை யில் புதிய நண்பர்களை சுலபமாக தேடிக்கொள்ளலாம்.
நைட்டும் தன் சார்பாக ஒரு மைஸ்பேஸ் பக்கத்தை உருவாக்கி கொண்டு அதன் மூலம் ஜோக் போட்டி வேண்டுகோளை விடுத்துள்ளார். (கைதிகளுக்கு இன்டெர்நெட்டை பயன்படுத்தும் வசதியில்லை என்பதால் அவர் சார்பாக வெளியே உள்ள நண்பர்கள் மைஸ்பேஸ் தளத் தில் பக்கத்தை அமைத்துள்ளனர்).
இந்த போட்டி பற்றி நண்பர்களுக்கு தெரிவியுங்கள் என்னும் அவருடைய வேண்டுகோளை ஏற்று பலர் ஜோக்குகளை அனுப்பி உள்ளனர். இதுவரை அவருக்கு 73 நண்பர்கள் கிடைத்துள்ளனர்.
டெட் மேன் லாஃபிங் என்னும் பெயரில் நைட் மைஸ்பேஸ் பக்கம் அடைக்கப்பட்டுள்ளது.
டெட் மேன் வாக்கிங் என்ற பெயரில் புகழ்பெற்ற நாவல் ஒன்று இருக்கிறது. ஹெலன் பிரிஜியன் என்னும் கன்னியாஸ்திரி எழுதிய அந்த நாவல் மரண தண்டனை தொடர்பானது. அந்த நாவல் தலைப்பை அடியொற்றி டெட்மேன் லாஃபிங் என தனது முயற்சிக்கு அவர் பெயர் சூட்டியுள்ளார். மரண தண்டனைக்கு எதிரான தளங்கள் நைட்டின் இந்த முயற்சியை குறிப்பிட்டு அவர் தளத்திற்கு இணைப்பும் வழங்கியுள்ளன.

—————–

(பேட்ரிக் நைட் மைஸ்பேஸ் பக்கத்தை அமைத்த போது எழுதப்பட்டது. அதன் பிறகு அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.அவருடைய மைஸ்பேஸ் பக்கம் இன்னமும் இருக்கிற்து. அவரைப்பற்றிய குறிப்புகள் பகுதியில் , தொழில் என்பத‌ற்கு அருகே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.)
————-

link;
http://www.myspace.com/prisonuprise

knight1ஒரு கைதி நம்மிடம் இருந்து நகைச்சுவை உணர்வை எதிர்பார்க்க வாய்ப்பில்லை.அதிலும் அந்தக் கைதி மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளவராக இருக்கும் பட்சத்தில் மற்றவர்களிடம் இருந்து அவர் வேண்டுவது பரிவும், பட்சாதாபமுமாக தான் இருக்க வேண்டும். இப்படி நினைக்கத் தோன்றுவது இயல்பானதுதான்.
ஆனால் அமெரிக்க கைதி ஒருவரோ முற்றிலும் மாறுபட்ட வேண்டு கோளை முன் வைத்திருக்கிறார். “எல்லோரும் எனக்கொரு ஜோக் அனுப்பி வையுங்கள்’ என்னும் வேண்டுகோளை விடுத்திருக்கிறார். இதற்காக ஒரு போட்டியையும் அறிவித்திருக்கிறார்.
நிச்சயமாக மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள கைதியிடம் இருந்து எதிர்பார்க்க கூடியது அல்லதான் இது!
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் நீதியின் கால்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்பதை (அ) குற்றத்துக்கு மனம் வருந்தி தங்கள் கதையை டைரியாக எழுதுவதை தான் இதுவரை அறிந்திருக்கிறோம். டெக்சாஸ் சிறையில் தனது வாழ்க்கையின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் “பேட்ரிக் நைட்’ மன்னிப்பும் கோரவில்லை. டைரியும் எழுதவில்லை. அவர் மைஸ்பேஸ் பக்கத்தை அமைத்து சிறந்த ஜோக்கை தேர்வு செய்வதற்கான போட்டியை நடத்திக்கொண்டிருக்கிறார்.
பேட்ரிக்கின் கதையை கேட்டால் உள்ளம் கொதித்துப்போகும். தொடர் கொலைகளை செய்த ஈவு இரக்கமற்ற மனிதர்அவர். 1991ல் வால்டர் மற்றும் மேரி ஆன் வெர்னர் ஆகியோரை தூக்கிலிடுவது போல அவர் கொலை செய்து திடுக்கிட வைத்தார். விசாரணையின் போது குற்றவாளி என்பது நிரூபணமாகி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதிலிருந்து அவர் டெக்சாஸ் சிறையில் கழித்து வருகிறார்.
அமெரிக்கா முழுவதும் மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், நைட்டின் வழக்கு தேசத்தின் கவனத்தை பெரிதாக கவர்ந்து விடவில்லை. இதனிடையே அவரைப்பற்றி கவனிக்க வைத்தது. சிறையில் சக கைதிகளோடு நைட் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம்தான்.
மரண தண்டனை கைதிகளுக்கான வசதிகள் மிக மோசமாக இருப்பதை கண்டித்து நைட் உள்ளிட்ட பத்து கைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த போராட்டம் ஜனவரியில் நடந்தது. இந்த போராட்டம் எதனையும் மாற்றிவிடவில்லை. நைட்டுக்கு மரண தண்டனை நிறை வேற்றப்படும் நாள் நெருங்கிக் கொண்டு வந்த நிலையில் தான் அவர் அந்த விநோதமான வேண்டுகோளை வெளியிட்டார்.
சிறந்த ஜோக்கை அனுப்பி வைத்தால் அவற்றில் மிகச்சிறந்த ஜோக்கை தேர்வு செய்யப்போவதாக அவர் தெரிவித்தார்.
மரண தண்டனை கைதிகளிடம் கடைசி ஆசை கேட்கப்படும் அல்லவா, அப்போது இந்த ஜோக்கை தெரிவிப்பேன் என்று நைட் அறிவித்துள்ளார்.
மரண தண்டனை உறுதியாகி விட்டது. மறுபரிசீலனை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன. இந் நிலையில் நான் கோருவது கருணை யையோ அனுதாபத்தையோ அல்ல என்று கூறும் நைட், இறுதி நாட்களை லேசான மனத்துடன் கழித்து விடை பெறவே விரும்புகிறேன். அதற்காகவே ஜோக்குகளை அனுப்பி வைக்க கேட்கிறேன் என்று தனது செயலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
வெளி உலகுடன் தொடர்பு இல்லாமல் இருக்கும் கைதியான அவரது இந்த விருப்பம் பரவலாக மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக அவர் மைஸ்பேஸ் வழியை நாடியிருக்கிறார்.
இளைஞர்களின் இணைய இருப்பிடமாக விளங்கும் மைஸ்பேஸ் கருத்து பரிமாற்றத்திற்கும், நண்பர்களை தேடிக்கொள்வதற்கும் ஏற்ற இடமாக திகழ்கிறது. மைஸ் பேசில் ஒரு பக்கத்தை அமைத்துக் கொண்டால் மன உணர்வுகளை எளிதாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு பரிந்துரையின் அடிப்படை யில் புதிய நண்பர்களை சுலபமாக தேடிக்கொள்ளலாம்.
நைட்டும் தன் சார்பாக ஒரு மைஸ்பேஸ் பக்கத்தை உருவாக்கி கொண்டு அதன் மூலம் ஜோக் போட்டி வேண்டுகோளை விடுத்துள்ளார். (கைதிகளுக்கு இன்டெர்நெட்டை பயன்படுத்தும் வசதியில்லை என்பதால் அவர் சார்பாக வெளியே உள்ள நண்பர்கள் மைஸ்பேஸ் தளத் தில் பக்கத்தை அமைத்துள்ளனர்).
இந்த போட்டி பற்றி நண்பர்களுக்கு தெரிவியுங்கள் என்னும் அவருடைய வேண்டுகோளை ஏற்று பலர் ஜோக்குகளை அனுப்பி உள்ளனர். இதுவரை அவருக்கு 73 நண்பர்கள் கிடைத்துள்ளனர்.
டெட் மேன் லாஃபிங் என்னும் பெயரில் நைட் மைஸ்பேஸ் பக்கம் அடைக்கப்பட்டுள்ளது.
டெட் மேன் வாக்கிங் என்ற பெயரில் புகழ்பெற்ற நாவல் ஒன்று இருக்கிறது. ஹெலன் பிரிஜியன் என்னும் கன்னியாஸ்திரி எழுதிய அந்த நாவல் மரண தண்டனை தொடர்பானது. அந்த நாவல் தலைப்பை அடியொற்றி டெட்மேன் லாஃபிங் என தனது முயற்சிக்கு அவர் பெயர் சூட்டியுள்ளார். மரண தண்டனைக்கு எதிரான தளங்கள் நைட்டின் இந்த முயற்சியை குறிப்பிட்டு அவர் தளத்திற்கு இணைப்பும் வழங்கியுள்ளன.

—————–

(பேட்ரிக் நைட் மைஸ்பேஸ் பக்கத்தை அமைத்த போது எழுதப்பட்டது. அதன் பிறகு அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.அவருடைய மைஸ்பேஸ் பக்கம் இன்னமும் இருக்கிற்து. அவரைப்பற்றிய குறிப்புகள் பகுதியில் , தொழில் என்பத‌ற்கு அருகே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.)
————-

link;
http://www.myspace.com/prisonuprise

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.