சமூக ஊடகங்களும் செய்தி வாசிப்பு பழக்கமும்!

3565344000000578-3646526-image-a-52_1466161957869செய்திகள் பகிர்வது நாங்கள்; வாசிப்பது யார்? இப்படி கேட்கும் நிலை தான் சமூக ஊடக உலகில் நிலவுவது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது சமூக ஊடக பயனாளிகள் பலரும் செய்திகளை பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனரேத்தவிர, பெரும்பாலானோர் அவற்றை படிப்பதில் அதே அளவு ஈடுபாடு கொண்டிருப்பதில்லை என டிவிட்டர் குறும்பதிவுகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

இணைய உலகில் சமூக ஊடகங்களின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.
அது மட்டும் அல்ல சமூக ஊடகங்கள் தான் செய்திகளை தெரிந்து கொள்வதற்கான பிரதான வழியாகவும் அமைந்திருக்கின்றன. இளம் தலைமுறையினர் மத்தியில் தொலைக்காட்சியை விட, டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களே செய்திகளை தெரிந்து கொள்வதற்கான முக்கிய வழியாக இருப்பதாக கருதப்படுகிறது. இதில் வியப்பதற்கு எதுவுமில்லை. இந்த உண்மையை நம்முடைய பேஸ்புக் அல்லது டிவிட்டர் டைம்லைனை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். நட்பு சார்ந்த நிலைத்தகவல்களோடு செய்திகளுக்கான பகிர்வுகளையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். நாமும் கூட இப்படி நம்மை கவரும் செய்திகளை அவற்றுக்கான இணைப்புகளுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

பேஸ்புக் டைம்லைன்
அதனால் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் செய்திகள் மட்டும் கட்டுரைகளை டைம்லைனுக்கு அருகே இடம்பெற வைத்திருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்வரை இணையத்தில் செய்திகளை தெரிந்து கொள்ள தேடல் தான் பிரதான வழியாக இருந்தது. ஆனால் 2014ல் நிலைமை மாறி, சமூக ஊடங்கள் வாயிலாக செய்திகளை தெரிந்து கொள்வது 30 சதவீதமாக அமைந்தது. சமூக ஊடகங்களும் செய்திகளும் இப்படி நெருக்கமாக பின்னி பினைந்திருப்பதை மீறி, சமூக ஊடகங்களில் செய்திகள் நுகரப்படும் விதம் பற்றி அதிக புரிதல் இல்லை. அதாவது சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் எவ்வாறு வாசிக்கப்படுகின்றன என்பது பற்றிய விவரங்கள் அதிகம் தெரியவில்லை.
இந்த நோக்கில் முதல் முறையாக நடத்தப்பட்டுள்ள ஆய்வு, இது தொடர்பான சிந்தனைக்குறிய தகவல்களை முன்வைத்துள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் பிரெஞ்சு நேஷனல் இன்ஸ்டிடியூட் இணைந்து நடத்திய இந்த ஆய்வு, சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்தி இணைப்புகளில் 59 சதவீதம் படிக்கப்படுவதே இல்லை என தெரிவிக்கிறது. இதன் பொருள் சமூக ஊடக பயனாளிகள் செய்திகளை படிக்காமலே அவற்றை பகிர்ந்து கொள்கின்றனர் என்பது தான்.

செய்தி இணைப்புகளை கொண்ட 28 லட்சம் டிவிட்டர் குறும்பதிவுகள் இந்த ஆய்விற்காக ஒரு மாத காலம் பரிசீலிக்கப்பட்டன. இந்த காலத்தின் போது அவை எந்த அளவுக்கு கிளிக் செய்யப்பட்டன என்பது அதாவது வாசிக்கப்பட்டனவா? என ஆய்வு செய்யப்பட்டது. இதன் பயனாக தான் பகிரப்பட்ட இணைப்புகளில் 59 சதவீதம் கிளிக் செய்யப்படாமல் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

” மக்கள் ஒரு செய்தியை வாசிப்பதை விட அதை பகிர்ந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்’ என்று இந்த ஆய்வில் முக்கிய பங்காற்றிய ஆய்வாளரான ஆர்னாட் லெகாட் கூறியுள்ளார். ”இந்த கால கட்டத்தில் இப்படி தான் தகவல்கள் நுகரப்படுகின்றன” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இணைய பழக்கம்
நம் கால இணையப்பழக்கம் பற்றி லெகாட் மேலும் கூறும் விஷயங்கள் கவனிக்கத்தக்கது. ‘மக்கள் மேலும் ஆழமாக தெரிந்து கொள்ள முயற்சிக்காமலே, சுருக்கம் அல்லது சுருக்கத்தின் சுருக்கத்தை கொண்டே முடிவுக்கு வருகின்றனர்” என்கிறார் அவர்.

அதாவது தலைப்புச்செய்தியை பார்த்ததுமே பலரும் அதை தங்கள் சமூக வட்டத்தில் பகிர்ந்து கொண்டு விடுவதாக கொள்ளலாம். இதை பெறுவர்களும் தங்கள் பங்கிற்கு அதை பகிர்ந்து கொள்கின்றனர். இப்படி ஒரு செய்தி வைரலாக பரவுகிறதே தவிர, அதை உண்மையில் எத்தனை பேர் படித்துள்ளனர் என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. எனவே ஒரு செய்தி வைரலாக பரவியிருக்கிறது என்பது அதன் பிரபலத்தை உணர்த்தலாமேத்தவிர, அதன் தாக்கத்தை குறிப்பதாக கருத முடியாது.

இணையத்தில் வைரலாக பரவும் செய்திகளை அடையாளம் காட்டும் பஸ்பீட் போன்ற சர்வதேச செய்தி தளங்களும், ஸ்கூப்வூப் போன்ற இந்திய செய்தி தளங்களும் சுண்டியிழுக்கும் வகையில் அவற்றுக்கு தலைப்புகளை கொடுப்பதன் ரகசியம் இது தான். ஆனால் இந்த தலைப்புகள் பகிர தூண்டுகின்றனவே படிக்க வைக்கின்றனவா? எனும் கேள்வியை இந்த ஆய்வு எழுப்பியுள்ளது. ஊடகங்கள் பகிரும் செய்திகளை விட, பயனாளிகள் பகிரும் செய்திகளை அதிகம் பகிரப்படுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த பழக்கம் அரசியல் மற்றும் கலாச்சார விஷயங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் நாம் நினைப்பதைவிட அதிகமாக இருக்கப்போகின்றன என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

வாசிக்காமலே பகிர்வு
செய்திகளை வாசிப்பதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் அதிக தொடர்பில்லை என்றும் இந்த ஆய்வின் அடிப்படையில் லெகாட் கூறுகிறார். இந்த இட்த்தில் தி சயன்ஸ் போஸ்ட் இணையதளம் ஜூன் 4 ம் தேதி வெளியிட்ட செய்தியை பொருத்திப்பார்ப்பதும் சரியாக இருக்கும். 70 சதவீத வாசகர்கள் அறிவியல் செய்திகளின் தலைப்பை மட்டுமே படித்துவிட்டு கருத்து தெரிவிக்கின்றனர், எனும் தலைப்பிலான அந்த செய்தியில் முதல் பத்திக்கு கீழே இருந்த்தெல்லாம் அர்த்தமே இல்லாத வெற்று வார்த்தைகள் தான். ஆனாலும் என்ன அந்த செய்தி 46,000 முறைக்கு மேல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

செய்திகளை படிக்காமலே பகிர்வதற்கான காரணங்கள் குறித்து ஆழமான ஆய்வு அவசியம் என்றாலும் கூட இணையத்தில் பரவி வரும் ஷேர்பைட் கலாச்சாரம் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதென்ன ஷேர்பைட் என்று கேட்கிறீர்களா? சமூக ஊடகங்களில் பகிரப்படும் அம்சங்களை பிரதானமாக கொண்ட உள்ளடக்க தன்மையே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. அதாவது பார்த்தவுடன் கிளிக் செய்து பகிரத்தூண்டும் வகையில் இருக்க வேண்டும். இப்படி பகிரும் தன்மையை ஆரம்பத்தில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மற்றும் பிராண்ட்களே அதிகம் பயன்படுத்தி வந்தன. கிளிக் செய்ய வைப்பதற்காக என்றே அவை பலவித தூண்டுதல் அம்சங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தின. இதற்காக பொய்யான தகவல்களை இடம் பெற வைப்பது கூட வழக்கமாக இருக்கிறது. இதன் காரணமாகவே இவை கிளிக்பைட் அல்லது லைக்பைட் என்றும் குறிப்பிடப்பட்டன. கிளிக்குகளை அள்ளுவதற்காக இந்த உத்தி கடைபிடிக்கப்படுகிறது. கிளிக்பைட் வலையில் சிக்காமல் இருக்க வேண்டும் என்றும் கூட இணையவாசிகள் எச்சரிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது.

ஆனால் இப்போது இந்த பகிர்வு பழக்கம் சமூக ஊடக பயனாளிகளையும் பிடித்துக்கொண்டுவிட்டது. எல்லோரும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர். பகிர்வதோடு படித்துப்பார்ப்பதிலும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் அல்லவா? தகவல் நெடுஞ்சாலை என குறிப்பிடப்படும் இணையத்தில் தகவல்களை உள்வாங்கி கொள்ளாமலே பயணம் செய்தால் எப்படி?

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது

3565344000000578-3646526-image-a-52_1466161957869செய்திகள் பகிர்வது நாங்கள்; வாசிப்பது யார்? இப்படி கேட்கும் நிலை தான் சமூக ஊடக உலகில் நிலவுவது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது சமூக ஊடக பயனாளிகள் பலரும் செய்திகளை பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனரேத்தவிர, பெரும்பாலானோர் அவற்றை படிப்பதில் அதே அளவு ஈடுபாடு கொண்டிருப்பதில்லை என டிவிட்டர் குறும்பதிவுகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

இணைய உலகில் சமூக ஊடகங்களின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.
அது மட்டும் அல்ல சமூக ஊடகங்கள் தான் செய்திகளை தெரிந்து கொள்வதற்கான பிரதான வழியாகவும் அமைந்திருக்கின்றன. இளம் தலைமுறையினர் மத்தியில் தொலைக்காட்சியை விட, டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களே செய்திகளை தெரிந்து கொள்வதற்கான முக்கிய வழியாக இருப்பதாக கருதப்படுகிறது. இதில் வியப்பதற்கு எதுவுமில்லை. இந்த உண்மையை நம்முடைய பேஸ்புக் அல்லது டிவிட்டர் டைம்லைனை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். நட்பு சார்ந்த நிலைத்தகவல்களோடு செய்திகளுக்கான பகிர்வுகளையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். நாமும் கூட இப்படி நம்மை கவரும் செய்திகளை அவற்றுக்கான இணைப்புகளுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

பேஸ்புக் டைம்லைன்
அதனால் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் செய்திகள் மட்டும் கட்டுரைகளை டைம்லைனுக்கு அருகே இடம்பெற வைத்திருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்வரை இணையத்தில் செய்திகளை தெரிந்து கொள்ள தேடல் தான் பிரதான வழியாக இருந்தது. ஆனால் 2014ல் நிலைமை மாறி, சமூக ஊடங்கள் வாயிலாக செய்திகளை தெரிந்து கொள்வது 30 சதவீதமாக அமைந்தது. சமூக ஊடகங்களும் செய்திகளும் இப்படி நெருக்கமாக பின்னி பினைந்திருப்பதை மீறி, சமூக ஊடகங்களில் செய்திகள் நுகரப்படும் விதம் பற்றி அதிக புரிதல் இல்லை. அதாவது சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் எவ்வாறு வாசிக்கப்படுகின்றன என்பது பற்றிய விவரங்கள் அதிகம் தெரியவில்லை.
இந்த நோக்கில் முதல் முறையாக நடத்தப்பட்டுள்ள ஆய்வு, இது தொடர்பான சிந்தனைக்குறிய தகவல்களை முன்வைத்துள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் பிரெஞ்சு நேஷனல் இன்ஸ்டிடியூட் இணைந்து நடத்திய இந்த ஆய்வு, சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்தி இணைப்புகளில் 59 சதவீதம் படிக்கப்படுவதே இல்லை என தெரிவிக்கிறது. இதன் பொருள் சமூக ஊடக பயனாளிகள் செய்திகளை படிக்காமலே அவற்றை பகிர்ந்து கொள்கின்றனர் என்பது தான்.

செய்தி இணைப்புகளை கொண்ட 28 லட்சம் டிவிட்டர் குறும்பதிவுகள் இந்த ஆய்விற்காக ஒரு மாத காலம் பரிசீலிக்கப்பட்டன. இந்த காலத்தின் போது அவை எந்த அளவுக்கு கிளிக் செய்யப்பட்டன என்பது அதாவது வாசிக்கப்பட்டனவா? என ஆய்வு செய்யப்பட்டது. இதன் பயனாக தான் பகிரப்பட்ட இணைப்புகளில் 59 சதவீதம் கிளிக் செய்யப்படாமல் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

” மக்கள் ஒரு செய்தியை வாசிப்பதை விட அதை பகிர்ந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்’ என்று இந்த ஆய்வில் முக்கிய பங்காற்றிய ஆய்வாளரான ஆர்னாட் லெகாட் கூறியுள்ளார். ”இந்த கால கட்டத்தில் இப்படி தான் தகவல்கள் நுகரப்படுகின்றன” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இணைய பழக்கம்
நம் கால இணையப்பழக்கம் பற்றி லெகாட் மேலும் கூறும் விஷயங்கள் கவனிக்கத்தக்கது. ‘மக்கள் மேலும் ஆழமாக தெரிந்து கொள்ள முயற்சிக்காமலே, சுருக்கம் அல்லது சுருக்கத்தின் சுருக்கத்தை கொண்டே முடிவுக்கு வருகின்றனர்” என்கிறார் அவர்.

அதாவது தலைப்புச்செய்தியை பார்த்ததுமே பலரும் அதை தங்கள் சமூக வட்டத்தில் பகிர்ந்து கொண்டு விடுவதாக கொள்ளலாம். இதை பெறுவர்களும் தங்கள் பங்கிற்கு அதை பகிர்ந்து கொள்கின்றனர். இப்படி ஒரு செய்தி வைரலாக பரவுகிறதே தவிர, அதை உண்மையில் எத்தனை பேர் படித்துள்ளனர் என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. எனவே ஒரு செய்தி வைரலாக பரவியிருக்கிறது என்பது அதன் பிரபலத்தை உணர்த்தலாமேத்தவிர, அதன் தாக்கத்தை குறிப்பதாக கருத முடியாது.

இணையத்தில் வைரலாக பரவும் செய்திகளை அடையாளம் காட்டும் பஸ்பீட் போன்ற சர்வதேச செய்தி தளங்களும், ஸ்கூப்வூப் போன்ற இந்திய செய்தி தளங்களும் சுண்டியிழுக்கும் வகையில் அவற்றுக்கு தலைப்புகளை கொடுப்பதன் ரகசியம் இது தான். ஆனால் இந்த தலைப்புகள் பகிர தூண்டுகின்றனவே படிக்க வைக்கின்றனவா? எனும் கேள்வியை இந்த ஆய்வு எழுப்பியுள்ளது. ஊடகங்கள் பகிரும் செய்திகளை விட, பயனாளிகள் பகிரும் செய்திகளை அதிகம் பகிரப்படுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த பழக்கம் அரசியல் மற்றும் கலாச்சார விஷயங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் நாம் நினைப்பதைவிட அதிகமாக இருக்கப்போகின்றன என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

வாசிக்காமலே பகிர்வு
செய்திகளை வாசிப்பதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் அதிக தொடர்பில்லை என்றும் இந்த ஆய்வின் அடிப்படையில் லெகாட் கூறுகிறார். இந்த இட்த்தில் தி சயன்ஸ் போஸ்ட் இணையதளம் ஜூன் 4 ம் தேதி வெளியிட்ட செய்தியை பொருத்திப்பார்ப்பதும் சரியாக இருக்கும். 70 சதவீத வாசகர்கள் அறிவியல் செய்திகளின் தலைப்பை மட்டுமே படித்துவிட்டு கருத்து தெரிவிக்கின்றனர், எனும் தலைப்பிலான அந்த செய்தியில் முதல் பத்திக்கு கீழே இருந்த்தெல்லாம் அர்த்தமே இல்லாத வெற்று வார்த்தைகள் தான். ஆனாலும் என்ன அந்த செய்தி 46,000 முறைக்கு மேல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

செய்திகளை படிக்காமலே பகிர்வதற்கான காரணங்கள் குறித்து ஆழமான ஆய்வு அவசியம் என்றாலும் கூட இணையத்தில் பரவி வரும் ஷேர்பைட் கலாச்சாரம் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதென்ன ஷேர்பைட் என்று கேட்கிறீர்களா? சமூக ஊடகங்களில் பகிரப்படும் அம்சங்களை பிரதானமாக கொண்ட உள்ளடக்க தன்மையே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. அதாவது பார்த்தவுடன் கிளிக் செய்து பகிரத்தூண்டும் வகையில் இருக்க வேண்டும். இப்படி பகிரும் தன்மையை ஆரம்பத்தில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மற்றும் பிராண்ட்களே அதிகம் பயன்படுத்தி வந்தன. கிளிக் செய்ய வைப்பதற்காக என்றே அவை பலவித தூண்டுதல் அம்சங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தின. இதற்காக பொய்யான தகவல்களை இடம் பெற வைப்பது கூட வழக்கமாக இருக்கிறது. இதன் காரணமாகவே இவை கிளிக்பைட் அல்லது லைக்பைட் என்றும் குறிப்பிடப்பட்டன. கிளிக்குகளை அள்ளுவதற்காக இந்த உத்தி கடைபிடிக்கப்படுகிறது. கிளிக்பைட் வலையில் சிக்காமல் இருக்க வேண்டும் என்றும் கூட இணையவாசிகள் எச்சரிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது.

ஆனால் இப்போது இந்த பகிர்வு பழக்கம் சமூக ஊடக பயனாளிகளையும் பிடித்துக்கொண்டுவிட்டது. எல்லோரும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர். பகிர்வதோடு படித்துப்பார்ப்பதிலும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் அல்லவா? தகவல் நெடுஞ்சாலை என குறிப்பிடப்படும் இணையத்தில் தகவல்களை உள்வாங்கி கொள்ளாமலே பயணம் செய்தால் எப்படி?

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

2 Comments on “சமூக ஊடகங்களும் செய்தி வாசிப்பு பழக்கமும்!

  1. Dear Narasimhan, This is a good post. I want to buy your book Netchaththirangal. Please send me the correct address to where should I send the money.

    Reply
    1. CyberSimman

      வணக்கம் நன்பரே,

      நெட்சத்திரங்கள் புத்தகத்தை இணையத்தில் எளிதாக வாங்கலாம். படித்து விட்டு கருத்துக்களை சொல்லுங்கள். அன்புடன் சிம்மன்
      இணையத்தில் வாங்க: http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

      Reply

Leave a Comment to CyberSimman Cancel Reply

Your email address will not be published.