ஆப்கான் பெண்கள் வண்ண ஆடைகளில் போஸ் கொடுப்பது ஏன்?

befunky-project-1-1031722-1631961143ஆப்கானிஸ்தான் மக்களின் நிலை பரிதாபமானது தான். அதைவிட அந்நாட்டு மகளிரின் நிலை இன்னும் மோசமானது. மத அடிப்படைவாதிகளாக அறியப்படும் தாலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் நிலையில், அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சமே ஆதிக்கம் செலுத்துகிறது. இடைப்பட்ட காலத்தில் பெண் கல்வி மற்றும் சுதந்திரத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் எல்லாம் பின்னுக்குத்தள்ளப்படும் நிலையாக் ஆப்கான் பெண்கள் பதற்றத்திலும், அச்சத்திலும் இருக்கின்றனர்.

இந்த பின்னணியில் அண்மையில் டிவிட்டரில் அலையென பகிரப்பட்ட ஆப்கான் பெண்களின் வண்ணமயமான படங்கள் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த படங்களுடன் பகிரப்பட்ட ஹாஷ்டேகும் பிரபலமாகி பேசு பொருளாகியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியாகி கொண்டிருக்கும் செய்திகளை கருத்தில் கொண்டு பார்த்தால், அந்நாட்டு பெண்கள் வண்ணமயமான ஆடைகள் அணிந்து போஸ் கொடுப்பது முரண் நகையாக தோன்றலாம். ஆனால், இந்த பகிர்வின் நோக்கத்தை தெரிந்து கொண்டால், ஆப்கானிஸ்தான் பெண்கள் எத்தனை அழகாகவும், வலிமையாகவும் குரல் கொடுத்திருக்கின்றனர் என்பது புரியும்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன் டிவிட்டரில் ஆப்கான் பெண்கள் வண்ண ஆடைகளில் காட்சி தரும் படங்களை பகிரத்துவங்கினர். பலரும் தற்போதைய வண்ண படங்களை பகிர்ந்து கொண்டிருந்தனர் என்றால், ஒரு சிலர் பழைய கால படங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தனர். இந்த படங்களை பார்த்த ஆப்கான் பெண்கள் பலரும் தங்கள் பங்கிற்கு வண்ண படங்களை பகிர்ந்து கொண்டனர்.

ஆப்கான் பெண்கள் ஏன் டிவிட்டரில் இப்படி வண்ண ஆடைகளில் தோன்றும் படங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்?

டிவிட்டரில் பகிரப்பட்ட படங்களுடன் இடம்பெற்றிருந்த வாசகங்களுடன் இணைக்கப்பட்டிருந்த டூநாட்டச்மைக்லோத்ஸ் (#DoNotTouchMyClothes.

) எனும் ஹாஷ்டேகில் இருந்தே இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ளலாம்.

ஆம், தாலிபான்கள் கலாச்சார ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையிலேயே ஆப்கான் பெண்கள் இந்த படங்களை பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளனர்.

தாலிபான் அமைப்பு, பெண் கல்விக்கும், பெண் சுதந்திரத்திற்கும் எதிரானது என்பது எல்லோரும் அறிந்ததே. கடந்த முறை தாலிபான் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் இருந்த போது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறையும், வன்முறையுமே இதற்கு சாட்சி.

இந்த முறை தாலிபான்கள் ஆட்சி முந்தைய ஆட்சியில் இருந்து மாறுபட்டதாக இருக்கும் என்று கூறப்பட்டாலும், ஆப்கானிஸ்தானில் கள நிலவரம் அவ்வாறு இல்லை என்றே எண்ணத்தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் விஷயத்தில் தாலிபான்கள் அணுகுமுறை மாறிவிடாது என்பதையே செய்திகளும், தகவல்களும் உறுதிப்படுத்துகின்றன. .

பெண்மணி ஒருவர் டாக்சியில் பயணம் செய்த போது தாலிபான் வீரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர் ஆண் துணை இல்லாமல் தனியாக பயணம் செய்வது ஏன் என விசாரிக்கப்பட்டதாக வெளியான செய்திகளில் இருந்து இதை புரிந்து கொள்ளலாம். அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்துச்சென்று அவருடன் கணவருடன் அழைத்து வருமாறு டாக்சி டிரைவர் அறிவுறுத்தப்பட்டதாகவும்  அந்த செய்தி தெரிவிக்கிறது.

அதே நேரத்தில் பொது இடங்களில் பெண்கள் தோன்றும் புகைப்படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. ஆப்கான் அரசில் பெண்கள் நலத்துறை நீக்கப்பட்டிருக்கிறது.

பெண்கள் கல்லூரிக்குச்சென்று பயில தடையில்லை என தாலிபான் தெரிவித்திருந்தாலும், அவர்கள் ஆடை விஷயத்தில் கடும் கட்டுப்பாடுகளை வலியுறுத்த தவறவில்லை. அதோடு வகுப்பறைகளில் மாணவிகளும், மாணவர்களும் தனித்தனியே அமர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தான் டிவிட்டரில் இருக்கும் ஆப்கான் பெண்களில் பலர் வண்ண ஆடைகளில் தோன்றும் புகைப்படங்களை பகிர்த்துவங்கினர். ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பரார் ஜலாலி (Dr Bahar Jalali) எனும் முன்னாள் பேராசிரியர் தான் இத்தகைய படத்தை முதலில் பகிர்ந்திருந்தார்.

கல்லூரி மாணவிகள் உடல் மற்றும் முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டத்தை அடுத்து ஜலாலி கவலையில் ஆழ்ந்தார். அதோடு, தாலிபான் அமைப்பிற்கு ஆதரவான பெண்கள் பலர் பர்கா அணிந்த நிலையில் பொது இடங்களில் தோன்றும் படங்களும் வெளியாயின.

இந்த போக்கிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என தீர்மானித்த பேராசிரியர் ஜலாலி, பச்சை நிற ஆடையில் தான் தோன்றும் படத்தை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.

“இது தான் ஆப்கான் கலாச்சாரம். நான் பாரம்பரியா ஆப்கான் ஆடையை அணிந்திருக்கிறேன். “ என அவர் அந்த படத்தில் தெரிவித்திருந்ததோடு, #AfghanistanCulture எனும் ஹாஷ்டேகையும் சேர்த்திருந்தார்.

காபூல் பல்கலைக்கழகம் ஒன்றில் தாலிபான் ஆதரவு பெண்கள், பர்தா அணிந்த படி, தாலிபான் கொடிகளை ஏந்திக்கொண்டிருக்கும் படத்தை பார்த்த போது, ஆப்கான் ஆடையே அல்லாத ஒன்றை தாலிபான்கள் பெண்களுக்கான ஆடையாக திணிப்பதை உணர்ந்ததாகவும், இதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என தீர்மானித்ததாகவும் அவர் ’பூம் லைவ்’ இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

வண்ணமயமாக உடை உடுத்துவதே ஆப்கான் மகளிரின் கலாச்சாரம் என்பதை உணர்த்தும் வகையில் பேராசிரியர் ஜலாலி தனது வண்ண படத்தை பகிர்ந்து கொண்டார்.

பெண்கள் உரிமையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட பேராசிரியர் தனது கருத்தை வலியுறுத்தும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட தனது குடும்ப படங்களையும் பகிர்ந்து கொண்டார். 1969 ல் எடுக்கப்பட்ட ஒரு திருமண படத்தில் தனது அம்மா ஸ்கர்ட் அணிந்து காட்சி தரும் படத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

” ஒரு வரலாற்றாசிரியர் என்ற முறையில் அப்போது எங்கள் நாடு மிகவும் சகிப்புத்தன்மை கொண்டதாக இருந்தது. ஏனெனில் அரசு நவீனத்தை ஊக்குவித்தது. குட்டை பாவடைகளை அணியும் போது சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் உணர்ந்ததாக அம்மா கூறியிருக்கிறார்” என்றும் ஜலாலி கூறியிருக்கிறார்.

இந்த படங்கள் மூலம் அவர் சொல்ல முற்பட்ட செய்தி சக ஆப்கான் மகளிர் மனதிலும் எதிரொலித்தது. ஜலாலி பகிர்ந்து கொண்ட படங்களை பார்த்த வெளிநாடுகளில் வசிக்கும் ஆப்கான் பெண்கள் பலர், அவரது கருத்தை ஆமோதிக்கும் விதமாக, வண்ணமயமான ஆடைகளில் காட்சி தரும் படங்களை பகிரத்துவங்கினர்.

கண்ணை கவரும் வண்ண ஆடையில் தோன்றும் படத்தை பகிர்ந்து கொண்ட மசீத் எனும் பெண், ’ இது தான் எங்கள் ஆப்கான் ஆடை. ஆப்கான் பெண்கள் எப்போதும், இத்தகைய வண்ண, மிதமான ஆடைகளையே அணிவர். கருப்பு பர்தா ஒரு போதும் ஆப்கான் காலச்சாரத்தின் அங்கம் இல்லை” என தெரிவித்திருந்தார்.

கருப்பு ஆடைகளும், பர்தாவும் ஒரு போதும் ஆப்கான் பெண்கள் ஆடையாக இருந்ததில்லை என ஜாரா சுல்தானி எனும் பெண் தெரிவித்திருந்தார். இப்படி தான் ஆப்கான் பெண்கள் ஆடை அணிவது வழக்கம் என இன்னொருவர் தனது வண்ண படத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்.

இதே போல மேலும் பல ஆப்கான் பெண்கள் வண்ண ஆடைகளில் போஸ் கொடுத்தபடி, பர்தா ஆப்கான் ஆடையாக இருந்ததில்லை எனும் கருத்தை வலியுறுத்தினர். அதோடு, தங்கள் மீது உடை கட்டுப்பாட்டை திணிப்பதை எதிர்க்கும் வகையில், #DoNotTouchMyClothes எனும் ஹாஷ்டேகையும் இணைத்திருந்தனர்.

தொடர்ந்து அலையென டிவிட்டரில் வெளியான இந்த வண்ணப்படங்கள், விரும்பிய ஆடை அணிவது பெண்களின் சுதந்திரம் எனும் செய்தியை வலுவாக எடுத்துச்சொல்லி வருகின்றன. அதோடு கலாச்சார அடக்குமுறைக்கு எதிராகவும் உரக்க குரல் கொடுக்கின்றன..

 

 

 

befunky-project-1-1031722-1631961143ஆப்கானிஸ்தான் மக்களின் நிலை பரிதாபமானது தான். அதைவிட அந்நாட்டு மகளிரின் நிலை இன்னும் மோசமானது. மத அடிப்படைவாதிகளாக அறியப்படும் தாலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் நிலையில், அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சமே ஆதிக்கம் செலுத்துகிறது. இடைப்பட்ட காலத்தில் பெண் கல்வி மற்றும் சுதந்திரத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் எல்லாம் பின்னுக்குத்தள்ளப்படும் நிலையாக் ஆப்கான் பெண்கள் பதற்றத்திலும், அச்சத்திலும் இருக்கின்றனர்.

இந்த பின்னணியில் அண்மையில் டிவிட்டரில் அலையென பகிரப்பட்ட ஆப்கான் பெண்களின் வண்ணமயமான படங்கள் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த படங்களுடன் பகிரப்பட்ட ஹாஷ்டேகும் பிரபலமாகி பேசு பொருளாகியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியாகி கொண்டிருக்கும் செய்திகளை கருத்தில் கொண்டு பார்த்தால், அந்நாட்டு பெண்கள் வண்ணமயமான ஆடைகள் அணிந்து போஸ் கொடுப்பது முரண் நகையாக தோன்றலாம். ஆனால், இந்த பகிர்வின் நோக்கத்தை தெரிந்து கொண்டால், ஆப்கானிஸ்தான் பெண்கள் எத்தனை அழகாகவும், வலிமையாகவும் குரல் கொடுத்திருக்கின்றனர் என்பது புரியும்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன் டிவிட்டரில் ஆப்கான் பெண்கள் வண்ண ஆடைகளில் காட்சி தரும் படங்களை பகிரத்துவங்கினர். பலரும் தற்போதைய வண்ண படங்களை பகிர்ந்து கொண்டிருந்தனர் என்றால், ஒரு சிலர் பழைய கால படங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தனர். இந்த படங்களை பார்த்த ஆப்கான் பெண்கள் பலரும் தங்கள் பங்கிற்கு வண்ண படங்களை பகிர்ந்து கொண்டனர்.

ஆப்கான் பெண்கள் ஏன் டிவிட்டரில் இப்படி வண்ண ஆடைகளில் தோன்றும் படங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்?

டிவிட்டரில் பகிரப்பட்ட படங்களுடன் இடம்பெற்றிருந்த வாசகங்களுடன் இணைக்கப்பட்டிருந்த டூநாட்டச்மைக்லோத்ஸ் (#DoNotTouchMyClothes.

) எனும் ஹாஷ்டேகில் இருந்தே இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ளலாம்.

ஆம், தாலிபான்கள் கலாச்சார ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையிலேயே ஆப்கான் பெண்கள் இந்த படங்களை பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளனர்.

தாலிபான் அமைப்பு, பெண் கல்விக்கும், பெண் சுதந்திரத்திற்கும் எதிரானது என்பது எல்லோரும் அறிந்ததே. கடந்த முறை தாலிபான் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் இருந்த போது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறையும், வன்முறையுமே இதற்கு சாட்சி.

இந்த முறை தாலிபான்கள் ஆட்சி முந்தைய ஆட்சியில் இருந்து மாறுபட்டதாக இருக்கும் என்று கூறப்பட்டாலும், ஆப்கானிஸ்தானில் கள நிலவரம் அவ்வாறு இல்லை என்றே எண்ணத்தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் விஷயத்தில் தாலிபான்கள் அணுகுமுறை மாறிவிடாது என்பதையே செய்திகளும், தகவல்களும் உறுதிப்படுத்துகின்றன. .

பெண்மணி ஒருவர் டாக்சியில் பயணம் செய்த போது தாலிபான் வீரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர் ஆண் துணை இல்லாமல் தனியாக பயணம் செய்வது ஏன் என விசாரிக்கப்பட்டதாக வெளியான செய்திகளில் இருந்து இதை புரிந்து கொள்ளலாம். அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்துச்சென்று அவருடன் கணவருடன் அழைத்து வருமாறு டாக்சி டிரைவர் அறிவுறுத்தப்பட்டதாகவும்  அந்த செய்தி தெரிவிக்கிறது.

அதே நேரத்தில் பொது இடங்களில் பெண்கள் தோன்றும் புகைப்படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. ஆப்கான் அரசில் பெண்கள் நலத்துறை நீக்கப்பட்டிருக்கிறது.

பெண்கள் கல்லூரிக்குச்சென்று பயில தடையில்லை என தாலிபான் தெரிவித்திருந்தாலும், அவர்கள் ஆடை விஷயத்தில் கடும் கட்டுப்பாடுகளை வலியுறுத்த தவறவில்லை. அதோடு வகுப்பறைகளில் மாணவிகளும், மாணவர்களும் தனித்தனியே அமர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தான் டிவிட்டரில் இருக்கும் ஆப்கான் பெண்களில் பலர் வண்ண ஆடைகளில் தோன்றும் புகைப்படங்களை பகிர்த்துவங்கினர். ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பரார் ஜலாலி (Dr Bahar Jalali) எனும் முன்னாள் பேராசிரியர் தான் இத்தகைய படத்தை முதலில் பகிர்ந்திருந்தார்.

கல்லூரி மாணவிகள் உடல் மற்றும் முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டத்தை அடுத்து ஜலாலி கவலையில் ஆழ்ந்தார். அதோடு, தாலிபான் அமைப்பிற்கு ஆதரவான பெண்கள் பலர் பர்கா அணிந்த நிலையில் பொது இடங்களில் தோன்றும் படங்களும் வெளியாயின.

இந்த போக்கிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என தீர்மானித்த பேராசிரியர் ஜலாலி, பச்சை நிற ஆடையில் தான் தோன்றும் படத்தை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.

“இது தான் ஆப்கான் கலாச்சாரம். நான் பாரம்பரியா ஆப்கான் ஆடையை அணிந்திருக்கிறேன். “ என அவர் அந்த படத்தில் தெரிவித்திருந்ததோடு, #AfghanistanCulture எனும் ஹாஷ்டேகையும் சேர்த்திருந்தார்.

காபூல் பல்கலைக்கழகம் ஒன்றில் தாலிபான் ஆதரவு பெண்கள், பர்தா அணிந்த படி, தாலிபான் கொடிகளை ஏந்திக்கொண்டிருக்கும் படத்தை பார்த்த போது, ஆப்கான் ஆடையே அல்லாத ஒன்றை தாலிபான்கள் பெண்களுக்கான ஆடையாக திணிப்பதை உணர்ந்ததாகவும், இதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என தீர்மானித்ததாகவும் அவர் ’பூம் லைவ்’ இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

வண்ணமயமாக உடை உடுத்துவதே ஆப்கான் மகளிரின் கலாச்சாரம் என்பதை உணர்த்தும் வகையில் பேராசிரியர் ஜலாலி தனது வண்ண படத்தை பகிர்ந்து கொண்டார்.

பெண்கள் உரிமையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட பேராசிரியர் தனது கருத்தை வலியுறுத்தும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட தனது குடும்ப படங்களையும் பகிர்ந்து கொண்டார். 1969 ல் எடுக்கப்பட்ட ஒரு திருமண படத்தில் தனது அம்மா ஸ்கர்ட் அணிந்து காட்சி தரும் படத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

” ஒரு வரலாற்றாசிரியர் என்ற முறையில் அப்போது எங்கள் நாடு மிகவும் சகிப்புத்தன்மை கொண்டதாக இருந்தது. ஏனெனில் அரசு நவீனத்தை ஊக்குவித்தது. குட்டை பாவடைகளை அணியும் போது சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் உணர்ந்ததாக அம்மா கூறியிருக்கிறார்” என்றும் ஜலாலி கூறியிருக்கிறார்.

இந்த படங்கள் மூலம் அவர் சொல்ல முற்பட்ட செய்தி சக ஆப்கான் மகளிர் மனதிலும் எதிரொலித்தது. ஜலாலி பகிர்ந்து கொண்ட படங்களை பார்த்த வெளிநாடுகளில் வசிக்கும் ஆப்கான் பெண்கள் பலர், அவரது கருத்தை ஆமோதிக்கும் விதமாக, வண்ணமயமான ஆடைகளில் காட்சி தரும் படங்களை பகிரத்துவங்கினர்.

கண்ணை கவரும் வண்ண ஆடையில் தோன்றும் படத்தை பகிர்ந்து கொண்ட மசீத் எனும் பெண், ’ இது தான் எங்கள் ஆப்கான் ஆடை. ஆப்கான் பெண்கள் எப்போதும், இத்தகைய வண்ண, மிதமான ஆடைகளையே அணிவர். கருப்பு பர்தா ஒரு போதும் ஆப்கான் காலச்சாரத்தின் அங்கம் இல்லை” என தெரிவித்திருந்தார்.

கருப்பு ஆடைகளும், பர்தாவும் ஒரு போதும் ஆப்கான் பெண்கள் ஆடையாக இருந்ததில்லை என ஜாரா சுல்தானி எனும் பெண் தெரிவித்திருந்தார். இப்படி தான் ஆப்கான் பெண்கள் ஆடை அணிவது வழக்கம் என இன்னொருவர் தனது வண்ண படத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்.

இதே போல மேலும் பல ஆப்கான் பெண்கள் வண்ண ஆடைகளில் போஸ் கொடுத்தபடி, பர்தா ஆப்கான் ஆடையாக இருந்ததில்லை எனும் கருத்தை வலியுறுத்தினர். அதோடு, தங்கள் மீது உடை கட்டுப்பாட்டை திணிப்பதை எதிர்க்கும் வகையில், #DoNotTouchMyClothes எனும் ஹாஷ்டேகையும் இணைத்திருந்தனர்.

தொடர்ந்து அலையென டிவிட்டரில் வெளியான இந்த வண்ணப்படங்கள், விரும்பிய ஆடை அணிவது பெண்களின் சுதந்திரம் எனும் செய்தியை வலுவாக எடுத்துச்சொல்லி வருகின்றன. அதோடு கலாச்சார அடக்குமுறைக்கு எதிராகவும் உரக்க குரல் கொடுக்கின்றன..

 

 

 

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.