காமிராவில் சிக்கிய ஓவியமும் கொண்டாடிய இணையமும்

New Years Night revellersபுத்தாண்டின் முதல் வைரல் புகைப்படம்! – பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டங்களுக்கு நடுவே எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இந்த அந்தஸ்த்தை பெற்றிருக்கிறது.
அந்த புகைப்படம் இணையவெளி முழவதும் பகிரப்பட்டு, தனக்கான மெமிக்களையும் உண்டாக்கி மேலும் பிரபலமாகி இருப்பதோடு,ஆண்டின் துவக்கத்திலேயே இப்படி ஒரு அற்புதமான புகைப்படமா? என்று வியந்து பாராட்டவும் வைத்திருக்கிறது.

இணையத்தில் புகைப்படங்கள் வைரலாவது ஒன்றும் புதிய விஷயமல்ல; ஆனால் மான்செஸ்டர் புத்தாண்டு காட்சி இணையத்தின் கவனத்தை ஈர்த்த வித்ததில் வழக்கமான வைரல் அம்சங்களை மீறிய விஷயங்களை கொண்டிருக்கிறது.

அந்த புகைப்படத்தில் அப்படி என்ன இருக்கிறது? ஒரு மிக நல்ல புகைப்படத்தில் என்ன எல்லாம் இருக்க வேண்டுமோ எல்லாமே அந்த படத்தில் இருக்கின்றன.

மான்செஸ்டர் நகர் வீதி ஒன்றில் புத்தாண்டு நள்ளிரவு கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட அந்த காட்சியில் வலது பக்க ஓரத்தில் காவலர்கள் குடிபோதையில் இருக்கும் ஒருவரை கட்டுப்படுத்த மல்லுக்கட்டிக்கொண்டிருக்கின்றனர். இதை வழிபோக்கர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, இடது பக்கத்தில் தரையில் படுத்திருக்கும் ஒருவர் அருகாமையில் உள்ள பீர் பாட்டிலை எட்டிப்பிடிக்க முயற்சிக்கிறார்.
ஜோயல் குட்மன் எனும் புகைப்பட கலைஞர் எடுத்த இந்த படம் மான்செஸ்டர் ஈவ்னிங் நியூஸ் பத்திரிகையிலும் அதன் இணையதளத்திலும் வெளியானது. முதலில், புகைப்பட தொகுப்பில் அந்த படம் பத்தோடு பதினொன்றாக கவனிக்கப்படாமல் தான் இருந்தது.
1CXo57HFWEAAhRe0
ஆனால், ரோலண்ட் ஹீயுக்ஸ் எனும் பிபிசி செய்தியாளர் இந்த படத்தை பார்த்ததுமே அசந்துபோய் விட்டார்.
”அந்த படம் துள்ளி குதித்து நின்றது. அதில் ஒரே இடத்தில் எல்லா அம்சங்களும் நிகழ்ந்து கொண்டிருந்தன.என்னால் அந்த படத்தில் இருந்து பார்வையை விலக்கவே முடியவில்லை” என்று ஹீயூக்ஸ் இது பற்றி வியந்து போய் குறிப்பிடுகிறார்.

இது போன்ற ஒரு புகைப்படத்தை பார்த்ததுமே இணைய யுகத்தில் ஒருவர் என்ன செய்யக்கூடுமோ அதையே அவரும் செய்தார். ஆம்,தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த படத்தை பகிர்ந்து கொண்டார். ”இந்த மான்செஸ்டர் புத்தாண்டு புகைப்படத்தில் பாருங்கள் எத்தனை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு அழகான ஓவியம் போல” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஓவியம் போல எனும் அந்த வர்ணனை அந்த புகைப்படத்தின் அத்தனை சிறப்புகளையும் அடையாளம் காட்டியது.அந்த புகைப்படத்தை உற்றுப்பார்க்கும் போது அதே உணர்வு தான் உண்டானது. செறிவுடன் தீட்டப்பட்ட ஒரு ஓவியத்தில் நுணுக்கமாக இடம்பெற்றிருக்க கூடிய விவரங்கள் அந்த படத்திலும் இருந்தன.
மான்செஸ்டர் நகர கண்ணாடி மூலம் பிரிட்டனின் புத்தாண்டு கொண்டாட்ட முறையை அந்த காட்சி ஓவியம் போல சித்தரிப்பதாகவும் பாராட்டப்பட்டது.இதனிடையே, இன்னொரு டிவிட்டர் பயனாளி (@GroenMNG ) ஒரு நல்ல புகைப்படத்திற்காக சொல்லப்படும் தங்க விகித இலக்கணத்திற்கு இந்த படமும் உட்பட்டிருப்பதை , அந்த அந்த அம்சங்களை குறிப்பிட்டு சுட்டிக்காட்டியிருந்தார். இது மேலும் கவனிக்க வைத்தது.

ஆக,காண்பவர் கவனத்தை ஈர்க்க கூடிய தகுதி அந்த படத்திற்கு இருந்தால், டிவிட்டர் பயனாளிகள் அதற்கு உண்டான மரியாதையை செய்தனர். அதாவது தன்னிச்சையாக அதை மறுகுறும்பதிவிட்டு (ரீடிவீஇட்) தங்கள் டைம்லைனில் பகிர்ந்து கொண்டனர்.இதன் பிறகு என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு குறும்பதிவு பத்தாகி,பத்து நூறாகி , நூறு ஆயிரமாகி குறும்பதிவுகள் பரவிக்கொண்டே இருந்தன. திடிரென பார்த்தால் 25,000 முறைக்கு மேல் மறுகுறும்பதிவிடப்பட்டு இணையவெளியின் பெரும்பாலான இடங்களில் அந்த படம் தான் கவனத்தை ஈர்த்தது.

இதற்கு அடுத்த கட்டமாக அந்த படத்தை பகிர்ந்து கொண்டவர்கள் அதனை காவிய பாணி ஓவியங்களுடன் ஒப்பிட்டதுடன் நிற்காமல், வரலாற்றின் புகழ் மிக்க ஓவியங்களுக்குள் இந்த காட்சியின அம்சங்களை திணித்து அவற்றை மெமீக்களாக பகிர்ந்து கொண்டனர். இப்படி லியானார்டோ ஓவியத்திற்கு நடுவிலும், வான்கா ஒவியம் ஊடாகவும் அந்த படம் இணையத்தில் பயணித்தது.

ஓவிய காட்சிகள் நடுவே பார்க்கும் போது அந்த படத்தின் மகத்துவம் இன்னமும் அதிகமானது.
விளைவு புத்தாண்டின் முதல் வைரல் படமாக பரவி பேசப்பட்ட இந்த நிகழ்வை பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாளிதழ்கள் செய்தியாக வெளியிட்டன.

ஆண்டின் துவக்கத்திலேயே வைரலாக பரவியது ஒரு புறம் இருக்க, அழகிய ஓவியத்துடன் ஒப்பிடக்கூடிய அம்சம் மற்றும் கலாச்சார்க்கூறுகளை கொண்டிருப்பதால் நல்லவிதமாக கவனத்தை ஈர்த்த படமாகவும் இது அமைந்துள்ளது.

தேவையில்லாத விவாதங்களையும் ,சர்ச்சைகளையும் ஏற்படுத்தாமல் கலையின் கொண்டாட்டமாகவும் அமைந்தது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த படத்தை முதலில் கண்டெடுத்து பகிர்ந்து கொண்ட ஹீயூக்ஸ் இந்த மொத்த நிகழ்வையும் விவரித்து பிபிசி தளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.இணைய உலகமே பாராட்டும் அந்த படத்தை எடுத்த புகைப்பட கலைஞர் குட்மேன் தனது தளத்தில் ( http://www.joelgoodman.net/) அந்த அச்சிட்ட பிரதிகளை வாங்கி கொள்ள வழி செய்திருக்கிறார்.

—-

நன்றி; தமிழ் இந்துவுக்காக எழுதியது.

New Years Night revellersபுத்தாண்டின் முதல் வைரல் புகைப்படம்! – பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டங்களுக்கு நடுவே எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இந்த அந்தஸ்த்தை பெற்றிருக்கிறது.
அந்த புகைப்படம் இணையவெளி முழவதும் பகிரப்பட்டு, தனக்கான மெமிக்களையும் உண்டாக்கி மேலும் பிரபலமாகி இருப்பதோடு,ஆண்டின் துவக்கத்திலேயே இப்படி ஒரு அற்புதமான புகைப்படமா? என்று வியந்து பாராட்டவும் வைத்திருக்கிறது.

இணையத்தில் புகைப்படங்கள் வைரலாவது ஒன்றும் புதிய விஷயமல்ல; ஆனால் மான்செஸ்டர் புத்தாண்டு காட்சி இணையத்தின் கவனத்தை ஈர்த்த வித்ததில் வழக்கமான வைரல் அம்சங்களை மீறிய விஷயங்களை கொண்டிருக்கிறது.

அந்த புகைப்படத்தில் அப்படி என்ன இருக்கிறது? ஒரு மிக நல்ல புகைப்படத்தில் என்ன எல்லாம் இருக்க வேண்டுமோ எல்லாமே அந்த படத்தில் இருக்கின்றன.

மான்செஸ்டர் நகர் வீதி ஒன்றில் புத்தாண்டு நள்ளிரவு கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட அந்த காட்சியில் வலது பக்க ஓரத்தில் காவலர்கள் குடிபோதையில் இருக்கும் ஒருவரை கட்டுப்படுத்த மல்லுக்கட்டிக்கொண்டிருக்கின்றனர். இதை வழிபோக்கர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, இடது பக்கத்தில் தரையில் படுத்திருக்கும் ஒருவர் அருகாமையில் உள்ள பீர் பாட்டிலை எட்டிப்பிடிக்க முயற்சிக்கிறார்.
ஜோயல் குட்மன் எனும் புகைப்பட கலைஞர் எடுத்த இந்த படம் மான்செஸ்டர் ஈவ்னிங் நியூஸ் பத்திரிகையிலும் அதன் இணையதளத்திலும் வெளியானது. முதலில், புகைப்பட தொகுப்பில் அந்த படம் பத்தோடு பதினொன்றாக கவனிக்கப்படாமல் தான் இருந்தது.
1CXo57HFWEAAhRe0
ஆனால், ரோலண்ட் ஹீயுக்ஸ் எனும் பிபிசி செய்தியாளர் இந்த படத்தை பார்த்ததுமே அசந்துபோய் விட்டார்.
”அந்த படம் துள்ளி குதித்து நின்றது. அதில் ஒரே இடத்தில் எல்லா அம்சங்களும் நிகழ்ந்து கொண்டிருந்தன.என்னால் அந்த படத்தில் இருந்து பார்வையை விலக்கவே முடியவில்லை” என்று ஹீயூக்ஸ் இது பற்றி வியந்து போய் குறிப்பிடுகிறார்.

இது போன்ற ஒரு புகைப்படத்தை பார்த்ததுமே இணைய யுகத்தில் ஒருவர் என்ன செய்யக்கூடுமோ அதையே அவரும் செய்தார். ஆம்,தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த படத்தை பகிர்ந்து கொண்டார். ”இந்த மான்செஸ்டர் புத்தாண்டு புகைப்படத்தில் பாருங்கள் எத்தனை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு அழகான ஓவியம் போல” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஓவியம் போல எனும் அந்த வர்ணனை அந்த புகைப்படத்தின் அத்தனை சிறப்புகளையும் அடையாளம் காட்டியது.அந்த புகைப்படத்தை உற்றுப்பார்க்கும் போது அதே உணர்வு தான் உண்டானது. செறிவுடன் தீட்டப்பட்ட ஒரு ஓவியத்தில் நுணுக்கமாக இடம்பெற்றிருக்க கூடிய விவரங்கள் அந்த படத்திலும் இருந்தன.
மான்செஸ்டர் நகர கண்ணாடி மூலம் பிரிட்டனின் புத்தாண்டு கொண்டாட்ட முறையை அந்த காட்சி ஓவியம் போல சித்தரிப்பதாகவும் பாராட்டப்பட்டது.இதனிடையே, இன்னொரு டிவிட்டர் பயனாளி (@GroenMNG ) ஒரு நல்ல புகைப்படத்திற்காக சொல்லப்படும் தங்க விகித இலக்கணத்திற்கு இந்த படமும் உட்பட்டிருப்பதை , அந்த அந்த அம்சங்களை குறிப்பிட்டு சுட்டிக்காட்டியிருந்தார். இது மேலும் கவனிக்க வைத்தது.

ஆக,காண்பவர் கவனத்தை ஈர்க்க கூடிய தகுதி அந்த படத்திற்கு இருந்தால், டிவிட்டர் பயனாளிகள் அதற்கு உண்டான மரியாதையை செய்தனர். அதாவது தன்னிச்சையாக அதை மறுகுறும்பதிவிட்டு (ரீடிவீஇட்) தங்கள் டைம்லைனில் பகிர்ந்து கொண்டனர்.இதன் பிறகு என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு குறும்பதிவு பத்தாகி,பத்து நூறாகி , நூறு ஆயிரமாகி குறும்பதிவுகள் பரவிக்கொண்டே இருந்தன. திடிரென பார்த்தால் 25,000 முறைக்கு மேல் மறுகுறும்பதிவிடப்பட்டு இணையவெளியின் பெரும்பாலான இடங்களில் அந்த படம் தான் கவனத்தை ஈர்த்தது.

இதற்கு அடுத்த கட்டமாக அந்த படத்தை பகிர்ந்து கொண்டவர்கள் அதனை காவிய பாணி ஓவியங்களுடன் ஒப்பிட்டதுடன் நிற்காமல், வரலாற்றின் புகழ் மிக்க ஓவியங்களுக்குள் இந்த காட்சியின அம்சங்களை திணித்து அவற்றை மெமீக்களாக பகிர்ந்து கொண்டனர். இப்படி லியானார்டோ ஓவியத்திற்கு நடுவிலும், வான்கா ஒவியம் ஊடாகவும் அந்த படம் இணையத்தில் பயணித்தது.

ஓவிய காட்சிகள் நடுவே பார்க்கும் போது அந்த படத்தின் மகத்துவம் இன்னமும் அதிகமானது.
விளைவு புத்தாண்டின் முதல் வைரல் படமாக பரவி பேசப்பட்ட இந்த நிகழ்வை பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாளிதழ்கள் செய்தியாக வெளியிட்டன.

ஆண்டின் துவக்கத்திலேயே வைரலாக பரவியது ஒரு புறம் இருக்க, அழகிய ஓவியத்துடன் ஒப்பிடக்கூடிய அம்சம் மற்றும் கலாச்சார்க்கூறுகளை கொண்டிருப்பதால் நல்லவிதமாக கவனத்தை ஈர்த்த படமாகவும் இது அமைந்துள்ளது.

தேவையில்லாத விவாதங்களையும் ,சர்ச்சைகளையும் ஏற்படுத்தாமல் கலையின் கொண்டாட்டமாகவும் அமைந்தது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த படத்தை முதலில் கண்டெடுத்து பகிர்ந்து கொண்ட ஹீயூக்ஸ் இந்த மொத்த நிகழ்வையும் விவரித்து பிபிசி தளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.இணைய உலகமே பாராட்டும் அந்த படத்தை எடுத்த புகைப்பட கலைஞர் குட்மேன் தனது தளத்தில் ( http://www.joelgoodman.net/) அந்த அச்சிட்ட பிரதிகளை வாங்கி கொள்ள வழி செய்திருக்கிறார்.

—-

நன்றி; தமிழ் இந்துவுக்காக எழுதியது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.