ரொக்கமில்லா சமுகத்தை கணித்த கம்ப்யூட்டர் முன்னோடி

 

 

moneyசெல்போன் மூலம் வங்கிச்சேவை பெறுவதும், பண வரிவர்த்தனை செய்வதும் சாத்தியமாகி இருக்கும் நிலையில் கூட ரொக்கமில்லா சமூகத்தின் தேவை அல்லது சாத்தியம் குறித்து கேள்விகளும், சந்தேகங்களும் உள்ளவர்கள் ஜார்ஜ் மாரோ பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கரான ஜார்ஜ் மாரோ கம்ப்யூட்டர் முன்னோடிகள் ஒருவர். கம்ப்யூட்டர் என்பது புரியாத மாயமாக இருந்த காலத்தில் மைக்ரோ கம்ப்யூட்டர்களின் மகத்துவம் பற்றியும், எதிர்கால பயன்பாடு பற்றி எடுத்துரைத்தவர் மாரோ. கம்ப்யூட்டர் வடிவமைப்பிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார். பர்சனல் கம்ப்யூட்டர் துறை பெற்ற வளர்சிக்கான அடித்தளம் அமைத்ததில் மாரோவும் ஒருவர்.

கம்ப்யூட்டர் வர்த்தக முயற்சியில் மாரோ சறுக்கல்களை சந்திக்காமல் இருந்திருந்தால் இன்னொரு பில்கேட்சாகவோ, ஸ்டீப் ஜாப்சாகவோ வந்திருப்பார் என நினைக்கதோன்றுகிறது.அவரது மறைவை முன்னிட்டு சீனெட் இணையதளம் எழுதிய நினைவுக்கட்டுரை அவரது கம்ப்யூட்டர் சார்ந்த முயற்சிகளை விவரித்து வியக்க வைக்கிறது.

ஆனால் மாரோவை இப்போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய காரணம் கம்ப்யூட்டர்களின் எதிர்கால பலன்கள் குறித்து அவருக்கு இருந்த தீர்க்தரிசனம் தான். இதுவே அவரை ரொக்கமில்லா சமூகம் பற்றி பேச வைத்தது.

கிரெடிட் கார்டு அளவுக்கு ஒரு கம்ப்யூட்டர் உருவாக்கி, அதில் நம்முடைய எல்லா நிதி பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியும் என்றும் இதுவே ரொக்கமில்லா சமூகத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கணித்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இது தொடர்பான கருத்துக்களை 1984 ம் ஆண்டு வெளியான அட்டயர்மேகஜைன்ஸ் இதழில் அவர் கட்டுரையாக எழுதியிருக்கிறார். கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட ரொக்கமில்லா சமூகம் எனும் தலைப்பிலான அந்த கட்டுரையை அவர் துவங்கு விதம் கவனிக்கத்தக்கது: “ நம்முடைய வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகள் ஒவ்வொரு நாளும் சமாளிக்க முடியாததாக ஆகி கொண்டிருக்கும் இரண்டு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன. ஒன்று அவை காகிதத்தில் மூழ்கி கொண்டிருக்கின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளும் நிகழும் லட்சக்கணக்கான தனிநபர் மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகளை பதிவு செய்யவும், சர் பார்க்கவும் தேவைப்படும் காகிதங்களின் அளவை சமாளிக்க நடைமுறை சார்ந்த வழி இல்லை. இரண்டாவதாக பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு மட்டும் அல்லாமல், முன் எப்போதையும் விட அவை அதிக அளவிலான பணம் கொண்டதாக இருக்கும் போது இந்த பரிவர்த்தனைகள் மீதான கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது. கசோலைகள் தவறு மற்றும் பணம் செலுத்தப்படாத நிகழ்வுகள் அதிகரிக்கின்றன”…..

 

( சமீபத்தில் வெளியான டிஜிட்டல் பணம்’புத்தகத்தில் இருந்து….)  நன்றி; கிழக்கு பதிப்பகம்

 

புத்தகத்தை இணையத்தில் வாங்க: http://marinabooks.com/detailed?id=5%206474&name=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

 

 

moneyசெல்போன் மூலம் வங்கிச்சேவை பெறுவதும், பண வரிவர்த்தனை செய்வதும் சாத்தியமாகி இருக்கும் நிலையில் கூட ரொக்கமில்லா சமூகத்தின் தேவை அல்லது சாத்தியம் குறித்து கேள்விகளும், சந்தேகங்களும் உள்ளவர்கள் ஜார்ஜ் மாரோ பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கரான ஜார்ஜ் மாரோ கம்ப்யூட்டர் முன்னோடிகள் ஒருவர். கம்ப்யூட்டர் என்பது புரியாத மாயமாக இருந்த காலத்தில் மைக்ரோ கம்ப்யூட்டர்களின் மகத்துவம் பற்றியும், எதிர்கால பயன்பாடு பற்றி எடுத்துரைத்தவர் மாரோ. கம்ப்யூட்டர் வடிவமைப்பிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார். பர்சனல் கம்ப்யூட்டர் துறை பெற்ற வளர்சிக்கான அடித்தளம் அமைத்ததில் மாரோவும் ஒருவர்.

கம்ப்யூட்டர் வர்த்தக முயற்சியில் மாரோ சறுக்கல்களை சந்திக்காமல் இருந்திருந்தால் இன்னொரு பில்கேட்சாகவோ, ஸ்டீப் ஜாப்சாகவோ வந்திருப்பார் என நினைக்கதோன்றுகிறது.அவரது மறைவை முன்னிட்டு சீனெட் இணையதளம் எழுதிய நினைவுக்கட்டுரை அவரது கம்ப்யூட்டர் சார்ந்த முயற்சிகளை விவரித்து வியக்க வைக்கிறது.

ஆனால் மாரோவை இப்போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய காரணம் கம்ப்யூட்டர்களின் எதிர்கால பலன்கள் குறித்து அவருக்கு இருந்த தீர்க்தரிசனம் தான். இதுவே அவரை ரொக்கமில்லா சமூகம் பற்றி பேச வைத்தது.

கிரெடிட் கார்டு அளவுக்கு ஒரு கம்ப்யூட்டர் உருவாக்கி, அதில் நம்முடைய எல்லா நிதி பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியும் என்றும் இதுவே ரொக்கமில்லா சமூகத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கணித்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இது தொடர்பான கருத்துக்களை 1984 ம் ஆண்டு வெளியான அட்டயர்மேகஜைன்ஸ் இதழில் அவர் கட்டுரையாக எழுதியிருக்கிறார். கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட ரொக்கமில்லா சமூகம் எனும் தலைப்பிலான அந்த கட்டுரையை அவர் துவங்கு விதம் கவனிக்கத்தக்கது: “ நம்முடைய வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகள் ஒவ்வொரு நாளும் சமாளிக்க முடியாததாக ஆகி கொண்டிருக்கும் இரண்டு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன. ஒன்று அவை காகிதத்தில் மூழ்கி கொண்டிருக்கின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளும் நிகழும் லட்சக்கணக்கான தனிநபர் மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகளை பதிவு செய்யவும், சர் பார்க்கவும் தேவைப்படும் காகிதங்களின் அளவை சமாளிக்க நடைமுறை சார்ந்த வழி இல்லை. இரண்டாவதாக பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு மட்டும் அல்லாமல், முன் எப்போதையும் விட அவை அதிக அளவிலான பணம் கொண்டதாக இருக்கும் போது இந்த பரிவர்த்தனைகள் மீதான கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது. கசோலைகள் தவறு மற்றும் பணம் செலுத்தப்படாத நிகழ்வுகள் அதிகரிக்கின்றன”…..

 

( சமீபத்தில் வெளியான டிஜிட்டல் பணம்’புத்தகத்தில் இருந்து….)  நன்றி; கிழக்கு பதிப்பகம்

 

புத்தகத்தை இணையத்தில் வாங்க: http://marinabooks.com/detailed?id=5%206474&name=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.