நெகிழ வைத்த பாராட்டும் ஒரு பேஸ்புக் தேடலும்

பிரிட்டனை சேர்ந்த இளம் அம்மா ஒருவர் ரெயில் பயணத்தின் போது முகம் தெரியாத மனிதரிடம் இருந்து தனது தாய்மைக்கு கிடைத்த பாராட்டால் நெகிழந்து போயிருக்கிறார். அந்த பாராட்டை வழங்கிய மனிதரின் நல்ல மனதிற்கு நேரில் நன்றி சொல்வதற்காக அவருக்காக பேஸ்புக் தேடலில் ஈடுபட்டிருக்கிறார்.

சமந்தா வெல்ச்,23, எனும் அந்த இளம் அம்மா தனது மூன்று வயது மகன் ரெய்லானுடன் பிர்மிங்காம் நகரில் இருந்து பிளைமூத் நகருக்கு ரெயிலில் சென்றிருக்கிறார். அலுப்பூட்டக்கூடிய ரெயில் பயணங்களில் சுட்டி பையன்களை சமாளிப்பது சவாலானது தான் இல்லையா? ஆனால் சம்ந்தா மிகவும் அன்பாகவும், பொறுமையாகவும் தன் மகனுக்கு கதை சொல்லியபடி ,பாட்டுக்கொண்டு அவனோடு விளையாடிக்கொண்டி வந்திருக்கிறார். சிறுவன் ரெய்லானும் உற்சாகமாக அம்மாவுடன் விளையாடியபடி மெல்ல உறங்கியும் விட்டான். ரெயிலில் அப்போது கூட்டம் அதிகமாகி பலரும் நின்று கொண்டிருந்ததால், சமந்தா தனது மடியில் தலை சாய்ந்து தூங்கி கொண்டிருந்த மகனை தூக்கி தன் மீது அமர வைத்துக்கொண்டு இன்னொருவர் உட்கார இடம் கொடுத்திருக்கிறார்.

சமந்தாவின் இந்த பயணமும்,இதில் அவர் ஒரு நல்ல அம்மாவாக நடந்து கொண்டதும் யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். இவ்வளவு ஏன் சம்ந்தாவே அதை கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இடையே பிரிஸ்டல் ரெயில் நிலையத்தில் இறங்கிய பெரியவர் ஒருவர், சமந்தாவின் தோளை தட்டி அழைத்து, ’உங்கள் பையில் இருந்து கீழே விழுந்துவிட்டது’ என்று கூறியபடி ஒரு சீட்டை கையில் கொடுத்துவிட்டு கீழே இறங்கி சென்று விட்டார்.

f1அந்த சீட்டை பிரித்து பார்த்த போது அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.’ நீ இந்த தலைமுறைக்கே எடுத்துக்காட்டு. அன்பாக,அமைதியாக பிள்ளைக்கு நல்ல பழக்கத்தை கற்று கொடுத்தாய்’ என்று பாராட்டி எழுதப்பட்டிருந்ததுடன், என் சார்பாக ஒரு காபி அருந்தி மகிழுங்கள் எனும் குறிப்புடன் 5 பவுண்ட் நோட்டும் இணைக்கப்பட்டிருந்தது.

உன் வயதில் எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள், அவளும் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது.

அதை படித்ததும் சமந்தா, முகம் தெரியாத மனிதரிடம் இருந்து இப்படி ஒருபாராட்டா ? என  நெகிழ்ந்து போய்விட்டார். 23 வயதான சமந்தா கணவர் இல்லாமல் தனியே மகனை வளர்த்து வருபவர். எனவே இந்த பாராட்டால் கூடுதலாக மகிழந்து போனார். தான் பிள்ளை வளர்க்கும் வித்திற்கு கிடைத்த சான்றிதழாகவும் நினைத்து உருகினார்.

இதை படித்ததும் என்னால் நம்பவே முடியவில்லை, இருபது முறையாவது மீண்டும் படித்திருப்பேன். நான் பார்த்திராத, பேசியிராத ஒருவர் இவ்வாறு எழுதியதை என்னால் நம்ப முடியவில்லை. இப்படி அவரை எழுத வைக்கும் அளவுக்கு நான் என்ன செய்தேன் என்றும் தெரியவில்லை, மிகவும் நெகிழ்ந்து போய்விட்டேன்” என்று சமந்தா நாளிதழ் ஒன்றுக்கான பேட்டியில் கூறியுள்ளார்.

f3இந்த சம்பவத்திற்கு பின் தான் அவருக்கு அடடா அந்த மனிதருக்கு நன்றி கூட சொல்ல முடியாமல் போய்விட்டதே என்று தோன்றியிருக்கிறது. அந்த நல்ல மனிதரை எப்படியாவது நேரில் பார்த்து நன்றி சொல்லிவிட வேண்டும் என்பதற்காக அவரை தேடும் முயற்சியாக தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவத்தை விவரித்து, அவரைப்பற்றிய விவரம் யாருக்கேமும் தெரிந்தால் சொல்லுங்கள் என கேட்டிருக்கிறார்.

இந்த பேஸ்புக் தேடலும் , அதன் பின்னே உள்ள நெகிழ வைக்கும் கதையும் இணைய உலகை இளகச்செய்துள்ளது.

இளம் அம்மாக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான உதாரணமாகவும், மற்ற்வர்கள் பற்றிய மனம் திறந்த பாராட்டு எத்தனை நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதற்கும் இந்த அழகான சம்பவம் உதாரணம். பேஸ்புக் பதிவால் இது உலகம் முழுவதும் அறியப்பட்டதாகவும் ஆகியிருக்கிறது.

——–

 

விகடன்.காமில் எழுதியது; நன்றி விகடன்.காம்

பிரிட்டனை சேர்ந்த இளம் அம்மா ஒருவர் ரெயில் பயணத்தின் போது முகம் தெரியாத மனிதரிடம் இருந்து தனது தாய்மைக்கு கிடைத்த பாராட்டால் நெகிழந்து போயிருக்கிறார். அந்த பாராட்டை வழங்கிய மனிதரின் நல்ல மனதிற்கு நேரில் நன்றி சொல்வதற்காக அவருக்காக பேஸ்புக் தேடலில் ஈடுபட்டிருக்கிறார்.

சமந்தா வெல்ச்,23, எனும் அந்த இளம் அம்மா தனது மூன்று வயது மகன் ரெய்லானுடன் பிர்மிங்காம் நகரில் இருந்து பிளைமூத் நகருக்கு ரெயிலில் சென்றிருக்கிறார். அலுப்பூட்டக்கூடிய ரெயில் பயணங்களில் சுட்டி பையன்களை சமாளிப்பது சவாலானது தான் இல்லையா? ஆனால் சம்ந்தா மிகவும் அன்பாகவும், பொறுமையாகவும் தன் மகனுக்கு கதை சொல்லியபடி ,பாட்டுக்கொண்டு அவனோடு விளையாடிக்கொண்டி வந்திருக்கிறார். சிறுவன் ரெய்லானும் உற்சாகமாக அம்மாவுடன் விளையாடியபடி மெல்ல உறங்கியும் விட்டான். ரெயிலில் அப்போது கூட்டம் அதிகமாகி பலரும் நின்று கொண்டிருந்ததால், சமந்தா தனது மடியில் தலை சாய்ந்து தூங்கி கொண்டிருந்த மகனை தூக்கி தன் மீது அமர வைத்துக்கொண்டு இன்னொருவர் உட்கார இடம் கொடுத்திருக்கிறார்.

சமந்தாவின் இந்த பயணமும்,இதில் அவர் ஒரு நல்ல அம்மாவாக நடந்து கொண்டதும் யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். இவ்வளவு ஏன் சம்ந்தாவே அதை கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இடையே பிரிஸ்டல் ரெயில் நிலையத்தில் இறங்கிய பெரியவர் ஒருவர், சமந்தாவின் தோளை தட்டி அழைத்து, ’உங்கள் பையில் இருந்து கீழே விழுந்துவிட்டது’ என்று கூறியபடி ஒரு சீட்டை கையில் கொடுத்துவிட்டு கீழே இறங்கி சென்று விட்டார்.

f1அந்த சீட்டை பிரித்து பார்த்த போது அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.’ நீ இந்த தலைமுறைக்கே எடுத்துக்காட்டு. அன்பாக,அமைதியாக பிள்ளைக்கு நல்ல பழக்கத்தை கற்று கொடுத்தாய்’ என்று பாராட்டி எழுதப்பட்டிருந்ததுடன், என் சார்பாக ஒரு காபி அருந்தி மகிழுங்கள் எனும் குறிப்புடன் 5 பவுண்ட் நோட்டும் இணைக்கப்பட்டிருந்தது.

உன் வயதில் எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள், அவளும் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது.

அதை படித்ததும் சமந்தா, முகம் தெரியாத மனிதரிடம் இருந்து இப்படி ஒருபாராட்டா ? என  நெகிழ்ந்து போய்விட்டார். 23 வயதான சமந்தா கணவர் இல்லாமல் தனியே மகனை வளர்த்து வருபவர். எனவே இந்த பாராட்டால் கூடுதலாக மகிழந்து போனார். தான் பிள்ளை வளர்க்கும் வித்திற்கு கிடைத்த சான்றிதழாகவும் நினைத்து உருகினார்.

இதை படித்ததும் என்னால் நம்பவே முடியவில்லை, இருபது முறையாவது மீண்டும் படித்திருப்பேன். நான் பார்த்திராத, பேசியிராத ஒருவர் இவ்வாறு எழுதியதை என்னால் நம்ப முடியவில்லை. இப்படி அவரை எழுத வைக்கும் அளவுக்கு நான் என்ன செய்தேன் என்றும் தெரியவில்லை, மிகவும் நெகிழ்ந்து போய்விட்டேன்” என்று சமந்தா நாளிதழ் ஒன்றுக்கான பேட்டியில் கூறியுள்ளார்.

f3இந்த சம்பவத்திற்கு பின் தான் அவருக்கு அடடா அந்த மனிதருக்கு நன்றி கூட சொல்ல முடியாமல் போய்விட்டதே என்று தோன்றியிருக்கிறது. அந்த நல்ல மனிதரை எப்படியாவது நேரில் பார்த்து நன்றி சொல்லிவிட வேண்டும் என்பதற்காக அவரை தேடும் முயற்சியாக தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவத்தை விவரித்து, அவரைப்பற்றிய விவரம் யாருக்கேமும் தெரிந்தால் சொல்லுங்கள் என கேட்டிருக்கிறார்.

இந்த பேஸ்புக் தேடலும் , அதன் பின்னே உள்ள நெகிழ வைக்கும் கதையும் இணைய உலகை இளகச்செய்துள்ளது.

இளம் அம்மாக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான உதாரணமாகவும், மற்ற்வர்கள் பற்றிய மனம் திறந்த பாராட்டு எத்தனை நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதற்கும் இந்த அழகான சம்பவம் உதாரணம். பேஸ்புக் பதிவால் இது உலகம் முழுவதும் அறியப்பட்டதாகவும் ஆகியிருக்கிறது.

——–

 

விகடன்.காமில் எழுதியது; நன்றி விகடன்.காம்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.