தொழில்நுட்ப போக்குகள் 2013.; ஆச்சர்யங்களும் அதிர்ச்சியும் நிறைந்த ஆண்டு.

மெய்நிகர் நாணயம் , அணி கணிணி , திறன் கடிகாரம் , சுய படங்கள் , தானாய் மறையும் படங்கள் , கடவுத்திருட்டு , இணைய உளவு … இவையெல்லாம் என்ன தெரியுமா ? 2013 ம் ஆண்டில் சாமன்ய மக்களையும் திரும்பி பார்க்க வைத்த தொழில்நுட்ப போக்குகள் இவை. இது வரை பெரும்பாலும் தொழில்நுட்ப பிரியர்களுக்கு மட்டுமே அறிமுகமாகி இருந்த இந்த போக்குகள் இந்த ஆண்டு வெகுஜன புழக்கத்துக்கு வந்து கவனத்தை ஈர்த்தன. தொழில்நுட்பம் எங்கேயே போய்க்கொண்டிருக்கிறது என வியக்க வைத்த , கூடவே திகைக்கவும் வைத்த இந்த போக்குகளை திரும்பி பார்க்கலாம்.
முதலில் மெய்நிகர் நாணயம். ரூபாய் தெரியும், டாலர் தெரியும் . யூரோ தெரியும் , இது என்ன புதிதாக மெய்நிகர் நாணயம் ? இணைய பணமான பிட்காயின் தான் இப்படி பலரையும் கேட்க வைத்தது. எண்ம நாணயம், டிஜிட்டல் பணம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் பிட்காயின் உருவம் இல்லாததாக இருந்தாலும் உலகையே ஆளக்கூடியது என பலரால் கொண்டாடப்படுகிறது. மற்ற நானயங்கள் போல எந்த ஒரு மத்திய வங்கியும் கட்டுப்படுத்தாத இந்த புதுயுக பணம் அதன் அநாமேதைய தன்மை மற்றும் கட்டணமில்லா பரிமாற்றத்திற்காக தொழில்நுட்ப பிரியர்களால் கொண்டாடப்படுகிறது. எந்த ஒரு நாட்டின் அரசாலும் வெளியிடப்படாத பிட்காயினின் மதிப்பு இணைய பரிவர்த்தனையில் ஏற்ற இறக்கத்துக்கு இலக்கானாலும் ஒரு பிட்காயினின் மதிப்பு முதல் முறையாக ஆயிரம் டாலர்களை தொட்ட போது எல்லோரும் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். ஆயிரத்தை தொட்ட பிறகு சரிவை சந்தித்தாலும் எதிர்கால நாணயமாக பிட்காயின் கவனிக்கப்படுகிறது. 
பிட்காயின் போலவே கவனத்தை ஈர்த்த மற்றொரு தொழில்நுட்பம் அணி கணிணி: உபயம் கூகிள் கண்ணாடி. வியரபில் கம்ப்யூட்டிங் என்று பிரபலமாக குறிப்பிடப்படும் அணி கணிணி தொடர்பாக ஓசைப்படாமல் பல ஆண்டுகளாக ஆய்வு நடந்து வருகிறது. கம்ப்யூட்டர் போன்ற தனி சாதங்கள் தேவையில்லாமல் அணியக்கூடிய ஆடை போன்றவற்றிலேயே கணிணியின் ஆற்றலை உள்ளீடு செய்வதை தான் இப்படி சொல்கின்றனர். வெகுஜன கவனத்தை ஈர்க்க முடியாமல் ஆய்வு உலகிலேயே முடங்கி கிடந்த இந்த தொழில்நுட்பத்துக்கு கூகிள் கண்ணாடி மூலம் புத்துயிர் கிடைத்திருக்கிறது. சாதாரண மூக்கு கண்ணாடி போல அணிந்து கொண்டு அதிலேயே இணையத்தில் உலாவலாம், காமிராவாக காட்சிகளை கிளிக் செய்யலாம், ஒலிப்பதிவு செய்யலாம் என்றெல்லாம் இந்த கண்ணாடியின் மாயத்தை அடுக்குகின்றனர். கடந்த ஆண்டு கருத்தாக்கமாக அறிமுகம் செய்த இந்த கண்ணாடியை இந்த ஆண்டு கூகிள் முன்னோட்ட அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு வழங்கி அதன் பயன்பாடு பற்றிய பரபரப்பை உண்டாக்கியது.
கூகிள் கண்ணாடி அணிந்து காரோட்டிய அமெரிக்க பெண்மணிக்கு போக்குவரத்து மீறலுக்கான அபராதம் விதிக்கப்பட்டது உட்பட இந்த தொழில்நுட்பம் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்த தவறவில்லை. எதிர்காலத்தில் அணி கணிணி பரவலானால் அதில் கூகிள் கண்ணாடிக்கு பெரும் பங்கு இருக்கும். கூடவே அந்தரங்கத்துக்கும் ஆபத்து இருக்கும் என்பது வேறு விஷயம்.
கூகிள் கண்ணாடி மாயம் என்றால் ஸ்மார்ட்போன் எனப்படும் திறன்பேசி உலகில் கூகிளின் ஆதிக்கம் தான். அதாவது திறன்பேசிகளுக்கான அதன் ஆண்ட்ராய்டு இயங்கு தளம் கிட்டத்தட்ட 80 சதவீத சந்தையை கைப்பற்றியிருக்கிறது. ஸ்மார்ட்போன்களை ஆப்பிலின் ஐபோன் பிரபலாமாக்கியிருந்தால் என்ன இன்று இந்த சந்தையில் கோலோச்சுவது ஆண்ட்ராய்டு தான். சாதனம் என்று எடுத்துக்கொண்டால் சாம்சங் முன்னிலைக்கு வந்திருக்கிறது. ஆனால் போனிலேயே இமெயிலை பார்க்கமால் என்று முதலில் வியக்க வைத்த பிலாக்பெரி தடுமாற்றத்துக்கு ஆளானதும் செல்போன் என்றாலே நோக்கியா தான் எ

மெய்நிகர் நாணயம் , அணி கணிணி , திறன் கடிகாரம் , சுய படங்கள் , தானாய் மறையும் படங்கள் , கடவுத்திருட்டு , இணைய உளவு … இவையெல்லாம் என்ன தெரியுமா ? 2013 ம் ஆண்டில் சாமன்ய மக்களையும் திரும்பி பார்க்க வைத்த தொழில்நுட்ப போக்குகள் இவை. இது வரை பெரும்பாலும் தொழில்நுட்ப பிரியர்களுக்கு மட்டுமே அறிமுகமாகி இருந்த இந்த போக்குகள் இந்த ஆண்டு வெகுஜன புழக்கத்துக்கு வந்து கவனத்தை ஈர்த்தன. தொழில்நுட்பம் எங்கேயே போய்க்கொண்டிருக்கிறது என வியக்க வைத்த , கூடவே திகைக்கவும் வைத்த இந்த போக்குகளை திரும்பி பார்க்கலாம்.
முதலில் மெய்நிகர் நாணயம். ரூபாய் தெரியும், டாலர் தெரியும் . யூரோ தெரியும் , இது என்ன புதிதாக மெய்நிகர் நாணயம் ? இணைய பணமான பிட்காயின் தான் இப்படி பலரையும் கேட்க வைத்தது. எண்ம நாணயம், டிஜிட்டல் பணம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் பிட்காயின் உருவம் இல்லாததாக இருந்தாலும் உலகையே ஆளக்கூடியது என பலரால் கொண்டாடப்படுகிறது. மற்ற நானயங்கள் போல எந்த ஒரு மத்திய வங்கியும் கட்டுப்படுத்தாத இந்த புதுயுக பணம் அதன் அநாமேதைய தன்மை மற்றும் கட்டணமில்லா பரிமாற்றத்திற்காக தொழில்நுட்ப பிரியர்களால் கொண்டாடப்படுகிறது. எந்த ஒரு நாட்டின் அரசாலும் வெளியிடப்படாத பிட்காயினின் மதிப்பு இணைய பரிவர்த்தனையில் ஏற்ற இறக்கத்துக்கு இலக்கானாலும் ஒரு பிட்காயினின் மதிப்பு முதல் முறையாக ஆயிரம் டாலர்களை தொட்ட போது எல்லோரும் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். ஆயிரத்தை தொட்ட பிறகு சரிவை சந்தித்தாலும் எதிர்கால நாணயமாக பிட்காயின் கவனிக்கப்படுகிறது. 
பிட்காயின் போலவே கவனத்தை ஈர்த்த மற்றொரு தொழில்நுட்பம் அணி கணிணி: உபயம் கூகிள் கண்ணாடி. வியரபில் கம்ப்யூட்டிங் என்று பிரபலமாக குறிப்பிடப்படும் அணி கணிணி தொடர்பாக ஓசைப்படாமல் பல ஆண்டுகளாக ஆய்வு நடந்து வருகிறது. கம்ப்யூட்டர் போன்ற தனி சாதங்கள் தேவையில்லாமல் அணியக்கூடிய ஆடை போன்றவற்றிலேயே கணிணியின் ஆற்றலை உள்ளீடு செய்வதை தான் இப்படி சொல்கின்றனர். வெகுஜன கவனத்தை ஈர்க்க முடியாமல் ஆய்வு உலகிலேயே முடங்கி கிடந்த இந்த தொழில்நுட்பத்துக்கு கூகிள் கண்ணாடி மூலம் புத்துயிர் கிடைத்திருக்கிறது. சாதாரண மூக்கு கண்ணாடி போல அணிந்து கொண்டு அதிலேயே இணையத்தில் உலாவலாம், காமிராவாக காட்சிகளை கிளிக் செய்யலாம், ஒலிப்பதிவு செய்யலாம் என்றெல்லாம் இந்த கண்ணாடியின் மாயத்தை அடுக்குகின்றனர். கடந்த ஆண்டு கருத்தாக்கமாக அறிமுகம் செய்த இந்த கண்ணாடியை இந்த ஆண்டு கூகிள் முன்னோட்ட அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு வழங்கி அதன் பயன்பாடு பற்றிய பரபரப்பை உண்டாக்கியது.
கூகிள் கண்ணாடி அணிந்து காரோட்டிய அமெரிக்க பெண்மணிக்கு போக்குவரத்து மீறலுக்கான அபராதம் விதிக்கப்பட்டது உட்பட இந்த தொழில்நுட்பம் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்த தவறவில்லை. எதிர்காலத்தில் அணி கணிணி பரவலானால் அதில் கூகிள் கண்ணாடிக்கு பெரும் பங்கு இருக்கும். கூடவே அந்தரங்கத்துக்கும் ஆபத்து இருக்கும் என்பது வேறு விஷயம்.
கூகிள் கண்ணாடி மாயம் என்றால் ஸ்மார்ட்போன் எனப்படும் திறன்பேசி உலகில் கூகிளின் ஆதிக்கம் தான். அதாவது திறன்பேசிகளுக்கான அதன் ஆண்ட்ராய்டு இயங்கு தளம் கிட்டத்தட்ட 80 சதவீத சந்தையை கைப்பற்றியிருக்கிறது. ஸ்மார்ட்போன்களை ஆப்பிலின் ஐபோன் பிரபலாமாக்கியிருந்தால் என்ன இன்று இந்த சந்தையில் கோலோச்சுவது ஆண்ட்ராய்டு தான். சாதனம் என்று எடுத்துக்கொண்டால் சாம்சங் முன்னிலைக்கு வந்திருக்கிறது. ஆனால் போனிலேயே இமெயிலை பார்க்கமால் என்று முதலில் வியக்க வைத்த பிலாக்பெரி தடுமாற்றத்துக்கு ஆளானதும் செல்போன் என்றாலே நோக்கியா தான் எ

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.