பலூன் வரும் முன்னே, இணையம் வரும் பின்னே!

 

lபியூர்ட்டோ ரிக்கோ மக்கள் அந்த பலூன்கள் எப்போது வந்து சேரும் என ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். அந்நாட்டு அரசாங்கமும், தொண்டு அமைப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் கூட அந்த பலூன்கள் எப்போது தங்கள் வானில் மிதக்கத்துவங்கும் என எதிர்பார்த்திருக்கின்றனர். மற்ற நாடுகளும் கூட இந்த பலூன்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கின்றன.

ஒரு பலூன் மீது இத்தனை எதிர்பார்ப்பா? என்று கேட்கலாம். அதிலும், அண்மையில் சூறாவளியில் சிக்கி அதன் கோரத்தாண்டவத்தில் இருந்து மீள முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் பியூர்டோ ரிக்கோ மக்கள் ஏன், ஒரு பலூனுக்காக காத்திருக்க வேண்டும் என கேட்கத்தோன்றலாம். அந்த பலூன்கள் சாதாரன பலூன்கள் அல்ல, வானிலிருந்து மண்ணுக்கு இணைய இணைப்பை வழங்க கூடிய அதி நவீன பலூன்கள் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.

முன்னணி தேடியந்திர நிறுவனமான கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் லூன் திட்டத்தின் சார்பில் இந்த வகை பலூன்கள் பறக்க விடப்படுகின்றன. சாகச விளையாட்டாக கருதக்கூடிய ஹாட் ஏர் பலூன் ரகத்தைச்சேர்ந்த இந்த பலூன்கள் காற்றுவெளி மண்டத்தில் மிதந்தபடி தொலைத்தொடர்பு வசதி மற்றும் இணைய வசதியை கீழே உள்ள பகுதிக்கு அளிக்க வல்லவை. அதனால் தான், பியூர்ட்டோ ரிக்கோ மக்கள் இந்த பலூன்கள் வரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சூறாவளி தாக்குதலால் அந்நாட்டு செல்போன் கோபுரங்களும், தொலைத்தொடர்பு வசதியும் முறித்து போய் கிடக்கின்றன. எனவே அங்கு தகவல் தொடர்பு வசதி முற்றிலும் செயலிழந்து போயிருக்கிறது. இதனால் மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பது முதல் நிவராண உதவிகளை அளிப்பது வரை எல்லாவற்றிலும் சிக்கல் இருக்கிறது.

தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு வசதியை சீரமைக்க மாதக்கணக்கில் ஆகலாம் எனும் நிலையில், அத்தியாவசிய பணிகளை ஒருங்கிணைக்கவும், பொதுமக்கள் தொடர்பு கொள்ளவும் அடிப்படை தொலைத்தொடர்பு வசதி உடனடி தேவை.

இந்த பின்னணியில் தான் ஆல்பபெட் நிறுவனம் தனது லூன் திட்டத்தின் இணைய பலூன்கள் பியூர்ட்டோ ரிக்கோவில் பறக்கவிட திட்டமிட்டு இதற்காக அமெரிக்க அரசின் அனுமதியையும் பெற்றிருக்கிறது. பியூர்ட்டோ ரிக்கோவில் பலூன்களை பறக்கவிட்ட பிறகு உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, செல்போன் இணைப்பு மற்றும் இணைய வசதியை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உறவினர்களை தொடர்பு கொள்ளவும், உதவிகளை பெறவும் செல்போன் இணைப்பு கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருக்கும் பியூர்ட்டோ ரிக்கோ மக்களுக்கு இந்த சேவை பேரூதவியாக இருக்கும்.

கூகுளின் தாய் நிறுவனம் இந்த பலூன் திட்டத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்பட உலகில் இணைய வசதி இல்லாத தொலைதூர பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இந்த பலூன்கள் மூலம் இணைய வசதி அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் வானில் இந்த பலூன்களை வரிசையாக பறக்கவிட்டு அவற்றை வயர்லெஸ் முறையில் வலைப்பின்னலாக இணைப்பதன் மூலம் தரைப்பகுதியில் உள்ளவர்களுக்கு இணைய வசதியை அளிக்கும்.

பலூன்கள் மூலம் எப்படி இணைய வசதி அளிக்க முடியும் என பார்ப்பதற்கு முன், இந்த திட்டம் பற்றி சுருக்கமான அறிமுகம். தேடியந்திரமான கூகுள் பிரவுசர்கள், இமெயில், மொபைல் இயங்குதளம் என பல்வேறு சேவைகளை வழங்கு வருகிறது. இவைத்தவிர கூகுள் நிறுவனம் பல்வேறு ஆய்வு திட்டங்கள் மற்றும் சோதனை திட்டங்களையும் கொண்டிருந்தது. இப்படி கூகுள் குழுவால் பிராஜெக்ட் எக்ஸ் எனும் பெயரில் துவங்கப்பட்டது தான் இணைய பலூன் திட்டம்.

இணையம் மூலம் செய்திகளை தெரிந்து கொள்வது முதல் ஷாப்பிங் செய்வது வரை எண்ணற்ற வசதிகள் சாத்தியமாகி இணையம் இல்லாத வாழ்க்கைக்கு நாம் பழகிவிட்டோம். கம்ப்யூட்டர்கள், லேப்டாப் மட்டும் அல்லாமல், ஸ்மார்ட்போன் மூலம் உள்ளங்கையிலேயே இணைய வசதி சாத்தியமாகிறது. ஆனால், இணைய வசதி என்பது இன்னமும் உலகம் முழுவதும் பரவலாகிவிடவில்லை. உலகில் இணைய வசதி எட்டிப்பார்க்காத பகுதிகளும் அநேகம் இருக்கின்றன. இணைய வசதி மோசமாக உள்ள பகுதிகளும் உள்ளன. மலைப்பகுதி, குக்கிராமங்கள் போன்ற இடங்களுக்கு இணைய வசதியை அளிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

இன்னமும் தொலைத்தொடர்பு வசதி எட்டிப்பார்க்காத இடங்களில் இணைய வசதியை அளிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தி தருவது பெருட்செலவு மிக்கதாகும். இதற்கான லாபமும் குறைவு என்பதால் வர்த்தக நிறுவனங்கள் இதில் அதிக முனைப்பு காட்டவும் தயங்குகின்றன.

இந்த சிக்கலுக்கான தீரவாக தான் பலூன் மூலம் தொலைதூர பகுதிகளில் இணைய வசதி அளிக்கும் திட்டத்தை கூகுள் சோதனை முறையில் துவங்கியது. 2013 ம் ஆண்டு, அதிகாரபூர்வமாக இந்த திட்டம் துவங்கியது. கூகுள் செயல்படுத்தி வந்த பல்வேறு துணை திட்டங்களில் ஒன்றாக விளங்கிய இந்த திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கூகுளுக்கு என தனியே ஆல்பபெட் எனும் தாய் நிறுவனம் உருவாக்கப்பட்ட போது தனியே பிரிக்கப்பட்டு, அதன் கீழ் இயங்கி வருகிறது. இடைப்பட்ட காலத்தில் கூகுள் தனது பலூன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அதற்கான வெள்ளோட்டங்களையும் நிகழ்த்தி வருகிறது. இதற்கான முதல் சோதனை சில ஆண்டுகளுக்கு முன் நியூசிலாந்து நாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

தொலைத்தொடர்பு வசதி இல்லாத இடங்களில் வானில் இந்த பலூன்களை பறக்கவிட்டு அவற்றை வலைப்பின்னலாக இணைத்து இணைய இணைப்பை வழங்குவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இந்த பலூன்கள் காற்றின் போக்கில் இயங்கி அதற்கேற்ப நிலைநிறுத்திக்கொள்ளும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. வானிலை நிகழ்வு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படாத அளவுக்கு பாதுகாப்பானவை. மேலும் விமானங்கள் போன்றவற்றுக்கு இடைஞ்சல் இல்லாத அளவுக்கு காற்று மண்டத்தில் 15 முதல் 20 கிமீ எல்லையில் இவை இயக்கப்படுகின்றன.

உயர்தரமான பிளாஸ்டிக்கால் ஆன இந்த பலூன்கள் ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்டு அதன் மூலம் இயங்குகின்றன. ஒவ்வொரு பலூனும் ஒரு டென்னிஸ் மைதானம் அளவு பெரிதானவை. பூமியில் உள்ள ராட்சத டிரெக்கில் இருந்து இவை விண்ணில் செலுத்தப்படுகின்றன. 30 நிமிடத்திற்கு ஒரு பலூனை இப்படி செலுத்த முடியும். பின்னர், வானில் மிதந்தபடி இவை தங்களுக்கான இடத்தில் நிலைப்பெறும். வரிசையாக பலூன்கள் செலுத்தப்படும் போது பரஸ்பரம் வயர்லெஸ் மூலம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு வானில் வலைப்பின்னல் அமைத்துக்கொள்ளும். இந்த பலூன்கள் சராசரியாக 100 நாட்கள் செயல்படக்கூடியவை. அதன் பிறகு தானாக இறங்கி வந்துவிடும். அதுவரை இயங்குவதற்கான ஆற்றலை உருவாக்கி கொள்ளும் சோலார் வசதியை பெற்றுள்ளன.

பூமியில் உள்ள செல்போன் கோபுரங்கள் மற்றும் செல்பான் பயனாளிகளை இணைக்கும் பாலமாக பலூன் வலைப்பின்னல் செயல்படுவதால் செல்போனில் பேசுவது மற்றும் இணையத்தில் உலாவுவது சாத்தியமாகும். பலூனில் வயர்லெஸ் வசதி இருக்கிறது. 4 ஜி சேவையை இதன் மூலம் பெறலாம் என்றாலும், உண்மையில் இந்த பலூன்கள் இணைய வசதியை அளிப்பதில்லை. இவை செல்போன் கோபுரங்களாக மட்டுமே செயல்படுகின்றன. தரைப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரங்கள் இந்த மிதக்கும் கோபுரங்களுடன் இணைக்கப்படுவதால் இடைவெளி இல்லாத இணைய இணைப்பு உண்டாகிறது. எனவே லூன் திட்டம் உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளுடன் இணைந்தே இந்த சேவையை வழங்க முடியும். கரடுமுரடான பகுதியில் செல்போன் கோபுரங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதியை அமைப்பதைவிட பலூன்களை செல்போன் கோபுரமாக்கி இணைய இணைப்பு வழங்குவது எளிதானதாக கருதப்படுகிறது.

இந்த நம்பிக்கையுடன் தான், கூகுளின் தாய் நிறுவனம் இணைய பலூன்களை உருவாக்கி வருகிறது. அண்மையில் இந்த திட்டம் தனி நிறுவனமாக அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக வர்த்தக நோக்கில் இந்த சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. இதனிடையே பேரிடர் பாதித்த பகுதிகளில் அவசர கால உதவியாக இணைய இணைப்பை வழங்க இந்த பலூன்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன் தென்னமரிக்க நாடான பெருவில் வெள்ள பாதிப்பு உண்டான போது, இணைய பலூன்கள் மூலம் தொலைத்தொடர்பு வசதி அளிக்கப்பட்டது. தற்போது பேரிடர் பாதித்த பியூர்ட்டோ ரிக்கோவில் இந்த பலூனள் வலம் வந்து மிகவும் அவசியமான இணைப்பு சேவையை அளிக்க உள்ளன.

உலகம் முழுவதும் இணைய வசதியில் ஏற்றத்தாழ்வு நிலவி வரும் சூழலில், தொலைதூர பிராந்தியங்களில் இணைய வசதியை அமைக்க லூன் பலூன்கள் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. சமூக வலைப்பின்னல் தளமான பேஸ்புக்கும், இதே போலவே ஆளில்லா விமானம் மூலம் தொலைதூர பகுதிகளில் இணைய வசதியை வழங்கும் சோதனை திட்டத்தில் கவனம் செலுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சைபர்சிம்மன்

 

 

 

lபியூர்ட்டோ ரிக்கோ மக்கள் அந்த பலூன்கள் எப்போது வந்து சேரும் என ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். அந்நாட்டு அரசாங்கமும், தொண்டு அமைப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் கூட அந்த பலூன்கள் எப்போது தங்கள் வானில் மிதக்கத்துவங்கும் என எதிர்பார்த்திருக்கின்றனர். மற்ற நாடுகளும் கூட இந்த பலூன்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கின்றன.

ஒரு பலூன் மீது இத்தனை எதிர்பார்ப்பா? என்று கேட்கலாம். அதிலும், அண்மையில் சூறாவளியில் சிக்கி அதன் கோரத்தாண்டவத்தில் இருந்து மீள முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் பியூர்டோ ரிக்கோ மக்கள் ஏன், ஒரு பலூனுக்காக காத்திருக்க வேண்டும் என கேட்கத்தோன்றலாம். அந்த பலூன்கள் சாதாரன பலூன்கள் அல்ல, வானிலிருந்து மண்ணுக்கு இணைய இணைப்பை வழங்க கூடிய அதி நவீன பலூன்கள் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.

முன்னணி தேடியந்திர நிறுவனமான கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் லூன் திட்டத்தின் சார்பில் இந்த வகை பலூன்கள் பறக்க விடப்படுகின்றன. சாகச விளையாட்டாக கருதக்கூடிய ஹாட் ஏர் பலூன் ரகத்தைச்சேர்ந்த இந்த பலூன்கள் காற்றுவெளி மண்டத்தில் மிதந்தபடி தொலைத்தொடர்பு வசதி மற்றும் இணைய வசதியை கீழே உள்ள பகுதிக்கு அளிக்க வல்லவை. அதனால் தான், பியூர்ட்டோ ரிக்கோ மக்கள் இந்த பலூன்கள் வரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சூறாவளி தாக்குதலால் அந்நாட்டு செல்போன் கோபுரங்களும், தொலைத்தொடர்பு வசதியும் முறித்து போய் கிடக்கின்றன. எனவே அங்கு தகவல் தொடர்பு வசதி முற்றிலும் செயலிழந்து போயிருக்கிறது. இதனால் மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பது முதல் நிவராண உதவிகளை அளிப்பது வரை எல்லாவற்றிலும் சிக்கல் இருக்கிறது.

தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு வசதியை சீரமைக்க மாதக்கணக்கில் ஆகலாம் எனும் நிலையில், அத்தியாவசிய பணிகளை ஒருங்கிணைக்கவும், பொதுமக்கள் தொடர்பு கொள்ளவும் அடிப்படை தொலைத்தொடர்பு வசதி உடனடி தேவை.

இந்த பின்னணியில் தான் ஆல்பபெட் நிறுவனம் தனது லூன் திட்டத்தின் இணைய பலூன்கள் பியூர்ட்டோ ரிக்கோவில் பறக்கவிட திட்டமிட்டு இதற்காக அமெரிக்க அரசின் அனுமதியையும் பெற்றிருக்கிறது. பியூர்ட்டோ ரிக்கோவில் பலூன்களை பறக்கவிட்ட பிறகு உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, செல்போன் இணைப்பு மற்றும் இணைய வசதியை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உறவினர்களை தொடர்பு கொள்ளவும், உதவிகளை பெறவும் செல்போன் இணைப்பு கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருக்கும் பியூர்ட்டோ ரிக்கோ மக்களுக்கு இந்த சேவை பேரூதவியாக இருக்கும்.

கூகுளின் தாய் நிறுவனம் இந்த பலூன் திட்டத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்பட உலகில் இணைய வசதி இல்லாத தொலைதூர பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இந்த பலூன்கள் மூலம் இணைய வசதி அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் வானில் இந்த பலூன்களை வரிசையாக பறக்கவிட்டு அவற்றை வயர்லெஸ் முறையில் வலைப்பின்னலாக இணைப்பதன் மூலம் தரைப்பகுதியில் உள்ளவர்களுக்கு இணைய வசதியை அளிக்கும்.

பலூன்கள் மூலம் எப்படி இணைய வசதி அளிக்க முடியும் என பார்ப்பதற்கு முன், இந்த திட்டம் பற்றி சுருக்கமான அறிமுகம். தேடியந்திரமான கூகுள் பிரவுசர்கள், இமெயில், மொபைல் இயங்குதளம் என பல்வேறு சேவைகளை வழங்கு வருகிறது. இவைத்தவிர கூகுள் நிறுவனம் பல்வேறு ஆய்வு திட்டங்கள் மற்றும் சோதனை திட்டங்களையும் கொண்டிருந்தது. இப்படி கூகுள் குழுவால் பிராஜெக்ட் எக்ஸ் எனும் பெயரில் துவங்கப்பட்டது தான் இணைய பலூன் திட்டம்.

இணையம் மூலம் செய்திகளை தெரிந்து கொள்வது முதல் ஷாப்பிங் செய்வது வரை எண்ணற்ற வசதிகள் சாத்தியமாகி இணையம் இல்லாத வாழ்க்கைக்கு நாம் பழகிவிட்டோம். கம்ப்யூட்டர்கள், லேப்டாப் மட்டும் அல்லாமல், ஸ்மார்ட்போன் மூலம் உள்ளங்கையிலேயே இணைய வசதி சாத்தியமாகிறது. ஆனால், இணைய வசதி என்பது இன்னமும் உலகம் முழுவதும் பரவலாகிவிடவில்லை. உலகில் இணைய வசதி எட்டிப்பார்க்காத பகுதிகளும் அநேகம் இருக்கின்றன. இணைய வசதி மோசமாக உள்ள பகுதிகளும் உள்ளன. மலைப்பகுதி, குக்கிராமங்கள் போன்ற இடங்களுக்கு இணைய வசதியை அளிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

இன்னமும் தொலைத்தொடர்பு வசதி எட்டிப்பார்க்காத இடங்களில் இணைய வசதியை அளிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தி தருவது பெருட்செலவு மிக்கதாகும். இதற்கான லாபமும் குறைவு என்பதால் வர்த்தக நிறுவனங்கள் இதில் அதிக முனைப்பு காட்டவும் தயங்குகின்றன.

இந்த சிக்கலுக்கான தீரவாக தான் பலூன் மூலம் தொலைதூர பகுதிகளில் இணைய வசதி அளிக்கும் திட்டத்தை கூகுள் சோதனை முறையில் துவங்கியது. 2013 ம் ஆண்டு, அதிகாரபூர்வமாக இந்த திட்டம் துவங்கியது. கூகுள் செயல்படுத்தி வந்த பல்வேறு துணை திட்டங்களில் ஒன்றாக விளங்கிய இந்த திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கூகுளுக்கு என தனியே ஆல்பபெட் எனும் தாய் நிறுவனம் உருவாக்கப்பட்ட போது தனியே பிரிக்கப்பட்டு, அதன் கீழ் இயங்கி வருகிறது. இடைப்பட்ட காலத்தில் கூகுள் தனது பலூன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அதற்கான வெள்ளோட்டங்களையும் நிகழ்த்தி வருகிறது. இதற்கான முதல் சோதனை சில ஆண்டுகளுக்கு முன் நியூசிலாந்து நாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

தொலைத்தொடர்பு வசதி இல்லாத இடங்களில் வானில் இந்த பலூன்களை பறக்கவிட்டு அவற்றை வலைப்பின்னலாக இணைத்து இணைய இணைப்பை வழங்குவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இந்த பலூன்கள் காற்றின் போக்கில் இயங்கி அதற்கேற்ப நிலைநிறுத்திக்கொள்ளும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. வானிலை நிகழ்வு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படாத அளவுக்கு பாதுகாப்பானவை. மேலும் விமானங்கள் போன்றவற்றுக்கு இடைஞ்சல் இல்லாத அளவுக்கு காற்று மண்டத்தில் 15 முதல் 20 கிமீ எல்லையில் இவை இயக்கப்படுகின்றன.

உயர்தரமான பிளாஸ்டிக்கால் ஆன இந்த பலூன்கள் ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்டு அதன் மூலம் இயங்குகின்றன. ஒவ்வொரு பலூனும் ஒரு டென்னிஸ் மைதானம் அளவு பெரிதானவை. பூமியில் உள்ள ராட்சத டிரெக்கில் இருந்து இவை விண்ணில் செலுத்தப்படுகின்றன. 30 நிமிடத்திற்கு ஒரு பலூனை இப்படி செலுத்த முடியும். பின்னர், வானில் மிதந்தபடி இவை தங்களுக்கான இடத்தில் நிலைப்பெறும். வரிசையாக பலூன்கள் செலுத்தப்படும் போது பரஸ்பரம் வயர்லெஸ் மூலம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு வானில் வலைப்பின்னல் அமைத்துக்கொள்ளும். இந்த பலூன்கள் சராசரியாக 100 நாட்கள் செயல்படக்கூடியவை. அதன் பிறகு தானாக இறங்கி வந்துவிடும். அதுவரை இயங்குவதற்கான ஆற்றலை உருவாக்கி கொள்ளும் சோலார் வசதியை பெற்றுள்ளன.

பூமியில் உள்ள செல்போன் கோபுரங்கள் மற்றும் செல்பான் பயனாளிகளை இணைக்கும் பாலமாக பலூன் வலைப்பின்னல் செயல்படுவதால் செல்போனில் பேசுவது மற்றும் இணையத்தில் உலாவுவது சாத்தியமாகும். பலூனில் வயர்லெஸ் வசதி இருக்கிறது. 4 ஜி சேவையை இதன் மூலம் பெறலாம் என்றாலும், உண்மையில் இந்த பலூன்கள் இணைய வசதியை அளிப்பதில்லை. இவை செல்போன் கோபுரங்களாக மட்டுமே செயல்படுகின்றன. தரைப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரங்கள் இந்த மிதக்கும் கோபுரங்களுடன் இணைக்கப்படுவதால் இடைவெளி இல்லாத இணைய இணைப்பு உண்டாகிறது. எனவே லூன் திட்டம் உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளுடன் இணைந்தே இந்த சேவையை வழங்க முடியும். கரடுமுரடான பகுதியில் செல்போன் கோபுரங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதியை அமைப்பதைவிட பலூன்களை செல்போன் கோபுரமாக்கி இணைய இணைப்பு வழங்குவது எளிதானதாக கருதப்படுகிறது.

இந்த நம்பிக்கையுடன் தான், கூகுளின் தாய் நிறுவனம் இணைய பலூன்களை உருவாக்கி வருகிறது. அண்மையில் இந்த திட்டம் தனி நிறுவனமாக அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக வர்த்தக நோக்கில் இந்த சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. இதனிடையே பேரிடர் பாதித்த பகுதிகளில் அவசர கால உதவியாக இணைய இணைப்பை வழங்க இந்த பலூன்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன் தென்னமரிக்க நாடான பெருவில் வெள்ள பாதிப்பு உண்டான போது, இணைய பலூன்கள் மூலம் தொலைத்தொடர்பு வசதி அளிக்கப்பட்டது. தற்போது பேரிடர் பாதித்த பியூர்ட்டோ ரிக்கோவில் இந்த பலூனள் வலம் வந்து மிகவும் அவசியமான இணைப்பு சேவையை அளிக்க உள்ளன.

உலகம் முழுவதும் இணைய வசதியில் ஏற்றத்தாழ்வு நிலவி வரும் சூழலில், தொலைதூர பிராந்தியங்களில் இணைய வசதியை அமைக்க லூன் பலூன்கள் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. சமூக வலைப்பின்னல் தளமான பேஸ்புக்கும், இதே போலவே ஆளில்லா விமானம் மூலம் தொலைதூர பகுதிகளில் இணைய வசதியை வழங்கும் சோதனை திட்டத்தில் கவனம் செலுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சைபர்சிம்மன்

 

 

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.